search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குளச்சலில் விளையாட்டு மைதானம் விவகாரம் - பொது மக்களுடன் விஜய்வசந்த் எம்.பி.ஆலோசனை
    X

    குளச்சலில் விளையாட்டு மைதானம் விவகாரம் - பொது மக்களுடன் விஜய்வசந்த் எம்.பி.ஆலோசனை

    • மைதானத்தில் பெருகும் மழை வெள்ளம் வெளியேற இடையூறு இல்லாமல் மைதான கட்டுமான பணிகள்
    • பேச்சுவார்த்தையின்படி நில அளவு செய்யும் பணியை விரைந்து தொடங்கிட அதிகாரிகளை வலியுறுத்துவது

    கன்னியாகுமரி :

    குளச்சல் அருகே உள்ளது சைமன்காலனி. இங்கு சுமார் 2 ஏக்கர் பரப்பில் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது.இந்த நிலத்தில் இளைஞர்கள் விளையாட்டு மைதானம் அமைத்து விளையாடி வருகின்றனர்.

    மழைக்காலத்தில் விளையாட்டு மைதானத்தில் வெள்ளம் பெருகுவதால் இளைஞர்கள் மண் போட்டுள்ளனர்.இந்நிலையில் மழை நீர் வழிந்து ஓட கடந்த வாரம் இளைஞர்கள் மைதானத்தின் தெற்கு பகுதியில் ஓடை தோண்டினர்.இதற்கு அப்பகுதி இரண்டு வீட்டினர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    தகவலறிந்த ஊர் மக்கள் இளைஞர்களுக்கு ஆதரவாக அங்கு திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவவலறிந்த கல்குளம் தாசில்தார் கண்ணன்,குளச்சல் கிராம வருவாய் ஆய்வாளர் தக்கலை டி.எஸ்.பி.உதயசூரியன் விரைந்து வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டு அவர்களிடையே பேச்சுவார்த்தை நடத்தினார்.

    மைதானத்தில் பெருகும் மழை வெள்ளம் வெளியேற இடையூறு இல்லாமல் மைதான கட்டுமான பணிகள் மேற்கொள்வது எனவும்,

    இது தொடர்பாக பத்மநாபபுரம் சப் - கலெக்டர் அலுவலகத்தில் பேச்சு வார்த்தை நடத்தி சுமூக முடிவு எடுப்பது எனவும் தீர்வு காணப்பட்டது. இதையடுத்து சப் - கலெக்டர்அ லுவலக த்தில்காணப்பட்டது.

    பேச்சுவார்த்தையின்படி நில அளவு செய்யும் பணியை விரைந்து தொடங்கிட சம்பந்தப்பட்ட அதிகாரிகளை வலியுறுத்துவது என முடிவு செய்யப்பட்டது. நடந்த பேச்சுவார்த்தையில் பிரச்சி னைக்குரிய பகுதியில் நில அளவு செய்வது என தீர்மானிக்கப்பட்டது.இந்நிலையில் விஜய்வசந்த் எம்.பி. நேற்று மாலை சைமன்காலனி சென்று அங்கு பங்குத்தந்தை மற்றும் ஊர் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.ஆலோசனையில் பேச்சுவார்த்தையின்படி நில அளவு செய்யும் பணியை விரைந்து தொடங்கிட சம்பந்தப்பட்ட அதிகாரிகளை வலியுறுத்துவது என முடிவு செய்யப்பட்டது.


    Next Story
    ×