என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உத்திரமேரூரில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு
Byமாலை மலர்3 July 2021 12:56 PM GMT (Updated: 3 July 2021 12:56 PM GMT)
உத்திரமேரூரில் வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் திருடப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உத்திரமேரூர்:
காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் முத்து கிருஷ்ணா அவென்யூவை சேர்ந்தவர் காஜா பேக் (வயது 48). இவர் உத்திரமேரூர் பஜார் வீதியில் சைக்கிள் மற்றும் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடை வைத்திருக்கிறார். நேற்று முன்தினம் இவர் குடும்பத்தினருடன் ஆரணியில் உள்ள உறவினர் வீட்டு விசேஷத்திற்கு சென்றதாக கூறப்படுகிறது.
நேற்று காலை 11 மணி அளவில் காஜா பேக் வீட்டுக்கு சென்றபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
வீட்டில் இருந்த 9 பவுன் நகை, ரூ.50 ஆயிரம் திருடப்பட்டிருப்பதாக உத்திரமேரூர் போலீஸ் நிலையத்தில் காஜா பேக் புகார் செய்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர்.
மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. மோப்பநாய் உத்திரமேரூர் பஜார் வீதி அம்பேத்கர் சிலை அருகே உள்ள டீக்கடையின் அருகே சென்று நின்றது. கொள்ளையர்கள் கொள்ளை அடித்துவிட்டு பஜார் வீதியில் வந்து சென்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும் கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X