search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆயுதங்கள் பறிமுதல்"

    • மதுரையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை செய்தனர்.
    • அப்போது வீட்டில் இருந்து வாள், வேல் கம்பு, சுருள் கத்தி, சைக்கிள் செயின், கேடயம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது.

    மதுரை

    கர்நாடக மாநிலம் மங்களூரில் கடந்த மாதம் குக்கர் வெடிகுண்டு, கோவையில் காரில் சிலிண்டர் வெடித்தது தொடர்பாக மதுரையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

    இந்தநிலையில் இன்று காலை என்.ஐ.ஏ. இன்ஸ்பெக்டர் அருள் மகேஷ் தலைமையில் 3 அதிகாரிகள் கொண்ட குழுவினர் மதுரை நெல்பேட்டை பகுதியைச் சேர்ந்த உமர்ஷெரீப் (வயது 42) என்பவரது வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர்.

    அப்போது வீட்டில் இருந்து வாள், வேல் கம்பு, சுருள் கத்தி, சைக்கிள் செயின், கேடயம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது. சில மணி நேர சோதனையின் பின் உமர்ஷெரீப்பை ரகசியமான இடத்திற்கு அழைத்துச் சென்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக அவரது மனைவி மற்றும் குடும்பத்தினருடனும் விசாரணை நடத்தப்பட்டது.

    என்.ஐ.ஏ. சோதனை யின்போது அந்தப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    • கமுதி அருகே கொலை செய்ய பதுங்கியிருந்த 7 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர்.
    • இவர்கள் மீது பல்வேறு வழக்குகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி கோட்டை மேடு மின்சார அலுவலகம் பகுதியில் கமுதி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் பதுங்கியிருந்த 7 பேர் கொண்ட கும்பல் போலீசாரை கண்டதும் தப்ப முயன்றது. சுதாரித்து கொண்ட போலீசார் 7 பேரையும் சுற்றி வளைத்தனர்.

    அங்கு நிறுத்தப்பட்டிருந்த அவர்களது காரை சோதனை செய்த போது 5 கத்திகள், வாள், மிளகாய் ெபாடி ஆகியவை இருந்தது. இதையடுத்து போலீசார் 7 பேரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தினர்.

    இதில் மதுரையை சேர்ந்த பாண்டியராஜன் (33), சரவணகுமார் என்ற தக்கலை சரவணன்(24), வல்லரசு (22), காளீசுவரன் (33), சிவசங்கர் என்ற சிவகுமார் (22), உசைன் (24) என தெரிய வந்தது.

    இவர்கள் மண்டல மாணிக்கம் மறக்குளத்தை சேர்ந்த பாலகுமார் என்பவரை முன்விரோதம் காரணமாக கொலை செய்ய வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 7 பேரையும் கைது செய்தனர்.

    இவர்கள் மீது பல்வேறு வழக்குகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    ×