என் மலர்
காஞ்சிபுரம்
- கோடை வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்து உள்ளது.
- காஞ்சிபுரம் நகராட்சி பகுதிக்கு உட்பட்ட இடங்களில் மட்டும் 12 சென்டி மீட்டர் மழை அளவு பதிவாகியுள்ளது.
காஞ்சிபுரம்:
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கோடை வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்து உள்ளது.
காஞ்சிபுரம் சுற்று வட்டார பகுதிகளில் கோடை வெப்பம் கடந்த சில நாட்களாக வாட்டி வதைத்து வருகிறது. காலை முதலே கோடை வெயில் காய்ந்து வந்த நிலையில் மாலை நேரத்தில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்து காஞ்சிபுரம், வாலாஜாபாத், அய்யம்பேட்டை, வையாவூர், ஏனாத்தூர், செவிலிமேடு, ஓரிக்கை, ஒலி முகமது பேட்டை, தாமல், பாலு செட்டி சத்திரம், காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதிகள் மற்றும் பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திடீரென இடியுடன் கூடிய கனமழை பெய்தது.
காஞ்சிபுரம் நகராட்சி பகுதிக்கு உட்பட்ட இடங்களில் மட்டும் 12 சென்டி மீட்டர் மழை அளவு பதிவாகியுள்ளது. அதாவது 120 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது திடீரென இடியுடன் கூடிய கனமழை பெய்ததால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் பாதிக்கப்பட்டாலும் கோடை வெப்பம் தணிந்து உள்ளதால் பெரும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
- வேள்வி பூஜை கடந்த ஏப்ரல் 26 -ந் தேதி சித்தர் பீடத்தில் குருபூ ஜையுடன் தொடங்கியது.
- சித்தர் பீட வளாகம் முழுவதும் சூல வடிவிலான யாக குண்டங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
மேல்மருவத்தூர் ஆதிப ராசக்தி சித்தர் பீடத்தில் சித்ரா பவுர்ணமியையொட்டி குரு பங்காரு அடிகளார் 1008 யாக குண்டங்கள் அமைத்து கலச விளக்கு வேள்வி பூஜை நடத்தினர்.
இந்த வேள்வி பூஜை கடந்த ஏப்ரல் 26 -ந் தேதி சித்தர் பீடத்தில் குருபூ ஜையுடன் தொடங்கியது.சித்ரா பவுர்ணமியான நேற்று மாலை 5 மணி அளவில் கலச விளக்கு வேள்வி பூஜையை ஆன்மிக குரு பங்காரு அடி களார் தொடங்கி வைத்தார்.
இதில் சிறப்பு விருந்தினராக புதுச்சேரி மற்றும் தெலுங்கானா கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், அமைச்சர் செஞ்சி மஸ்தான், சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ஆதிகேசவலு, முன்னாள் நீதிபதி ராஜேஸ்வரன், பாடகர் சீர்காழி சிவசிதம்பரம், ஆன்மிக இயக்க தலைவர் லட்சுமி பங்காரு அடி களார், துணைத் தலைவர் ஸ்ரீதேவி ரமேஷ், தலைமை செயல் அதிகாரி அகத்தியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஆதிபராசக்தி அம்மன் கருவறை முன்பு குரு மேடை, மற்றும் அதற்கான குரு யாக குண்டம் அமைக்கப்பட்டு இருந்தது.தொடர்ந்து அதற்கு முன்பாக ஆன்மிக குரு பங்காரு அடிகளாரின் 83 வது பிறந்தநாளை குறிக்கும் வகையில் 83 எண் வடிவில் சக்கரம் அமைத்து அதில் 4 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு இருந்தது.
கருவறை முன்பாக பஞ்சபூத சக்கரம் அமைத்து ஐந்து தலை நாகம் படம் எடுக்க அதனுள் கலசம் நிறுவப்பட்டு 5 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு இருந்தது. புற்று மண்டபத்தின் முன்பாக வெற்றிலை அலங்காரத்தில் 3 நாகங்கள் பின்னிப் பிணைந்து அமைக்கப்பட்டு அதில் டைமண்ட் வடிவில் யாக குண்டம் அமைக்கப்பட்டு இருந்தது.
புற்று மண்டப முன்புறத்தில் சமபக்க முக்கோண சக்கரங்கள் அமைத்து அதில் 9 முக்கோண வடிவிலான யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு இருந்தது.
