என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    உத்திரமேரூரில் வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் திருடப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    உத்திரமேரூர்:

    காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் முத்து கிருஷ்ணா அவென்யூவை சேர்ந்தவர் காஜா பேக் (வயது 48). இவர் உத்திரமேரூர் பஜார் வீதியில் சைக்கிள் மற்றும் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடை வைத்திருக்கிறார். நேற்று முன்தினம் இவர் குடும்பத்தினருடன் ஆரணியில் உள்ள உறவினர் வீட்டு விசேஷத்திற்கு சென்றதாக கூறப்படுகிறது.

    நேற்று காலை 11 மணி அளவில் காஜா பேக் வீட்டுக்கு சென்றபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    வீட்டில் இருந்த 9 பவுன் நகை, ரூ.50 ஆயிரம் திருடப்பட்டிருப்பதாக உத்திரமேரூர் போலீஸ் நிலையத்தில் காஜா பேக் புகார் செய்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர்.

    மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. மோப்பநாய் உத்திரமேரூர் பஜார் வீதி அம்பேத்கர் சிலை அருகே உள்ள டீக்கடையின் அருகே சென்று நின்றது. கொள்ளையர்கள் கொள்ளை அடித்துவிட்டு பஜார் வீதியில் வந்து சென்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும் கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
    படப்பை அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    படப்பை:

    காஞ்சீபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரியை அடுத்த மாடம்பாக்கம் சந்தோஷ் நகர் பகுதியை சேர்ந்தவர் சோபன்ராஜ், பெயிண்டர். இவருடைய மனைவி தமிழரசி (வயது 34). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இவர்களில் கீதா (15), 11-ம் வகுப்பும், ஹரிணி (10), 6-ம் வகுப்பும் படித்து வருகின்றனர்.

    இந்தநிலையில் நேற்றுமுன்தினம் கீதா அதிக நேரம் செல்போனை உபயோகித்து வந்தார். இதனை தாய் தமிழரசி கண்டித்தார். இதையடு்த்து கீதா உணவு சாப்பிடாமல் இருந்து விட்டார். இதனை தொடர்ந்து காலை முதல் இருவருக்கும் தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்தநிலையில் படுக்கை அறையில் உள்ள மின் விசிறியில் தமிழரசி சேலையில் தனக்கு தானே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த மணிமங்கலம் போலீசார் தற்கொலை செய்து கொண்ட தமிழரசியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மணிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    வாலாஜாபாத் அருகே அறுந்து கிடந்த மின்கம்பி உரசியதில் மின்சாரம் தாக்கி விவசாயி பரிதாபமாக இறந்தார்.
    வாலாஜாபாத்:

    காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் தாலுகா தென்னேரி கிராமம் மேட்டுத்தெருவை சேர்ந்தவர் சங்கர் (வயது 45). விவசாயி. வயல் வேலைக்கு சென்றுவிட்டு கட்டவாக்கம் பகுதியில் இருந்து தென்னேரி நோக்கி சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு அறுந்து கிடந்த மின்கம்பி உரசியதில் மின்சாரம் தாக்கி சங்கர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    இதுகுறித்து தகவலறிந்த தென்னேரி கிராம மக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்டனர். விபத்து குறித்தும் கிராம மக்களின் சாலை மறியல் குறித்தும் தகவல் அறிந்து காஞ்சீபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு முருகன் தலைமையில் வாலாஜாபாத் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

    வாலாஜாபாத்- சுங்குவார்சத்திரம் நெடுஞ்சாலை மஞ்சமேடு பகுதியில் நடைபெறும் மேம்பால பணிக்காக மண் கொண்டு வந்து கொட்டி சென்ற லாரியால் சாலையின் குறுக்கே சென்ற மின்கம்பி அறுந்தது.

    இதுகுறித்து மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தும் உடனடி நடவடிக்கை எடுக்கவில்லை.

    மேம்பாலம் கட்டுபவர்களின் அஜாக்கிரதையாலும், மின்வாரிய ஊழியர்களின் அலட்சியத்தாலும் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. உயிரிழந்த சங்கரின் மனைவியும், இரு மகள்களும் வாழ்வாதாரத்தை இழந்து விட்டதால் அவரது குடும்பத்தினரில் ஒருவருக்கு அரசு வேலையும், உரிய இழப்பீட்டையும் வழங்கிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

    வருவாய்த்துறையினரும், போலீசாரும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள அரசுக்கு பரிந்துரைப்பதாக உறுதி அளித்ததன் பேரில் கிராம மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதை தொடர்ந்து சங்கரின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் விபத்து குறித்து வாலாஜாபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    இருங்காட்டுக்கோட்டையில் ஹூண்டாய் தொழிற்சாலை அமைந்த பிறகு அதன் சுற்றுப்புற பகுதிகள் பொருளாதார ரீதியாக வளர்ச்சி கண்டு வருகிறது.
    காஞ்சிபுரம்:

    தமிழக முதல்-அமைச்சராக பதவி ஏற்ற பிறகு மு.க.ஸ்டாலின் இன்று முதல் முறையாக சின்ன காஞ்சிபுரத்திலுள்ள பேரறிஞர் அண்ணாவின் நினைவு இல்லத்திற்கு வந்தார்.

    அண்ணாவின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அண்ணாவின் வீட்டில் உள்ள அவரது புகைப்படங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.

    மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி வழியெங்கிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அண்ணாவின் நினைவு இல்லம் அருகே கொரோனா பாதுகாப்பு விதிகளை பின்பற்றும் வகையில் தடுப்புகள் அமைத்து பொதுமக்கள், மற்றும் கட்சி நிர்வாகிகள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் தா.மோ.அன்பரசன், கா.செல்வம் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கா.சுந்தர், சி.வி.எம்.பி.எழிலரசன், காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.

    பின்னர் மு.க.ஸ்டாலின் அங்கிருந்து ஸ்ரீபெரும்புதூர் புறப்பட்டு சென்றார். ஸ்ரீபெரும்புதூர் இருங்காட்டுகோட்டையில் ஹூண்டாய் நிறுவனத்தின் கார் தொழிற்சாலை இயங்கி வருகிறது.

    இந்த தொழிற்சாலை 1996-ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது. இங்கு 1999-ம் ஆண்டு முதல் கார்கள் உற்பத்தி தொடங்கியது. 500 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ஹூண்டாய் தொழிற்சாலையில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள்.

    இருங்காட்டுக்கோட்டையில் ஹூண்டாய் தொழிற்சாலை அமைந்த பிறகு அதன் சுற்றுப்புற பகுதிகள் பொருளாதார ரீதியாக வளர்ச்சி கண்டு வருகிறது.

    ஹூண்டாய் நிறுவனத்தில் இருந்து கார்கள் உற்பத்தி செய்யப்பட்டு இந்தியா முழுவதும் அனுப்பப்படுகிறது. வெளிநாடுகளுக்கும் கார்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

    மு.க.ஸ்டாலின் ஹூண்டாய் நிறுவன தொழிற்சாலையை பார்வையிட்டார்.

    ஹூண்டாய் நிறுவனம் இதுவரை 11 வகையான கார்களை தயாரித்துள்ளது. சான்ட்ரோ, வெர்னா, ஐ10, ஐ20, ஆரா, வென்யூ, க்ரெட்டா, அல்கசார், எலன்ட்ரா, டக்சன், கோனா எலக்ட்ரிக் ஆகிய 11 வகை கார்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. 199 நாடுகளுக்கு ஹூண்டாய் நிறுவனத்தின் கார்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

    ஹூண்டாய் நிறுவனம் தொடங்கி 22 ஆண்டுகளில் இதுவரை 1 கோடி கார்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. ஹூண்டாய் நிறுவனத்தின் 1 கோடியாவது கார் அறிமுக விழா இருங்காட்டுகோட்டையில் உள்ள அதன் தொழிற்சாலை வளாகத்தில் நடந்தது.

