என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    சென்னை விமான நிலையத்தில் ஒரே நாளில் ரூ.60 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ 200 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்
    சென்னை:

    சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து சிறப்பு விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரி தலைமையிலான சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர்.

    அப்போது அந்த விமானத்தில் சந்தேகப்படும்படியாக வந்த வேலூரை சேர்ந்த விவேக் மனோகரன் (வயது 30) என்பவரை நிறுத்தி சுங்க இலாகா அதிகாரிகள் விசாரித்தனர். அவர் முன்னுக்குபின் முரணாக பேசியதால் அவரது உடைமைகளை சோதனை செய்தனர். அதில் எதுவும் இல்லை.

    ஆனால் அவர் அணிந்து இருந்த கால் செருப்பு சற்று வித்தியாசமாக இருந்ததால் அவற்றை பிரித்து பார்த்தனர். அதில் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். அவரிடம் இருந்து ரூ.10 லட்சம் மதிப்புள்ள 200 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். மேலும் பயணிகள் அனைவரும் சென்ற பிறகு அந்த விமானத்துக்குள் ஏறி சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் ஒரு இருக்கையின் அடியில் பை ஒன்று கேட்பாரற்று கிடந்தது. இதை பிரித்து பார்த்தபோது அதற்குள் 6 தங்க கட்டிகள் இருந்தன.

    ரூ.50 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ தங்க கட்டிகளை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். துபாயில் இருந்து அந்த தங்கத்தை கடத்தி வந்த பயணி, விமான நிலையத்தில் சுங்க இலாகா அதிகாரிகள் சோதனைக்கு பயந்து இருக்கைக்கு அடியில் விட்டு சென்று இருக்கலாம் என கூறப்படுகிறது. சென்னை விமான நிலையத்தில் ஒரே நாளில் ரூ.60 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ 200 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், இது தொடர்பாக பிடிபட்ட விவேக் மனோகரனிடம் விசாரித்து வருகின்றனர்.
    சென்னை விமான நிலையத்தில் மொத்தம் ரூ.23 லட்சம் மதிப்புள்ள தங்கம் மற்றும் வெளிநாட்டு சிகரெட்டுகள், லேப்-டாப்கள், விலை உயர்ந்த செல்போன்கள் ஆகியவற்றை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
    ஆலந்தூர்:

    சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து சிறப்பு விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன்சவுத்ரி தலைமையிலான சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர்.

    அப்போது அந்த விமானத்தில் சந்தேகப்படும்படியாக வந்த ராமநாதபுரத்தை சேர்ந்த சாதிக் அப்துல் மன்னன் (வயது 46), தமீமுன் அன்சாரி அப்துல் ரசீத் (34) ஆகியோரை சுங்க இலாகா அதிகாரிகள் நிறுத்தி விசாரித்தனர். இருவரும் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் அவர்களது உடைமைகளை சோதனை செய்தனர்.

    அதில் ரூ.11 லட்சம் மதிப்புள்ள 11 ஐபோன் செல்போன்கள், 45 பெட்டி வெளிநாட்டு சிகரெட்டுகள், 11 லேப்டாப்கள் ஆகியவற்றை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். மேலும் 2 பேரையும் தனி அறைக்கு அழைத்துச்சென்று சோதனை செய்ததில் ரூ.12 லட்சம் மதிப்புள்ள 240 கிராம் தங்கத்தையும் மறைத்து கடத்தி வந்தது தெரிந்தது.

    இதையடுத்து 2 பேரிடம் இருந்தும் மொத்தம் ரூ.23 லட்சம் மதிப்புள்ள தங்கம் மற்றும் வெளிநாட்டு சிகரெட்டுகள், லேப்டாப்கள், விலை உயர்ந்த செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், பிடிபட்ட 2 பேரிடமும் விசாரித்து வருகின்றனர்.
    துபாயில் இருந்து சென்னை வந்த சிறப்பு விமானத்தில், காலணியில் மறைத்து வைத்து ரூ.12 லட்சம் தங்கம் கடத்தி வரப்பட்டது.
    ஆலந்தூர்:

    சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து வந்த சிறப்பு விமானத்தில் பெரும் அளவில் தங்கம் கடத்தி கொண்டு வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில், சுங்க இலாகா அதிகாரிகள் விமானத்தில் வந்த பயணிகளை கண்காணித்தனர்.

    அப்போது சந்தேகத்திற்கு இடமாக வந்த ராமநாதபுரத்தை சேர்ந்த முகமது அசன் அலி (வயது 23) என்பவரை சுங்க இலாகா அதிகாரிகள் நிறுத்தி விசாரணை செய்தனர். அப்போது அவர் அதிகாரிகளிடம் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால், அவரது உடைமைகளை சோதனை செய்தனர். அதில் எதுவும் சிக்கவில்லை.

