என் மலர்
காஞ்சிபுரம்
- பொன்னேரியில் உள்ள நீதிமன்றங்களில் மாவட்ட கூடுதல் நீதிமன்றம், முதன்மை சார்பு நீதிமன்றம், கூடுதல் சார்பு நீதிமன்றம், மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் ,குற்றவியல் நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்கள் இயங்கி வருகின்றன
- சிவில் வழக்குகள், மோட்டார் வாகன விபத்து வழக்குகள், நில ஆர்ஜித வழக்குகள், கடன் சம்பந்தப்பட்ட வழக்குகள் உள்பட பல்வேறு வழக்குகள் மொத்தம் 762 வழக்குகள் தீர்வு காணப்பட்டது.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் சார்பில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட நீதிபதி (பொறுப்பு)பி.சிவஞானம் தலைமையில் லோக் அதாலத் எனப்படும் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. நீதிபதிகள் பி.திருஞான சம்பந்தம், சரண்யா செல்வம், ஜெ.வாசுதேவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சார்பு நீதிபதி கே.எஸ்.கயல்விழி வரவேற்று பேசினார். மோட்டார் வாகன விபத்து வழக்குகள், வங்கி வராக்கடன் வழக்குகள், காசோலை வழக்குகள், குடும்ப நலம் மற்றும் தொழிலாளர் நல வழக்குகள், நில ஆர்ஜித வழக்கு ஆகியன விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் உள்ள 276 வழக்குகள் விசாரித்து சமரசம் செய்து வைக்கப்பட்டது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.9 கோடியே 42 லட்சத்து 98 ஆயிரத்து 234 வழங்கப்பட்டது. இதில் விரைவு நீதிமன்ற அரசு வக்கீல் தி.சத்தியமூர்த்தி, எஸ்.துரைமுருகன், உதயன், வடிவேல், சரவணன் கலந்து கொண்டனர்.
பொன்னேரியில் உள்ள நீதிமன்றங்களில் மாவட்ட கூடுதல் நீதிமன்றம், முதன்மை சார்பு நீதிமன்றம், கூடுதல் சார்பு நீதிமன்றம், மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் ,குற்றவியல் நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்கள் இயங்கி வருகின்றன. இந்த நீதிமன்றங்களுக்கு உட்பட்ட பல்வேறு வழக்குகள் விசாரணையில் இருந்து வருகிறது. இந்த நிலையில் வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் தேசிய லோக் அதாலத் முதன்மை சார்பு நீதிமன்றத்தில் முதன்மை சார்பு நீதிபதி பிரேமாவதி தலைமையில் கூடுதல் சார்பு நீதிபதி பாஸ்கர் மாவட்ட உரிமையியல் நீதிபதி வண்ணமலர் குற்றவியல் நீதிபதிகள் மோகனப்பிரியா, ஐயப்பன் முன்னிலையில் நடைபெற்றது. இதில் சிவில் வழக்குகள், மோட்டார் வாகன விபத்து வழக்குகள், நில ஆர்ஜித வழக்குகள், கடன் சம்பந்தப்பட்ட வழக்குகள் உள்பட பல்வேறு வழக்குகள் மொத்தம் 762 வழக்குகள் தீர்வு காணப்பட்டு பொன்னேரி மக்கள் நீதிமன்றத்தில் சமரசமாக முடிக்கப்பட்டுள்ளன. இதில் 11கோடியே 57 லட்சத்து 215 ரூபாய் வசூல் செய்து இழப்பீடு வழங்கப்பட்டன.
முகாமில் பொன்னேரி பார் அசோசியேசன் தலைவர் தேவேந்திரன் சி.எம்.டி.ஏ. வழக்கறிஞர் பிரசன்ன குமார், கூடுதல் சார்பு நீதிமன்ற அரசு வழக்கறிஞர் பல்லவன் மற்றும் அரசு வழக்கறிஞர் அம்ரத் காந்தி உள்பட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்
- மோட்டார் சைக்கிளை கல்குவாரியின் அருகே நிறுத்திவிட்டு திடீரென குவாரியில் உள்ள நீரில் குதித்து மூழ்கினார்.
