என் மலர்
கன்னியாகுமரி
- வாகன ஓட்டிகள்-பொதுமக்கள் கடும் அவதி
- நகராட்சி நிர்வாகம் வேண்டுமென்றே இந்த சாலையை கிடப்பில் போட்டுள்ளனர்.
கன்னியாகுமரி :
குழித்துறை நகராட்சிக்கு உட்பட்ட 9-வது வார்டில் குழித்துறையில் இருந்து பாலவிளை, ஈத்தவிளை செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையின் அருகில் அரசு மேல்நிலைபள்ளி மற்றும் கிராம நிர்வாக அலுவலகம் உள்ளது.
பாலவிளை, ஈத்தவிளை பகுதியில் வசிக்கும் பொது மக்கள் மற்றும் மாணவ - மாணவிகள் இந்த சாலை வழியாக தான் அலுவலகங்களுக்கும் பள்ளிக்கும் செல்வார்கள். இந்த சாலை பல வருடங்களாக குண்டும் குழியுமாக காணப்பட்டது. இதனால் வாகனங்களோ, பொது மக்களோ செல்ல முடியாமல் மிகவும் அவதிபட்டனர்.
மேலும் இந்த சாலை வழியாக செல்லும் சில வாகனங்கள் விபத்துக்கு ள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த சாலை வழியாக இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் நிலை தடுமாறி பள்ளத்தில் விழுந்து படுகாயம டைந்துள்ள சம்பவமும் நடந்துள்ளது. இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொது மக்களும் சமூக ஆர்வலர்களும் பல முறை கோரிக்கை வைத்தும் இந்த சாலை சீரமைக்கபடாமல் கிடந்தது.
மேலும் சில மாதங்களுக்கு முன் வக்கீல் ஒருவர் இந்த சாலையை சீரமைக்க வேண்டும், இல்லை என்றால் தான் தீக்குளிக்க போவதாக மண்எண்ணை பாட்டிலுடன் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருந்தார்.
இருப்பினும் அந்த சாலை சீரமைக்க படாத நிலையே கிடந்துள்ளது. சாலை சீரமைக்கபடாவிட்டால் போராட்டம் நடத்த போவதாக பொதுமக்கள் அறிவித்திருந்தனர். இதனை தொடர்ந்து குழித்துறை நகராட்சி நிர்வாகம் கடந்த 2 மாதத்திற்கு முன்பு சாலை சீரமைக்கும் பணியை தொடங்கியது. அந்த வழியாக வாகனங்களோ பொது மக்களோ செல்ல முடியாதவாறு சாலையின் முன் பகுதியை அடைத்துள்ளனர்.
மேலும் அந்த சாலை வழியாக செல்லும் வாகன ங்களும் பொதுமக்களும் 2 கிலோமீட்டர் சுற்றி மாற்று பாதை வழியாக சென்று வந்தனர். மேலும் குழித்துறை நகராட்சி நிர்வாகமும் அந்த வார்டு கவுன்சிலரும் சேர்ந்து இந்த சாலை பணியில் பல முறைகேடுகள் செய்ததாக ஊர் மக்கள் போஸ்டர் ஒட்டியுள்ளனர். இந்த சூழலில் அந்த சாலை பணி கிடப்பில் போடப்பட்டு மெதுவாக செய்யப்பட்டு வருகிறது. பாலவிளை ஈத்தவிளை சாலை ½ கிலோமீட்டர் தான் உள்ளது. இந்த தூரத்தில் உள்ள சாலை பணியை செய்ய 5 நாட்களே போதுமானது. ஆனால் நகராட்சி நிர்வாகம் வேண்டுமென்றே இந்த சாலையை கிடப்பில் போட்டுள்ளனர்.