    இதையடுத்து அவரது காலில் அணிந்து இருந்த காலணியை கண்டபோது, சற்று வித்தியாசமாக இருந்ததால் அவற்றை வாங்கி பிரித்து பார்த்தபோது அதில் தங்கத்தை மறைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து அவரிடம் இருந்த ரூ.12 லட்சம் மதிப்புள்ள 240 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

    அதேபோல் சென்னையில் இருந்து துபாய்க்கு சென்ற சிறப்பு விமானத்தில் பயணம் செய்ய தயாராக இருந்த ராமநாதபுரத்தை சேர்ந்த சகுபர் சாதிக் (21) என்பவரின் உடைமைகளை சோதனை செய்தனர். அதில் அமெரிக்க டாலர்கள், சவூதி ரியால்கள் மறைத்து வைத்து இருந்ததை கண்டுபிடித்தனர். இவரிடம் இருந்து ரூ.6 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள அமெரிக்க டாலர்கள், சவூதி ரியால்களை கைப்பற்றினார்கள்.

    2 பேரிடம் இருந்து ரூ.18 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள தங்கம் மற்றும் வெளிநாட்டு பணத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள் 2 பேரிடமும் விசாரித்து வருகின்றனர்.
    துபாயில் இருந்து சென்னைக்கு சிறப்பு விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.14 லட்சம் மதிப்புள்ள 300 கிராம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்
    சென்னை:

    துபாயில் இருந்து சென்னைக்கு சிறப்பு விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.14 லட்சம் மதிப்புள்ள 300 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், இது தொடர்பாக வாலிபரை கைது செய்தனர்.

    சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து சிறப்பு விமானம் வந்தது. அதில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன்சவுத்ரிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்பேரில் சுங்க இலாகா அதிகாரிகள் விமானத்தில் வந்த பயணிகளை தீவிரமாக கண்காணித்தனர்.

    அப்போது அந்த விமானத்தில் சந்தேகப்படும்படியாக வந்த சென்னையைச் சேர்ந்த சையத் நதீமுர் ரகுமான் (வயது 33) என்பவரை நிறுத்தி விசாரித்தனர். அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் அவரது உடைமைகளை சோதனை செய்தனர்.

    அதில் முகத்தில் பூச பயன்படுத்தும் கிரீம், தைலம், நக வெட்டிகள் மற்றும் குழந்தைகள் விளையாடும் பொம்மை கார்கள் இருந்தது. சந்தேகத்தின்பேரில் அவற்றை பிரித்து சோதனை செய்தபோது அவற்றுக்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர்.

    அவரிடம் இருந்து ரூ.14 லட்சம் மதிப்புள்ள 300 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், இது தொடர்பாக சையத் நதீமுர் ரகுமானை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
    சுடுகாட்டுக்கு பிணத்தை எடுத்து செல்லும்போது வாகனத்தில் உயர் அழுத்த மின்கம்பி உரசியதில் மின்சாரம் தாக்கி தொழிலாளி பரிதாபமாக இறந்தார். 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
    உத்திரமேரூர்: 

    காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியம் மங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் நாகப்பன் (வயது 75). உடல்நலக்குறைவு காரணமாக இறந்து போனார். அவரது உடலை அடக்கம் செய்வதற்காக சுடுகாட்டுக்கு வாகனத்தில் எடுத்து சென்றனர். அப்போது அந்த வாகனத்தின் மீது உயர் அழுத்த மின்கம்பி உரசியதாக கூறப்படுகிறது.

    இதில் அந்த வாகனத்தில் இருந்த மங்கலம் கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி ரவி (40), பாஸ்கர் (46), அவரது மகன் முகி (18), நீலமேகம் (28) ஆகியோரை மின்சாரம் தாக்கியது. இதில் அவர்கள் படுகாயம் அடைந்தனர்.

    உடனடியாக மின்சாரத்தை துண்டித்து சம்பந்தப்பட்ட 4 பேரையும் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவ்வாறு செல்லும் வழியிலேயே ரவி பரிதாபமாக இறந்து போன்ார். மற்ற 3 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இது குறித்து சாலவாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ரோசையன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
    துபாயில் இருந்து டி.வி., லேப்-டாப்பில் மறைத்து வைத்து கடத்தி வந்த ரூ.1½ கோடி தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
    ஆலந்தூர்:

    சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து வந்த சிறப்பு விமானத்தில் பெரும் அளவில் தங்கம் கடத்தி கொண்டு வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில், சுங்க இலாகா அதிகாரிகள் விமானத்தில் வந்த பயணிகளை கண்காணித்தனர்.