ஓம் சக்தி மேடை முன்பாக பிரபஞ்ச சக்கரம் அமைத்து அதில் ஒன்பது படிகள் அமைத்து அதில் 27 நட்சத்திரங்கள் 12 ராசிகள் 8 திசைகள் வடிவில் சக்கரங்கள் அமைக்கப்பட்டு அதனுள் நவதானியம் பரப்பப்பட்டு சதுரம், வட்டம், டைமண்ட், ஐங்கோணம், முக்கோணம் ஆகிய வடிவங்களில் 12 யாக குண்டங்கள் அமைக்கப் பட்டு இருந்தது. மேலும் சித்தர் பீட வளாகம் முழுவதும் சூல வடிவிலான யாக குண்டங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த யாக குண்டங்களில் ஏராளமான செவ்வாடை பக்தர்கள் வேள்வி பூஜை செய்தனர்.
- காஞ்சிபுரத்தில் கடந்த சில வாரங்களாக வெயில் கொளுத்தி வந்தது.
- சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழையால் காஞ்சிபுரம் நகரில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரத்தில் கடந்த சில வாரங்களாக வெயில் கொளுத்தி வந்தது. கோடையில் வெயில் உக்கிரமாக இருக்கும் அக்னி நட்சத்திரக்காலம் நேற்று முன்தினம் தொடங்கிய நிலையில் கடந்த சில வாரங்களாகவே வெயில் தாக்கம் அதிகமாக இருந்தன. இதனால் பொதுமக்கள் நண்பகல் நேரங்களில் வெளியில் செல்ல முடியாமல் வீடுகளிலேயே முடங்கி இருந்தனர்.
இந்நிலையில் திடீரென மாலையில் குளிர்ந்த காற்றுடன் கருமேகமூட்டம் சூழ்ந்து இடி மின்னலுடன் மழை பெய்தது. காஞ்சிபுரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளான ஓரிக்கை, செவிலிமேடு, கீழம்பி, பாலுசெட்டிசத்திரம், விஷார், பெரும்பாக்கம், முசரவாக்கம், அய்யங்கார்குளம், உள்ளிட்ட பகுதிகளிலும் பெய்த இந்தத் திடீர் மழையால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழையால் காஞ்சிபுரம் நகரில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
- மின்னணு பரிமாற்றம் மூலம் பணமற்ற பரிவர்த்தனை நடைமுறைப்படுத்தும் திட்டத்தை கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் சண்முக சுந்தரம் தொடங்கி வைத்தார்.
- பொதுமக்கள் தங்கள் வாங்கும் பொருட்களுக்கு நேரடியாக பணம் வழங்காமல் ஸ்மார்ட் போன் மூலமாக 'கியூ ஆர் கோடு' பயன்படுத்தி பணப்பரிவர்த்தனை செய்து கொள்ளலாம்.
காஞ்சிபுரம்:
தமிழகத்தில் முதல் முறையாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் 'கியூ ஆர் கோடு' மூலம் பணப்பரிவர்த்தனை செய்யும் நடைமுறையை கூட்டுறவு சங்கப்பதிவாளர் சண்முகசுந்தரம் அறிமுகம் செய்து வைத்தார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்படும் 53 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், 7 நகர கூட்டுறவு கடன் சங்கங்கள், 10 மருந்தகங்கள், பணியாளர் கூட்டுறவு சங்கங்கள், காஞ்சிபுரம் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இயங்கி வரும் 602 கூட்டுறவு ரேஷன் கடைகள் உள்ளது.
இந்தநிலையில் தமிழகத்தில் முதல் முறையாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கூட்டுறவு நிறுவனங்களிலும் மின்னணு பரிமாற்றம் ( 'கியூ ஆர் கோடு') மூலம் பணமற்ற பரிவர்த்தனை நடைமுறைப்படுத்தும் திட்டத்தை காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட டெம்பிள் சிட்டியில் உள்ள எம்.வி.எம்.பி. நகர் ரேஷன் கடையில் சென்னை, கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் சண்முக சுந்தரம் தொடங்கி வைத்தார்.
