search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காஷ்மீரில் தேர்தல் அறிவித்தால் சந்திக்க தயார்: உமர் அப்துல்லா
    X

    காஷ்மீரில் தேர்தல் அறிவித்தால் சந்திக்க தயார்: உமர் அப்துல்லா

    • 2018-ம் ஆண்டு முதல் அங்கு தேர்தல் நடைபெறவில்லை.
    • ஜம்மு காஷ்மீரில் எங்கு ஜனநாயகம் உள்ளது.

    மீனம்பாக்கம் :

    சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்க ஜம்மு-காஷ்மீர் மாநில முன்னாள் முதல்-மந்திரி உமர் அப்துல்லா டெல்லியில் இருந்து விமானம் மூலம் நேற்று சென்னை வந்தார். சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-

    ஜம்மு காஷ்மீரில் 2014-ம் ஆண்டு தேர்தல் மூலம் மக்கள் தேர்ந்தெடுத்த அரசு இருந்தது. 2018-ம் ஆண்டு முதல் அங்கு தேர்தல் நடைபெறவில்லை.

    ஜம்மு காஷ்மீரில் எங்கு ஜனநாயகம் உள்ளது. ஜம்மு-காஷ்மீர் அமைதியாக உள்ளது என கூறும் பிரதமர் மோடி, அப்போது ஏன் இங்கு இதுவரை தேர்தல் நடத்தவில்லை. ஜனநாயக திருவிழா கொண்டாட வேண்டும் என்றால் எங்களுக்கு ஜனநாயகத்தை தர வேண்டும்.

    ஜம்மு-காஷ்மீரில் தற்போது கல்வீச்சு சம்பவங்கள் இல்லை. ஒரு சில பகுதிகளில் சிறுபான்மை மக்கள் மீது தாக்குதல் நடக்கிறது. ஜம்மு நகரில் குண்டு வெடிப்பு நடந்தது. இதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

    ஜம்மு-காஷ்மீரில் உடனடியாக தேர்தல் அறிவிக்க வேண்டும். தேர்தலை சந்திக்க தயாராக உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×