என் மலர்
கன்னியாகுமரி
- விடுமுறை நாளில் சுற்றுலா பயணிகளும் குவிந்ததால் கடும் போக்குவரத்து நெருக்கடி
- கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.
கன்னியாகுமரி :
சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான இன்று கன்னியாகுமரியில் ஆயிரக்கணக்கான அய்யப்ப பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் வந்து குவிந்தனர். முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதியில் இன்று அதிகாலையில் சூரியன் உதயமான காட்சியை அய்யப்ப பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் பார்த்து ரசித்தனர். அதன்பிறகு அவர்கள் முக்கடல் சங்கமத்தில் ஆனந்த குளியல் போட்டனர்.
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மற்றும் திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் தரிசனத்துக்காக அய்யப்ப பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் கோவில்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட இன்று காலை 6 மணியில் இருந்தே சுற்றுலா பயணிகள் படகுத்துறையில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். காலை 8 மணிக்கு படகு போக்குவரத்து தொடங்கிய பிறகு அவர்கள் படகில் ஆர்வத்துடன் பயணம் செய்து விவேகனந்தர் மண்டபத்தை பார்வையிட்டு வந்தனர்.
மேலும் காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், சுனாமி நினைவு பூங்கா, கடற்கரை சாலையில் உள்ள பேரூராட்சி பொழுதுபோக்கு பூங்கா, சன்செட் பாயிண்ட் கடற்கரை பகுதி, மியூசியம், வட்டக்கோட்டை பீச் உள்பட அனைத்து சுற்றுலா தலங்களிலும் இன்று காலையில் இருந்தே அய்யப்ப பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. இதனால் விடுமுறை நாளான இன்று சுற்றுலா தலங்கள் களை கட்டியது. இதனால் கடும் போக்குவரத்து நெருக்கடியும் ஏற்பட்டது. இந்த சுற்றுலா தலங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது. கடற்கரை பகுதியில் சுற்றுலா போலீசாரும், கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.
- பார்வையாளர் சரவணவேல்ராஜ் பங்கேற்பு
- “18 வயது நிரம்பிய தகுதியான அனைவரும் வாக்காளர் பட்டியலில் இடம்பெற வேண்டும்.
நாகர்கோவில், நவ.26-
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு குமரி மாவட்ட வாக்காளர் பட்டியல் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான கலந்தாய்வு கூட்டம் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் இன்று நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். குமரி மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளர் சரவண வேல்ராஜ் பங்கேற்று அரசியல் கட்சி பிரதிநிதி களுடன் ஆலோசனை நடத்தினார்.
அப்போது "குமரி மாவட்டத்தில் 7 லட்சத்து 61 ஆயிரத்து 883 ஆண் வாக்காளர்களும், 7 லட்சத்து 60 ஆயிரத்து 10 பெண் வாக்காளர்களும், 143 இதர வாக்காளர்களும் என மொத்தம் 15 லட்சத்து 22 ஆயிரத்து 36 வாக்காளர்கள் உள்ளனர். 1698 வாக்குச்சா வடிகள் உள்ளன" என்ற தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து அரசியல் கட்சியினர் கூறியதாவது:-தேர்தலுக்கு முந்தைய நாள் வரை 18 வயது நிரம்பிய தகுதியா னவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும். வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கம் செய்யும்போது அந்த வாக்காளர் குறித்த விவரங்கள் முழுமையாக தெரிந்த பிறகு நீக்கம் செய்ய வேண்டும். நாகர்கோவில் மாநகர பகுதியில் பல இடங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர்கள் மாறி உள்ளது. அதை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். தர்மபுரம் ஊராட்சிக்குட்பட்ட காற்றாடிதட்டு பகுதியில் சில வாக்காளர்கள் 3 கிலோ மீட்டர் தூரம் சென்று வாக்களிக்க வேண்டி யுள்ளது. எனவே அந்த வாக்காளர்களை அருகில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வாக்கா ளர் பட்டியலில் பெயர் நீக்கம் தற்போது அதிகமாக செய்யப்பட்டு வருகிறது. வீடுகள் மாறி இருந்தால் கூட அதிகாரிகள் அந்த வாக்காளர்களின் பெயர் களை நீக்கி விடுகிறார்கள்.