    இந்த நிகழ்ச்சியில் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு 1 கோடியாவது காரை அறிமுகப்படுத்தினார். பின்னர் மு.க.ஸ்டாலின் ஹூண்டாய் நிறுவன தொழிற்சாலையை பார்வையிட்டார்.

    இந்த நிகழ்ச்சியில் ஹூண்டாய் நிறுவன தலைவர் எய்சன் சங், அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்கள், தொழிற்சாலை நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
    முதல்-அமைச்சராக பதவி ஏற்ற பிறகு மு.க.ஸ்டாலின் இன்று முதல் முறையாக சின்ன காஞ்சிபுரத்திலுள்ள பேரறிஞர் அண்ணாவின் நினைவு இல்லத்திற்கு வந்தார்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரத்தில் மறைந்த பேறிஞர் அண்ணாவின் நினைவு இல்லம் உள்ளது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த சட்டமன்ற தேர்தலின்போது தனது தேர்தல் பிரசாரத்தை காஞ்சிபுரத்தில் இருந்து தொடங்கினார்.

    இந்த நிலையில் முதல்-அமைச்சராக பதவி ஏற்ற பிறகு மு.க.ஸ்டாலின் இன்று முதல் முறையாக சின்ன காஞ்சிபுரத்திலுள்ள பேரறிஞர் அண்ணாவின் நினைவு இல்லத்திற்கு வந்தார்.

    அண்ணாவின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அண்ணாவின் வீட்டில் உள்ள அவரது புகைப்படங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.

    அண்ணாவின் வீட்டில் உள்ள அவரது புகைப்படங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    காஞ்சிபுரத்தில் அறிஞர் அண்ணா வாழ்ந்த இல்லத்தில் வாழ்த்து பெற வேண்டும் என்று கருதிக்கொண்டு இருந்தேன். அதற்கான வாய்ப்பு எனக்கு இன்றைக்கு கிடைத்தது. எனவே அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு எங்களை ஆளாக்கிய, கழகத்தை உருவாக்கிய அறிஞர் அண்ணா வாழ்ந்த இல்லத்துக்கு வருகை தந்து அவரது திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து நான் மரியாதை செலுத்தினேன்.

    அவருடைய இல்லத்திற்கு வந்திருக்கும் இந்த நேரத்தில் குறிப்பேடு புத்தகத்தில் கூட நான் எழுதி இருக்கிறேன். மக்களிடம் செல், மக்களோடு மக்களாக சேர்ந்து வாழ், மக்களுக்கு பணியாற்று என்ற அறிவுரையை அவர் தம்பிமார்களுக்கு எப்போதும் வழங்கிக் கொண்டு இருக்கக்கூடியவர். அதை நினைவுப்படுத்தி குறிப்பேடு புத்தகத்தில் அதை எழுதி வைத்து அவர் தந்த அறிவுரைப்படி இன்று இந்த ஆட்சி பீடு நடைபோடும் என்று உறுதியோடு நான் எழுதி இருக்கிறேன்.

    கேள்வி:- ஏற்கனவே அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல நிறுவனங்கள் அவரது பெயரில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அண்ணா நூற்றாண்டு நூலகம் என்றும் பெயர் வைக்கப்பட்டுள்ளது. அதுபோல அரசு திட்டங்களுக்கு அண்ணா பெயர் வைக்கப்படுமா?

    பதில்:- நிதி நிலை அறிக்கை வெளியிடப்படும் போது நீங்கள் எதிர்பார்ப்பதை போல அந்த செய்திகள் எல்லாம் அதிலே வரும் என்றார்.

    குன்றத்தூர் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலியானார்.
    பூந்தமல்லி:

    காஞ்சீபுரம் குன்றத்தூரை அடுத்த நத்தம், கொல்லை தெருவை சேர்ந்தவர் கர்ணன் (வயது35), லாரியில் கிளீனராக வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிளில் வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலை, திருமுடிவாக்கம் அருகே சென்று கொண்டிருந்தார்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்தார்.

    இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மயங்கினார். இதையடுத்து அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் அவரை மீட்டு குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் கர்ணன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    தகவலறிந்து வந்த போலீசார் கர்ணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

    உத்திரமேரூரில் கத்திமுனையில் பொதுமக்களை மிரட்டிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    உத்திரமேரூர்:

    காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் நீரடி அருகே சாலையில் 2 பேர் கத்திமுனையில் பொதுமக்களை மிரட்டுவதாக உத்திரமேரூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் உத்தரவின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் முரளிதரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு கத்தி முனையில் 2 பேர்் பொதுமக்களை மிரட்டி கொண்டிருந்தனர்.

    உடனடியாக அவர்கள் இருவரையும் மடக்கி் பிடித்த போலீசார் விசாரணை செய்ததில் அவர்கள் சென்னை புளியந்தோப்பு வ.உ.சி. நகரை சேர்ந்த வசி என்கிற வசீகரன் (வயது 38) என்பதும், மற்றொருவர் உத்திரமேரூர் ஓங்கூர் கிராமத்தை சேர்ந்த ராஜா (36) என்பதும் தெரியவந்தது.

    மேலும், வசீகரன் மீது புளியந்தோப்பு போலீஸ் நிலையத்தில் கொலை வழக்கு மற்றும் பல வழக்குகள் உள்ளதாகவும், ஏற்கனவே குண்டர் சட்டத்தில் சிறையில் இருந்தவர் என்பதும் 6 ஆண்டுகளாக உத்திரமேரூர் ஏ.பி. சத்திரத்தில் உள்ள மாமியார் வீட்டில் வசித்து வருவதாகவும் போலீசாரிடம் தெரிவித்தார்.

    உடனடியாக அவர்களை கைது செய்த போலீசார் இருவரையும் கோர்ட்டு காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
    கொரோனா வைரஸ் ஊரடங்கால் மத்திய அரசு, வெளிநாட்டு பயணிகள் விமானங்களுக்கு தடை விதித்து உள்ளது.
    ஆலந்தூர்:

    இந்தியாவில் இருந்து பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரீசுக்கு டெல்லி, மும்பை, பெங்களூரு ஆகிய நகரங்களில் இருந்துதான் விமான சேவை இயங்கி வந்தன. இதனால் தமிழகத்தில் இருந்து பாரீசுக்கு செல்பவர்கள் பிற மாநிலங்களுக்கு சென்று தான் பிரான்ஸ் செல்ல வேண்டிய நிலை இருந்தது.

    இல்லை என்றால் சென்னையில் இருந்து துபாய் வழியாக பாரீசுக்கு செல்ல வேண்டும். எனவே சென்னையில் இருந்து பிரான்ஸ் நாட்டுக்கு நேரிடையாக விமான சேவையை இயக்க வேண்டும் என பயணிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.

    இந்த கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் இன்று முதல் ஏா்பிரான்ஸ் ஏா்லைன்ஸ் சென்னைக்கு நேரடி விமான சேவையை தொடங்குகிறது. அதன்படி இன்று காலை 10.25 மணிக்கு பாரீசில் இருந்து புறப்படும் விமானம் இரவு 11.45 மணிக்கு சென்னை வருகிறது.

    நாளை (ஞாயிற்றுக்கிழமை) முழுவதும் விமானிகள், விமான ஊழியா்கள் ஓய்வு எடுக்கின்றனா். மீண்டும் 28-ந் தேதி (திங்கட்கிழமை) அதிகாலை 1.20 மணிக்கு சென்னையில் இருந்து பாரீசுக்கு அந்த விமானம் புறப்பட்டு செல்கிறது.

