என் மலர்
கன்னியாகுமரி
- மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்
- குளத்தூர் மெயின் ரோடு, லாலாவிளை மற்றும் இளங்கடை சர்ச் ரோடு ஆகிய பகுதிகளில் தார் சாலை அமைக்கப்படுகிறது
நாகர்கோவில் :
நாகர்கோவில் மாநகராட்சி 48-வது வார்டுக்குட்பட்ட குளத்தூர் மெயின் ரோடு, லாலாவிளை மற்றும் இளங்கடை சர்ச் ரோடு ஆகிய பகுதிகளில் தார் சாலை அமைக்கப்படுகிறது. ரூ.1.86 கோடி மதிப்பில் நடைபெறும் இந்த பணிகளை, மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் ஆனந்த் மோகன், துணை மேயர் மேரி பிரின்சி லதா, மாநகராட்சி உதவி பொறியாளர் ராஜசீலி, மாமன்ற உறுப்பினர் பியாசா ஹாஜி பாபு, மாநகராட்சி தொழில்நுட்ப அதிகாரி பாஸ்கர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
- பிரின்ஸ் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
- பத்திரப்பதிவு புதிய நடைமுறைகளில் குமரி மாவட்டத்திற்கு விலக்கு அளித்திட தமிழக முதல்-அமைச்சரிடம் முறையிடுவேன்.
குளச்சல் :
பிரின்ஸ் எம்.எல்.ஏ. வெளி யிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-
குமரி மாவட்டம் மலை சார்ந்த மாவட்டம் ஆகும். இது தமிழ்நாட்டிலேயே சிறிய மாவட்டம். இதன் பரப்பளவு 1672 சதுர கி.மீ. ஆகும். அரசு வனப்பகுதி 504.86 சதுர கி.மீ. இது மாவட்டத்தின் மொத்த பரப்பளவில் 30.2 சதவீதம் ஆகும். கடற்கரையின் பரப்பளவு 36 சதுர கி.மீ. மீதி சுமார் 1200 சதுர கி.மீ. நிலப்பரப்பாகும். இதில் தான் மக்கள் அடர்த்தியாக வாழ்ந்து வருகின்றனர். இந்த பகுதியில் பல்வேறு தரப்பு மக்களின் கட்டி டங்கள், விவசாய நிலங்கள், குடியிருப்புகள் உள்ளன. ஆனால் மக்கள் நெருக்கமாக வாழும் சூழ்நிலையில் வாழ்ந்து வருகின்றனர்.
சமீபகாலமாக மாவட் டத்தில் ஏழை, எளிய மக்கள் தங்கள் பெண் குழந்தை களின் திருமணம் மற்றும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய போன்ற கொடிய நோய் தீர்க்க சிகிச்சைக்கு பணம் புரட்ட தங்கள் நிலங்களை விற்பனை செய்ய முடியாமல் உள்ளது. இதற்கு காரணம் நிலங்களின் பத்திரப்பதிவின்போது பத்திரப்பதிவு புதிய வழி காட்டுதல்படி 33 அடி இடம் பாதைக்கு விட்டு கொடுக்க வேண்டி உள்ளது.
பிற மாவட்டங்கள் அதிக நிலப்பரப்பு கொண்டது. அங்கு 33 அடி இடம் விட்டால் பாதிப்பு இல்லை. குமரி மாவட்டம் நிலபரப்பு குறைந்த பகுதியாகும். இப்படி இடம் விடுவதால் குறைந்த அளவு நிலம் வைத்துள்ளவர்கள் இடத்தை விற்க முடியாமல் இருந்து வருகிறார்கள். இத னால் நிலங்களை வாங்கு வதற்கு யாரும் முன்வருவ தில்லை. நிலங்களை வாங்க யாரும் முன்வராத நிலையில் திருமணம், அவசர பணம் தேவை போன்ற காரியங் களுக்கு நிலங்களை விற்ப னை செய்ய முடியாமல் உள்ளது.
எனவே அரசு ஏழை, எளியவர்களை பாதிக்கும் பத்திரப்பதிவு புதிய நடை முறைகளில் குமரி மாவட் டத்திற்கு விலக்களித்து குமரி மாவட்ட பொது மக்களை பாதுகாத்திட வேண்டும். பத்திரப்பதிவு புதிய நடைமுறைகளில் குமரி மாவட்டத்திற்கு விலக்கு அளித்திட தமிழக முதல்-அமைச்சரிடம் முறையிடுவேன். இதனை வரும் சட்டமன்ற கூட்டத்திலும் வலியுறுத்தி பேசுவேன்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
- 10 மது பாட்டில்கள் விற்பனைக்கு கொண்டு செல்ல முயற்சித்தது தெரியவந்தது.
