என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காஞ்சிபுரம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி கூலி தொழிலாளி பலி
    X

    காஞ்சிபுரம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி கூலி தொழிலாளி பலி

    • வேகமாக வந்த ஒரு மோட்டார் சைக்கிள் கண்ணிமைக்கும் நேரத்தில் துரை மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்தி தப்பி சென்றவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் அருகே செவிலிமேடு, மேட்டுகாலனி பகுதியை சேர்ந்தவர் துரை (வயது 54). கூலித் தொழிலாளி. இவர், நேற்று முன்தினம் இரவு ஓரிக்கை மிலிட்டரி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வேகமாக வந்த ஒரு மோட்டார் சைக்கிள் கண்ணிமைக்கும் நேரத்தில் துரை மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காஞ்சிபுரம் தாலுகா போலீசார் உயிரிழந்த துரை உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக காஞ்சிபுரம் மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்தி தப்பி சென்றவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

    Next Story
    ×