search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இரணியல் அருகே கள்ளக்காதலை கண்டித்த தொழிலதிபருக்கு அரிவாள் வெட்டு - கார் டிரைவர் கைது
    X

    இரணியல் அருகே கள்ளக்காதலை கண்டித்த தொழிலதிபருக்கு அரிவாள் வெட்டு - கார் டிரைவர் கைது

    • கார் டிரைவருக்கும், தொழில் அதிபர் மனைவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது
    • கொலை முயற்சி உள்பட 4 பிரிவுகளில் வழக்கு பதிந்து கைது செய்தனர்

    நாகர்கோவில் :

    இரணியல் அருகே பேயன்குழியை சேர்ந்தவர் சகாய ஜெனிபர் (வயது 30). இவர் நாகர்கோவில் பகுதியில் கார்கள் வாங்கி விற்பனை செய்யும் தொழி லதிபர் ஒருவர் வீட்டில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு கண் குறைபாடு இருந்து வந்தது.

    இந்த நிலையில் கார் டிரைவருக்கும், தொழில் அதிபர் மனைவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த விவகாரம் தொழிலதிபருக்கு தெரிய வந்ததையடுத்து சகாய ஜெனிபரை அவர் கண்டித் தார். பின்னர் அவரை வேலையில் இருந்து நிறுத்தியுள்ளார். இத னால் சகாய ஜெனிபர் ஆத்திர மடைந்தார்.

    சம்பவத்தன்று தொழி லதிபர் பள்ளிவிளை பகுதி யில் நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது அங்கு வந்த சகாய ஜெனிபர், அவரிடம் தகராறு செய்தார். பின்னர் மறைத்து வைத்திருந்த அரிவாளால் அவரை வெட்டினார். இதில் தொழில் அதிபருக்கு காயம் ஏற்பட்டது. பின்னர் சகாய ஜெனிபர் அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.

    இதுகுறித்து தொழி லதிபர், ஆசாரி பள்ளம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் சகாய ஜெனிபர் மீது ஆசாரிபள்ளம் போலீசார் கொலை முயற்சி உள்பட 4 பிரிவுகளில் வழக்கு பதிந்து கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சகாய ஜெனிபர் மீது ஏற்கனவே இரணியல், திருச்சி போலீஸ் நிலையங்களில் வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

    Next Story
    ×