மேலம் 2 மாதங்களாக மாற்று பாதை வழியாக செல்வதால் வாகன ஓட்டிகளும் பொது மக்களும் பெரும் சிரமத்துக்கு ஆளா கியுள் னர். மேலும் நகராட்சி நிர்வாகம் கடந்த 2 வாரங்களுக்கு முன் பால விளை ஈத்த விளை சாலையில் அலங்கார கற்கள் பதித்தது. அதன்பிறகு பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. மேலும் வாகனங்களோ பொதுமக்களோ செல்லாதவாறு சாலையின் முன் பகுதியில் பள்ளம் தோண்டி அப்படியே கிடப்பில் போடப் பட்டுள்ளது. ஆகவே கிடப்பில் போடப்பட்டுள்ள சாலைபணியை தொடங்கி விரைவில் முடிக்க வேண்டும் என்று பொது மக்களும் மாணவ மாணவிகளும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.
- அண்ணன்-தங்கை உள்பட 3 பேர் படுகாயம்
- சுசீந்திரம் போலீசார் வழக்குப பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்
கன்னியாகுமரி :
ஈத்தாமொழி அருகே புத்தன் துறையை சேர்ந்தவர் பனிமய சசிங்டன் (வயது 53). இவரது மனைவி நிந்து (42). இவரது தாயார் வீடு கன்னியா குமரியில் உள்ளது.
கணவன்-மனைவி இருவரும் கன்னியாகுமரிக்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பி கொண்டு இருந்தனர். மணக் குடி-ஈத்தாமொழி சாலையில் இருவரும் வந்து கொண்டி ருந்தனர். புத்தன் துறை மிக்கேல்தெருவை சேர்ந்த ஜோயல் (16) என்பவர் அந்த பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். அவரது தங்கை ஜெரூஸ் (12). இவர் 7-ம் வகுப்பு படித்து வருகிறார். ஜோயல் தனது தங்கை ஜெரூசை மோட்டார் சைக்கிளில் டியூசனுக்கு அழைத்து சென்றார். மேலகிருஷ்ணன் புதூர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது முன் னால் சென்ற டெம்போ ஒன்றை முந்தி சென்றபோது எதிரே வந்த பனிமயசசிங்கின் மோட்டார் சைக்கிள் மீது மோதினார். இதில் பனிமய சசிங்டன், நிந்து, ஜோயல், ஜெரூஸ் ஆகிய 4 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். படுகாய மடைந்த 4 பேரையும் 108 ஆம்புலன்ஸ் மூலமாக சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியிலேயே நிந்து பரிதா பமாக இறந்தார்.
மற்ற 3 பேரும் நாகர்கோவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப் பட்டனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஜெரூசை திருவனந்தபுரத்தில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சுசீந்திரம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பலியான நிந்துவின் உடல் ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்தி ரியில் வைக்கப்பட்டுள்ளது.
அவரது உடல் பிரேத பரிசோதனை இன்று நடக்கிறது. இதையடுத்து அவரது உறவினர்கள் அங்கே திரண்டு உள்ளனர். கணவன் கண் எதிரே மனைவி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்து நடந்த பகுதியில் தொடர்ந்து விபத்துகள் நடைபெற்று வருகிறது.
உயிரிழப்புகளும் அதிக அளவு நடந்து வருகின்றன. இதை தடுக்கும் வகையில் போலீசார் தீவிர ரோந்து பணியை தீவிரப்படுத்துவது டன் அதிவேகமாக வாகனம் ஓட்டுவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும், பொது மக்களும் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் விபத்து நடந்த பகுதிகளில் தற்காலிக தடுப்பு வேலிகளை வைத்து கண்காணிக்க வேண்டும் என்றும் பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.
- சிறப்பு விருந்தினர்களாக குமரி எம்.பி விஜய்வசந்த், குளச்சல் எம்.பி ஜே.ஜி.பிரின்ஸ் கலந்துக் கொண்டனர்.
- பிறந்த நாள் முன்னிட்டு 121 மாணவ மாணவிகளுக்கு நோட்டு, புத்தகங்கள் வழங்கப்பட்டது.
பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 121 வது பிறந்தநாளை முன்னிட்டு, குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் கே.டி.உதயம் தலைமையில் பிறந்த நாள் விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த், குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் ஜே.ஜி.பிரின்ஸ் ஆகியோர் கலந்துகொண்டு கேக் வெட்டியும், 121 மாணவ மாணவிகளுக்கு நோட்டு, புத்தகங்கள் வழங்கியும் சிறப்பித்தனர்.
காங்கிரஸ் பேரியக்க மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள், மகளிர் காங்கிரஸ் நிர்வாகிகள், நகர நிர்வாகிகள், வட்டார நிர்வாகிகள், பேரூராட்சி நிர்வாகிகள், ஊராட்சிமன்ற நிர்வாகிகள், காங்கிரஸ் பேரியக்க துணை அமைப்புகளின் நிர்வாகிகள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
- மகளிருக்கு ரூ.ஆயிரம் வழங்கும் திட்டம்
- 24-ந் தேதி தொடங்குகிறது
நாகர்கோவில் :
குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு ஒன்றில் கூறப்பட்டுள்ளதாவது:-முதல்-அமைச்சரின் முக்கிய திட்டமான மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.ஆயிரம் வழங்கும் திட்டத்தினை குமரி மாவட்டத்தில் செயல்படுத்தும் பொருட்டு 2 கட்டமாக முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மாவட்டத்தில் உள்ள 764 நியாய விலைக்க டைகளில் 5 லட்சத்து 77ஆயிரத்து 138 குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர்.
764 நியாய விலைக்கடைகள் கணக்கெடுப்பு அலகாக எடுத்துக் கொள்ளப்பட்டு 764 முகாம்களில் விண்ணப்பங்கள் பதிவு செய்யும் பணி இல்லம் தேடிக்கல்வி தன்னார்வலர்கள் மூலம் மேற்கொள்ள ப்பட உள்ளது. முதற்கட்டமாக வருகிற 24-ந்தேதி முதல் ஆகஸ்ட் 8-ந்தேதி வரையி லும் 2-ம் கட்டமாக ஆகஸ்ட் 8-ந்தேதி முதல் 16-ந்தேதி வரையிலும் நடைபெறவுள்ளது,
முதற்கட்டமாக அகஸ்தீ ஸ்வரம் வட்டத்தில் 215 முகாம்களும், தோவாளை வட்டத்தில் 59 முகாம்களும் கல்குளம் வட்டத்தில் 126 முகாம்களும் நடைபெற உள்ளது. மீதமுள்ள 364 முகாம்களுக்கான விண்ணப்ப பதிவு 2-ம் கட்டமாக கல்குளம், விளவங்கோடு, திருவட்டார் மற்றும் கிள்ளியூர் ஆகிய வட்டங்களில் நடைபெறவுள்ளது. மேற்படி இரண்டு கட்ட முகாம்களின் கண்காணிப்பு பணியில் 153 மண்டல அலுவலர்கள் 51 மேற்பார்வை அலுவலர்கள், வட்டவாரியாக ஒரு மாவட்ட நிலை மேற்பார்வை அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
ஒவ்வொரு முகாமிற்கும் கிராம நிர்வாக அலுவலர் நிலையில் 1 முகாம் அலுவலர் என 764 முகாம் அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். பொதுமக்கள் இது குறித்து தகவல் தெரிந்து கொள்ள மாவட்ட அளவில் கட்டுப்பாட்டு அறை ஒன்று இயங்கி வருகிறது. அதற்கான எண் 1077 மற்றும் 04652 - 231077 ஆகும். பொதுமக்கள் மேற்படி முகாம்களில் தங்கள் விண்ணப்பங்களை பதிவு செய்து பயன்பெற வேண் டும்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
- மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்
- துணை மேயர் மேரி பிரின்சி லதா, மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
நாகர்கோவில் :
நாகர்கோவில் மாநகராட்சியின் 7-வது வார்டுக்குட்பட்ட தெலுங்கு செட்டி தெருவில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கப்படுகிறது. இந்தப் பணியை மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்.
