என் மலர்
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள தேவனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 30). இவர் அதே ஊரில் சவுண்ட் சர்வீஸ் மற்றும் வாடகை பாத்திர கடை நடத்தி வருகிறார்.
இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த அன்பு என்கிற விஜய் (22), வெங்கடேசன் (19) ஆகியோருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்தது.
சம்பவத்தன்று விஜயகுமார் மாயனூர் ரெயில்வே பாதையில் நடைபயிற்சி சென்றார். அப்போது அங்கு வந்த விஜய், அவரது நண்பர் வெங்கடேசன் மற்றும் அடையாளம் தெரிந்த பெயர் தெரியாத 3 பேர் ஒன்று சேர்ந்து விஜயகுமாரை வழிமறித்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக வெட்டினர். இதில் அலறி துடித்தவாறு விஜயகுமார் கீழே சுருண்டு விழுந்தார். சத்தம் கேட்டு அக்கம்பக்கம் உள்ளவர்கள் ஓடிவந்தனர். ஆட்கள் வருவதை அறிந்த அந்த கும்பல் அங்கிருந்து ஓடிவிட்டது.
ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய விஜயகுமாரை உடனே அங்கு உள்ளவர்கள் திருக்கோவிலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரது நிலை மோசமானது. பின்னர் மேல்சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் விஜயகுமார் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்த தகவல் தேவனூர் கிராமத்தில் காட்டு தீ போல் பரவியது. விஜயகுமாரை தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டவர்களை கைது செய்ய வலியுறுத்தி அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் திருக்கோவிலூர் விழுப்புரம் சாலையில் தேவனூர் கூட்டு ரோட்டில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது போலீசாரை கண்டித்தும் கோஷம் எழுப்பினர்.
அதனை தொடர்ந்து குற்றவாளிகளை கைது செய்ய விழுப்புரம் போலீஸ் டி.எஸ்.பி. பார்த்திபன் உத்தரவின்பேரில் தனிப்படை போலீசார் நியமிக்கப்பட்டு குற்றவாளிகளை தேடி வந்தனர்.
இந்த சம்பவத்தில் 9 பேர் ஈடுபட்டிருப்பது தெரிய வந்தது. முதற்கட்டமாக பழனி, அஞ்சலை, சுருளி மற்றும் தேவிகன் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கின் முக்கிய குற்றவாளிகளான அன்பு மற்றும் வெங்கடேசன் நேற்று மாயனூர் ரெயில்வே பாதையில் கக்தி மற்றும் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றி திரிவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் அரகண்டநல்லூர் போலீசார் 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய அய்யப்பன், காடகனூர் கிராமத்தைச் சேர்ந்த அஜித், அசோகன் ஆகிய 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
திருக்கோவிலூர் அருகே உள்ள நெடுமுடையான் கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 30). இவர் நேற்று அதே ஊரைச் சேர்ந்த மேலும் 3 பேருடன் அதே ஊரில் உள்ள தனது நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தார்.
அப்போது காலை உணவு சாப்பிடுவதற்காக வயலில் உள்ள கிணற்றில் தண்ணீர் எடுக்க சென்றார். அப்போது நெடுநேரமாகியும் தண்ணீர் எடுத்துக் கொண்டு வராததால் உடன் வேலை செய்தவர்கள் சந்தேகப்பட்டு கிணற்றுக்கு சென்று பார்த்தனர்.
அப்போது அய்யப்பன் போட்டிருந்த செருப்பும் தண்ணீர் எடுக்கச் சென்ற குடமும் கிணற்றில் மிதந்து கொண்டிருந்தது. இதனால் சந்தேகமடைந்த அவர்கள் உடன் கிணற்றில் மூழ்கி தேடிப் பார்த்தபோது அய்யப்பன் நீரில் மூழ்கி இறந்து போனது தெரியவந்தது.
தகவல் அறிந்த திருக்கோவிலூர் போலீசார் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
திருக்கோவிலூர்:
திருக்கோவிலூர் அருகே மணலூர்பேட்டையில் இருந்து சங்கராபுரம் நோக்கி அரசு டவுன் பஸ் சென்றது. அந்த பஸ்சை டிரைவர் ஏழுமலை ஓட்டிச் சென்றார்.
இந்த பஸ் மணலூர்பேட்டை பாரத ஸ்டேட் வங்கி முன்பாக சென்று கொண்டிருந்தபோது திடீரென அரசு பஸ்சை குடிபோதையில் சங்கராபுரம் அருகே உள்ள பெரியமணியந்தல் கிராமத்தைச் சேர்ந்த பன்னீர் செல்வம் என்பவர் வழிமறித்தார்.
பின்னர் பஸ்சில் ஏறி டிரைவரிடம் தகராறு செய்து நடுரோட்டில் ரகளையில் ஈடுபட்டார். அப்போது பஸ்சில் இருந்த பயணிகள் பெரும் பீதிக்கு உள்ளாகினர். மேலும் பஸ் டிரைவருக்கு கொலை மிரட்டல் விடுத்து அரசு பணியை செய்யவிடாமல் தடுத்துள்ளார். நடுரோட்டில் பஸ் நின்று போனதால் அந்த வழியே போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பித்துப் போனது. இதனால் அந்த பகுதியே போர்க்களம் போல் ஆனது.
இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த மணலூர்பேட்டை போலீசார் அரசு பஸ்சை வழிமறித்து ரகளையில் ஈடுபட்ட பன்னீர்செல்வத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி அருகே தியாகதுருகம் அண்ணாநகர் பகுதியில் மளிகை கடையில் புகையிலைப் பொருட்கள் விற்பதாக தியாகதுருகம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்படி தியாகதுருகம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் இளங்கோவன் தலைமையிலான போலீசார் அண்ணாநகர் பகுதியில் உள்ள மளிகை கடையில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட ரூ.1,150 மதிப்பிலான 85 பாக்கெட் புகையிலை பொருட்கள் விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது.
இதையொட்டி புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் மளிகை கடை உரிமையாளரான சங்கராபுரம் அருகே சூ.பாலப்பட்டு கிராமத்தை சேர்ந்த ஏழுமலை (வயது 37) என்பவரை கைது செய்தனர். மேலும் கிராம நிர்வாக அலுவலர் ராஜா முன்னிலையில் மளிகை கடைக்கு சீல் வைக்கப்பட்டது.