    அப்போது சந்தேகத்திற்கு இடமாக இருந்த திருச்சியை சேர்ந்த முகமது இஷாக் (வயது 26), சென்னையை சேர்ந்த சாதிக் அலி (53), நாகூர் அனிபா (36) ஆகிய 3 பேரை சுங்க இலாகா அதிகாரிகள் நிறுத்தி விசாரித்தனர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் உடமைகளை சோதனை செய்தனர். அதில், 3 பேரின் உடமைகளில் இருந்த எல்.இ.டி.டி.வி.களில் தங்கத்தை தகடுகளாக மாற்றி மறைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து, 3 பேரிடமிருந்து ரூ.68 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ 400 கிராம் எடை கொண்ட 36 தங்க தகடுகளை கைப்பற்றினார்கள்.

    அதேபோல், துபாயில் வந்த மற்றொரு விமானத்தில் பயணம் செய்த சிவகங்கை இளையான்குடியை உசேனையூர் ரகுமான் (22), முகமது கனி (46), சென்னையை சேர்ந்த காதர் உமாயூன் (25), அப்துல் கரீம் (52) ஆகிய 4 பேரிடம் இருந்த டி.வி., லேப்-டாப்களின் மானிட்டரில் மறைத்து வைத்து கடத்தி வந்த ரூ.81 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 600 கிராம் எடைக்கொண்ட 28 தங்க தகடுகளை கைப்பற்றினார்கள்.

    மேலும் துபாயில் இருந்து சிறப்பு விமானத்தில் வந்து இறங்கிய ராமநாதபுரத்தை சேர்ந்த சகுபர் ஆசிக் (22) என்பவரின் உள்ளாடைகளில் இருந்து ரூ.8 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள 200 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

    மொத்தம் 8 பேரிடம் இருந்து ரூ.1 கோடியே 58 லட்சம் மதிப்புள்ள 3 கிலோ 200 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், 8 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
    மதுராந்தகம் ஏரி நிரம்பி வழிவதால் பொதுமக்களை பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு பொதுப்பணித்துறையினரும் வருவாய்த்துறையினரும் தண்டோரா மூலம் அறிவுறுத்தி வருகின்றனர்.
    மதுராந்தகம்:

    செங்கல்பட்டு மாவட்டத்தின் மிக பெரிய ஏரியான மதுராந்தகம் ஏரி பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த ஏரி 23.3 அடி உயரம் கொண்டது. 696 மில்லியன் கனஅடி கொள்ளளவை கொண்ட இந்த ஏரி 2 ஆயிரத்து 411 ஏக்கர் பரப்பளவு உடையது. ஏரியில் 110 தானியங்கி கதவுகள் உள்ளன. ஏரியில் வினாடிக்கு 237 அடி கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அந்த தண்ணீர் அப்படியே உபரி நீராக வெளியேற்றப்படுகிறது.

    மதுராந்தகம் ஏரி முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஏரி நிரம்பி வழிவதாலும், மேலும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாலும் கிளியாற்று கரையோரம் உள்ள கிராமங்களான கத்திரி சேரி. விழுதமங்கலம், முள்ளி, முன்னூத்தி குப்பம், வளர்பிறை, வீராணம், குன்னம்,தச்சூர், குன்னத்தூர், தோட்டநாவல், மேட்டு காலனி, கே.கே. புதூர், பூண்டி நகர், ஈசூர், மலைப்பாளையம் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராமங்ளை சேர்ந்த கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    பொதுப்பணித்துறையினரும் வருவாய்த்துறையினரும் தண்டோரா மூலம் பொதுமக்களை பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு அறிவுறுத்தி வருகின்றனர்.

    மேலும் ஏரிக்கரையில் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    இதுகுறித்து பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் குமார் கூறுகையில்:-

    ஏரிக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகமாக இருப்பதால் ஏரியை பொதுப்பணித்துறையினர் கண்காணித்து வருகின்றனர். 

