search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கைது
    X
    கைது

    கள்ளக்குறிச்சி அருகே புகையிலை பொருட்கள் விற்ற கடைக்கு சீல்

    கள்ளக்குறிச்சி அருகே புகையிலை பொருட்கள் விற்ற கடைக்கு சீல் வைக்கப்பட்டது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி அருகே தியாகதுருகம் அண்ணாநகர் பகுதியில் மளிகை கடையில் புகையிலைப் பொருட்கள் விற்பதாக தியாகதுருகம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன்படி தியாகதுருகம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் இளங்கோவன் தலைமையிலான போலீசார் அண்ணாநகர் பகுதியில் உள்ள மளிகை கடையில் ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட ரூ.1,150 மதிப்பிலான 85 பாக்கெட் புகையிலை பொருட்கள் விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது.

    இதையொட்டி புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் மளிகை கடை உரிமையாளரான சங்கராபுரம் அருகே சூ.பாலப்பட்டு கிராமத்தை சேர்ந்த ஏழுமலை (வயது 37) என்பவரை கைது செய்தனர். மேலும் கிராம நிர்வாக அலுவலர் ராஜா முன்னிலையில் மளிகை கடைக்கு சீல் வைக்கப்பட்டது.

    Next Story
    ×