துணை மேயர் மேரி பிரின்சி லதா, மண்டல தலைவர்கள் ஜவகர், மாமன்ற உறுப்பினர்கள் மேரி ஜெனட் விஜிலா, ஜெயவிக்ரமன், கவுசிகி, தொழில் நுட்ப அலுவலர் ரவி, பகுதி செயலாளர் சேக் மீரான், இளைஞர் அணி அகஸ்தீசன், வேல்முருகன் மற்றும் பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
- 3 பேரின் உடல்களையும் அடக்கம் செய்ய ஒரு தனியார் தொண்டு நிறுவனம் முன்வந்துள்ளது
- இறந்து 2 நாட்கள் வரை ஆகியிருக்கலாம் என்பதும் விசா ரணையில் தெரியவந்தது.
நாகர்கோவில்:
இரணியல் அருகே உள்ள தாந்தவிளையை சேர்ந்தவர் பாபு (வயது 46), தொழிலாளி. இவரது சகோதரிகள் ஸ்ரீதேவி (44), உஷா பார்வதி (38). இவர்கள் 3 பேருக்கும் திருமணமாகவில்லை.
வாடகை வீட்டில் வசித்து வந்த 3 பேரும் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. வீட்டுக்குள் இருந்து துர்நாற்றம் வீசிய வந்த பிறகே அவர்களது சாவு பற்றிய விவரம் தெரியவந்தது. குளச்சல் போலீசார் உடல்களை கைப்பற்றி விசாரணை நடத்திய போது 3 பேரும் தற்கொலை செய்திருப்பதும், இறந்து 2 நாட்கள் வரை ஆகியிருக்கலாம் என்பதும் விசா ரணையில் தெரியவந்தது. ஆனால் தற்கொலைக்கான காரணம் இன்னும் சரிவர தெரியவில்லை. பாபு மற்றும் அவருடைய சகோத ரிகளுக்கு சொந்தம் என்று சொல்லிக் கொள்ள யாரும் இல்லை. இதனால் அவர்கள் பற்றிய கூடுதல் தகவல்களை போலீசாரால் விசாரிக்க முடியவில்லை.
இதைத் தொடர்ந்து 3 பேரின் உடல்களையும் கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு 3 பேரின் உடல்களும் நேற்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால் உடல்களை பெற்றுச் செல்ல உறவினர்கள் யாரும் இல்லை. இதனால் அந்த உடல்கள் அடக்கத்துக்காக பிணவறையில் காத்திருக்கின்றன. உடலை வாங்க உறவினர்கள் யாரும் வராதபட்சத்தில் போலீஸ் சார்பில் 3 பேரின் உடல்களும் அடக்கம் செய்யப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.
இதற்கிடையே தற்கொலை செய்து கொண்ட 3 பேரின் உடல்களையும் அடக்கம் செய்ய ஒரு தனியார் தொண்டு நிறுவனம் முன்வந்துள்ளது. தங்களது சொந்த செலவில் உடல்களை அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று அந்த தொண்டு நிறுவனம் கேட்டுள்ளது. ஆனால் தற்போது வரை போலீஸ் சார்பில் அடக்கம் செய்யவே நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக தற்கொலை செய்துகொண்ட 3 பேரின் உடல்களை அடக்கம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
- கார் டிரைவருக்கும், தொழில் அதிபர் மனைவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது
- கொலை முயற்சி உள்பட 4 பிரிவுகளில் வழக்கு பதிந்து கைது செய்தனர்
நாகர்கோவில் :
இரணியல் அருகே பேயன்குழியை சேர்ந்தவர் சகாய ஜெனிபர் (வயது 30). இவர் நாகர்கோவில் பகுதியில் கார்கள் வாங்கி விற்பனை செய்யும் தொழி லதிபர் ஒருவர் வீட்டில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு கண் குறைபாடு இருந்து வந்தது.
இந்த நிலையில் கார் டிரைவருக்கும், தொழில் அதிபர் மனைவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த விவகாரம் தொழிலதிபருக்கு தெரிய வந்ததையடுத்து சகாய ஜெனிபரை அவர் கண்டித் தார். பின்னர் அவரை வேலையில் இருந்து நிறுத்தியுள்ளார். இத னால் சகாய ஜெனிபர் ஆத்திர மடைந்தார்.