- இன்று 2-வது நாளாக தீயணைப்பு வீரர்கள் வெங்கடேசன் உடலை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பூந்தமல்லி:
மாங்காடு அடுத்த சிவன்தாங்கல் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் என்ற விஜயகுமார் (34). இவர் மனஅழுத்தம் தொடர்பாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில் நேற்று காலை மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றவர் சிகிச்சை முடிந்து மோட்டார் சைக்கிளில் நேராக சிக்கராயபுரத்தில் உள்ள கல்குவாரிக்கு சென்றார். மோட்டார் சைக்கிளை கல்குவாரியின் அருகே நிறுத்திவிட்டு திடீரென குவாரியில் உள்ள நீரில் குதித்து நீரில் மூழ்கினார்.
இதையடுத்து மதுரவாயல் தீயணைப்பு வீரர்கள், மெரினாவில் உள்ள நீர்மூழ்கி நீச்சல் வீரர்கள், அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் ஆக்சிஜன் சிலிண்டர் உதவியுடன் கல்குவாரியில் இறங்கி வெங்கடேசனை தேடும் பணியில் ஈடுபட்டனர். நேற்று மாலை வரை தேடி பார்த்தும் கிடைக்கவில்லை.
இந்தநிலையில் இன்று 2-வது நாளாக தீயணைப்பு வீரர்கள் வெங்கடேசன் உடலை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது கல்குவாரியில் அதிக அளவில் நீர் நிறைந்து காணப்படுவதாலும், சுமார் 500 அடிக்கு மேல் தண்ணீர் இருப்பதாலும் ஒரு கட்டத்திற்கு மேல் வீரர்கள் செல்ல முடியாததால் உடலை தேடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர்.
- கடந்த 21-ந்தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் 3 அமைச்சர்கள் மற்றும் கிராம மக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது.
- 200-வது நாள் போராட்டத்திற்கு தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் நேரில் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தார்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் சுற்றுவட்டாரத்தில் உள்ள 13 கிராமப் பகுதிகளை உள்ளடக்கி சென்னையின் 2-வது விமான நிலையமான, பரந்தூர் பசுமைவெளி விமான நிலையம் அமைக்கப்படுமென மத்திய, மாநில அரசுகள் அறிவித்து பணிகளை மேற்கொண்டு வருகிறது.
பரந்தூர் பசுமைவெளி விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 13 கிராமங்களை சேர்ந்த கிராம மக்கள் இன்று 200-வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த ஏகானாபுரம் கிராம மக்கள் விவசாய நிலங்களை கையகப்படுத்தும் பணிகளையும், நிலம் எடுக்கும் பணிகளையும் கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் நோக்கி ஏற்கனவே கிராம உரிமை மீட்பு பேரணியை நடத்தினார்கள்.
ஏகானாபுரம் அம்பேத்கர் சிலை அருகே தொடங்கிய இந்த பேரணியில் ஆண்கள், பெண்கள் என சுமார் 500-க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கண்டன முழக்கங்களோடு பேரணியில் சென்றவர்கள் 500 மீட்டர் தூரத்தில் அம்பேத்கர் திடல் அருகே போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். கடந்த 21-ந்தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் 3 அமைச்சர்கள் மற்றும் கிராம மக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை.
இதை தொடர்ந்து போராட்டம் தொடரும் என கிராம மக்கள் அறிவித்தனர். அதை தொடர்ந்து தங்கள் கிராமத்திற்கு வந்து தொடர்ந்து போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் போராட்டம் தொடங்கி இன்றுடன் 200 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் அவர்களுடைய போராட்டம் தொடர்ந்து நடைபெறுகிறது. இன்று 200-வது நாள் போராட்டத்திற்கு தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் நேரில் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தார்.
பரந்தூர் விமானநிலைய எதிர்ப்பு போராட்டத்தில் சட்டம் ஒழுங்கை காக்க போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் தலைமையில் 7 ஏடிஎஸ்பி.க்கள், 28 டிஎஸ்பிக்கள், 42 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், 81 சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் என 1200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். இதில் செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம், திருவள்ளூர், வேலூர் மாவட்ட போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
- கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் 12,103 விமானங்களில் 17 லட்சத்து 22 ஆயிரத்து 496 பயணிகள் எண்ணிக்கையாக இருந்தது.
