கோட்டாரில் கேரளா லாட்டரி விற்ற வாலிபர் கைது

ரூ.15,000 பறிமுதல்அரவிந்த் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
கோட்டாரில் கேரளா லாட்டரி விற்ற வாலிபர் கைது
Published on

நாகர்கோவில் :

நாகர்கோவில் நகர பகுதியில் ஆன்லைன் லாட்டரி விற்பனையை கட்டுப்படுத்த போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்தியுள்ளனர். கோட்டார் சப்-இன்ஸ்பெக்டர் சத்திய சோபன் தலைமையிலான போலீசார் கம்பளம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அங்கு அரசால் தடை செய்யப்பட்ட கேரளா லாட்டரி விற்பனை செய்து கொண்டிருந்த அரவிந்த் (வயது 28) என்பவரை போலீசார் பிடித்தனர். பிடிபட்ட அவரிடம் இருந்து லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் ரூ.15 ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். அரவிந்த் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com