search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    படப்பை அருகே ரூ.1½ கோடி அரசு நிலம் மீட்பு
    X

    படப்பை அருகே ரூ.1½ கோடி அரசு நிலம் மீட்பு

    • கட்டப்பட்டிருந்த சிறிய அளவிலான 2 வீடுகளை தாசில்தார் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றி ஆக்கிரமிப்பை அகற்றினர்.
    • ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலத்தின் மதிப்பு ரூ.1½ கோடி இருக்கும் என வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    சோமங்கலம்:

    காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அடுத்த சோமங்கலம் அருகே உள்ள நடுவீரப்பட்டு ஊராட்சியில் அரசுக்கு சொந்தமான 1½ ஏக்கர் அரசு நிலம் தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்ததாக வருவாய் துறையினருக்கு புகார் வந்தது.

    இதையடுத்து காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி உத்தரவின் பேரில் குன்றத்தூர் தாசில்தார் கல்யாணசுந்தரம் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சோமங்கலம் போலீசார் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வைத்திருந்த நிலத்தை பார்வையிட்டனர்.

    அந்த பகுதியில் கட்டப்பட்டிருந்த சிறிய அளவிலான 2 வீடுகளை தாசில்தார் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றி ஆக்கிரமிப்பை அகற்றினர்.

    அப்பகுதியில் அரசு சார்பில் அறிவிப்பு பெயர் பலகையை அதிகாரிகள் வைத்தனர். ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலத்தின் மதிப்பு ரூ.1½ கோடி இருக்கும் என வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×