- 40 மது பாட்டில்கள் விற்பனைக்கு வைத்திருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.
குளச்சல் :
குளச்சல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் குளச்சல் பகுதியில் தீவிர ரோந்து சென்றார்.
குளச்சல் மெயின் ரோடு ஒரு தனியார் மருத்துவ மனை அருகில் சாலையில் செல்லும்போது சந்தேகத் திற்கிடமாக ஒரு மூதாட்டி நின்று கொண்டி ருந்தார். போலீசாரை கண்ட தும், அவர் தப்பியோட முயற் சித்தார்.
போலீசார் அவரை மடக்கிப்பிடித்து விசா ரணை நடத்தினர். விசார ணையில் அவர் காரங்காடு நுள்ளி விளையை சேர்ந்த பேபி (வயது 70) என தெரியவந்தது. மேலும் அவர் பையில் அனுமதியின்றி 40 மது பாட்டில்கள் விற்பனைக்கு வைத்திருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். உடனே அவற்றை பறிமுதல் செய்து மூதாட்டியை கைது செய்தனர்.
தொடர்ந்து போலீசார் குளச்சல் பயணியர் விடுதி சந்திப்பில் ரோந்து செல்லும் போது பாலப் பள்ளம் நீர்வக் குழியை சேர்ந்த செல்வம் (63) அனுமதியின்றி 10 மது பாட்டில்கள் விற்பனைக்கு கொண்டு செல்ல முயற்சித்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் செல்வத்தையும் கைது செய்தனர்.
- குண்டர் சட்டத்தில் கைது செய்யப் பட்டவர் எண்ணிக்கை 52 ஆக அதிகரித்துள்ளது.
- ஆத்திரம் அடைந்த கணேசன் சக தொழிலாளி ராதாகிருஷ்ணனை கத்தியால் குத்தி கொலை செய்தார்.
நாகர்கோவில் :
தென்தாமரைகுளம் பகுதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது 50). இவர் மார்த்தாண்டம் பம்பம் பகுதியில் உள்ள ஓட்டல் ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.
அதே ஓட்டலில் நெல்லை ஆலங்குளம் நெட்டூரை சேர்ந்த கணேசன் (45) என்பவரும் வேலை பார்த்தார். இருவ ருக்கும் இடையே உணவு சப்ளை செய்வதில் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த கணேசன் சக தொழிலாளி ராதாகிருஷ்ணனை கத்தியால் குத்தி கொலை செய்தார். இது தொடர்பாக மார்த் தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கணேசனை கைது செய்த னர்.
கைது செய்யப்பட்ட கணேசன் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு ஜெயில் அடைக்கப் பட்டிருந்தார். இவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் கலெக்டர் ஸ்ரீதருக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து கலெக்டர் ஸ்ரீதர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கணேசனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தர விட்டார்.
இதையடுத்து மார்த் தாண்டம் இன்ஸ்பெக்டர் இளவரசு தலைமையிலான போலீசார் கணேசனை நாகர்கோவில் ஜெயிலில் இருந்து பாளையங் கோட்டை ஜெயிலில் அடைத்தனர். குமரி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை குண்டர் சட்டத்தில் கைது செய்யப் பட்டவர் எண்ணிக்கை 52 ஆக அதிகரித்துள்ளது.
- திரளான பக்தர்கள் பங்கேற்பு
- விசேஷ பூஜைகளும், சிறப்பு வழிபாடுகளும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
கன்னியாகுமரி :
கன்னியாகுமரி ரெயில் நிலைய சந்திப்பில் உள்ள குகநாதீஸ்வரர் கோவிலில் கார்த்திகை மாத பிரதோஷ வழிபாடு நடந்தது.
இதையொட்டி மாலை 4.30 மணிக்கு நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. அப்போது எண்ணெய், மஞ்சள்பொடி, மாபொடி, களபம், பால், தயிர், நெய், தேன், பஞ்சாமிர்தம், இளநீர், விபூதி, பன்னீர், சந்தனம் ஆகிய 13 வகையான வாசனை திரவியங்களால் நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது. இந்த அபிஷேகங்களை கோவில் மேல்சாந்தி ராஜா மணி அய்யர் நடத்தினார்.
பின்னர் 5.30 மணிக்கு மூலவரான சிவபெருமா னுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது. அதன் பிறகு 6.30 மணிக்கு அலங்கார தீபா ராதனை நடந்தது. பின்னர் இரவு 7 மணிக்கு சுவாமி அம்பாளுடன் பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப் பட்ட ரிஷப வாகனத்தில் எழுந்தருளி கோவிலை சுற்றி 3 முறை வலம் வந்த நிகழ்ச்சி நடந்தது. அதன் பிறகு பள்ளியறை எழுந்திரு ளும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி குகநாதீஸ்வ ரர் கோவிலில் பக்தர்கள் பேரவையினர் செய்திருந்த னர். இதேபோல கன்னியா குமரி சன்னதி தெருவில் உள்ள விஸ்வநாதர் கோவில், கீழ ரதவீதியில் உள்ள சிவன் கோவில், விவேகானந்தபுரம் சக்கர தீர்த்த காசிவிசாலாட்சி சமேத காசிவிஸ்வநாதர் கோவில், பஞ்சலிங்கபுரம் பஞ்சலிங்கேஸ்வரர் கோவில், மகாதானபுரம் காசிவிசுவநாதர் கோவில், கொட்டாரம் வடுகன்பற்று அகஸ்தீஸ்வரர் கோவில், மருந்துவாழ் மலை ஜோதி லிங்கசாமி கோவில், பரமார்த்தலிங்க சுவாமி கோவில், சுசீந்திரம் தாணு மாலய சுவாமி கோவில், தேரூர் எடுத்தாயுதமுடைய நயினார் கோவில், குறண்டி சிவன் கோவில் ஆகிய 12 சிவாலயங்களிலும் கார்த்தி கை மாத பிரதோஷத்தை யொட்டி சிறப்பு அபிஷேகங்களும், விசேஷ பூஜைகளும், சிறப்பு வழிபாடுகளும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
- புடலங்காய், தக்காளி விலையும் உயர்ந்தது
- தற்போது ரூ.3500 முதல் ரூ.4000-க்கு வரை விற்பனை ஆகிறது
நாகர்கோவில் :
நாகர்கோவில் அப்டா மார்க்கெட் கனகமூலம் சந்தைக்கு குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், நெல்லை மற்றும் மேட்டுப்பாளையம், ஓசூர், திண்டுக்கல் பகுதிகளிலிருந்தும் காய்கறிகள் விற்பனைக்காக கொண்டுவரப்படுகிறது.
காய்கறிகளின் வரத்து குறைந்ததையடுத்து கடந்த சில நாட்களாகவே காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளது. குறிப்பாக வெள்ளரிக்காய், புடலங்காயின் விலை இரு மடங்கு உயர்ந்துள்ளது. குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், நெல்லை மாவட்டத்தில் இருந்தும் வெள்ளரிக்காய் விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது. தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக வெள்ளரிக்காய் உற்பத்தி குறைந்துள்ளது.
வெள்ளரிக்காயின் வரத்தை குறைய தொடங்கியதையடுத்து விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு கிலோ வெள்ளரிக்காய் ரூ.20-க்கு விற்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் படிப்படியாக உயர்ந்து கடந்த வாரம் கிலோ ரூ.50 ஆக விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் தற்போது ஒரு கிலோ வெள்ளரிக்காய் ரூ.100-க்கு விற்பனையா னது.
வெள்ளரிக்காய் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். அப்டா மார்க்கெட்டில் ஒரு மூடை வெள்ளாரிக்காய் சில நாட்களுக்கு முன்பு ரூ.300 முதல் ரூ.400-க்கு விற்கப்பட்டு வந்த நிலையில் தற்போது ரூ.3500 முதல் ரூ.4000-க்கு வரை விற்பனை ஆகிறது. இதேபோல் புடலங்காய் விலையும் இரு மடங்கு உயர்ந்துள்ளது.
மழை காரணமாக புடலை செடிகள் சேதமடைந்ததையடுத்து காய்கறிகளின் வரத்து குறைவாகவே இருந்து வருகிறது. புடலங்காய் ஒரு கிலோ ரூ.35-க்கு விற்கப்பட்டு வந்த நிலையில் தற்பொழுது ரூ.70 ஆக உயர்ந்துள்ளது. இதேபோல் தக்காளியின் விலையும் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது.
ஒரு கிலோ தக்காளி கடந்த வாரம் ரூ.25-க்கு விற்கப்பட்டு வந்த நிலையில் தற்போது ரூ.50-க்கு விற்பனையானது. இதேபோல் சிறிய வெங்காயத்தின் விலையும் உயர்ந்துள்ளது. சிறிய வெங்காயத்தின் வரத்து குறைந்துள்ளதையடுத்து விலை உயர்ந்து வருகிறது. ஒரு கிலோ சிறிய வெங்காயம் ரூ.120-க்கு விற்பனை செய்யப்பட்டது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் கிலோ ரூ.40 உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். பீன்ஸ், சேனை விலையும் அதிகரித்து காணப்படுகிறது.