    கொரோனா வைரஸ் ஊரடங்கால் மத்திய அரசு, வெளிநாட்டு பயணிகள் விமானங்களுக்கு தடை விதித்து உள்ளது. எனவே இந்த விமானத்தில் வெளிநாடு வாழ் இந்தியா்கள் மற்றும் மத்திய அரசின் சிறப்பு அனுமதியுடன் மருத்துவ சிகிச்சை, கார்ப்பரேட் நிறுவன பணியாளா்கள் போன்ற அத்தியாவசிய பயணிகள் மட்டுமே பயணிக்க முடியும்.

    சென்னை விமான நிலையம்

    இதனால் வாரத்துக்கு ஒரு விமானம் மட்டுமே இயக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. ஜூலை 8-ந் தேதியில் இருந்து வியாழக்கிழமை பாரீசில் இருந்து சென்னைக்கு விமானம் வந்து விட்டு, வெள்ளிக்கிழமை ஓய்வு எடுத்துவிட்டு மீண்டும் சனிக்கிழமை பிரான்ஸ் நாட்டுக்கு புறப்பட்டு செல்லும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    கொரோனா வைரஸ் ஓய்ந்து மத்திய அரசு வெளிநாட்டு பயணிகள் விமான சேவைக்கான தடையை நீக்கிய பிறகு செவ்வாய், வியாழன், ஞாயிறு ஆகிய கிழமைகளில் பிரான்சில் இருந்து சென்னைக்கும், அதேபோல் திங்கள், புதன், வெள்ளி ஆகிய நாட்களில் சென்னையில் இருந்து பிரான்சுக்கும் விமான சேவைகளை நடத்த உள்ளது.

    இந்த ஏா்பிரான்ஸ் போயிங் விமானத்தில் 279 இருக்கைகள் உள்ளன. விமானத்தின் பயணநேரம் 10 மணி 25 நிமிடங்கள். விமானத்தின் ஜன்னல்கள் மற்ற விமான ஜன்னல்களைவிட 30 சதவீதம் அகலமானது. இந்த விமானம் வானில் பறக்கும்போது அதிக அதிர்வுகள் இல்லாமல் மிதந்தபடி செல்லும் சொகுசு விமானமாக இருக்கும்.
    வாலாஜாபாத் அருகே கருங்கற்களை வெட்டி கடத்துவதாக கிராம மக்கள் புகார் தெரிவித்த நிலையில் காஞ்சீபுரம் வருவாய் கோட்டாட்சியர் ராஜலட்சுமி சங்கராபுரம் பகுதியில் ஆய்வு மேற்கொண்டார்.
    வாலாஜாபாத்:

    வாலாஜாபாத் ஒன்றியம் பழைய சீவரம் ஊராட்சிக்கு உட்பட்டது சங்கராபுரம் கிராமம். இந்த கிராம பகுதியில் அமைந்துள்ள மலை குன்றுகளில் உள்ள கருங்கற்கள் சாமி சிலைகள் மற்றும் சிற்பங்களை செய்வதற்கு ஏற்றதாக உள்ளது. இந்த நிலையில் அரசு அனுமதி இல்லாமல் சமூக விரோதிகள் கருங்கற்களை வெட்டி மாமல்லபுரம் மற்றும் வெளி மாநிலங்களில் உள்ள சிற்ப கூடங்களுக்கு இரவு நேரங்களில் லாரிகளில் கடத்துவது தெரியவந்தது.

    கருங்கற்கள் வெட்டி கடத்தப்படுவது குறித்து வாலாஜாபாத்தில் நடைபெற்ற ஜமாபந்தி கூட்டத்தில் சங்கராபுரம் கிராம மக்கள், வருவாய் ஆர்.டி.ஓ. ராஜலட்சுமியிடம் புகார் தெரிவித்தனர்.

    கிராம மக்களின் புகாரை தொடர்ந்து ஆர்.டி.ஓ. ராஜலட்சுமி சங்கராபுரம் கிராமத்திற்கு நேரில் சென்று மலைக்குன்று பகுதிகளை ஆய்வு செய்தார். அப்போது பல்வேறு இடங்களில் இருந்த குன்று பகுதிகளில் சாமி சிலைகளை செய்வதற்காக அரிய வகை கருங்கற்கள் வெட்டி கடத்துவதற்கு தயாராக வைக்கப்பட்டு இருந்ததை கண்டுபிடித்தார்.

