என் மலர்
காஞ்சிபுரம்
காஞ்சிபுரத்தில் பேராசிரியை கொலை செய்யப்பட்ட வழக்கில் உடற்கல்வி ஆசிரியரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் அடுத்த ஓரிக்கை பகுதியைச் சேர்ந்தவர் அனிதா (வயது40). திருமணம் ஆகாத இவர் தனியார் கல்லூரியில் பேராசிரியையாக வேலை பார்த்து வந்தார்.
கடந்த 10-ந்தேதி இரவு வீட்டில் உள்ள அறையில் அனிதா மர்மமாக இறந்து கிடந்தார். அவரது வீடு உள் பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. இது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.
மேலும் அனிதாவின் உடலிலும் காயங்கள் இருந்தன. இதுபற்றி காஞ்சி தாலுகா போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
அனிதாவின் செல்போனுக்கு கடைசியாக பேசியவர்கள் விவரத்தை போலீசார் சேகரித்தனர். இதில் காஞ்சிபுரம் பாண்டபெருமாள் கோவில் சன்னதி தெருவைச் சேர்ந்த சுதாகர் என்பவர் பேராசிரியை அனிதாவிடம் அடிக்கடி பேசி இருப்பது தெரிந்தது.
சுதாகர் காஞ்சிபுரத்தில் உள்ள அரசு பள்ளியில் தற்காலிக உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அவரிடம் நடத்திய விசாரணையில் பேராசிரியை அனிதாவை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார்.
சுதாகருக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவியும், குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில் அனிதாவுடன் அவர் நெருங்கி பழங்கி இருக்கிறார். இந்த நிலையில் தன்னை 2-வதாக திருமணம் செய்து கொள்ள அனிதா வற்புறுத்தியதாக தெரிகிறது.
இதில் ஏற்பட்ட தகராறில் அனிதாவை சுதாகர் கொலை செய்து இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். இந்த கொலைக்கு வேறு யாரேனும் உதவினார்களா? கொலை நடந்தது எப்படி? என்பது குறித்து கைதான சுகதாரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கல்லூரி பேராசிரியை கொலையில் உடற்கல்வி ஆசிரியர் கைதாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
பணம் மற்றும் நகை கேட்டு மாணவியின் ஆபாச படங்களை சமூக வலைதளத்தில் வெளியிடுவதாக மிரட்டல் விடுத்த பிளஸ்-2 மாணவனை போலீசார் கைது செய்தனர்.
ஸ்ரீபெரும்புதூர்:
ஸ்ரீபெரும்புதூரை சேர்ந்த 15 வயதுள்ள மாணவி ஒருவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். அவருக்கும் அதே பகுதியில் உள்ள 17 வயது பிளஸ்-2 மாணவர் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் நெருங்கி பழகி வந்தனர்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவர் திடீரென மாணவியிடம் ஆடம்பர செலவுக்காக பணம் மற்றும் நகை வேண்டும் என்று கேட்டார். ஆனால் அவர் கொடுக்க மறுத்தார்.
இதனால் ஆத்திரம் அடைந்த மாணவன், மாணவியுடன் நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும், மாணவியின் ஆபாச படத்தையும் சமூக வலைதளத்தில் வெளியிடுவதாக மிரட்டினார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி இது பற்றி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். அவர்கள் ஸ்ரீபெரும்புதூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.
விசாரணையில் பிளஸ்-2 மாணவர் நகை, பணம் கேட்டு மாணவியை மிரட்டி இருப்பது தெரிந்தது. இதையடுத்து மாணவனை போலீசார் கைது செய்தனர். அவரை செங்கல்பட்டு சீர்திருத்த பள்ளியில் சேர்த்து உள்ளனர்.
ஸ்ரீபெரும்புதூர் அருகே தனியார் நிறுவன பஸ்கள் மோதிய விபத்தில் 10 பெண்கள் காயம் அடைந்தனர்.
ஸ்ரீபெரும்புதூர்:
காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சுங்குவார்சத்திரம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு ஊழியர்களை ஏற்றி கொண்டு ஒரே நிறுவனத்தை சேர்ந்த 2 பஸ்கள் ஸ்ரீபெரும்புதூரில் இருந்து சுங்குவார்சத்திரம் நோக்கி சென்றது.