நாகர்கோவில் மார்க்கெட்டில் விற்பனையான காய்கறி களின் விலை விவரம் வருமாறு:-
வெள்ளரிக்காய் ரூ.100, புடலங்காய் ரூ.70, இளவங்காய் ரூ.40, சேனை ரூ.85, தக்காளி ரூ.55, பல்லாரி ரூ.60, பீன்ஸ் ரூ.120, கேரட் ரூ.60, சிறிய வெங்காயம் ரூ.120, கத்தரிக்காய் ரூ.50, வழுதலங்காய் ரூ.60, இஞ்சி ரூ.160 பூடு ரூ.300, மிளகாய் ரூ.70, பூசணிக்காய் ரூ.30, முட்டைக்கோஸ் ரூ.30, வெண்டைக்காய் ரூ.20-க்கு விற்பனையானது.
இதுகுறித்து வியாபாரி ஒருவர் கூறுகையில், தற்பொழுது காய்கறிகளின் வரத்து குறைவாக உள்ளதால் விலை உயர்ந்துள்ளது. தற்போது கார்த்திகை மாதம் என்பதால் பெரும்பாலான பொதுமக்கள் சைவ உணவே சாப்பிட்டு வருகிறார்கள். இதனால் காய்கறிகள் அதிகம் தேவைப்படுகிறது. காய்கறிகள் தேவை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் வரத்து குறைவாக உள்ளதால் வழக்கத்தைவிட விலை உயர்ந்து காணப்படுகிறது. தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் காய்கறிகளின் விலை மேலும் உயர வாய்ப்புள்ளது என்றார்.
- கிறிஸ்து நகர் கிறிஸ்து அரசர் ஆலயத்தில் நடந்தது
- இரவு கலை குழுவினர் வழங்கும் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
நாகர்கோவில் :
நாகர்கோவில் கிறிஸ்து நகர் கிறிஸ்து அரசர் ஆலயத்தில் குடும்ப விழாவையொட்டி முதல் நாளில் திருக்கொடியேற்றம் மற்றும் திருப்பலியுடன் தொடங்கிய பூஜையில் ஏராளமான மக்கள் கலந்துகொண்டனர்.
தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சிறப்பு ஜெபமாலைகள், திருப்பலிகள் நடைபெற்றன. நேற்று முன்தினம் 23-ந்தேதி குமரி மண்ணில் தோன்றிய புனிதர் தேவசகாயமே என்ற பிரம்மாண்ட நாடகம் நடந்தது. இதில் ஏராளமான நடிகர்கள் பங்கேற்று நடித்துக்காட்டினர்.
நேற்று இரவு சமபந்தி விருந்து நடைபெற்றது. இதை பங்குத்தந்தை டோனி ஜெரோம் தொடங்கி வைத்தார். இணை பங்குத்தந்தை விஜில் ப்ரைட், துணை தலைவர், டென்னிஸ் பிராங்கிளின், செயலாளர் சார்லட் மேரி, பங்கு பேரவை பொருளாளர் இர்வின் ஜியோ நேவிஸ், துணை செயலாளர் சகாய ஞான திரவியம் மற்றும் பங்கு அருட்சகோதரிகள், பங்கு அருட்பணி பேரவையினர், பங்கு மக்கள் கலந்து கொண்டனர். இந்த சமபந்தி விருந்தில் 10,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டனர். இன்று (25-ந்தேதி) காலை 10 மணிக்கு நோயாளிகள் திருப்பலி நடைபெற்றது. மாலை 6 மணிக்கு மாலை ஆராதனையும், தொடர்ந்து கோட்டார் மறை மாவட்ட செயலாளர் அருட்பணி மரிய கிளாட்ஸ்டன், அருட்பணி ஜெனிபர் எடிசன் மறையுரை ஆற்றுகிறார்கள். இன்று மாலையில் கிறிஸ்து அரசர் தேர் பவனி நடைபெறுகிறது. இதில் ஏராளமான மக்கள் கலந்து கொள்கிறார்கள்.
நாளை (26-ந்தேதி) 10-ம் நாள் திருவிழாவான காலை 7.30 மணிக்கு கிறிஸ்து அரசர் பெருவிழா திருப்பலியும், ஆயர் நசரேத் சூசை மறையுரையும் நடக்கிறது. தொடர்ந்து மாலை 5.30 மணிக்கு நன்றி திருப்பலி நடைபெறுகிறது. இரவு கிறிஸ்து அரசர் கலை குழுவினர் வழங்கும் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
- புனித சவேரியார் உருவம் பதித்த கொடியையும், மலர்களையும் வடக்கு மற்றும் தெற்கு ஊர் நிர்வாகிகளிடம் வழங்கினார்.
- காலை 11 மணிக்கு தேர்ப்பவனி, மாலை 7 மணிக்கு தேரில் ஆடம்பர கூட்டுத்திருப்பலி ஆகியவை நடக்கிறது
நாகர்கோவில் :
நாகர்கோவில் கோட்டார் புனித சவேரியார் பேராலய திருவிழா ஆண்டுதோறும் நவம்பர் மாதம் இறுதியில் தொடங்கி டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் முடிவடை யும். இதேபோல இந்த ஆண் டுக்கான திருவிழா நேற்று தொடங்கியது. தொடர்ந்து 11 நாட்கள் நடக்கிறது.
விழாவின் முதல் நாளான நேற்று காலை 6.15 மணிக்கு ராஜாவூர் பங்கு இறைமக்களால் திருப்பலி நடத்தப்பட்டது. தொடர்ந்து 8 மணிக்கு அறுகுவிளை பங்கு இறைமக்கள் திருப்பலி நடத்தினர்.
பின்னர் மாலை 6 மணிக்கு திருவிழா கொடியேற்றம் நடந்தது. கொடியேற்றத்துக்கான மலர்களை ராஜாவூர் மக்க ளும், அறுகுவிளை மக்களும் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக கொண்டு வந்தனர்.
தொடர்ந்து கோட்டார் தெற்கு ஊர் மற்றும் வடக்கு ஊர் மக்கள் சார்பில் கொடி யேற்றத்துக்கு வந்த கோட்டார் மறை மாவட்ட முதன்மை அருட்பணியாளர் ஜாண் ரூபசுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் பேராலய பீடத்தில் கொடி யேற்றத்துக்கான கொடிகள் மந்திரிப்பு நிகழ்ச்சி நடந்தது. கொடிகளை குருகுல முதல்வர் சகாய ஆனந்த் மந்திரித்து சிலுவை பதித்த கொடியையும், புனித சவேரியார் உருவம் பதித்த கொடியையும், மலர்களையும் வடக்கு மற்றும் தெற்கு ஊர் நிர்வாகிகளிடம் வழங்கினார்.
அதன் பிறகு கொடியேற்ற நிகழ்ச்சி நடந்தது. கோட்டார் மறை மாவட்ட முதன்மை அருட்பணியாளர் ஜாண் ரூபஸ் தலைமை தாங்கி கொடியேற்றி வைத்தார். பின் னர் அவருடைய தலை மையில் பேராலய வளாகத் தில் ஆடம்பர கூட்டுத் திருப்பலி நடந்தது. நிகழ்ச்சி யில் வட்டார குருகுல முதல்வர் சகாய ஆனந்த், பேராலய பங்குத் தந்தை பஸ்காலிஸ், இணை பங்குத்தந்தை ஜெனிஷ் கவின், பங்கு பேரவை துணை தலைவர் ஜேசுராஜா, செயலாளர் ராஜன், துணை செயலாளர் ராஜன் ஆராச்சி, பொருளா ளர் ராபின் மற்றும் அருட் சகோதரிகள், பங்கு மக்கள், பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
திருவிழாவானது டிசம்பர் 4-ந்தேதி வரை நடக்கிறது. விழாவின் 9-வது நாளான 2-ந்தேதி மாலை 6.10 மணிக்கு கோட்டார் மறை மாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் தலைமையில் ஆடம்பர கூட்டுத்திருப்பலி நடக்கிறது. அன்றைய தினம் இரவு 10.30 மணிக்கு தேர்ப் பவனி நடைபெறும்.
தொடர்ந்து 3-ந்தேதி மாலை 6.10 மணிக்கு சிறப்பு மாலை ஆராதனை மற்றும் நற்கருணை ஆசீர் ஆகியவை கோட்டார் மறை மாவட்ட ஆயர் நசரேன் சூசை தலை மையில் நடக்கிறது. பின்னர் இரவு 10 மணிக்கு தேர்ப்பவனி நடைபெறும். விழாவின் இறுதி நாளான 4-ந்தேதி காலை 6 மணிக்கு பெருவிழா திருப்பலி, 8 மணிக்கு மலையாள திருப்பலி, காலை 11 மணிக்கு தேர்ப்பவனி, மாலை 7 மணிக்கு தேரில் ஆடம்பர கூட்டுத்திருப்பலி ஆகியவை நடக்கிறது.