சம்பவத்தன்று தொழி லதிபர் பள்ளிவிளை பகுதி யில் நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது அங்கு வந்த சகாய ஜெனிபர், அவரிடம் தகராறு செய்தார். பின்னர் மறைத்து வைத்திருந்த அரிவாளால் அவரை வெட்டினார். இதில் தொழில் அதிபருக்கு காயம் ஏற்பட்டது. பின்னர் சகாய ஜெனிபர் அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.
இதுகுறித்து தொழி லதிபர், ஆசாரி பள்ளம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் சகாய ஜெனிபர் மீது ஆசாரிபள்ளம் போலீசார் கொலை முயற்சி உள்பட 4 பிரிவுகளில் வழக்கு பதிந்து கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சகாய ஜெனிபர் மீது ஏற்கனவே இரணியல், திருச்சி போலீஸ் நிலையங்களில் வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
- சந்தேகப்படும்படியாக நின்ற 2 வாலிபர்களை பிடித்து விசாரித்தனர்
- கஞ்சா எங்கிருந்து கிடைத்தது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நாகர்கோவில் :
கோட்டார் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்கு மார் தலைமையிலான போலீசார் சாஸ்திரி நகர் பகுதியில் ரோந்து சென்ற போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்ற 2 வாலிபர்களை பிடித்து விசாரித்தனர்.அவர்கள் முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்தனர். போலீசார் அவர்களை சோதனை செய்தபோது கஞ்சா பொட்டலம் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடத்திய போது அவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த முகமது ஆசிப், மதன் என்பது தெரியவந்தது. இவர்களுக்கு கஞ்சா எங்கிருந்து கிடைத்தது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- மைதானத்தில் பெருகும் மழை வெள்ளம் வெளியேற இடையூறு இல்லாமல் மைதான கட்டுமான பணிகள்
- பேச்சுவார்த்தையின்படி நில அளவு செய்யும் பணியை விரைந்து தொடங்கிட அதிகாரிகளை வலியுறுத்துவது
கன்னியாகுமரி :
குளச்சல் அருகே உள்ளது சைமன்காலனி. இங்கு சுமார் 2 ஏக்கர் பரப்பில் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது.இந்த நிலத்தில் இளைஞர்கள் விளையாட்டு மைதானம் அமைத்து விளையாடி வருகின்றனர்.
மழைக்காலத்தில் விளையாட்டு மைதானத்தில் வெள்ளம் பெருகுவதால் இளைஞர்கள் மண் போட்டுள்ளனர்.இந்நிலையில் மழை நீர் வழிந்து ஓட கடந்த வாரம் இளைஞர்கள் மைதானத்தின் தெற்கு பகுதியில் ஓடை தோண்டினர்.இதற்கு அப்பகுதி இரண்டு வீட்டினர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
தகவலறிந்த ஊர் மக்கள் இளைஞர்களுக்கு ஆதரவாக அங்கு திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவவலறிந்த கல்குளம் தாசில்தார் கண்ணன்,குளச்சல் கிராம வருவாய் ஆய்வாளர் தக்கலை டி.எஸ்.பி.உதயசூரியன் விரைந்து வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டு அவர்களிடையே பேச்சுவார்த்தை நடத்தினார்.
மைதானத்தில் பெருகும் மழை வெள்ளம் வெளியேற இடையூறு இல்லாமல் மைதான கட்டுமான பணிகள் மேற்கொள்வது எனவும்,
இது தொடர்பாக பத்மநாபபுரம் சப் - கலெக்டர் அலுவலகத்தில் பேச்சு வார்த்தை நடத்தி சுமூக முடிவு எடுப்பது எனவும் தீர்வு காணப்பட்டது. இதையடுத்து சப் - கலெக்டர்அ லுவலக த்தில்காணப்பட்டது.