எனவே முறையாக ஆய்வு செய்து பெயர் நீக்கம் செய்ய வேண்டும். குமரி மாவட்டத்தில் வழக்கமாக ஆண்கள், பெண்கள் மற்றும் பொது என பிரிக்கப்பட்டு எத்தனை வாக்குச்சாவடிகள் உள்ளது? என்று தெரிவிக்கப்படும். ஆனால் தற்போது வரை அந்த தகவல் தெரிவிக்கவில்லை. அதை தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர். இதற்கு பதிலளித்து வாக்காளர் பட்டியல் பார்வையாளர் சண்முக வேல்ராஜ் பேசியபோது, "18 வயது நிரம்பிய தகுதியான அனைவரும் வாக்காளர் பட்டியலில் இடம்பெற வேண்டும். யாரும் விடுபட்டு விடக்கூடாது. இதற்கு அரசியல் கட்சியினர் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். வாக்காளர் பட்டியலில் நீக்கம் செய்யும்போது அதற்கான படிவங்கள் முறையாக வழங்கப்பட்டால் மட்டுமே வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கம் செய்யப்படும். அரசியல் கட்சியினர் தெரிவித்த கருத்துக்கள் அனைத்தும் தலைமை தேர்தல் அதிகாரி யின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். குமரி மாவட்டத்தை பொறுத்த வரை ஒரு வாக்குச்சாவடியில் 1,500-க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் இல்லை. 1,500 வாக்காளர்களுக்கு மேல் இருந்தால் மட்டுமே ஆண், பெண் மற்றும் பொது என வாக்காளர்கள் பிரிக்கப்பட்டு வாக்குச்சாவடிகள் பிரிக்கப்பட வேண்டும்" என்றார்.
முன்னதாக டதி பள்ளி மற்றும் பெண்கள் கிறிஸ்தவ கல்லூரியில் நடந்த வாக்காளர் பட்டியல் திருத்த முகாமை வாக்காளர் பட்டியல் பார்வையாளர் சண்முகவேல்ராஜ் மற்றும் கலெக்டர் ஸ்ரீதர் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
கூட்டத்தில் வருவாய் அதிகாரி பாலசுப்பிரமணி யம், சப்-கலெக்டர் கவுசிக், ஆர்.டி.ஓ. சேதுராமலிங்கம், தி.மு.க. சார்பில் வர்கீஸ், பா.ஜனதா சார்பில் ஜெகதீசன், அ.தி.மு.க. சார்பில் ஜெயகோபால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கண்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இசக்கிமுத்து, தே.மு.தி.க. சார்பில் மணிகண்டன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- ரூ.15,000 பறிமுதல்
- அரவிந்த் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
நாகர்கோவில் :
நாகர்கோவில் நகர பகுதியில் ஆன்லைன் லாட்டரி விற்பனையை கட்டுப்படுத்த போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்தியுள்ளனர். கோட்டார் சப்-இன்ஸ்பெக்டர் சத்திய சோபன் தலைமையிலான போலீசார் கம்பளம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அங்கு அரசால் தடை செய்யப்பட்ட கேரளா லாட்டரி விற்பனை செய்து கொண்டிருந்த அரவிந்த் (வயது 28) என்பவரை போலீசார் பிடித்தனர். பிடிபட்ட அவரிடம் இருந்து லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் ரூ.15 ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். அரவிந்த் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
- பெருஞ்சாணியில் இருந்து வெளியேற்றப்பட்ட உபரிநீர் நிறுத்தம்
- அதிகாரிகள் அணைகளின் நீர்மட்டத்தை 24 மணி நேரமும் கண் காணித்து வருகிறார்கள்.
நாகர்கோவில் :
குமரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வந்த மழையின் காரணமாக பேச்சிப்பாறை, பெருஞ் சாணி, சிற்றாறு, மாம்ப ழத்துறையாறு, முக்கடல் அணைகள் முழு கொள்ள ளவை எட்டி நிரம்பி வழி கின்றன. அணைகள் நிரம்பி வழிவதையடுத்து பொதுப் பணித்துறை அதிகாரிகள் அணைகளின் நீர்மட்டத்தை 24 மணி நேரமும் கண் காணித்து வருகிறார்கள்.
அணைக்கு வரக்கூடிய தண்ணீருக்கு ஏற்ப அணை யில் இருந்து தண்ணீர் வெளி யேற்றப்பட்டு வரு கிறது. அணைகளில் இருந்து உபரிநீர் வெளியேற்றப் பட்டு வருவதால் கோதை யாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் கோதை யாற்றின் கரையோர பொது மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
பேச்சிப்பாறை, பெருஞ் சாணி, சிற்றாறு அணை களில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வந்த நிலையில் தற்பொழுது பெருஞ்சாணி அணையில் இருந்து வெளியேற்றப்பட்ட உபரிநீர் நிறுத்தப்பட்டு உள்ளது. சிற்றாறு, பேச்சிப் பாறை அணைகளில் இருந்து மட்டும் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணைகளில் இருந்து வெளியேற்றப்பட்ட உபரிநீர் அளவும் குறைக்கப் பட்டு உள்ளதால் கோதை யாற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு சற்று குறைந் துள்ளது.
திற்பரப்பு அருவியில் தொடர்ந்து தண்ணீர் கொட்டி வருகிறது. இதனால் அருவியில் குளிப்பதற்கு இன்று 8-வது நாளாக தடை விதிக்கப் பட்டுள்ளது. இன்று அருவியில் குளிப்பதற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மட்டும் இன்றி சுற்று லா பயணிகள் ஏராளமா னோர் திரண்டு இருந்தனர். அவர்கள் அருவியில் குளிக்க முடியாமல் ஏமாற் றத்துடன் திரும்பி சென்ற னர். பேச்சிப்பாறை அணை யின் நீர்மட்டம் இன்று காலை 43.98 அடியாக இருந்தது. அணைக்கு 426 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணை யிலிருந்து 301 கன அடி தண்ணீர் மதகுகள் வழியாக வும், 106 கன அடி தண்ணீர் உபரிநீராகவும் வெளி யேற்றப்பட்டு வருகிறது. பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 73.07 அடியாக உள்ளது. அணைக்கு 509 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணை யில் இருந்து 700 கன அடி தண்ணீர் மதகுகள் வழியாக வெளியேற்றப்பட்டு வரு கிறது. சிற்றார் 1 அணையின் நீர்மட்டம் 15.78 அடியாக உள்ளது. அணைக்கு 244 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணை யிலிருந்து 100 கன அடி தண்ணீர் மதகுகள் வழியாகவும், 234 கன அடி தண்ணீர் உபரிநீராகவும் வெளியேற்றப்பட்டு வரு கிறது.
- குமரி மேற்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி சார்பில் வழங்கப்பட்டது
- குமரி மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளரும், திருவட்டார் ஊராட்சி ஒன்றிய தலைவருமான ஜெகநாதன் தலைமை தாங்கினார்.
திருவட்டார் :
தி.மு.க. இளைஞரணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு குமரி மேற்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி சார்பில் திருவட்டார் ஊராட்சி ஒன்றியம் மாத்தார் புனித மரியன்னை முதியோர் இல்லத்தில் காலை உணவு வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு குமரி மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பா ளரும், திருவட்டார் ஊராட்சி ஒன்றிய தலைவரு மான ஜெகநாதன் தலைமை தாங்கினார். மாவட்ட துணை அமைப்பாளர்கள் ஜெபர்சன், ஷிஜு, லிஜீஷ் ஜீவன், ஜெயசந்திர பூபதி, ஆல்பின் பினோ மற்றும் மாவட்ட துணை செயலாளர் ராஜ், குமரன்குடி ஊராட்சி தலைவர் பால்சன், ஆற்றூர் பேரூராட்சி துணை தலை வர் தங்கவேல், மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் லெனின், நிர்வாகிகள் விஜயகுமார், ராஜகுமார், அப்ரின், லிபின் உட்பட தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
- தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. பங்கேற்பு
- விளையாட்டு போட்டி நடத்த தேவையான ஒத்துழைப்பு வழங்கப்படும் என உறுதிமொழி அளித்தார்
ஆரல்வாய்மொழி :
ஆரல்வாய்மொழி அருகே உள்ள சகாயநகர் ஊராட்சிக்குட்பட்ட அனந்த பத்மநாபபுரம் பகுதியில் பெருந்தலைவர் காமராஜர் நற்பணி மன்றம் சார்பில் மாவட்டம் தழுவிய பல்வேறு அணிகள் பங்கேற்கும் கபடி போட்டி ஆண்டுதோறும் நடைபெறுவது உண்டு.
இந்த ஆண்டு விளையாட அனுமதி கேட்டு ஆரல்வாய்மொழி போலீஸ் நிலையத்துக்கு மனு அனுப்பப்பட்டது. போட்டியை நடத்தவும் நிர்வாகிகள் ஏற்பாடு செய்தனர்.இந்த நிலையில் பூதப்பாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராஜ், ஆரல்வாய்மொழி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தங்கராஜா, சுந்தர்சிங், கீதா மற்றும் போலீசார், விளையாட அனுமதி இல்லை என கூறி எச்சரிக்கை விடுத்தனர்.
இதனால் அந்த பகுதி பரபரப்பானது. அந்த பகுதி இளைஞர்கள் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் தர்மர் தலைமையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்தவுடன் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ., தோவாளை தெற்கு ஒன்றிய செயலாளரும், ஆரல்வாய்மொழி பேரூராட்சி மன்ற தலைவருமான முத்துக்குமார் ஆகியோரும் அங்கு வந்து போராட்டத்தில் கலந்துகொண்டனர். தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. முறைப்படி அனுமதி பெற்று மீண்டும் விளையாட்டு போட்டி நடத்த தேவையான ஒத்துழைப்பு வழங்கப்படும் என உறுதிமொழி அளித்தார். அதன்பேரில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
- கடுமையான பனிப்பொழிவால் பூக்கள் உற்பத்தி மிக குறைந்துள்ளது.
- கடந்த சில நாட்களுக்கு முன்பு மல்லிகைப்பூ ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனையானது.
ஆரல்வாய்மொழி :
குமரி மாவட்டத்தில் புகழ்பெற்ற பூச்சந்தை தோவாளையில் உள்ளது. ஆரல்வாய்மொழி, ஆவரைகுளம், மாடநாடநாடார் குடியிருப்பு, புதியம்புத்தூர், ராதாபுரம், வடக்கன்குளம், காவல்கிணறு ஆகிய பகுதியிலிருந்து பிச்சிப்பூ.
சங்கரன்கோவில், ராஜபாளையம்,மதுரை மானாமதுரை, திண்டுக்கல், கொடைரோடு, வத்தலகுண்டு ஆகிய ஊர்களில் இருந்து மல்லிகை பூ. பெங்களூர், ஓசூர், ராயக்கோட்டை ஆகிய ஊர்களில் இருந்து மஞ்சள் கிரேந்தி பட்டரோஸ். திருக்கண்ணங்குடி அம்பாசமுத்திரம், தென்காசி, புளியங்குடி, புளியரை ஆகிய ஊர்களில் இருந்து பச்சை துளசி. தோவாளை, செண்பகராமன் புதூர், ராஜாவூர், மருங்கூர், கோழிக்கோடு பொத்தை ஆகிய ஊர்களில் இருந்து சம்பங்கி, அரளி, கோழிக்கொண்டை, அருகம்புல், கனகாம்பரம், தாமரை. சேலத்தில் இருந்து அரளிப்பூ பூச்சந்தைக்கு வந்து பின்னர் மாநிலம், மாவட்டம் முழுவதும், கேரளாவுக்கும் விற்பனையாகிறது.
கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையினாலும் கடுமையான பனிப்பொழிவால் பூக்கள் உற்பத்தி மிக குறைந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மல்லிகைப்பூ ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனையானது.
இந்நிலையில் இன்று திருக்கார்த்திகையை முன்னிட்டு தோவாளை பூச்சந்தையில் ஒரு கிலோ பிச்சிப்பூ ரூ. 1500, மல்லிகைப்பூ ரூ.1500, அரளி ரூ.200 சேலம்அரளி ரூ. 200, சம்பங்கி ரூ.100, ரோஜா பாக்கெட் ரூ.30, பட்டர் ரோஸ் ரூ. 150, கனகாம்பரம் ரூ.500, துளசி ரூ.30, கொழுந்து ரூ.150, மஞ்சள் கிரோந்தி ரூ.90, சிவப்பு கிரோந்தி ரூ.100-க்கும் விற்பனையானது. மேலும் மற்ற பூக்களும் விலை உயர்ந்து காணப்படுகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
- சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி யில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.
- பல்வேறு பகுதிகளிலும் பனை ஓலை குருத்துகள், திரளி இலைகள் விற்பனையும் விறுவிறுப்பாக நடை பெற்றது.
நாகர்கோவில் :
கார்த்திகை தீபத் திருவிழா இன்று (26-ந்தேதி) கோலாகலமாக கொண்டா டப்படுகிறது. இதையொட்டி குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் கார்த்திகை தீபம் ஏற்றி சிறப்பு வழிபாடுகள் நடை பெறும்.
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில், நாகர்கோவில் நாகராஜா கோவில், வடி வீஸ்வரம் அழகம்மன் கோ வில், கிருஷ்ணன்கோவில் கிருஷ்ணசுவாமி கோவில், பறக்கை மதுசூதன பெரு மாள் கோவில், களியல் மகாதேவர் கோவில் ஆகிய 7 கோவில்களில் இரவு 9 மணிக்கு சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடக்கிறது.
இதற்காக பனந்தோப்பு களில் இருந்து பனைமரம் வெட்டி எடுத்து வரப்பட்டு கோவில் முன்பு உள்ள வீதியில் நடப்படும். அந்த பனை மரத்தை சுற்றி பனை ஓலைகளால் வேயப்படும். இன்று இரவு கோவில் அர்ச்சகர் அந்தப்பனை மரத்தின் உச்சியில் ஏறி பூஜை செய்து தீபம்ஏற்றி விட்டு கீழே இறங்கி வந்து விடுவார். இந்த சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி யில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.
கார்த்திகை தீப திருவிழா வையொட்டி வீடுகளில் அகல் விளக்குகள் ஏற்று வார்கள். இதற்காக குமரி மாவட்டத்தில் அகல் விளக்குகள் விற்பனை விறுவிறுப்பாக நடை பெற்றது. தள்ளு வண்டி களிலும், சாலையோரங்களி லும் ஏராளமான வியாபாரி கள் அகல் விளக்குகளை குவித்து வைத்து விற்பனை செய்தனர். பொதுமக்கள் ஆர்வத்துடன் அகல் விளக்கு களை வாங்கிச் சென்றனர்.