இதனால் பொதுமக்கள் தங்கள் வாங்கும் பொருட்களுக்கு நேரடியாக பணம் வழங்காமல் ஸ்மார்ட் போன் மூலமாக 'கியூ ஆர் கோடு' பயன்படுத்தி பணப்பரிவர்த்தனை செய்து கொள்ளலாம். இந்தநிகழ்ச்சியில், காஞ்சிபுரம் மண்டல கூட்டுறவுச்சங்கங்களின் இணைப்பதிவாளர் ஜெயஸ்ரீ, காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியின் பதிவாளர், மேலாண்மை இயக்குனர் முருகன், காஞ்சிபுரம் மாவட்ட கூடுதல் நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகச்சாலையின் இணைப்பதிவாளர், மேலாண்மை இயக்குனர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- கடந்த மார்ச் மாதத்தைவிட ஏப்ரல் மாதம் 617 விமான சேவைகள் குறைந்து உள்ளன.
- உள்நாட்டு விமான சேவைகளில்தான் குறைவு ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னை :
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் கடந்த மார்ச் மாதத்தில் 12 ஆயிரத்து 22 விமானங்களில் 17 லட்சத்து 31 ஆயிரத்து 770 பேர் பயணம் செய்து உள்ளனர். அதில் 9,413 உள்நாட்டு விமானங்களில் 12 லட்சத்து 89 ஆயிரத்து 995 பேரும், 2,609 பன்னாட்டு விமானங்களில் 4 லட்சத்து 41 ஆயிரத்து 775 பேரும் பயணம் செய்து இருந்தனர்.
இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் உள்நாட்டு பயணிகளை பொறுத்தமட்டில் சென்னையில் இருந்து டெல்லி, மும்பை, கொல்கத்தா, அந்தமான், கொச்சி, பெங்களூரு, மதுரை, கோவை உள்ளிட்ட விமானங்களிலும், பன்னாட்டு பயணிகள் இலங்கை, துபாய், அபுதாபி, சவுதி அரேபியா, கத்தார், சிங்கப்பூர், மலேசியா, லண்டன், பிரான்ஸ் உள்ளிட்ட விமானங்களிலும் அதிகமானவர்கள் பயணித்துள்ளனர்.
இந்த பயணிகளில் பெரும்பாலானவர்கள் சுற்றுலா பயணிகள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தொழில், வர்த்தகம், பணி நிமித்தம் செல்லும் பயணிகளும் கணிசமாக அதிகரித்து உள்ளனர்.
அதன்படி ஏப்ரல் மாதத்தில் மொத்தம் 11 ஆயிரத்து 405 விமானங்களில் 17 லட்சத்து 42 ஆயிரத்து 607 பேர் பயணம் செய்து உள்ளனர். இதில் உள்நாட்டு முனையத்தில் 8 ஆயிரத்து 751 விமானங்களில் 12 லட்சத்து 97 ஆயிரத்து 49 பேரும், பன்னாட்டு முனையத்தில் 2,654 விமானங்களில் 4 லட்சத்து 45 ஆயிரத்து 558 பேரும் பயணம் செய்து உள்ளனர்.
கடந்த மார்ச் மாதத்தைவிட ஏப்ரல் மாதம் 617 விமான சேவைகள் குறைந்து உள்ளன. ஆனால் பயணிகளின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 837 பேர் அதிகரித்து உள்ளனர். உள்நாட்டு விமான சேவைகளில்தான் குறைவு ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னையில் இருந்து பல்வேறு நாடுகள், நகரங்களுக்கு இணைப்பு விமானங்கள் அதிக அளவில் உள்ளதால் சென்னை விமான நிலையத்தில் சமீப காலமாக பயணிகள் எண்ணிக்கை பெருமளவு அதிகரித்து வருகின்றன.
இந்த நிலையில் கோடை விடுமுறை காலத்தில் சென்னை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. குறிப்பாக சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை பெருமளவு அதிகரிக்கும் என்று தெரிகிறது.
தென்னிந்தியாவில் உள்ள விமான நிலையங்களில் அதிக பயணிகள் மற்றும் அதிக விமானங்களுடன் சென்னை விமான நிலையம் முன்னணியில் இருக்கிறது. குறிப்பாக சுற்றுலா பயணிகள் பெருமளவு சென்னை விமான நிலையத்தை பயன்படுத்துவதாக சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
- மாற்றுத்திறனாளி வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் காஞ்சிபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- குடிபோதை தகராறில் கொலை நடந்ததா என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
காஞ்சிபுரம்:
சின்ன காஞ்சிபுரம் பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது 30). மாற்றுத்திறனாளி. நேற்று இரவு வீட்டில் இருந்து வெளியே சென்ற அவர் பின்னர் திரும்பி வரவில்லை. அவரை குடும்பத்தினர் தேடி வந்தனர்.
இந்த நிலையில் இன்று காலை காஞ்சிபுரம்,மேட்டு தெருவில் உள்ள ஒரு திருமண மண்டபம் எதிரில் குமார் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். ரத்த வெள்ளத்தில் அவர் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் விஷ்ணு காஞ்சி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் விரைந்து வந்து குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த கொலை தொடர்பாக ரங்கசாமி குளம் பகுதியில் தள்ளுவண்டியில் பழக்கடை நடத்தி வரும் ஒருவரை பிடித்து உள்ளனர். அவரிடம் முன்விரோதம் காரணமாக குமார் கல்லால் அடித்துக் கொல்லப் பட்டாரா? அல்லது குடிபோதை தகராறில் கொலை நடந்ததா என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
மாற்றுத்திறனாளி வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் காஞ்சிபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- புனித நீர் சித்ரகுப்த சுவாமி கோவில் கோபுரம் மீது ஊற்றப்பட்டது.
- காஞ்சிபுரம் நகரம் முழுவதும் பக்தர்கள் கூட்டமாக காணப்பட்டது.
காஞ்சீபுரம் பஸ் நிலையம் அருகே உள்ள நெல்லுக்கார தெருவில் பிரசித்தி பெற்ற சித்ரகுப்தர் சுவாமி தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். கேது தோஷம், கலத்தர தோஷம், வித்யா தோஷம், புத்திர தோஷம், நிவர்த்தியாகும் திருத்தலமாக இது விளங்கி வருகிறது.
இந்த கோவிலில் கும்பாபிஷேக விழா இன்று காலை விமரிசையாக நடை பெற்றது. புனித நீர் சித்ரகுப்த சுவாமி கோவில் கோபுரம் மீது ஊற்றப்பட்டது. இதில் காஞ்சீபுரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகள், வெளி மாவட்டங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்ட னர். இதனால் காஞ்சீபுரம் நகரம் முழுவதும் பக்தர்கள் கூட்டமாக காணப்பட்டது.
சித்ரகுப்தர்கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி காஞ்சீபுரத்தில் போக்கு வரத்து மாற்றம் செய்யப் பட்டு இருந்தது. காஞ்சீபுரம் நெல்லுக்காரத் தெருவில் வாகனங்கள் செல்வதை தடுக்க காஞ்சீபுரம் டவுன் பேங்க் சந்திப்பு மற்றும் இரட்டை மண்டபம் சந்திப்பு அருகே தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தது.
இதேபோல் காஞ்சீபுரம் டவுன் பேங்க் வழியாக இரட்டை மண்டபம் நோக்கி வரும் வாகனங்கள் பூக்கடைச் சத்திரம் மற்றும் அரசு ஆஸ்பத்திரி சாலை வழியாக திருப்பி விடப் பட்டன. இரட்டை மண்டபம் வழியாக டவுன் பேங்க் நோக்கி செல்லும் வாக னங்கள் பஸ் நிலையம் வழியாக சென்றன.
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் தலை மையில் சிவகாஞ்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகர் மற்றும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
- கிராம மக்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
- உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்ததின் பேரில் கிராம மக்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.
வாலாஜாபாத்:
காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியம், ஊத்துக்காடு ஊராட்சியில் மே தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் புதிதாக தபால்நிலையம் கட்ட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதுகுறித்து கருத்து தெரிவித்த கிராம நிர்வாக அலுவலர் புருஷோத்தமன் அந்த இடத்தில் கிராம நிர்வாக அலுவலகம் கட்ட வேண்டும் என்பதால் அந்த இடத்தை வேறு எந்தப்பணிக்கும் ஒதுக்கக்கூடாது என கூறினார். இது குறித்து கேள்வி கேட்ட பொதுமக்கள் மற்றும் வார்டு உறுப்பினர்களிடம், யாரும் பேசக்கூடாது, ஊராட்சி மன்றத்தலைவர் மட்டும்தான் பேசவேண்டும் என அவர் கூறியதாகத்தெரிகிறது. இதனால் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கிடையே கிராம நிர்வாக அலுவலர் புருஷோத்தமன் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி ஊத்துக்காடு ஊராட்சிமன்றத்தலைவர் சாவித்திரி மணிகண்டன் தலைமையில் வார்டு உறுப்பினர்கள் மற்றும் 200-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த காஞ்சிபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜீலியட் சீசர், இன்ஸ்பெக்டர் பிரேசில் பிரேம் ஆனந்த் ஆகியோர் கிராம மக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் கிராம மக்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். இதைத்தொடர்ந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்ததின் பேரில் கிராம மக்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.
- தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் கடைகளில் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசியத்தகவல் கிடைத்தது.
- போலீசார் அவர்களிடம் இருந்த குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரத்தில் உள்ள சிவகாஞ்சி பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் கடைகளில் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசியத்தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் சிவகாஞ்சி போலீசார் அப்பகுதியில் உள்ள கடைகளில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு விற்பனைக்காக குட்கா பொருட்கள் வைத்திருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து ஏகாம்பரபுரம் தெருவைச்சேர்ந்த ஜெயபால் (வயது57), செங்கழுநீரோடை தெருவைச்சேர்ந்த முருகன் (51) ஆகிய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும் போலீசார் அவர்களிடம் இருந்த குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.
- கும்பாபிஷேகம் 4-ந்தேதி நடக்கிறது.
- மே 5-ந்தேதி சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு பக்தர்களுக்கு சிறப்பு தரிசனத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
காஞ்சிபுரத்தில் உள்ள கேது தலமாக விளங்கும் சித்ர குப்தர் கோவில் மகா கும்பாபிஷேகம் நாளை மறுநாள் (4-ந்தேதி) நடைபெற உள்ளது.
இதையொட்டி கோவிலில் விக்னேஷ்வர பூஜையுடன் யாக சாலை பூஜைகள் நேற்று தொடங்கியது.
இந்தியாவிலேயே சித்ரகுப்தருக்கு என்று தனியாக சந்நிதி உள்ள ஆலயம் காஞ்சீபுரத்தில் உள்ள கர்ணகி அம்பாள் சமேத சித்ரகுப்த சுவாமி கோவில். இந்த கோவிலில் வருகிற வியாழக்கிழமை (4-ந்தேதி) காலை 9.30 மணிக்கு கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று முதல் நிகழ்ச்சியாக அனுக்கை விக்னேசுவர பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோ மம், லட்சுமி ஹோமம், கோ பூஜை ஆகியவை காலையிலும் பிரவேச பலி, வாஸ்து சாந்தி ஆகியவை மாலையிலும் நடைபெற்றன.
இன்று (செவ்வாய்க் கிழமை) காலை மூர்த்தி ஹோமும், யாக சாலை அலங்காரமும், மாலையில் யாக சாலை பூஜையும் முதல் கால தீபாராதனைகளும் நடைபெறுகிறது.
இதன் தொடர்ச்சியாக 4-ந்தேதி (வியாழக்கிழமை) காலை மகா பூர்ணாஹுதி தீபாராதனைக்குப் பிறகு காலை 9.30 மணிக்கு ராஜ கோபுரத்துக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
இதையடுத்து மூலவருக்கும், பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெறுகிறது. மாலை கர்ணகி அம்பாளுக்கும், சிதரகுப்த சவாமிக்கும் திருக்கல்யாணமும், பின்னர் சுவாமியும், அம்மனும் காஞ்சீபுரம் ராஜ வீதிகளில் வீதியுலா வருகின்றனர்.
மறுநாள் (மே 5-ந்தேதி) சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு பக்தர்களுக்கு சிறப்பு தரிசனத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கும்பாபிஷேகத்துக்கான ஏற்பாடுகளை அறநிலையத்துறை காஞ்சீபுரம் சரக இணை ஆணையர் வான்மதி, கோவில் செயல் அலுவலர் அமுதா, அறங்காவலர் குழுவின் தலைவர் ரகுராமன், உறுப்பினர்கள் சந்தானம், ராஜாமணி மற்றும் கோவில் அர்ச்சர்கள், பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
- பாட்டாளிகளுக்கும், உழைப்பாளிகளுக்கும், விவசாயிகளுக்காகவும் தொடங்கப்பட்ட கட்சி பாட்டாளி மக்கள் கட்சி.