பேச்சுவார்த்தையின்படி நில அளவு செய்யும் பணியை விரைந்து தொடங்கிட சம்பந்தப்பட்ட அதிகாரிகளை வலியுறுத்துவது என முடிவு செய்யப்பட்டது. நடந்த பேச்சுவார்த்தையில் பிரச்சி னைக்குரிய பகுதியில் நில அளவு செய்வது என தீர்மானிக்கப்பட்டது.இந்நிலையில் விஜய்வசந்த் எம்.பி. நேற்று மாலை சைமன்காலனி சென்று அங்கு பங்குத்தந்தை மற்றும் ஊர் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.ஆலோசனையில் பேச்சுவார்த்தையின்படி நில அளவு செய்யும் பணியை விரைந்து தொடங்கிட சம்பந்தப்பட்ட அதிகாரிகளை வலியுறுத்துவது என முடிவு செய்யப்பட்டது.
- மார்த்தாண்டம் நேசமணி நினைவு கல்லூரியில் நடந்தது
- இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களுக்கு இந்த பயிற்சியை தொடங்கி வைத்தார்.
கன்னியாகுமரி :
தமிழக அரசின் சார்பாக மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தை செயல்படுத்த தமிழ்நாடு முழுவதும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தப் பணியில் இல்லம் தேடி கல்வியில் பணியாற்றி வரும் தன்னார்வலர்களை ஈடுபடுத்துவது என்று தமிழக அரசு தெரி வித்துள்ளது. இதன் அடிப்படையில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களுக்கு இந்த பணிக்கான பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.இதைத்தொடர்ந்து கன்னியாகுமரி மாவட் டத்திலும் மாவட்ட கலெக்டர் தலைமையில்இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களுக்கு இந்த பயிற்சியை தொடங்கி வைத்தார்.
இதன் பின்னர் ஒவ்வொரு வட்டாட்சியர்கள் தலைமையிலும் இந்த பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதில் விளவங்கோடு வட்டாட்சியர் குமாரவேல் தலைமையில் நேற்று மார்த்தாண்டம் நேசமணி நினைவு கிறிஸ்தவ கல்லூரியில் இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் மேல்புறம், முஞ்சிறை, கிள்ளியூர் வட்டாரத்திற்கு உட்பட்ட விருப்பப்பட்ட இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.
இந்த பயிற்சிக்கு இல்லம் தேடி கல்வி ஒருங்கிணைப்பாளர் ஜாண்சன் முன்னிலை வகித்தார். இந்த பணியினை செயல்படுத்துவதற்கு பொது மக்களிடையே வழங்கப்படும் விண்ணப்பங்களை எப்படி பூர்த்தி செய்வது மற்றும் என்னென்ன ஆவணங்கள் தேவைப்படும் மேலும் பொது மக்களிடையே எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது உட்பட அனைத்திற்கும் பயிற்சி அளிக்கப்பட்டது.
பின்னர் குமரி மாவட்ட வருவாய் அலுவலர் பால சுப்பிரமணியம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இந்த திட்டத்தை பற்றி பேசினார். பின்னர் தன்னார்வலர்கள் தங்களுக்கு ஏற்பட்ட அனைத்து சந்தேகங்களையும் ஆர்வத் துடன் கேட்டு தெரிந்து கொண்டனர்.
