என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சென்னை விமான நிலையத்தில் ரூ.60 லட்சம் தங்கம் பறிமுதல்
Byமாலை மலர்3 Dec 2020 9:03 PM GMT (Updated: 3 Dec 2020 9:03 PM GMT)
சென்னை விமான நிலையத்தில் ஒரே நாளில் ரூ.60 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ 200 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்
சென்னை:
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து சிறப்பு விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரி தலைமையிலான சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர்.
அப்போது அந்த விமானத்தில் சந்தேகப்படும்படியாக வந்த வேலூரை சேர்ந்த விவேக் மனோகரன் (வயது 30) என்பவரை நிறுத்தி சுங்க இலாகா அதிகாரிகள் விசாரித்தனர். அவர் முன்னுக்குபின் முரணாக பேசியதால் அவரது உடைமைகளை சோதனை செய்தனர். அதில் எதுவும் இல்லை.
ஆனால் அவர் அணிந்து இருந்த கால் செருப்பு சற்று வித்தியாசமாக இருந்ததால் அவற்றை பிரித்து பார்த்தனர். அதில் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். அவரிடம் இருந்து ரூ.10 லட்சம் மதிப்புள்ள 200 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். மேலும் பயணிகள் அனைவரும் சென்ற பிறகு அந்த விமானத்துக்குள் ஏறி சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் ஒரு இருக்கையின் அடியில் பை ஒன்று கேட்பாரற்று கிடந்தது. இதை பிரித்து பார்த்தபோது அதற்குள் 6 தங்க கட்டிகள் இருந்தன.
ரூ.50 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ தங்க கட்டிகளை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். துபாயில் இருந்து அந்த தங்கத்தை கடத்தி வந்த பயணி, விமான நிலையத்தில் சுங்க இலாகா அதிகாரிகள் சோதனைக்கு பயந்து இருக்கைக்கு அடியில் விட்டு சென்று இருக்கலாம் என கூறப்படுகிறது. சென்னை விமான நிலையத்தில் ஒரே நாளில் ரூ.60 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ 200 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், இது தொடர்பாக பிடிபட்ட விவேக் மனோகரனிடம் விசாரித்து வருகின்றனர்.
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து சிறப்பு விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரி தலைமையிலான சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர்.
அப்போது அந்த விமானத்தில் சந்தேகப்படும்படியாக வந்த வேலூரை சேர்ந்த விவேக் மனோகரன் (வயது 30) என்பவரை நிறுத்தி சுங்க இலாகா அதிகாரிகள் விசாரித்தனர். அவர் முன்னுக்குபின் முரணாக பேசியதால் அவரது உடைமைகளை சோதனை செய்தனர். அதில் எதுவும் இல்லை.
ஆனால் அவர் அணிந்து இருந்த கால் செருப்பு சற்று வித்தியாசமாக இருந்ததால் அவற்றை பிரித்து பார்த்தனர். அதில் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். அவரிடம் இருந்து ரூ.10 லட்சம் மதிப்புள்ள 200 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். மேலும் பயணிகள் அனைவரும் சென்ற பிறகு அந்த விமானத்துக்குள் ஏறி சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் ஒரு இருக்கையின் அடியில் பை ஒன்று கேட்பாரற்று கிடந்தது. இதை பிரித்து பார்த்தபோது அதற்குள் 6 தங்க கட்டிகள் இருந்தன.
ரூ.50 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ தங்க கட்டிகளை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். துபாயில் இருந்து அந்த தங்கத்தை கடத்தி வந்த பயணி, விமான நிலையத்தில் சுங்க இலாகா அதிகாரிகள் சோதனைக்கு பயந்து இருக்கைக்கு அடியில் விட்டு சென்று இருக்கலாம் என கூறப்படுகிறது. சென்னை விமான நிலையத்தில் ஒரே நாளில் ரூ.60 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ 200 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், இது தொடர்பாக பிடிபட்ட விவேக் மனோகரனிடம் விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X