    இது குறித்து மாவட்ட கலெக்டர் ஆர்த்திக்கு தகவல் தெரிவித்துள்ளார். அரசுக்கு அதிக வருவாய் தரக்கூடிய கருங்கற்கள் என்பதால் மாவட்ட கலெக்டரின் உத்தரவின்படி சம்பந்தப்பட்ட கனிம வளத்துறை அதிகாரிகளுக்கும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பரிந்துரைத்தார். மேலும் அரசு அனுமதியின்றி கருங்கற்களை வெட்டி கடத்த முயன்றவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்குமாறும், வெட்டி வைக்கப்பட்டுள்ள கருங்கற்களை கடத்த முடியாதபடி போலீசார் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட வேண்டுமென சாலவாக்கம் போலீசாருக்கும் உத்தரவிட்டுள்ளார்.

    கிராம மக்களின் புகாரை ஏற்று உடனடியாக காஞ்சீபுரம் ஆர்.டி.ஓ. ராஜலட்சுமி மேற்கொண்ட ஆய்வின் காரணமாக கடத்தப்பட தயார் நிலையில் இருந்த பல லட்ச ரூபாய் மதிப்பிலான அறிய வகை கருங்கற்கள் பிடிபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
    குடும்பத்தகராறு காரணமாக குழந்தையை கொன்று விட்டு தாய் தற்கொலை செய்து கொண்டார்.
    வாலாஜாபாத்:

    காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் தாலுகா உள்ளாவூர் கிராமம் அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 40). தனியார் தொழிற்சாலையில் துப்புரவு பணியாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி உமா (36). மகள் தீபிகா (6). கடந்த சில மாதங்களாக முருகனுக்கும் அவரது மனைவி உமாவுக்கும் குடும்பத்தகராறு ஏற்பட்டு கணவன் மனைவி இருவரும் ஒரே வீட்டில் தனித்தனியாக சமைத்து சாப்பிட்டு வந்தனர்.

    கடந்த சில நாட்களாக உமா கடும் மன உளைச்சலில் இருந்தார். நேற்று முன்தினம் முருகன் வேலைக்கு சென்று விட்டார்.

    மாலையில் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. ஜன்னலை திறந்து பார்த்தபோது மனைவி உமா தூக்கில் பிணமாக தொங்கியபடி காணப்பட்டார். அருகில் மகள் தீபிகா பிணமாக கிடந்தார்.

    இது குறித்து அக்கம் பக்கம் இருந்தவர்கள் சாலவாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உமா, தீபிகா இருவரது உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து முருகனிடம் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.

    குடும்பத்தகராறு காரணமாக 6 வயது மகளுக்கு விஷம் கொடுத்து கொன்று விட்டு தாயும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது உள்ளாவூர் பகுதியில்
    துபாயில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு ஆடையில் மறைத்து கடத்தி வந்த ரூ.19¾ லட்சம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
    ஆலந்தூர்:

    சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து சிறப்பு விமானம் வந்தது. இந்த விமானத்தில் பெரும் அளவில் தங்கம் கடத்தப்பட்டு வருவதாக சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அவரது உத்தரவின் பேரில் சுங்க இலாகா அதிகாரிகள் பயணிகளை தீவிரமாக கண்காணித்தனர். அதைத்தொடர்ந்து விமானத்தில் வந்த பயணிகளை சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனா். அப்போது சென்னையை சோ்ந்த ஜெய்னுலாப்தீன் (வயது 60) என்பவரை நிறுத்தி விசாரித்தனர்.