- மக்களுக்கு தங்குதடையின்றி குடிநீர் வழங்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை
- 700 கன அடி தண்ணீர் மதகுகள் வழியாகவும், 300 கன அடி தண்ணீர் உபரிநீராகவும் வெளி யேற்றப்பட்டு வருகிறது.
நாகர்கோவில் :
குமரி மாவட்டம் முழு வதும் கொட்டி தீர்த்து வந்த மழை தற்பொழுது சற்று குறைந்துள்ளது. இதனால் அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து படிப்படியாக குறைய தொடங்கியுள்ளது. இதையடுத்து பேச்சிப்பாறை அணையில் இருந்து வெளி யேற்றப்பட்ட உபரிநீரின் அளவு குறைக்கப் பட்டுள் ளது. சிற்றாறு 1, பெருஞ்சாணி அணைகளில் இருந்து தொடர்ந்து உபரிநீர் வெளியேற்றப்படுகிறது. 3 அணைகளில் இருந்து வெளியேற்றப்பட்டு வரும் உபரிநீர் கோதையாற்றில் கரைபுரண்டு ஓடுகிறது.
இதனால் திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்ப ரித்துக்கொட்டி வருகிறது. சிறுவர் பூங்காவை மூழ்க டித்து தண்ணீர் செல்வதால் அருவியில் குளிப்பதற்கு இன்று 7-வது நாளாக தடை விதிக்கப் பட்டுள்ளது. திற்பரப்பு அருவியில் தடை விதிக்கப் பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். மாம்பழத்துறையாறு அணை கடந்த ஒரு மாதமாக முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிகிறது. அணை நீர்மட்டம் 54.12 அடி எட்டி யதையடுத்து அணைக்கு வரக்கூடிய தண்ணீரை உபரிநீராக வெளியேற்றி வருகிறார்கள்.
தற்பொழுது அணைக்கு 26 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 26 கன அடி தண்ணீரையும் உபரி நீராக திறந்து விடப்பட் டுள்ளது. அணையின் நீர்மட் டத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள். பேச்சிப் பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 43.98 அடி யாக உள்ளது. அணைக்கு 485 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
அணையில் இருந்து 301 கன அடி தண்ணீர் மதகுகள் வழியாகவும், 106 கன அடி தண்ணீர் உபரிநீராகவும் வெளியேற்றப்பட்டு வருகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 73.29 அடியாக உள்ளது. அணைக்கு 555 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையில் இருந்து 700 கன அடி தண்ணீர் மதகுகள் வழியாகவும், 300 கன அடி தண்ணீர் உபரிநீராகவும் வெளி யேற்றப்பட்டு வருகிறது.
சிற்றார் 1 அணை நீர்மட்டம் 16.07 அடியாக உள்ளது. அணைக்கு 436 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 100 கன அடி தண்ணீர் மதகு வழியாகவும், 536 கன அடி தண்ணீர் உபரிநீராகவும் வெளியேற்றப்பட்டு வருகிறது. நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் அணை நீர்மட்டம் தொ டர்ந்து முழு கொள்ளளவான 25 அடியை எட்டி நிரம்பி வழிகிறது.
அணையில் இருந்து நகர மக்களுக்கு தங்குதடையின்றி குடிநீர் வழங்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.
- நாளை மறுநாள் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடக்கிறது
- 9 மணிக்கு கொடி இறக்குதல் மற்றும் மவுன பலி நிகழ்ச்சியும், மாபெரும் இன்னிசை கச்சேரி நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
என். ஜி. ஓ. காலனி :
குமரி மாவட்டம் பறக்கை அருகே உள்ள புல்லுவிளை யில் பெருமாள் சாமி கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலுக்கு அந்தப் பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர்.
இந்தக் கோவிலில் திருக்கார்த்திகை திருவிழா கடந்த 19-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை 6:30 மணிக்கு சிறப்பு பூஜையும், நண்பகல் 12 மணிக்கு அலங்கார தீபாராதனையும், மாலை 5 மணிக்கு பஜனையும், இரவு 7 மணிக்கு சிறப்பு பூஜையும், 7.30 மணிக்கு சாமி, வாகனத்தில் கோவிலை சுற்றி வலம் வருதல் ஆகியவையும் நடக்கிறது.