    இவ்வாறு அவர் கூறினார்.
    செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பில் மழை நீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் வெளியே வரமுடியாமல் பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு பிரேமலதா விஜயகாந்த் உணவு வழங்கி குறைகளை கேட்டறிந்தார்.
    சோழிங்கநல்லூர்:

    நிவர் புயலால் பெய்த பலத்த மழை காரணமாக தமிழகத்தின் பல இடங்கள் பாதிக்கப்பட்டன. சோழிங்கநல்லூர், செம்மஞ்சேரி தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்தது. செம்மஞ்சேரி ஜவஹர் நகர், எழில் முகநகர் மற்றும் சுனாமி குடியிருப்பில் வீடுகளை மழை வெள்ளம் சூழ்ந்ததால் அங்கு குடியிருந்த மக்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளானார்கள். சுனாமி குடியிருப்பு வீடுகளை மழைநீர் சூழ்ந்ததால் மக்கள் வெளியே வரமுடியாமல் வீட்டுக்குள் முடங்கி கிடக்கும் சூழ்நிலை உருவானது.

    இதையடுத்து நேற்று தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பு பகுதிக்கு வந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு மதிய உணவு வழங்கினார். மேலும் அங்குள்ள பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். செம்மஞ்சேரி பகுதியில் மழை நீரை வெளியேற்ற அரசு நடவடிக்கை எடுக்க தே.மு.தி.க. சார்பில் கோரிக்கை வைப்பதாக தெரிவித்தார். அப்போது தென்சென்னை மாவட்ட செயலாளர் பிரபாகரன் உடன் இருந்தார்.
    பொன்னேரி அடுத்த லட்சுமிபுரம் அணைக்கட்டுக்கு தொடர்ந்து மழைநீர் வந்து கொண்டிருப்பதால் நிரம்பி வழிகிறது.
    பொன்னேரி:

    ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் நகரி மலையில் உள்ள கருனேத் நகரில் ஆரணியாறு உற்பத்தியாகிறது. இந்த ஆறு ஆந்திராவில் 65 கிலோ மீட்டரும் தமிழகத்தில் சுருட்டப்பள்ளி கிராமத்தின் வழியாக ஆரணி, பொன்னேரி, லட்சுமிபுரம், ரெட்டிபாளையம், தத்தைமஞ்சி வழியாக சென்று ஆண்டார்மடம் கிராமத்தில் இரு கிளைகளாக பிரிந்து பழவேற்காடு ஏரியில் கலக்கிறது. மேலும் ஆரணியாறு தமிழகத்தில் 763 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டதில் 174 ஏரிகளை நிரப்பும் திறன் கொண்டதாக விளங்கி 4 அணைக்கட்டுகள் மூலம் மழை நீர் தேக்கி வைக்கப்படும்.

    கடந்த ஒரு சில நாட்களாக பெய்து வரும் மழையால் பொன்னேரி அருகே உள்ள லட்சுமிபுரம் அணைக்கட்டில் நீர் நிரம்பி வழிகிறது. இந்த தண்ணீர் அத்தமனஞ்சேரி ரெட்டிபாளையம் அணைக் கட்டுக்கு சென்று கொண்டிருக்கிறது.

    இது குறித்து பொதுப்பணித் துறை உதவி செயற்பொறியாளர் முருகன் கூறுகையில்:-

    லட்சுமிபுரம் அணைக்கட்டில் இருபுறமும் உள்ள மதகுகள் சீரமைக்கப்பட்டதால் மழை நீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளதாகவும் இடதுபுற மதகு வழியாக செல்லும் நீர் மடிமைகண்டிகை, ஆசானபுதூர், மெதூர், வஞ்சிவாக்கம் உள்பட 15-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கும் வலது புற மதகு வழியாக செல்லும் நீர் ஆலாடு, தேவதானம், காணியம்பாக்கம், வேளூர், காட்டூர் உள்பட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள ஏரிகள் நிரம்புகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது உதவி பொறியாளர் ஜெயகுரு உடன் இருந்தார்.
    துபாயில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு ரூ.90 லட்சம் தங்கம் கடத்தி வந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
    ஆலந்தூர்:

    சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து வந்த சிறப்பு விமானத்தில், பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில், சுங்க இலாகா அதிகாரிகள் விமானத்தில் வந்த பயணிகளை கண்காணித்தனர்.

    அப்போது சந்தேகத்திற்கு இடமாக இருந்த திருச்சியை சேர்ந்த நாசர் அலி சிராஜுதீன் (வயது 36), பாபு பதுஷா (20), சென்னையை சேர்ந்த முகமது கடாபி (49) ஆகிய 3 பேரை சுங்க இலாகா அதிகாரிகள் நிறுத்தி விசாரித்தனர்.

    அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் உடமைகளை சோதனை செய்தனர். அதில் எதுவும் இல்லாததால் தனியறைக்கு அழைத்து சென்று சோதனை செய்தனர். அதில், 3 பேரும் அணிந்து இருந்த உள்ளாடைகளில் ரகசிய அறை அமைத்து, தங்கத்தை கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். 3 பேரிடமும் இருந்து ரூ.90 லட்சத்து 40 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 780 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். இதைத்தொடர்ந்து போலீசார் 3 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
    காஞ்சிபுரத்தில் கடன் தொல்லையால் லாரி உரிமையாளர் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் ஓரிக்கை இந்திரா நகரை சேர்ந்தவர் இளவரசன் (வயது 45). இவர் சொந்தமாக லாரி வாங்கி தொழில் செய்து வந்தார். இந்த நிலையில் அவர் கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்தார். இதனால் மனவருத்தத்தில் இருந்த இளவரசன் வீட்டில் இருந்த பூச்சி மருந்தை (விஷம்) குடித்து விட்டு வீட்டின் மாடியில் படுக்க சென்று விட்டார். நீண்ட நேரமாகியும் இளவரசன் வராததால் சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் மாடிக்கு சென்று பார்த்தபோது, இளவரசன் வாயில் நுரை தள்ளிய நிலையில் கிடந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் உடனடியாக அவரை மீட்டு காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    பின்னர் அவரை மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து காஞ்சிபுரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    3 பேர் சுட்டுக்கொல்லப் பட்ட வழக்கில், கொலைக்கு பயன்படுத்திய துப்பாக்கியை கொடுத்ததாக ஓய்வுபெற்ற விமானப்படை அதிகாரியை போலீசார் கைது செய்தனர்.
    பெரம்பூர்: 

    சென்னை சவுகார்பேட்டையில் நிதி நிறுவன அதிபர் தலில் சந்த்(வயது 74), அவருடைய மனைவி புஷ்பா பாய் (70), மகன் ஷீத்தல்குமார்(40) ஆகியோர் கடந்த 11-ந் தேதி துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.

    இதுதொடர்பாக ஷீத்தல்குமாரின் மனைவி ஜெயமாலாவின் சகோதரர் கைலாஷ், அவருடைய நண்பர்களான விஜய்உத்தம், ரவீந்திரநாத்கர் ஆகிய 3 பேரை ஏற்கனவே தனிப்படை போலீசார் கைது செய்தனர். ஜெயமாலா, அவரது மற்றொரு சகோதரர் விலாஸ், கூட்டாளி ராஜீவ்ஷிண்டே ஆகியோர் டெல்லி ஆக்ராவில் கைது செய்யப்பட்டு விமானத்தில் சென்னை அழைத்து வரப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இதற்கிடையில் கைதான கைலாஷ், விஜய் உத்தம், ரவீந்திரநாத்கர் ஆகிய 3 பேரையும் போலீசார் 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். அப்போது கைலாஷ், கொலைக்கு பயன்படுத்திய துப்பாக்கியை தனது நண்பரான ஓய்வுபெற்ற விமானப்படை அதிகாரி கொடுத்ததாக வாக்குமூலம் அளித்து இருந்தார்.

    இதையடுத்து தனிப்படை போலீசார், ஜெய்ப்பூரை சேர்ந்த ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரி ராஜீவ் துப்பேர் (58) என்பவரை சென்னை யானைக்கவுனி போலீஸ் நிலையம் வரவழைத்து விசாரித்தனர். தனது மனைவியின் பெயரில் இருந்த காரை, கைலாசுக்கு முறையாக விற்பனை செய்தேன். அந்த காரில் தனது துப்பாக்கி இருந்தது. தானாக துப்பாக்கியை அவரிடம் கொடுக்கவில்லை. அந்த துப்பாக்கிக்கு முறையாக உரிமம் பெற்று உள்ளதாகவும் கூறினார்.

    ஆனால் கைலாஷ், தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறியதால், விமானப்படை அதிகாரி தனது துப்பாக்கியை பாதுகாப்புக்கு தனக்கு கொடுத்ததாகவும், அத்துடன் துப்பாக்கியால் சுடுவதற்கும் தனக்கு பயிற்சி கொடுத்ததாகவும் வாக்குமூலத்தில் கூறியிருந்தார்.

    முன்னுக்குப்பின் முரணான இந்த தகவல்களால் தீவிர விசாரணை நடத்திய தனிப்படை போலீசார், முறையான உரிமம் வைத்திருக்கும் துப்பாக்கியை சட்டவிரோதமாக நண்பருக்கு கொடுத்ததாக கூறி ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரி ராஜீவ் துப்பேர் மீது வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர். மருத்துவ பரிசோதனைக்கு பிறகு அவரை ஜார்ஜ் டவுன் குற்றவியல் நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
    ×