- டிசம்பர் மாதத்தைவிட ஜனவரி மாதம் பயணிகள் மற்றும் விமானங்களில் எண்ணிக்கை பெருமளவு அதிகரித்து உள்ளது.
மீனம்பாக்கம்:
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் கொரோனா பாதிப்புக்கு பின்னர் பயணிகள், விமானங்கள் எண்ணிக்கை, பெருமளவு அதிகரித்து உள்ளன. கடந்த மாதம் சென்னை உள்நாடு மற்றும் பன்னாட்டு முனையங்களில் 12,380 விமானங்கள் இயக்கப்பட்டு உள்ளன. இந்த விமானங்களில் கடந்த ஜனவரி மாதம் முழுவதும் 17 லட்சத்து 61 ஆயிரத்து 426 பேர் பயணித்து உள்ளனர்.
இந்த நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் 12,103 விமானங்களில் 17 லட்சத்து 22 ஆயிரத்து 496 பயணிகள் எண்ணிக்கையாக இருந்தது. ஜனவரி மாதத்தில் நாளொன்றுக்கு சராசரியாக 400 விமானங்களில் சராசரியாக 56 ஆயிரத்து 822 பயணிகள் பயணித்து உள்ளனர்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் சென்னை விமான நிலையத்தில் நாளொன்றுக்கு சராசரியாக 392 விமானங்களில் 55 ஆயிரத்து 565 பயணிகள் பயணித்து உள்ளனர். டிசம்பர் மாதத்தைவிட ஜனவரி மாதம் பயணிகள் மற்றும் விமானங்களில் எண்ணிக்கை பெருமளவு அதிகரித்து உள்ளது. சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் முதன் முறையாக ஜனவரி மாதத்தில் பயணிகள் மற்றும் விமானங்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த டிசம்பர் மாதம் 23-ந்தேதி ஒரே நாளில் சென்னை விமான நிலையத்தில் 62 ஆயிரத்து 486 பயணிகள் பயணித்தனர். சென்னை விமான நிலைய வரலாற்றில், ஒரே நாளில் அதிகபட்ச பயணிகள் பயணம் செய்தது சாதனையாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- மாணவர்களின் ஆதார் அட்டை, வங்கி கணக்கு மற்றும் தொலைபேசி எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளதை உறுதி செய்ய வேண்டும்.
- மாணவர்கள் கட்டாயம் இணைய வழி மூலம் வருமான சான்றிதழ் மற்றும் சாதி சான்றிதழ்கள் பெற்றிருக்க வேண்டும்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஆதிதிராவிடர் மற்றும் கிறிஸ்துவ மதம் மாறிய ஆதிதிராவிடர் மாணவர்கள் இந்த ஆண்டு (2022-2023) கல்வி உதவித்தொகை பெற இணைய வழியில் விண்ணப்பிப்பது குறித்து கல்லூரி முதல்வர்கள் மற்றும் பொறுப்பு அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் மா.ஆர்த்தி தலைமையில் நடைபெற்றது. இந்த ஆய்வுக்கூட்டத்தில் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவி தொகைக்கான விண்ண ப்பங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுவதற்கான வழிமுறைகள் குறித்து மாவட்ட கலெக்டரால் தெரிவிக்கப்பட்டது.
அரசு, அரசு உதவிபெறும் மற்றும் சுயநிதி கல்லூரிகளில் படிக்கும் ஆதிதிராவிடர் மற்றும் கிறிஸ்துவ மதம் மாறிய ஆதிதிராவிடர் மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை இணைய வழியில் விண்ணப்பிக்க புதிய இணைய தளம் 30.01.2023 அன்று திறக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் நேரடியாக தங்களின் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கும் வகையில் https://tnadtwscholarship.tn.gov.in என்ற இணையதளம் அமைக்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.
அனைத்து வகை கல்லூரிகளில் படிக்கும் ஆதிதிராவிடர் மற்றும் கிறிஸ்துவ மதம் மாறிய ஆதிதிராவிடர் மாணவர்கள் கல்வி உதவித்தொகை இணைய வழியில் விண்ணப்பிக்கப்பட்டதை சம்பந்தப்பட்ட கல்லூரி பொறுப்பு அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும். அதே போன்று மாணவர்களின் ஆதார் அட்டை, வங்கி கணக்கு மற்றும் தொலைபேசி எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளதை உறுதி செய்ய வேண்டும்.