விழாவின் 6-ம் நாளான நேற்று மாலை 5 மணிக்கு முகிலன்விளை ஸ்ரீ பிரம்ம சக்தி அம்மன் பஜனை குழுவினரின் பக்தி இன்னிசை பாடல்கள் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. 7-ம் நாளான இன்று (சனிக்கிழமை) காலை 6.30 மணிக்கு கடல் நீராட செல்லுதல் நிகழ்ச்சியும், 8 மணிக்கு பெருமாள் சுவாமிக்கு அபிஷேகம் மற்றும் 21 வகை காய்கறிகள் படைத்து பூஜையும், பகல் 12 மணிக்கு சிறப்பு பூஜையும், பகல் 1 மணிக்கு பிரசாதம் வழங்குதலும் நடைபெற்றது. ெதாடர்ந்து மாலை 6 மணிக்கு சிறப்பு பூஜையும், 7 மணிக்கு பெருமாள் சுவாமி உற்சவராக ஆஞ்சநேயர் வாகனத்தில் திருக்கோவிலை சுற்றி வலம் வருதல் நிகழ்ச்சியும், 7.30 மணிக்கு பிரசாதம் வழங்குதலும், 8:00 மணிக்கு சமயவகுப்பு மாணவ, மாணவி யரின் கலை நிகழ்ச்சி களும் நடை பெறுகிறது.
விழாவின் 8-ம் நாளான நாளை காலை 6.30 மணிக்கு சிறப்பு பூஜையும், 7 மணிக்கு பக்தர்கள் சிங்காரி மேளதா ளத்துடன் சொக்கப்பனை வெட்ட செல்லுதல் நிகழ்ச்சியும், பகல் 11 மணிக்கு சொக்கப்பனை நாட்டுதல் நிகழ்ச்சியும், 12 மணிக்கு திருக்கார்த்திகை சிறப்பு பூஜையும், 1 மணிக்கு மகா அன்னதானமும், மாலை 6 மணிக்கு திருக்கார்த்திகை தீபம் ஏற்றுதல் போட்டியும், இரவு 8 மணிக்கு ராஜமேளமும், 9 மணிக்கு சாஸ்தா கதை வில்லிசையும், 11 மணிக்கு சாஸ்தாவுக்கு பூஜையும், 11.30 மணிக்கு பெருமாள் சுவாமி கதை வில்லிசையும், நள்ளிரவு 1 மணிக்கு பெருமாள் சுவாமிக்கு அலங்கார தீபாரா தனையும் நடைபெறுகிறது.
9-ம் திருநாளான நாளை மறுநாள் (27-ந் தேதி) அதிகாலை 4 மணிக்கு பெருமாள் சுவாமி உற்சவராக ஆஞ்சநேயர் வாகனத்தில் பக்தர்கள் புடை சூழ மேளதாளத்துடன் வீதி உலா வருதல் நிகழ்ச்சியும், 4.30 மணிக்கு சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சியும், 5:30 மணிக்கு வான வேடிக்கையும், 6.30 மணிக்கு சிறப்பு பூஜையும், 8 மணிக்கு ராஜ மேளமும், 9 மணிக்கு வில்லிசையும், பகல் 1 மணிக்கு பெருமாள் சுவாமி மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு அலங்கார தீபாராதணைகளும், மாலை 3 மணிக்கு வண்ண கோலப் போட்டியும், பிற்பகல் 3:30 மணிக்கு பெருமாள் சுவாமி உற்சவரராக சிங்காரி மேளதாளத்துடன் பக்தர்கள் புடை சூழ வீதி உலா வருதல் நிகழ்ச்சியும், இரவு 7 மணிக்கு பெருமாள் சுவாமி மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு அலங்கார தீபாராதனையும், 8:30 மணிக்கு சோமாண்டி கதை வில்லிசையும் நடைபெறு கிறது.
விழாவின் 10-ம் நாளான 28-ம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 7 மணிக்கு வில்லிசையும், நண்பகல் 12.30 மணிக்கு அலங்கார தீபாராதனையும், இரவு 7 மணிக்கு பெருமாள் சுவாமி உற்சவரராக கருடர் வாகனத்தில் திருக்கோவிலை சுற்றி வலம் வருதல் நிகழ்ச்சியும், 7:30 மணிக்கு சிறப்பு பூஜையும், 8.30 மணிக்கு பிரசாதம் வழங்குதலும், 9 மணிக்கு கொடி இறக்குதல் மற்றும் மவுன பலி நிகழ்ச்சியும், அதனைத் தொடர்ந்து மாபெரும் இன்னிசை கச்சேரி நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
திருக்கார்த்திகை திரு விழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் தலைவர் நாகராஜன், துணைத் தலைவர் சுரேஷ், செயலாளர் அய்யப்பன், துணைச் செயலாளர் ஸ்ரீதரன், பொருளாளர் பாஸ்கர் மற்றும் ஊர் நிர்வாகிகள் ஊர் பொதுமக்கள் இணைந்து செய்து வருகின்றனர்.
