search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பத்திரப்பதிவு நடைமுறைகளில் குமரி மாவட்டத்திற்கு விலக்களிக்க வேண்டும்
    X

    பத்திரப்பதிவு நடைமுறைகளில் குமரி மாவட்டத்திற்கு விலக்களிக்க வேண்டும்

    • பிரின்ஸ் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
    • பத்திரப்பதிவு புதிய நடைமுறைகளில் குமரி மாவட்டத்திற்கு விலக்கு அளித்திட தமிழக முதல்-அமைச்சரிடம் முறையிடுவேன்.

    குளச்சல் :

    பிரின்ஸ் எம்.எல்.ஏ. வெளி யிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

    குமரி மாவட்டம் மலை சார்ந்த மாவட்டம் ஆகும். இது தமிழ்நாட்டிலேயே சிறிய மாவட்டம். இதன் பரப்பளவு 1672 சதுர கி.மீ. ஆகும். அரசு வனப்பகுதி 504.86 சதுர கி.மீ. இது மாவட்டத்தின் மொத்த பரப்பளவில் 30.2 சதவீதம் ஆகும். கடற்கரையின் பரப்பளவு 36 சதுர கி.மீ. மீதி சுமார் 1200 சதுர கி.மீ. நிலப்பரப்பாகும். இதில் தான் மக்கள் அடர்த்தியாக வாழ்ந்து வருகின்றனர். இந்த பகுதியில் பல்வேறு தரப்பு மக்களின் கட்டி டங்கள், விவசாய நிலங்கள், குடியிருப்புகள் உள்ளன. ஆனால் மக்கள் நெருக்கமாக வாழும் சூழ்நிலையில் வாழ்ந்து வருகின்றனர்.

    சமீபகாலமாக மாவட் டத்தில் ஏழை, எளிய மக்கள் தங்கள் பெண் குழந்தை களின் திருமணம் மற்றும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய போன்ற கொடிய நோய் தீர்க்க சிகிச்சைக்கு பணம் புரட்ட தங்கள் நிலங்களை விற்பனை செய்ய முடியாமல் உள்ளது. இதற்கு காரணம் நிலங்களின் பத்திரப்பதிவின்போது பத்திரப்பதிவு புதிய வழி காட்டுதல்படி 33 அடி இடம் பாதைக்கு விட்டு கொடுக்க வேண்டி உள்ளது.

    பிற மாவட்டங்கள் அதிக நிலப்பரப்பு கொண்டது. அங்கு 33 அடி இடம் விட்டால் பாதிப்பு இல்லை. குமரி மாவட்டம் நிலபரப்பு குறைந்த பகுதியாகும். இப்படி இடம் விடுவதால் குறைந்த அளவு நிலம் வைத்துள்ளவர்கள் இடத்தை விற்க முடியாமல் இருந்து வருகிறார்கள். இத னால் நிலங்களை வாங்கு வதற்கு யாரும் முன்வருவ தில்லை. நிலங்களை வாங்க யாரும் முன்வராத நிலையில் திருமணம், அவசர பணம் தேவை போன்ற காரியங் களுக்கு நிலங்களை விற்ப னை செய்ய முடியாமல் உள்ளது.

    எனவே அரசு ஏழை, எளியவர்களை பாதிக்கும் பத்திரப்பதிவு புதிய நடை முறைகளில் குமரி மாவட் டத்திற்கு விலக்களித்து குமரி மாவட்ட பொது மக்களை பாதுகாத்திட வேண்டும். பத்திரப்பதிவு புதிய நடைமுறைகளில் குமரி மாவட்டத்திற்கு விலக்கு அளித்திட தமிழக முதல்-அமைச்சரிடம் முறையிடுவேன். இதனை வரும் சட்டமன்ற கூட்டத்திலும் வலியுறுத்தி பேசுவேன்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    Next Story
    ×