- திராவிட ஆட்சி என்று சொன்னால், 55 ஆண்டுகள் கடந்தும் தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய கட்சிகள் தமிழ்நாட்டை ஆட்சி செய்து வருகிறது.
காஞ்சிபுரம்:
உத்திரமேரூரில் பா.ம.க. 2.0 விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்பி. பேசியதாவது:-
பாட்டாளிகளுக்கும், உழைப்பாளிகளுக்கும், விவசாயிகளுக்காகவும் தொடங்கப்பட்ட கட்சி பாட்டாளி மக்கள் கட்சி.
ஆனால் தமிழ்நாட்டில், திராவிட ஆட்சி நடை பெற்றுக் கொண்டிருக்கிறது. திராவிட ஆட்சி என்று சொன்னால், 55 ஆண்டுகள் கடந்தும் தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய கட்சிகள் தமிழ் நாட்டை ஆட்சி செய்து வருகிறது. மக்கள் மாற்றம் வேண்டும் என நினைக்கின்றார்கள்.
நான் நீண்ட காலமாகவே விவாதத்திற்கு அழைத்துக் கொண்டிருக்கிறேன். திராவிட மாடல்-பாட்டாளி மாடல் விவாதத்திற்கு நான் தயார். திராவிட மாடல் என்பது முதலாளித்துவம், பாட்டாளி மாடல் என்பது விவசாயிகளுக்கும் உழைக்கும் மக்களுக்குமானது.
நடந்து முடிந்த சட்ட மன்ற கூட்டத் தொடரில் முதலாளித்துவத்திற்காக ஒரு சட்டத்தை தி.மு.க. அரசு கொண்டு வந்துள்ளது. 100 ஏக்கருக்கு மேல் தொழிற் சாலை வைத்திருப்பவர்களுக்கு, நீர் நிலைகள் ஒரு பொருட்டல்ல என்ற சிறப்பு அதிகாரத்தை இந்த சட்டம் வழங்குகிறது.
சாதாரண மக்கள் நீர் நிலையில் ஒரு வீடு கட்ட கூடாது. ஆனால் தொழிற் சாலை அந்த இடத்தில் கட்ட லாம். இந்த சட்டம் குறித்து யாருக்கும் தெரியவில்லை. உடனடியாக தி.மு.க. அரசு இந்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும்.
மக்களுக்கு இது குறித்து எல்லாம் தெரிவது கிடையாது. 'கிரிக்கெட்', 'கிரிக்கெட்' அதே தான் பார்க்கிறார்கள். அதை பார்ப்பது தப்பு கிடையாது. ஆனால் கிரிக்கெட் வாழ்க்கை கிடை யாது.
நானும் சி.எஸ்.கே. ஆதரவாளன் தான். டோனிக்கு விசில் போடு. ஆனால் அந்த அணியில் ஒரு தமிழர்கள் கூட இல்லாமல் இருப்பது நிச்சயம் வருத்தம்தான்.
இவ்வாறு அவர் பேசினார்.
- காஞ்சிபுரம் பஸ் நிலையத்தில் இருந்து திருப்பதி செல்லும் அரசு பஸ்சில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக சிவகாஞ்சி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
- 12 மூட்டைகளில் ரேசன் அரசி கடத்தப்படுவது தெரிந்தது. அதனை பறிமுதல் செய்தனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் பஸ் நிலையத்தில் இருந்து திருப்பதி செல்லும் அரசு பஸ்சில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக சிவகாஞ்சி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அந்த பஸ்சை காஞ்சிபுரம் பேட்டையில் நிறுத்தி திடீர் சோதனை செய்தனர். அப்போது அதில் 12 மூட்டைகளில் ரேசன் அரசி கடத்தப்படுவது தெரிந்தது. அதனை பறிமுதல் செய்தனர்.
இந்த ரேசன் அரிசி கடத்தல் தொடர்பாக பஸ்சில் இருந்த ஆந்திர மாநிலம் புத்தூர் பகுதியைச் சேர்ந்த தீபா, கன்னியம்மாள் ஆகிய 2 பேரையும் கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.