மாணவர்கள் கட்டாயம் இணைய வழி மூலம் வருமான சான்றிதழ் மற்றும் சாதி சான்றிதழ்கள் பெற்றிருக்க வேண்டும். மாணாக்கரின் வங்கி கணக்கில் இடம் பெற்றுள்ள பெயர், அம்மாணவர்களின் பள்ளி சான்றிதழ்களில் உள்ளவாறு இடம் பெற்றுள்ளனவா என்பதை உறுதி செய்ய வேண்டும். எனவே அனைத்து மாணவர்களும் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பதிவு செய்து பயன் பெறுமாறு மாவட்ட கலெக்டர் டாக்டர் மா.ஆர்த்தி தெரிவித்துள்ளார்கள்.
- 25-ந் தேதி அதிகாலை 5 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
- பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, வருகிற 24-ந் தேதி, காலை சண்டி ஓமமும், மாலையில் வெள்ளி மூஷிகம் புறப்பாடும் நடக்க உள்ளது.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவில் பிரம்மோற்சவம் வருகிற 24-ந் தேதி தொடங்க உள்ளது.
காஞ்சிபுரத்தில் சிறப்பு பெற்று விளங்கும் காமாட்சி அம்மன் கோவில் மாசி மாத பிரம்மோற்சவம், வரும் 25-ந் தேதி அதிகாலை 5 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதற்காக கடந்த மாதம் 26-ந் தேதி பந்தகால் நடப்பட்டது.
பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, வருகிற 24-ந் தேதி, காலை சண்டி ஓமமும், மாலையில் வெள்ளி மூஷிகம் புறப்பாடும் நடக்க உள்ளது.
தினமும் காலை, மாலையில், அம்மன் வீதியுலா நடக்கிறது. மார்ச் 8-ந் தேதி காலை விஸ்வரூப தரிசனமும், இரவில் விடையாற்றி உற்சவத்துடன் பிரம்மோற்சவமும் நிறைவு பெறுகிறது.
உற்சவம் நடைபெறும் நாட்கள்: பிப்ரவரி 24-ந் தேதி பகல் சண்டிஓமம், இரவு வெள்ளி மூஷிகம், 25 பகல் வெள்ளி விருஷம், இரவு தங்கமான், 26 பகல் மகரம், இரவு சந்திர பிரபை, 27 பகல் தங்க சிம்மம், இரவு யானை, 28 பகல் தங்க சூர்ய பிரபை, இரவு தங்க அம்சம்.
மார்ச் 1 பகல் தங்க பல்லக்கு, இரவு நாகம், 2 பகல் முத்து சப்பரம், இரவு தங்க கிளி, 3 பகல் ரதம், 4 பகல் பத்ர பீடம், இரவு குதிரை, 5 பகல் ஆள் மேல் பல்லக்கு, இரவு வெள்ளி ரதம், 6 பகல் சரபம், இரவு கல்பகோத்யானம், 7 தங்க காமகோடி விமானம், 8 பகல் விஸ்வரூப தரிசனம், இரவு விடையாற்றி உற்சவம்.
- தசைசிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை அவர்களது வங்கி சேமிப்பு கணக்கில் அனுப்பட்டு வருகிறது.
- தேசிய அடையாள அட்டை பெற்றிருப்பின் அதன் நகல் ஆகிய சான்றுகளை அரசுக்கு சமர்பிக்கப்பட வேண்டியது அவசியமாகிறது.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் வழியாக மனவளச்சி குன்றிய மாற்றுத்திறனாளி, கடுமையாக பாதிக்கப்பட்டவர், முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டோர், தொழுநோயால் பாதிக்கப்பட்டவர் மற்றும் தசைசிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகையானது மாதந்தோறும் ரூ.2 ஆயிரம் அவர்களது வங்கி சேமிப்பு கணக்கில் அனுப்பட்டு வருகிறது.