    அதில், முன்னுக்கு பின் முரணாக அவர் பேசியதால் சந்தேகத்தின் பேரில் உடைமைகளை சோதனை செய்தனர். அதில், எதுவும் சிக்காததால், தனியறைக்கு அழைத்து சென்று ஆடையை சோதனை செய்த போது, பேண்ட்டில் ரகசிய அறை வைத்து தங்கத்தை மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனா். அவரிடமிருந்து ரூ.19 லட்சத்து 78 ஆயிரம் மதிப்புள்ள 465 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ஜெய்னுலாப்தீனிடம் சுங்க இலாகா அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
    ஸ்ரீபெரும்புதூர் அருகே தொழிலதிபர் வீட்டில் சொகுசு கார் உள்பட ரூ.1 கோடி பொருட்களை கொள்ளையடித்த 4 பேரை போலீசார் திருவண்ணாமலையில் மடக்கி பிடித்தனர்.
    ஸ்ரீபெரும்புதூர்:

    சென்னை அசோக் நகர் பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 42). இவருக்கு பிரியா என்ற மனைவியும் 2 மகள்களும் உள்ளனர். இவர் கட்டுமான தொழில் செய்து வருகிறார். இவருக்கு காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மேவலூர் குப்பம் நயப்பாக்கம் பகுதியில் சொகுசு பங்களா உள்ளது.

    இந்த நிலையில், ரவிச்சந்திரன் மனைவி பிரியாவுக்கு கொரோனா பாதிக்கப்பட்டது. அதனால் அவரை தனிமைப்படுத்தி கொள்ள மனைவியை சென்னையில் விட்டு தனது 2 மகள்களையும் அழைத்து கொண்டு மேவலூர் குப்பம் பகுதியில் உள்ள வீட்டில் கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து தங்கி உள்ளார்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை ரவிச்சந்திரன் மற்றும் அவரது இரண்டு மகள்களுடன் தூங்கி கொண்டு இருந்தபோது, மர்ம நபர்கள் இவரது வீட்டின் மாடி வழியாக ஏறி வீட்டுக்குள் புகுந்து வீட்டில் இருந்த விலையுயர்ந்த 3 எல்.இ.டி. டிவி, ஒரு லேப்டாப், வீட்டின் வெளியே நிறுத்தி இருந்த விலை உயர்ந்த ஆடி வகை சொகுசு கார் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர்.

    இதையடுத்து காலையில் எழுந்து வந்து பார்த்தபோது, வீட்டில் பொருட்களை திருட்டு போயிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த ரவிச்சந்திரன் ஸ்ரீபெரும்புதூர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்தனர். ரவிச்சந்திரன் வீட்டில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படாததால் போலீசார் விசாரணையில் தொய்வு ஏற்பட்டது. கொள்ளை போன சொகுசு காரில் ஜி.பி.எஸ்.பொருத்தப்பட்டு இருந்ததால், அதை வைத்து கொள்ளையர்கள் திருவண்ணாமலையில் உள்ள வெண்பாக்கத்தில் பதுங்கி இருப்பதை அறிந்து போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.

    இதையடுத்து அங்கு வீட்டில் பதுங்கி இருந்த ஏ.சி.மெக்கானிக் விஜயசந்திரன் (21), லோகேஷ் (22), பிரவீன்குமார் (24), செங்கல்பட்டு மாவட்டம் கொள்ளம் பேடு அம்மணம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த பிரகாஷ் (22) ஆகிய 4 பேரை மடக்கி பிடித்தனர்.

    விசாரணையில், கடந்த ஏப்ரல் மாதம் ரவிச்சந்திரனின் சொகுசு பங்களாவில் புதிய ஏ.சி.பொருத்த திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த விஜயசந்திரன் வந்துள்ளார். வீட்டை நோட்டாமிட்ட விஜயசந்திரன் தனது கூட்டாளிகளுடன் கொள்ளையடிக்க திட்டமிட்டது தெரிய வந்தது. போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரையும் கைது செய்து அழைத்து வந்து ஸ்ரீபெரும்புதூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி காஞ்சீபுரம் கிளைச்சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்து ரூ.1 கோடி மதிப்புள்ள லேப்டாப், 3 எல்.இ.டி. டி.வி. மற்றும் ஆடி கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    ×