2 பஸ்களில் 40 பெண் ஊழியர்கள் பயணம் செய்தனர். சுங்குவார்சத்திரம் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும்போது டிரைவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் முந்திச்செல்வதற்காக அதிவேகமாக போட்டி போட்டுக்கொண்டு சென்றனர்.
அப்போது பஸ்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதியதில் விபத்துகுள்ளாகி சாலையோர பள்ளத்தில் இறங்கியது.
இந்த விபத்தில் 2 பஸ்களிலும் பயணம் செய்த 10 பெண்கள் காயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவர்களை மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்துள்ளனர். விபத்து நடந்த சமயத்தில் சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் எதுவும் செல்லாததால் அதிர்ஷ்டவசமாக பெரிய விபத்து மற்றும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. மேலும் இந்த விபத்தால் பெங்களூரு-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் 1 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இந்த விபத்து குறித்து சுங்குவார்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
உத்திரமேரூரில் வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் திருடப்பட்டது.
உத்திரமேரூர்:
காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் வண்டிக்காரத்தெருவை சேர்ந்தவர் தியாகராஜன் (வயது 64). ஓய்வுபெற்ற மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர். இவரது மனைவி பார்வதி (62). தியாகராஜன் கடந்த 2 நாட்களுக்கு முன்பாக தனது மனைவியுடன் சென்னையில் உள்ள மகன் வீட்டுக்கு சென்றதாக கூறப்படுகிறது.
நேற்று காலை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் தியாகராஜனது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து சென்னையில் உள்ள தியாகராஜனுக்கு தகவல் தெரிவித்தனர்.
அவர் இது குறித்து உத்திரமேரூர் போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவித்தார். இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். அவரது வீட்டில் இருந்த 5 பவுன் நகை, ரூ.30 ஆயிரம் திருடப்பட்டிருந்தது. கைரேகை நிபுணர்களும் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டனர்.
உத்திரமேரூர் பகுதியை சுற்றி அடிக்கடி வீட்டின் பூட்டை உடைத்து திருட்டில் ஈடுபடுவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
சின்ன காஞ்சீபுரத்தில் தாய், மகள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
காஞ்சீபுரம்:
சின்ன காஞ்சீபுரம் மாகாளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அன்பு. தனியார் பட்டு நிறுவன விற்பனையகத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு ரேணுகா (வயது 40) என்ற மனைவியும், சங்கீதா (21), புவனா (17) என்ற மகள்களும் உள்ளனர்.
ரேணுகா அடிக்கடி உடல்நிலை பாதிக்கப்பட்டு அவதிக்குள்ளாகி வந்தார். தாய் உடல்நிலை பாதிக்கப்பட்டு அவதியுறுவதை பார்த்த இளைய மகள் புவனா கடும் மன உளைச்சலில் இருந்து வந்ததாக தெரிகிறது.
நேற்று அன்பு வேலைக்கு சென்று விட்டார். சங்கீதா அருகாமையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டார்.
மதிய உணவுக்கு வந்த அன்பு நீண்ட நேரம் கதவை தட்டியும் திறக்காததால் தனது உறவினர் ஒருவருடன் ஜன்னல் வழியாக பார்த்தார். அப்போது மின்விசிறி கொக்கியில் சேலையின் ஒருபுறம் ரேணுகாவும், மறுபுறம் புவனாவும் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து விஷ்ணு காஞ்சி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, தாய், மகள் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தாயின் மீது அதிக பாசம் கொண்டதால் தாயுடன் இணைந்து மகளும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரமேரூர் அருகே திருட்டுத்தனமாக மது விற்ற 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உத்திரமேரூர்:
டாஸ்மாக் கடையில் மது பாட்டில்களை வாங்கி திருட்டுத்தனமாக அதிக விலைக்கு உத்திரமேரூர் சுற்றியுள்ள பகுதிகளில் விற்பதாக உத்திரமேரூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் வந்தது. போலீசார் இது சம்பந்தமாக உத்திரமேரூர் பகுதிகளில் ஆய்வில் ஈடுபட்டனர்.