தற்போது பயனாளிகளில் சுய விவரங்களான மருத்துவ சான்றுடன் கூடிய அடையாள அட்டை நகல், ரேஷன்கார்டு நகல், ஆதார் அட்டை நகல், வங்கி புத்தக நகல் புகைப்படம்-1 மனவளர்ச்சி குன்றியோரயிருப்பின் பெற்றோர்ருடன் இணைந்த புகைப்படம்-1 தனித்துவம் வாய்ந்த, தேசிய அடையாள அட்டை பெற்றிருப்பின் அதன் நகல் ஆகிய சான்றுகளை அரசுக்கு சமர்பிக்கப்பட வேண்டியது அவசியமாகிறது.
தாங்கள் டிசம்பர்-2022 மாதம் வரை பராமரிப்பு உதவித்தொகை பெற்று, ஜனவரி-2023 மாதம் உதவித்தொகை பெறாதவர்கள் மட்டும், பராமரிப்பு உதவிதொகை தொடர்ந்து பெறவேண்டுமாயின் தாங்கள் உடனடியாக மேற்கானும் சான்றுகளை, இணைத்து மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், தரைதளம், மாவட்ட கலெக்டர் அலுவலகம், காஞ்சிபுரம் (அலுவலக தொலைபேசி எண்:-044-29998040 என்ற அலுவலகத்தில் இந்த மாதம் 17-ந்தேதி (வெள்ளிகிழமை)-க்குள் சமர்பித்து தங்களுக்கான பராமரிப்பு உதவித்தொகையினை பெற்று பயனடையலாம்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கட்டப்பட்டிருந்த சிறிய அளவிலான 2 வீடுகளை தாசில்தார் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றி ஆக்கிரமிப்பை அகற்றினர்.
- ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலத்தின் மதிப்பு ரூ.1½ கோடி இருக்கும் என வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
சோமங்கலம்:
காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அடுத்த சோமங்கலம் அருகே உள்ள நடுவீரப்பட்டு ஊராட்சியில் அரசுக்கு சொந்தமான 1½ ஏக்கர் அரசு நிலம் தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்ததாக வருவாய் துறையினருக்கு புகார் வந்தது.
இதையடுத்து காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி உத்தரவின் பேரில் குன்றத்தூர் தாசில்தார் கல்யாணசுந்தரம் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சோமங்கலம் போலீசார் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வைத்திருந்த நிலத்தை பார்வையிட்டனர்.
அந்த பகுதியில் கட்டப்பட்டிருந்த சிறிய அளவிலான 2 வீடுகளை தாசில்தார் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றி ஆக்கிரமிப்பை அகற்றினர்.
அப்பகுதியில் அரசு சார்பில் அறிவிப்பு பெயர் பலகையை அதிகாரிகள் வைத்தனர். ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலத்தின் மதிப்பு ரூ.1½ கோடி இருக்கும் என வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
- காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் நிலுவையில் உள்ள அனைத்து வழக்குகளும் விசாரணைக்கு ஏற்கப்பட்டு ஒரே நாளில் தீர்வு காணலாம்.
- வழக்குகளால் காலம், பண விரயம் தவிர்க்கப்பட்டு உடனடியாக தீர்வு காணப்படும். மக்கள் நீதிமன்றம் மூலம் சமரசம் பேசி முடிக்கப்படும். வழக்குகளுக்கு மேல்முறையீடு கிடையாது.
காஞ்சிபுரம்:
தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு, தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவின் பேரில் நாளை மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளதாக கடலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான மேவிஸ் தீபிகா சுந்தரவதனா தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு மூலம் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில், நீதி மன்றங்களில் நிலுவையில் உள்ள சிவில், குடும்பநல, தொழிலாளர் நல வழக்குகள், பண மோசடி, வாகன விபத்து, காசோலை மோசடி, நில எடுப்பு, வங்கி வழக்குகள் போன்ற அனைத்து வழக்குகளும் விசாரணைக்கு ஏற்கப்பட்டு ஒரே நாளில் தீர்வு காணலாம்.
எனவே பொதுமக்கள் வழக்காளிகள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து தங்களது வக்கீல்கள் மூலம் வழக்குகளை மக்கள் நீதி மன்றத்துக்கு அனுப்பி வைத்து சமரசம் பேசி தீர்வு காணலாம். நீதிமன்றங்களில் நிலுவையில் இல்லாத வங்கி கடன் வழக்குகள் தொடர்பாக நேரடியாக மனு அளித்தும் மேற்கூறிய தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறும் நாளில் சமரசம் பேசி வழக்குகளை முடித்துக் கொள்ளலாம்.