- பக்தர்களுக்கு 7 வகையானபிரசாதம் வழங்கப்பட்டது
- 16 வகையான வாசனை திரவியங்களால் இந்த அபிஷேகம் நடத்தப்பட்டது.
கன்னியாகுமரி :
கொட்டாரம் பொற்றையடி வைகுண்டபதியில் 1800 அடி உயர மருந்துவாழ்மலை அமைந்துள்ளது. இங்கு உள்ள மலையில் ஜோதிலிங்கேஸ்வரர் உடனுறை ஸ்ரீபர்வதவர்த்தினி அம்மன் கோவிலில் கார்த்திகை மாத பிரதோஷம் நடைபெற்றது. இதையொட்டி மாலை 4.30 மணிக்கு நந்தீஸ்வரருக்கும், மூலவரான ஜோதிலிங்கேஸ்வரருக்கும் சிறப்பு அபிஷேகம் நடந்தது.
அப்போது எண்ணெய், மஞ்சள் பொடி, மாப்பொடி, திருமஞ்சன பொடி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், நாட்டு சர்க்கரை, இளநீர், விபூதி, பன்னீர், சந்தனம் உள்பட 16 வகையான வாசனை திரவியங்களால் இந்த அபிஷேகம் நடத்தப்பட்டது. இந்த அபிஷேகத்தை சிவாச்சாரியார் பிரபாகரன் அடிகளார் நடத்தினார்.
பின்னர் மாலை 6 மணிக்கு அலங்கார தீபாராதனை நடந்தது. இதையொட்டி சிவனடியார்கள் மற்றும் பக்தர்களின் பஜனை நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு சர்க்கரை பொங்கல், பால் பாயாசம், வெண்பொங்கல், கொண்டை கடலை, எள்ளு, உளுந்து, பஞ்சாமிர்தம், சாம்பார்சாதம் போன்ற 7 வகையான அருட்பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
- மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் கைது
- மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரும் தப்பி ஓடிவிட்டனர்.
தக்கலை :
தக்கலை அருகே உள்ள பனங்குழி கப்பியறை பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 53). இவர் கேரளாவில் கட்டிட காண்டிராக்டர் தொழில் செய்து வருகிறார்.
நேற்று மாலை அவர் கேரளாவில் இருந்து தக்கலைக்கு வந்தார். இரவு 7 மணியளவில் திருவிதாங்கோடு பகுதியில் உள்ள அமராவதி குளத்தின் வழியாக சுப்பிரமணியன் நடந்து சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் 2 பேர் அங்கு வந்தனர்.
அவர்கள், சுப்பிர மணியனை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி உள்ளனர். பின்னர் அவரை தாக்கிவிட்டு ரூ.25 ஆயிரத்தை பறித்தனர். தாக்குதலில் காயம் அடைந்த சுப்பிரமணியன் கூச்சலிட்டதால், அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டனர். இதனை கண்டதும் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரும் தப்பி ஓடிவிட்டனர்.
தாக்குதலில் காயம் அடைந்த சுப்பிரமணியன், சிகிச்சைக்காக தக்கலை அரசு ஆஸ்பத்திரியில் சேர்ந்துள்ளார். தாக்குதல் மற்றும் வழிப்பறி குறித்து தக்கலை போலீசில் சுப்பிரமணியன் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் தக்கலை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் தலைமையில் போலீசார், திருவிதாங்கோடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்துள்ளனர். அவர்கள், போலீசாரை கண்டதும் வாகனத்தை திருப்பிச் செல்ல முயன்றனர்.இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், மோட்டார் சைக்கிளில் தப்ப முயன்ற 2 பேரையும் மடக்கி பிடித்தனர். பின்னர் அவர்க ளிடம் விசாரித்தபோது முன்னுக்குப் பின் முரணாக பேசி உள்ளனர். இதனை தொடர்ந்து 2 பேரையும் போலீஸ் நிலையம் கொண்டு சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது அவர்கள் தான், நேற்று இரவு காண்டிராக்டர் சுப்பிரமணியனை தாக்கி பணம் பறித்தவர்கள் என்பது தெரியவந்தது. அதன்பேரில் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர்களது பெயர் திருவிதாங்கோடு முகமது சார்ஜின் (28), வேர்க்கிளம்பி தாணிவிளை பெலிக்ஸ் (24) என தெரியவந்தது. இவர்கள் வேறு எங்காவது வழிப்பறி உள்ளிட்ட குற்றச் செய ணல்களில் ஈடு பட்டுள்ளார்களா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரு கின்றனர்..