அப்போது காவனூர் புதுச்சேரி கிராமத்தை சேர்ந்த சுதாகர் (வயது 37), அதே ஊரை சேர்ந்த திருமலை (45), உத்திரமேரூர் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த சுமதி (25), கம்மாளம்பூண்டி கிராமம் பழத்தோட்டத்தை சேர்ந்த பொன்னி (47), படூர் கிராமத்தை சேர்ந்த லோகநாதன் (48) ஆகியோர் திருட்டுத்தனமாக மது பாட்டில்களை அதிக விலைக்கு விற்றது தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.
ஒரகடம் அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
படப்பை:
காஞ்சீபுரம் மாவட்டம் ஒரகடம் அடுத்த எழிச்சூர் மதுரா புதுப்பேட்டை பஜனை கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 29). இவர் தன்னுடைய வீட்டில் மின்மோட்டார் மூலம் தொட்டியில் தண்ணீர் ஏற்றினார். அப்போது மின்மோட்டாரில் இருந்து மின்கசிவு ஏற்பட்டு மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்ட பாஸ்கர் காயம் அடைந்தார்.
அவரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக எழிச்சூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு முதல் உதவி சிகிச்சை பெற்ற பாஸ்கரை வாலாஜாபாத் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த பாஸ்கர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்து சென்ற ஒரகடம் போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து ஒரகடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
உத்திரமேரூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 3 பவுன் நகை, ரூ.30 ஆயிரம் திருடப்பட்டது.
உத்திரமேரூர்:
காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த மானாமதி கிராமம் மேட்டுத்தெருவை சேர்ந்தவர் அசோக்குமார் (வயது 32). இவரது மனைவி பரிமளா காந்தி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இவரது வீட்டில் காற்றோட்டமான வசதி இல்லாததால் இரவு குடும்பத்தினருடன் அருகிலுள்ள தன்னுடைய பெரியப்பா வீட்டில் சென்று தூங்கி விடுவார்.
நேற்று முன்தினம் இரவு இதேபோல் அசோக்குமார் குடும்பத்தினருடன் பெரியப்பா வீட்டில் சென்று தூங்கினார். அதிகாலை 2 மணி அளவில் பெரியப்பா மகன் மணிகண்டன் வீட்டுக்கு வெளியே வந்து பார்த்த போது எதிரே இருந்த அசோக்குமாரின் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் அசோக்குமாரிடம் தெரிவித்தார்.
உடனடியாக வீட்டுக்கு சென்று பார்த்த அசோக்குமாரின் வீட்டில் இருந்த பீரோ திறக்கப்பட்டு அதில் இருந்த 3 பவுன் தங்கநகை, ரூ.30 ஆயிரம் திருடப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து பெருநகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் உத்தரவின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகாந்த் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். பின்னர் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது.
கைரேகை நிபுணர்களும் வந்து சோதனை செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கள்ளக்காதல் விவகாரம் தொடர்பாக வாலிபரை கொன்று கிணற்றில் உடல் வீசப்பட்டது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து 8 பேரை கைது செய்தனர்.
படப்பை:
காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் தாலுகா படப்பை ஊராட்சியில் உள்ள முருகாத்தம்மன் பேட்டை அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் ராமு (வயது 34). இவர் படப்பை அருகே உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார்.
இவருக்கு ரேணுகா என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 4-ந்தேதி ராமு வேலைக்கு செல்வதாக கூறி விட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை. கணவர் வீட்டுக்கு வராததால் அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி ரேணுகா பல்வேறு இடங்களில் ராமுவை தேடி பார்த்தார். ஆனால் அவர் எங்கும் கிடைக்கவில்லை.