மேலும் சுவாமிக்கு கொழுக்கட்டை அவித்து வழிபடுவார்கள். கொழுக் கட்டை தயாரிப்ப தற்காக கட்டபொம்மன் சந்திப்பு, வடசேரி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பனை ஓலை குருத்துகள், திரளி இலைகள் விற்பனையும் விறுவிறுப்பாக நடை பெற்றது. மேலும் பூக்களின் விற்பனையும் தீவிரமாக நடந்து வருகிறது. இதனால் பூக்களின் விலையும் உயர்ந்து காணப்படுகிறது.
- திருமலை திருப்பதி தேவஸ்தான தலைவர் சேகர்ரெட்டி தகவல்
- இதற்காக ரூ.3 ஆயிரம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
கன்னியாகுமரி :
கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் உள்ள விவேகானந்த கேந்திர கடற்கரை வளாகத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தான வெங்கடேஸ்வர பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் 2-வது வருடாந்திர பவித்ர உற்சவ திருவிழா கடந்த 22-ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது. திருவிழாவின் நிறைவு நாளான நேற்று காலையில் யாகசாலைபூஜை, உற்சவர்களுக்கு ஸ்னப்பன திருமஞ்சனம் சாத்துதல், அபிஷேகம் தீபாராதனை போன்றவை நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ., சென்னையில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான உள்ளூர் மற்றும் தகவல் ஆலோசனை மைய தலைவர் சேகர்ரெட்டி, துணை தலைவர் ஆனந்தகுமார் ரெட்டி அறங்காவலர் குழு உறுப்பினர்கள் மோகன்ராவ், யுவராஜ், துணை செயல் அலுவலர் விஜயகுமார், ஆய்வாளர் ஹேமதர்ரெட்டி, வள்ளலார் பேரவை மாநில தலைவர் சுவாமி பத்மேந்திரா, பக்த சேவா தலைவர் ஜெயராம் உள்பட திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
அதைத்தொடர்ந்து மதியம் அன்னதானம் நடந்தது. இந்த அன்னதானத்தை அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பாபு, கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் ஆகியோர் முன்னிலையில் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார். மாலையில் யாகசாலை பூஜையும், இரவு பூர்ணாகுதி மற்றும் விசேஷ பூஜையும் நடந்தது. பின்னர் பகுமானம் அர்ச்சனை, ஏகாந்த சேவை போன்றவை நடைபெற்றது.
இந்த பவித்ர உற்சவத்தை திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் ஆகம ஆலோசகர் ஸ்ரீ விஷ்ணு பட்டாச்சார்யலு தலைமையில் 7 அர்ச்சகர்கள் நடத்தினார்கள்.
பின்னர் சென்னையில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான உள்ளூர் மற்றும் தகவல் ஆலோசனை மைய அறங்காவலர் குழு தலைவர் சேகர் ரெட்டி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கன்னியாகுமரி வெங்கடாஜலபதி கோவிலில் பவித்ர உற்சவம் 3 நாட்கள் நடந்தது. இந்த பவித்ர உற்சவத்தின்போது ஒவ்வொரு நாளும் சராசரி 3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் வரை பக்தர்கள் தரிசனம் செய்தனர். கன்னியாகுமரியில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான வெங்கடேஸ்வர பெருமாள் கோவிலில் மாதந்தோறும் முதல் சனிக்கிழமை அன்று பக்தர்களுக்கு திருப்பதி லட்டு பிரசாதம் வழங்கப்பட உள்ளது. அடுத்த மாதம் (டிசம்பர்) 1-ந்தேதி முதல் திருப்பதி லட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக விநியோகம் செய்யப்பட உள்ளது.
