என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சென்னை விமான நிலையத்தில் ரூ.23 லட்சம் தங்கம்-வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல்
Byமாலை மலர்3 Dec 2020 3:06 AM GMT (Updated: 3 Dec 2020 3:06 AM GMT)
சென்னை விமான நிலையத்தில் மொத்தம் ரூ.23 லட்சம் மதிப்புள்ள தங்கம் மற்றும் வெளிநாட்டு சிகரெட்டுகள், லேப்-டாப்கள், விலை உயர்ந்த செல்போன்கள் ஆகியவற்றை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ஆலந்தூர்:
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து சிறப்பு விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன்சவுத்ரி தலைமையிலான சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர்.
அப்போது அந்த விமானத்தில் சந்தேகப்படும்படியாக வந்த ராமநாதபுரத்தை சேர்ந்த சாதிக் அப்துல் மன்னன் (வயது 46), தமீமுன் அன்சாரி அப்துல் ரசீத் (34) ஆகியோரை சுங்க இலாகா அதிகாரிகள் நிறுத்தி விசாரித்தனர். இருவரும் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் அவர்களது உடைமைகளை சோதனை செய்தனர்.
அதில் ரூ.11 லட்சம் மதிப்புள்ள 11 ஐபோன் செல்போன்கள், 45 பெட்டி வெளிநாட்டு சிகரெட்டுகள், 11 லேப்டாப்கள் ஆகியவற்றை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். மேலும் 2 பேரையும் தனி அறைக்கு அழைத்துச்சென்று சோதனை செய்ததில் ரூ.12 லட்சம் மதிப்புள்ள 240 கிராம் தங்கத்தையும் மறைத்து கடத்தி வந்தது தெரிந்தது.
இதையடுத்து 2 பேரிடம் இருந்தும் மொத்தம் ரூ.23 லட்சம் மதிப்புள்ள தங்கம் மற்றும் வெளிநாட்டு சிகரெட்டுகள், லேப்டாப்கள், விலை உயர்ந்த செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், பிடிபட்ட 2 பேரிடமும் விசாரித்து வருகின்றனர்.
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து சிறப்பு விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன்சவுத்ரி தலைமையிலான சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர்.
அப்போது அந்த விமானத்தில் சந்தேகப்படும்படியாக வந்த ராமநாதபுரத்தை சேர்ந்த சாதிக் அப்துல் மன்னன் (வயது 46), தமீமுன் அன்சாரி அப்துல் ரசீத் (34) ஆகியோரை சுங்க இலாகா அதிகாரிகள் நிறுத்தி விசாரித்தனர். இருவரும் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் அவர்களது உடைமைகளை சோதனை செய்தனர்.
அதில் ரூ.11 லட்சம் மதிப்புள்ள 11 ஐபோன் செல்போன்கள், 45 பெட்டி வெளிநாட்டு சிகரெட்டுகள், 11 லேப்டாப்கள் ஆகியவற்றை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். மேலும் 2 பேரையும் தனி அறைக்கு அழைத்துச்சென்று சோதனை செய்ததில் ரூ.12 லட்சம் மதிப்புள்ள 240 கிராம் தங்கத்தையும் மறைத்து கடத்தி வந்தது தெரிந்தது.
இதையடுத்து 2 பேரிடம் இருந்தும் மொத்தம் ரூ.23 லட்சம் மதிப்புள்ள தங்கம் மற்றும் வெளிநாட்டு சிகரெட்டுகள், லேப்டாப்கள், விலை உயர்ந்த செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், பிடிபட்ட 2 பேரிடமும் விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X