செங்கல்பட்டு மவாட்டத்தில் செங்கல்பட்டு, தாம்பரம், மதுராந்தகம், செய்யூர், திருப்போரூர், ஆலந்தூர், பல்லாவரம், திருக்கழுக்குன்றம் ஆகிய நீதிமன்றங்களிலும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், உத்திரமேரூர் ஆகிய நீதிமன்றங்களிலும் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறும்.
எனவே பொதுமக்கள் வழக்காடிகள் நீதிமன்ற எல்லைக்குட்பட்ட வழக்குகளை அந்தந்த நீதி மன்றங்களில் நடைபெறும் தேசிய மக்கள் நீதிமன்றங்களில் முறையிட்டு சமரசம் செய்து கொள்ளலாம். மக்கள் நீதிமன்றம் மூலம் சமரசம் செய்து வைக்கப்படும் வழக்குகளால் காலம், பண விரயம் தவிர்க்கப்பட்டு உடனடியாக தீர்வு காணப்படும். மக்கள் நீதிமன்றம் மூலம் சமரசம் பேசி முடிக்கப்படும். வழக்குகளுக்கு மேல்முறையீடு கிடையாது.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
- தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து 2 மணிநேரம் போராடி தீயை அணைத்தனர்.
- ஸ்ரீபெரும்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிபத்து குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.
ஸ்ரீபெரும்புதூர்:
ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வடமங்கலம் கிராமத்தில் ஜெயக்குமார் என்பவருக்கு சொந்தமான தெர்மாகோல் வைக்கும் குடோன் உள்ளது. இங்கு தெர்மாகோல் மொத்தமாக வாங்கி சேமித்து தொழிற்சாலைக்கு விற்பனை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று இரவு இந்த குடோனில் இருந்து கரும்புகை கிளம்பியது. அக்கம்பக்கத்தினர் வந்து குடோனை பார்த்தபோது தீ பிடித்து மளமளவென எரிய துவங்கி குடோன் முழுவதும் பரவியது. தகவல்பேரில் ஸ்ரீபெரும்புதூர், இருங்காட்டு கோட்டை, ஒரகடம் உள்ளிட்ட பகுதியில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து 2 மணிநேரம் போராடி தீயை அணைத்தனர்.
இதுகுறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிபத்து குறித்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த தீ விபத்தில் குடோனில் இருந்த 2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது தெரிய வந்துள்ளது.
- ஸ்ரீபெரும்புதூர் பஸ் நிலையத்தில் நரிக்குறவர்களால் நடத்தும் கடையும் ஒதுக்கப்பட்டது.
- நறிக்குறவர் பெண்கள் உற்பத்தி செய்யும் பொருட்களின் வணிக மையம் என்று பெயரிடப்பட்ட இந்த கடைக்கு நல்ல வரவேற்பு கிடைத்து உள்ளது.
ஸ்ரீபெரும்புதூர்:
பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கி காணப்படும் நரிக்குறவர்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் குழுவாக தங்கி உள்ளனர். அவர்கள் தாங்கள் செய்யும் பாசிமணி,வளையல், செயின் உளிட்ட பொருட்களை சாலை ஓரங்கள், திருவிழாகள், பஸ் நிலையம் போன்ற இடங்களில் விற்பனை செய்வது வழக்கம்.
இவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆரத்தியின் முயற்சியால் நரிக்குறவர்களின் பொருட்களை விற்பனை செய்யவும், அதனை அனைத்து இடங்களுக்கு விற்பனைக்கு கொண்டு செல்லவும் முயற்சி எடுத்து உள்ளார்.