படிப்படியாக வாரந்தோறும் லட்டு பிரசாதம் வழங்குவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். லட்டு ஒன்று ரூ.50-க்கு விற்பனை செய்யப்படும். கன்னியாகுமரியில் இருந்து விவேகானந்தபுரத்தில் உள்ள வெங்கடாஜலபதி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு வசதியாக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பஸ் வசதி செய்ய விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
வருகிற ஜனவரி மாதம் கன்னியாகுமரி வெங்கடாஜலபதி கோவிலில் திருப்பதியில் நடப்பது போன்று 10 நாட்கள் பிரம்மோற்சவ திருவிழா நடத்தப்படும். இதற்காக சுவாமிகள் பவனி வருவதற்கான வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. கன்னியாகுமரி வெங்கடாஜலபதி கோவிலில் பக்தர்கள் திருமணம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதுவரை 3 திருமணங்கள் நடந்து உள்ளது. இதற்காக ரூ.3 ஆயிரம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- அமைச்சர் மனோதங்கராஜ் வழங்கினார்
- மேற்படிப்பு படிக்கும் மாணவிகள், புதுமைப் பெண் திட்டத்தில் இணைந்து பயன்பற வேண்டும்.
திருவட்டார் :
குலசேகரம் அரசு மூடு மனுவேல் திருமண மண்ட பத்தில் நபார்டு வங்கி மூலம் பழங்குடியினர் மேம்பாடு திட்டத்தின் கீழ் மலைவாழ் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். தமிழ்நாடு நபார்டு பொது மேலாளர் சங்கர் நாராயணன் முன்னி லை வகித்தார்.
குமரி மாவட்ட நபார்டு உதவி பொது மேலாளர் சுரேஷ் ராமலிங்கம் வர வேற்றார். சிறப்பு விருந்தின ராக அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டு மலைவாழ் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி னார். பழங்குடி மக்கள் வைத்திருந்த கண் காட்சி யையும் அவர் பார்வை யிட்டார். தொடர்ந்து அவர் பேசியதாவது :-
குமரி மாவட்டத்தை சார்ந்த பட்டியலின மக்கள் பிற சமூக மக்களுடன் சேர்ந்து எவ்வித வேறுபாடு மின்றி சுமூகமாக வாழக் கூடிய சூழல் நமது மாவட்டத்தில் உள்ளது. அதற்கு முக்கிய காரணம் மனித நேயம். இந்த உணர்வில் நம்மை சுற்றி யுள்ள ஏழை-எளிய மக்க ளும் வாழ்வில் முன்னேற்றம் அடையும் வகையில் நாம் அனைவரும் ஒன்றினைந்து செயல்பட வேண்டும்.
மாவட்டத்தில் குழந்தை கள் அனைவரையும் நன்கு கல்வி கற்க வைக்க வேண் டும். நமது மாவட்டத்தில் உள்ள மீன்பிடி தொழில் செய்யும் மக்களும் கல்வியில் சிறந்து விளங்கிறார்கள்.முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கல்விக்காக பல்வேறு நலத்திட்ட உதவி களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். அதனை பயன்படுத்தி குழந்தைகள் அனைவரும் நன்கு கல்வி கற்க வேண்டும். மேற்படிப்பு படிக்கும் மாணவிகள், புதுமைப் பெண் திட்டத்தில் இணைந்து பயன்பற வேண் டும்.
இவ்வாறு அவர் பேசி னார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வன அலுவலர் இளைய ராஜா, பத்மநாபபுரம் சப்-கலெக்டர் கவுசிக், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவ லர் கனகராஜ், திருவட்டார் தாசில்தார் முருகன், மாவட்ட அரசு வக்கீல் ஜான்சன், குலசேகரம் பேரூ ராட்சி துணை தலைவர் ஜோஸ் எட்வர்ட், தி.மு.க. தலைமை பொதுக்குழு உறுப்பினர் அலாவுதீன், குலசேகரம் தி.மு.க. பேரூர் செயலாளர் ஜெபித்ஜாஸ் மற்றும் பலர் கலந்து கொண் டனர்.
- உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை
- குமரி மாவட்டத்தில் உள்ள கடைகளில் அதிரடி சோதனை
நாகர்கோவில், நவ.26-
தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறை மற்றும் போலீஸ் துறை சார்பில் பள்ளிக்கூடங்கள் அருகே உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதை கண்காணிக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் தமிழகம் முழுவதும் 391 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் இடம்பெற்றுள்ளனர். இந்த குழுவினர் வாரத்தில் 3 நாட்கள் கடைகளில் சோதனை நடத்த வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர். குமரி மாவட்டத்திலும் உணவு பாதுகாப்பு துறை மற்றும் போலீஸ் துறை சார்பில் 10 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாவட்டத்தில் உள்ள 9 ஒன்றியங்கள் மற்றும் நாகர்கோவில் மாநகர பகுதிகளில் கண்காணிக்க குழு அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
உணவு பாதுகாப்பு துறை அதிகாரி செந்தில்குமார் மேற்பார்வையில் கண்காணிப்பு குழுவினர் சோதனை மேற்கொண்டனர். நேற்று முன்தினம் மற்றும் நேற்று மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனை நடந்தது. நாகர்கோவில் மாநகர பகுதியில் பள்ளிக்கூடங்கள் அருகே உள்ள கடைகளில் அதிகாரிகள் மற்றும் போலீசார் சோதனை மேற்கொண்டனர். சுமார் 30-க்கும் மேற்பட்ட கடைகளில் சோதனை நடத்தப்பட்டது. இதில் 7 கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை இருந்தது கண்டுபிடிக்கப்பட் டது.
இதையடுத்து அந்த கடைகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப் பட்டது. கடைகளில் இருந்த ஒரு கிலோ 750 கிராம் புகையிலை பாக்கெட்டு களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதேபோல் ஈத்தாமொழி, சுண்டப்பற்றிவிளை பகுதியில் சோதனை நடந்தது. இதேபோல் தக்கலை, குளச்சல், மார்த்தாண்டம் பகுதிகளிலும் சோதனை நடத்தப்பட்டது. கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் உள்ளதா? அங்கு காலாவதியான பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்பதை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
மாவட்டம் முழுவதும் ஒரே நாளில் 97 கடைகளில் நடத்தப்பட்ட சோதனையில் 14 கடைகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் வீதம் ரூ.70 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 9½ கிலோ புகையிலை பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரி செந்தில்குமார் கூறுகையில், குமரி மாவட்டம் முழுவதும் பள்ளி, கல்லூரிகள் அருகில் உள்ள கடைகளில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. கடைகளில் குட்கா, புகையிலை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். முதல் முறையாக பறிமுதல் செய்யப்பட்டால் ரூ.5 ஆயிரம், 2-வது முறையாக ரூ.10 ஆயிரம், 3-வது முறையாக ரூ. 25 ஆயிரம் அபராதம் விதிப்பதுடன் உரிமம் ரத்து செய்யப்படும்.
பொதுமக்கள் தங்களது பகுதிகளில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை செய்தால் 94440 42322 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிற்கு புகார் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார்
- போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்படு கிறதா? என கடை கடையாக சென்று சோதனை செய்தார்.
- போதைப்பொருள் விற்பதாக அறிந்தால் அபராதம் விதிக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.
மணவாளக்குறிச்சி :
மணவாளக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் பெருமாள் நேற்று மணவாளக்குறிச்சி மற்றும் மண்டைக்காடு பகுதிகளில் உள்ள கடைகளில் புகையிலை மற்றும் குட்கா போன்ற போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்படு கிறதா? என கடை கடையாக சென்று சோதனை செய்தார்.
மேலும் கடைகளில் போதைப்பொருட்கள் விற்கக்கூடாது. போதைப்பொருள் கேட்டுவரும் சிறுவர்கள், பள்ளி மாணவர்கள் பற்றி சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். போதைப்பொருள் பயன்படுத்துபவர் பற்றி அறிந்தால் அதுபற்றி தகவலை தெரிவிக்க வேண்டும், தகவல் தெரிவிப்பவர்கள் பெயர் ரகசியம் பாதுகாக்கப்படும். மேலும் கடைகளில் போதைப்பொருள் விற்பதாக அறிந்தால் அபராதம் விதிக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.






