search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "people court"

    • காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் நிலுவையில் உள்ள அனைத்து வழக்குகளும் விசாரணைக்கு ஏற்கப்பட்டு ஒரே நாளில் தீர்வு காணலாம்.
    • வழக்குகளால் காலம், பண விரயம் தவிர்க்கப்பட்டு உடனடியாக தீர்வு காணப்படும். மக்கள் நீதிமன்றம் மூலம் சமரசம் பேசி முடிக்கப்படும். வழக்குகளுக்கு மேல்முறையீடு கிடையாது.

    காஞ்சிபுரம்:

    தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு, தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவின் பேரில் நாளை மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளதாக கடலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான மேவிஸ் தீபிகா சுந்தரவதனா தெரிவித்தார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு மூலம் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில், நீதி மன்றங்களில் நிலுவையில் உள்ள சிவில், குடும்பநல, தொழிலாளர் நல வழக்குகள், பண மோசடி, வாகன விபத்து, காசோலை மோசடி, நில எடுப்பு, வங்கி வழக்குகள் போன்ற அனைத்து வழக்குகளும் விசாரணைக்கு ஏற்கப்பட்டு ஒரே நாளில் தீர்வு காணலாம்.

    எனவே பொதுமக்கள் வழக்காளிகள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து தங்களது வக்கீல்கள் மூலம் வழக்குகளை மக்கள் நீதி மன்றத்துக்கு அனுப்பி வைத்து சமரசம் பேசி தீர்வு காணலாம். நீதிமன்றங்களில் நிலுவையில் இல்லாத வங்கி கடன் வழக்குகள் தொடர்பாக நேரடியாக மனு அளித்தும் மேற்கூறிய தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறும் நாளில் சமரசம் பேசி வழக்குகளை முடித்துக் கொள்ளலாம்.

    செங்கல்பட்டு மவாட்டத்தில் செங்கல்பட்டு, தாம்பரம், மதுராந்தகம், செய்யூர், திருப்போரூர், ஆலந்தூர், பல்லாவரம், திருக்கழுக்குன்றம் ஆகிய நீதிமன்றங்களிலும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், உத்திரமேரூர் ஆகிய நீதிமன்றங்களிலும் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறும்.

    எனவே பொதுமக்கள் வழக்காடிகள் நீதிமன்ற எல்லைக்குட்பட்ட வழக்குகளை அந்தந்த நீதி மன்றங்களில் நடைபெறும் தேசிய மக்கள் நீதிமன்றங்களில் முறையிட்டு சமரசம் செய்து கொள்ளலாம். மக்கள் நீதிமன்றம் மூலம் சமரசம் செய்து வைக்கப்படும் வழக்குகளால் காலம், பண விரயம் தவிர்க்கப்பட்டு உடனடியாக தீர்வு காணப்படும். மக்கள் நீதிமன்றம் மூலம் சமரசம் பேசி முடிக்கப்படும். வழக்குகளுக்கு மேல்முறையீடு கிடையாது.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    • 500-க்கும் மேற்பட்ட வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு 205 வழக்குகளில் தீர்வு காணப்பட்டது.
    • வங்கி வாராக் கடன்கள் உள்ளிட்ட வழக்குகளில் 2 கோடியே 35 லட்சத்து 31ஆயிரத்து 950 ரூபாய் சமரசத் தொகையாக நிர்ணயம் செய்யப்பட்டது.

    திருச்சி:

    உச்சநீதிமன்ற உத்தரவின் படியும், மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு ஆலோசனையின்படியும் துறையூர் நீதிமன்றத்தில் நேற்று தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சிக்கு துறையூர் வட்ட சட்டப்பணிகள் குழுவின் தலைவரும், சார்பு நீதிமன்ற நீதிபதியுமான ஜெய்சங்கர் தலைமை வகித்தார். மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதியும், குற்றவியல் நீதித்துறை நடுவருமான (பொறுப்பு) சத்தியமூர்த்தி தலைமை வகித்தார்.

    இந்நிகழ்ச்சியில் 500ற்றிக்கும் மேற்பட்ட வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு 205 வழக்குகளில் தீர்வு காணப்பட்டது. மேலும் வங்கி வாராக் கடன்கள் உள்ளிட்ட வழக்குகளில் 2 கோடியே 35 லட்சத்து 31ஆயிரத்து 950 ரூபாய் சமரசத் தொகையாக நிர்ணயம் செய்யப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் அரசு வழக்கறிஞர்கள் சந்திரமோகன், சபாபதி, ஜெயராஜ், துறையூர் வழக்கறிஞர் சங்க தலைவர் மனோகரன், செயலாளர் தனசேகரன் உள்ளிட்ட ஏராளமான வழக்கறிஞர்கள், வழக்காடிகள், சட்ட தன்னார்வலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • 26-ந் தேதி கோவை மாவட்டத்தில் உள்ள நீதிமன்ற வளாகங்களில் மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது.
    • வழக்காடிகள், பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்களது வழக்குகளுக்கு உடனடி தீர்வு பெறலாம்.

    கோவை:

    தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் 3 மாதங்களுக்கு ஒருமுறை நடைபெறுகிறது. இதில், கோர்ட்டுகளில் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு சமரச பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படுகிறது.

    இந்நிலையில், வரும் 26-ந் தேதி கோவை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திலும், மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, வால்பாறை, சூலூர், மதுக்கரை நீதிமன்ற வளாகங்களிலும் மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது.இதுகுறித்து மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான கே.ராஜசேகர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நிலுவையில் உள்ள சமரசம் செய்யக்கூடிய சிறுகுற்றவழக்குகள், காசோலை வழக்குகள், வாகன விபத்து வழக்குகள், சிவில் வழக்குகள், நில ஆர்ஜித வழக்குகள், தொழிலாளர் சம்மந்தப்பட்ட வழக்குகள் போன்றவற்றுக்கு உடனடி தீர்வு பெறலாம்.

    எனவே மேற்கண்ட வழக்குகளுக்கு தீர்வு காண்பதற்காக, மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள சட்டப்பணிகள் ஆணைக் குழுவில் வரும் 24-ந் தேதி வரை சிறப்பு அமர்வுகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. எனவே, வழக்காடிகள், பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்களது வழக்குகளுக்கு உடனடி தீர்வு பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×