இதனையடுத்து ரேணுகா, தனது கணவர் மாயமானது குறித்து மணிமங்கலம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இந்த நிலையில் படப்பை அடுத்த சாலமங்கலம் சிறுமாத்தூர் அருகே காவல்கழனி என்ற இடத்தில் கருவேல மரங்கள் நிறைந்த அடர்ந்த பகுதியில் உள்ள பாழடைந்த கிணற்றில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதை தொடர்ந்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள் மணிமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாஜி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்து கிணற்றில் இருந்து ராமுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து கொலை வழக்காக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தனர். விசாரணையில் இறந்த நபர் மாயமான ராமு என்பது தெரியவந்தது.
இதுதொடர்பாக சாலமங்கலம் நரியம்பாக்கத்தை சேர்ந்த மணி (39)யை பிடித்து போலீசார் விசாரித்தனர்.
விசாரணையில் மணிக்கு மகாலட்சுமி (32) என்ற மனைவியும் 2 குழந்தைகளும் இருப்பது தெரிய வந்தது. மேலும் மணியின் மனைவி மகாலட்சுமிக்கும் ராமுவுக்கும் 5 ஆண்டுகளாக கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. இது மணிக்கு தெரியவர ராமுவையும், மனைவியையும் பலமுறை மணி கண்டித்துள்ளார். இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. மேலும் கள்ளத்தொடர்பு நீடித்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த மணி ராமுவை தீர்த்துகட்ட திட்டம் தீட்டியுள்ளார். கடந்த 4-ந்தேதி போன் மூலம் ராமுவை மது குடிக்க அழைத்தார். அங்கு வந்த ராமு, மணி மற்றும் அவருடைய நண்பர்களுடன் சேர்ந்து மது குடித்தார். மது போதையில் கள்ளக்காதல் சம்பந்தமாக அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டுள்ளது. மோதல் முற்றியதையடுத்து ராமுவின் கழுத்தை கத்தியால் வெட்டி கொன்று சேலையால் அவரது உடலில் கல்லை கட்டி காவல் கழனியிலுள்ள பாழடைந்த கிணற்றில் வீசி விட்டு அங்கிருந்து சென்றுவிட்டதும் தெரியவந்தது.
போலீசார் மணியை கைது செய்தனர். மேலும் இது தொடர்பாக வஞ்சுவாஞ்சேரியை சேர்ந்த தினேஷ் (21), வினோத் (20), பிரபாகரன் (23), சாலமங்கலம் பகுதியை சேர்ந்த பூவேந்திரன் (19), நரியம்பாக்கம் பகுதியை சேர்ந்த ஆகாஷ் (19), ஆத்தனஞ்சேரி பகுதியை சேர்ந்த பரத்குமார் (20) சாலமங்கலம் பகுதியை சேர்ந்த ஹரிஷ் (20) ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
சார்ஜாவில் இருந்து உள்ளாடையில் மறைத்து கடத்தி வந்த ரூ.24 லட்சம் தங்கம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது.
ஆலந்தூர்:
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு சார்ஜாவில் இருந்து வரும் சிறப்பு விமானத்தில் பெரும் அளவில் தங்கம் கடத்தப்பட்டு வருவதாக சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.அவரது உத்தரவின் பேரில், சுங்க இலாகா அதிகாரிகள் இறங்கி வந்த பயணிகளை கண்காணித்தனர். விமானத்தில் வந்த பயணிகளை சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக சோதனை செய்தனா். அப்போது திருவாரூரை சோ்ந்த கலையரசன் கருணாநிதி (வயது 31) என்பவரை சந்தேகத்தின் பேரில், நிறுத்தி விசாரித்தனர்.
அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால், அவரது உடமைகளை சோதனை செய்தனர். அதில் எதுவும் சிக்காததால், தனியறைக்கு அழைத்து சென்று சோதனை செய்த போது உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனா்.
இதையடுத்து ஆடையில் பதுக்கி வைத்த ரூ.24 லட்சத்து 20 ஆயிரம் மதிப்புள்ள 495 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக கலையரசன் கருணாநிதியை கைது செய்த சுங்க இலாகா அதிகாரிகள் அவரிடம் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். அப்போது அவர், சார்ஜாவில் இருந்த ஒருவர் தன்னிடம் தங்கத்தை தந்து அனுப்பி வைத்ததாக அவர் கூறியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு சார்ஜாவில் இருந்து வரும் சிறப்பு விமானத்தில் பெரும் அளவில் தங்கம் கடத்தப்பட்டு வருவதாக சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.அவரது உத்தரவின் பேரில், சுங்க இலாகா அதிகாரிகள் இறங்கி வந்த பயணிகளை கண்காணித்தனர். விமானத்தில் வந்த பயணிகளை சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக சோதனை செய்தனா். அப்போது திருவாரூரை சோ்ந்த கலையரசன் கருணாநிதி (வயது 31) என்பவரை சந்தேகத்தின் பேரில், நிறுத்தி விசாரித்தனர்.
அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால், அவரது உடமைகளை சோதனை செய்தனர். அதில் எதுவும் சிக்காததால், தனியறைக்கு அழைத்து சென்று சோதனை செய்த போது உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனா்.
இதையடுத்து ஆடையில் பதுக்கி வைத்த ரூ.24 லட்சத்து 20 ஆயிரம் மதிப்புள்ள 495 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக கலையரசன் கருணாநிதியை கைது செய்த சுங்க இலாகா அதிகாரிகள் அவரிடம் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். அப்போது அவர், சார்ஜாவில் இருந்த ஒருவர் தன்னிடம் தங்கத்தை தந்து அனுப்பி வைத்ததாக அவர் கூறியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
காஞ்சீபுரத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடமாடும் வாகனத்தை மாவட்ட கலெக்டர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
காஞ்சீபுரம்
காஞ்சீபுரம் நகர்புற பகுதிகளில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் இருக்கக்கூடிய முன்களப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் வகையில் கொரோனா தடுப்பூசி நடமாடும் வாகனத்தை காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் மா.ஆர்த்தி கொடியசைத்து துவக்கி வைத்தார்.
அதைத்தொடர்ந்து, மாவட்ட கலெக்டர் டாக்டர் மா.ஆர்த்தி கூறியதாவது:-
காஞ்சீபுரம் மாவட்டத்தில் போர்க்கால அடிப்படையில் அரசால் எடுக்கப்பட்ட நடவடிக்கையின் மூலம் கொரோனா தாக்கம் படிப்படியாக குறைக்கப்பட்டுள்ளது. காஞ்சீபுரம் மாவட்டத்தில் தடுப்புப்பணிகளில் உள்ள முன்களப்பணியாளர்களுக்கும் மற்றும் இணைநோய் உள்ளவர்களுக்கும் தடுப்பூசி அளிக்கப்பட்டு கொரோனா தாக்கம் முற்றிலுமாக தடுக்கப்பட்டு வருகிறது.
மாவட்டம் முழுவதும் தடுப்பூசி முகாம்கள் ஒவ்வொரு வட்டாரத்திலும், நகர்புற மற்றும் கிராமப்புற பகுதிகளில் அமைக்கப்பட்டு அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதுவரை காஞ்சீபுரம் மாவட்டத்தில் 2 லட்சத்து 9 ஆயிரத்து 48 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.
மேலும், கொரோனா தடுப்பூசி செலுத்துவதை அதிகப்படுத்தும் நோக்கத்தில் காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள நகர்புற பகுதிகளில் மக்கள் அதிகமாக கூடும் இடங்களான அங்காடிகள், வழிபாட்டுத்தலங்களில் பனிபுரியும் முன்களப்பணியாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் நடமாடும் தடுப்பூசி வாகனம் தற்போது தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக முதற்கட்டமாக காஞ்சீபுரம் நகராட்சிக்குட்பட்ட நகராட்சி பகுதிகளில் உள்ள மார்க்கெட்டில் இருக்கக்கூடிய காய்கறி, பழங்கள் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் இந்த நடமாடும் தடுப்பூசி வாகனத்தை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.பன்னீர்செல்வம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பி.ஜெயசுதா, இணை இயக்குனர் (மருத்துவ நலப்பணிகள்) ஜீவா, துணை இயக்குனர் பழனி மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளனர்.
காஞ்சீபுரம் நகர்புற பகுதிகளில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் இருக்கக்கூடிய முன்களப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் வகையில் கொரோனா தடுப்பூசி நடமாடும் வாகனத்தை காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் மா.ஆர்த்தி கொடியசைத்து துவக்கி வைத்தார்.
