search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    குன்றத்தூர் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலி

    குன்றத்தூர் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலியானார்.
    பூந்தமல்லி:

    காஞ்சீபுரம் குன்றத்தூரை அடுத்த நத்தம், கொல்லை தெருவை சேர்ந்தவர் கர்ணன் (வயது35), லாரியில் கிளீனராக வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிளில் வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலை, திருமுடிவாக்கம் அருகே சென்று கொண்டிருந்தார்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்தார்.

    இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மயங்கினார். இதையடுத்து அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் அவரை மீட்டு குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் கர்ணன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    தகவலறிந்து வந்த போலீசார் கர்ணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×