இதையடுத்து ஸ்ரீபெரும்புதூர் மற்றும் சுற்று வட்டார பகுதியில் வசித்து வரும் நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு ரீட்ஸ் என்ற தொண்டு நிறுவனம் மற்றும் மகளிர் மேம்பாட்டு திட்டம் மூலம் மணிமாலை கோர்த்தல், பட்டுநூலில் தயாரித்த வளையல், கவரிங் நகைகள், அணிகலன்கள் உள்ளிட்ட பொருட்கள் செய்வதற்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
இந்த பொருட்களை விற்பனை செய்யும் ஸ்ரீபெரும்புதூர் பஸ் நிலையத்தில் நரிக்குறவர்களால் நடத்தும் கடையும் ஒதுக்கப்பட்டது. இதனை நேற்று முன்தினம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.
நறிக்குறவர் பெண்கள் உற்பத்தி செய்யும் பொருட்களின் வணிக மையம் என்று பெயரிடப்பட்ட இந்த கடைக்கு நல்ல வரவேற்பு கிடைத்து உள்ளது. விற்பனை அமோகமாக நடந்து வருகிறது.

நகை கடைபோல் பிரம்மாண்டமாக காட்சி அளிக்கும் இந்த கடையில் புதிய மாடல்களில் மனதுக்கு பிடித்த வளையல், செயின்கள் இருப்பதாக பொதுமக்கள் தெரிவித்தனர். மேலும் இந்த பொருட்கள் தரமானதாக பிராண்ட் நிறுவனம் போலவே காட்சி அளிக்கிறது.
இந்த மையத்தில் பணியில் உள்ள நரிக்குற பெண்கள் கோட் அணிந்து புதிய தோற்றத்தில் விற்பனை செய்கிறார்கள். இதுவும் பொதுமக்களை மிகவும் கவர்ந்து உள்ளது.
இதன் மூலம் கலெக்டர் ஆர்த்தியின் முயற்சியால் நரிக்குறவர்களின் பொருட்களுக்கு புதி பிராண்ட் உருவாகி இருக்கிறது. இதனால தங்களது வாழ்வாதாரம் உயரும் என்று நரிக்குறவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, ஸ்ரீபெரும்புதூரில் உள்ள கடையில் மட்டும் அல்லாமல் காஞ்சிபுரத்தில் உள்ள பிரபலமான பட்டுசேலை கடைகளிலும் நரிக்குறவர்களின் உற்பத்தி பொருட்களை காட்சிபடுத்தி விற்பனை செய்ய பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. முழுக்க, முழுக்க பட்டு நூலில் செய்யப்படும் அணிகலன்கள் என்பதால்பட்டுச்சேலை வாங்குபவர்கள் இதனையும் வாங்குவார்கள் என்றனர்.
- 2018-ம் ஆண்டு முதல் அங்கு தேர்தல் நடைபெறவில்லை.
- ஜம்மு காஷ்மீரில் எங்கு ஜனநாயகம் உள்ளது.
மீனம்பாக்கம் :
சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்க ஜம்மு-காஷ்மீர் மாநில முன்னாள் முதல்-மந்திரி உமர் அப்துல்லா டெல்லியில் இருந்து விமானம் மூலம் நேற்று சென்னை வந்தார். சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-
ஜம்மு காஷ்மீரில் 2014-ம் ஆண்டு தேர்தல் மூலம் மக்கள் தேர்ந்தெடுத்த அரசு இருந்தது. 2018-ம் ஆண்டு முதல் அங்கு தேர்தல் நடைபெறவில்லை.
ஜம்மு காஷ்மீரில் எங்கு ஜனநாயகம் உள்ளது. ஜம்மு-காஷ்மீர் அமைதியாக உள்ளது என கூறும் பிரதமர் மோடி, அப்போது ஏன் இங்கு இதுவரை தேர்தல் நடத்தவில்லை. ஜனநாயக திருவிழா கொண்டாட வேண்டும் என்றால் எங்களுக்கு ஜனநாயகத்தை தர வேண்டும்.
ஜம்மு-காஷ்மீரில் தற்போது கல்வீச்சு சம்பவங்கள் இல்லை. ஒரு சில பகுதிகளில் சிறுபான்மை மக்கள் மீது தாக்குதல் நடக்கிறது. ஜம்மு நகரில் குண்டு வெடிப்பு நடந்தது. இதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஜம்மு-காஷ்மீரில் உடனடியாக தேர்தல் அறிவிக்க வேண்டும். தேர்தலை சந்திக்க தயாராக உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.