அதைத்தொடர்ந்து, மாவட்ட கலெக்டர் டாக்டர் மா.ஆர்த்தி கூறியதாவது:-
காஞ்சீபுரம் மாவட்டத்தில் போர்க்கால அடிப்படையில் அரசால் எடுக்கப்பட்ட நடவடிக்கையின் மூலம் கொரோனா தாக்கம் படிப்படியாக குறைக்கப்பட்டுள்ளது. காஞ்சீபுரம் மாவட்டத்தில் தடுப்புப்பணிகளில் உள்ள முன்களப்பணியாளர்களுக்கும் மற்றும் இணைநோய் உள்ளவர்களுக்கும் தடுப்பூசி அளிக்கப்பட்டு கொரோனா தாக்கம் முற்றிலுமாக தடுக்கப்பட்டு வருகிறது.
மாவட்டம் முழுவதும் தடுப்பூசி முகாம்கள் ஒவ்வொரு வட்டாரத்திலும், நகர்புற மற்றும் கிராமப்புற பகுதிகளில் அமைக்கப்பட்டு அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதுவரை காஞ்சீபுரம் மாவட்டத்தில் 2 லட்சத்து 9 ஆயிரத்து 48 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.
மேலும், கொரோனா தடுப்பூசி செலுத்துவதை அதிகப்படுத்தும் நோக்கத்தில் காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள நகர்புற பகுதிகளில் மக்கள் அதிகமாக கூடும் இடங்களான அங்காடிகள், வழிபாட்டுத்தலங்களில் பனிபுரியும் முன்களப்பணியாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் நடமாடும் தடுப்பூசி வாகனம் தற்போது தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக முதற்கட்டமாக காஞ்சீபுரம் நகராட்சிக்குட்பட்ட நகராட்சி பகுதிகளில் உள்ள மார்க்கெட்டில் இருக்கக்கூடிய காய்கறி, பழங்கள் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் இந்த நடமாடும் தடுப்பூசி வாகனத்தை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.பன்னீர்செல்வம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பி.ஜெயசுதா, இணை இயக்குனர் (மருத்துவ நலப்பணிகள்) ஜீவா, துணை இயக்குனர் பழனி மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளனர்.
ஊரடங்கில் மேலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளதால் இனி வரும் நாட்களில் பயணிகளுடைய வருகை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆலந்தூர்:
கொரோனா வைரஸ் 2-ம் அலை காரணமாக தமிழகத்தில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.
தற்போது படிப்படியாக கொரோனாவின் தாக்கம் குறைய தொடங்கியதையடுத்து, ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
இன்று முதல் அனைத்து மாவட்டங்களிலும் ஒரே விதமான தளர்வுகள் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
இதையடுத்து சென்னை விமான நிலையத்தில் வெளி மாநிலங்கள், வெளி மாவட்டத்துக்கு செல்லும் பயணிகளுடைய எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இன்று மட்டும் 63 வருகை மற்றும் 63 புறப்பாடு என மொத்தம் 126 விமானங்கள் இயக்கப்படுகிறது. இதில் சுமார் 12 ஆயிரத்தில் இருந்து 15 ஆயிரம் பயணிகள் பயணம் செய்கிறார்கள்.

கடந்த ஊரடங்கு காலத்தில் விமானத்தில் பயணிகள் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்தது. ஒரு சில விமானங்களில் ஒற்றை இலக்கில் பயணிகள் பயணித்தனர். தற்போது அனைத்து விமானத்திலும் பயணிகள் முழு அளவில் பயணிக்கின்றனர்.
ஊரடங்கில் மேலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளதால் இனி வரும் நாட்களில் பயணிகளுடைய வருகை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பயணிகளின் வரத்து அதிகரித்து உள்ளதால் சென்னை விமான நிலையம் பழைய நிலைக்கு திரும்பி உள்ளது.
இதையும் படியுங்கள்...புதிய தளர்வுகள் அமல்- தமிழகம் முழுவதும் பஸ்கள் இயக்கம்