- சிறிய வகை கார்கள் பயணிகள் நடை மேடை 1-லிருந்து 2 மற்றும் 3-க்கு கட்டணம் வந்தது
- கட்டணம் ஒரு பயணிக்கு 10 ரூபாய் என்று நிர்ணயம் செய்ய வேண்டும்
கன்னியாகுமரி :
குளச்சல் எம்.எல்.ஏ. பிரின்ஸ் நிருபர்களிடம் கூறியதாவது:-
கன்னியாகுமரி மாவட்டத்தின் தலைநகர் நாகர்கோவில் ரெயில் நிலையம் மாவட்ட மக்களால் அதிக அளவில் பயன்படுத்தப்படும் நிலையம் ஆகும். இந்த ரெயில் நிலையத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பேட்டரியால் இயங்கும் சிறிய வகை கார்கள் பயணிகள் நடை மேடை 1-லிருந்து 2 மற்றும் 3-க்கு கட்டணம் வந்தது. இந்த வசதி ஊனமுற்றோர், வயதானவர்கள், கர்ப்பிணி பெண்கள், நோய்வாய் பட்டவர் என அனைத்து தரப்பினருக்கும் மிகவும் உதவியாக இருந்து வந்தது. இது மட்டுமில்லாமல் குடும்பத்துடன் நீண்ட தூரம் செல்லும் பயணிகள் தங்கள் லக்கேஜ்களை எடுத்து செல்ல மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
பின்னர் ரெயில்வே துறை இந்த சேவையை கொரோனா காலகட்டத்தில் திடீரென நிறுத்தி விட்டது. இதனால் அனைத்து தரப்பினரும் மிகவும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். எனவே பேட்டரி கார் வசதியை மீண்டும் கொண்டு வரவேண்டும் என்று மாவட்ட மக்கள் சார்பில் நான் தெற்கு ரெயில்வே பொது மேலாளர் மற்றும் கோட்ட மேலாளர் ஆகியோருக்கு கோரிக்கை விடுத்து வந்தேன்.
இந்த கோரிக்கையின் பயனாக நாகர்கோவில் மற்றும் கன்னியாகுமரி ரெயில் நிலையங்களில் பேட்டரி கார் வசதிக்காக ஒப்பந்தபுள்ளி கோரும் பணிகள் நடந்து வருவதா கவும் வெகு விரைவில் இந்த வசதி நாகர்கோவில் சந்திப்பு மற்றும் கன்னியாகுமரி ரெயில் நிலையத்தில் வரும் என்றும் தெற்கு ரெயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் கடிதத்தில் தெரி வித்துள்ளார். இந்த வசதி வந்தால் அனைத்து தரப்பு மக்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும். இவ்வாறு இந்த வசதி வரும் போது அதன் கட்டணம் ஒரு பயணிக்கு 10 ரூபாய் என்று நிர்ணயம் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- அறநிலையத் துறை அதிகாரிகள் அதிரடி
- கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு சொந்தமானது
கன்னியாகுமரி, ஜூலை.15-
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு சொந்தமான 36 சென்ட் பரப்பளவு உள்ள தானிய களஞ்சியம் கன்னியாகுமரி சன்னதி தெருவில் பகவதி அம்மன் கோவில் கலைய ரங்கம் அருகில் அமைந்து உள்ளது. இந்த இடம் தனிப்பட்ட நபர் கையில் பல வருடங்களாக இருந்து வந்தது. இந்த சொத்தை மீட்பதற்காக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
பல வருடங்களாக இந்த வழக்கு நடைபெற்று வந்தது. தற்போது இந்து சமய அறநிலையத்துறைக்கு சாதகமாக கோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது.
இதைத் தொடர்ந்து நீதிமன்ற உத்தரவுப்படி அந்த இடத்தை குமரி மாவட்ட கோவில்களின் இணை ஆணையர் ரத்தினவேல் பாண்டியன் தலைமையில் நாகர்கோவில் இந்து சமய அறநிலைய ஆட்சித் துறை உதவி ஆணையர் தங்கம் முன்னிலையில் நாகர்கோ வில் தேவசம் தொகுதி கோவில்க ளின் கண்காணிப் பாளரும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளருமான ஆனந்த், சுசீந்திரம் கோவில் மேலாளர் ஆறுமுகதரன், ஆய்வாளர் சுஜித், மராமத்து பிரிவு பொறியாளர் ராஜ்குமார் மற்றும் அதிகாரிகள் நேற்று மாலை சீல் வைத்து பூட்டி கையகப்படுத்தினர்.
இந்த சொத்தின் தற்போதைய மதிப்பு ரூ.18 கோடி ஆகும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சொத்தை இந்து சமய அறநிலைய துறையினர் கையகப்படுத்தும் போது கன்னியா குமரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது






