என் மலர்
காஞ்சிபுரம்
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு சார்ஜாவில் இருந்து வரும் சிறப்பு விமானத்தில் பெரும் அளவில் தங்கம் கடத்தப்பட்டு வருவதாக சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.அவரது உத்தரவின் பேரில், சுங்க இலாகா அதிகாரிகள் இறங்கி வந்த பயணிகளை கண்காணித்தனர். விமானத்தில் வந்த பயணிகளை சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக சோதனை செய்தனா். அப்போது திருவாரூரை சோ்ந்த கலையரசன் கருணாநிதி (வயது 31) என்பவரை சந்தேகத்தின் பேரில், நிறுத்தி விசாரித்தனர்.
அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால், அவரது உடமைகளை சோதனை செய்தனர். அதில் எதுவும் சிக்காததால், தனியறைக்கு அழைத்து சென்று சோதனை செய்த போது உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனா்.
இதையடுத்து ஆடையில் பதுக்கி வைத்த ரூ.24 லட்சத்து 20 ஆயிரம் மதிப்புள்ள 495 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக கலையரசன் கருணாநிதியை கைது செய்த சுங்க இலாகா அதிகாரிகள் அவரிடம் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். அப்போது அவர், சார்ஜாவில் இருந்த ஒருவர் தன்னிடம் தங்கத்தை தந்து அனுப்பி வைத்ததாக அவர் கூறியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
காஞ்சீபுரம் நகர்புற பகுதிகளில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் இருக்கக்கூடிய முன்களப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் வகையில் கொரோனா தடுப்பூசி நடமாடும் வாகனத்தை காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் மா.ஆர்த்தி கொடியசைத்து துவக்கி வைத்தார்.
அதைத்தொடர்ந்து, மாவட்ட கலெக்டர் டாக்டர் மா.ஆர்த்தி கூறியதாவது:-
காஞ்சீபுரம் மாவட்டத்தில் போர்க்கால அடிப்படையில் அரசால் எடுக்கப்பட்ட நடவடிக்கையின் மூலம் கொரோனா தாக்கம் படிப்படியாக குறைக்கப்பட்டுள்ளது. காஞ்சீபுரம் மாவட்டத்தில் தடுப்புப்பணிகளில் உள்ள முன்களப்பணியாளர்களுக்கும் மற்றும் இணைநோய் உள்ளவர்களுக்கும் தடுப்பூசி அளிக்கப்பட்டு கொரோனா தாக்கம் முற்றிலுமாக தடுக்கப்பட்டு வருகிறது.
மாவட்டம் முழுவதும் தடுப்பூசி முகாம்கள் ஒவ்வொரு வட்டாரத்திலும், நகர்புற மற்றும் கிராமப்புற பகுதிகளில் அமைக்கப்பட்டு அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதுவரை காஞ்சீபுரம் மாவட்டத்தில் 2 லட்சத்து 9 ஆயிரத்து 48 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.
மேலும், கொரோனா தடுப்பூசி செலுத்துவதை அதிகப்படுத்தும் நோக்கத்தில் காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள நகர்புற பகுதிகளில் மக்கள் அதிகமாக கூடும் இடங்களான அங்காடிகள், வழிபாட்டுத்தலங்களில் பனிபுரியும் முன்களப்பணியாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் நடமாடும் தடுப்பூசி வாகனம் தற்போது தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக முதற்கட்டமாக காஞ்சீபுரம் நகராட்சிக்குட்பட்ட நகராட்சி பகுதிகளில் உள்ள மார்க்கெட்டில் இருக்கக்கூடிய காய்கறி, பழங்கள் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் இந்த நடமாடும் தடுப்பூசி வாகனத்தை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.பன்னீர்செல்வம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பி.ஜெயசுதா, இணை இயக்குனர் (மருத்துவ நலப்பணிகள்) ஜீவா, துணை இயக்குனர் பழனி மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளனர்.
கொரோனா வைரஸ் 2-ம் அலை காரணமாக தமிழகத்தில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.
தற்போது படிப்படியாக கொரோனாவின் தாக்கம் குறைய தொடங்கியதையடுத்து, ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
இன்று முதல் அனைத்து மாவட்டங்களிலும் ஒரே விதமான தளர்வுகள் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
இதையடுத்து சென்னை விமான நிலையத்தில் வெளி மாநிலங்கள், வெளி மாவட்டத்துக்கு செல்லும் பயணிகளுடைய எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

கடந்த ஊரடங்கு காலத்தில் விமானத்தில் பயணிகள் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்தது. ஒரு சில விமானங்களில் ஒற்றை இலக்கில் பயணிகள் பயணித்தனர். தற்போது அனைத்து விமானத்திலும் பயணிகள் முழு அளவில் பயணிக்கின்றனர்.
ஊரடங்கில் மேலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளதால் இனி வரும் நாட்களில் பயணிகளுடைய வருகை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காஞ்சிபுரம்:
காஞ்சிபுரத்தில் மறைந்த பேறிஞர் அண்ணாவின் நினைவு இல்லம் உள்ளது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த சட்டமன்ற தேர்தலின்போது தனது தேர்தல் பிரசாரத்தை காஞ்சிபுரத்தில் இருந்து தொடங்கினார்.
இந்த நிலையில் முதல்-அமைச்சராக பதவி ஏற்ற பிறகு மு.க.ஸ்டாலின் இன்று முதல் முறையாக சின்ன காஞ்சிபுரத்திலுள்ள பேரறிஞர் அண்ணாவின் நினைவு இல்லத்திற்கு வந்தார்.
அண்ணாவின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அண்ணாவின் வீட்டில் உள்ள அவரது புகைப்படங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
காஞ்சிபுரத்தில் அறிஞர் அண்ணா வாழ்ந்த இல்லத்தில் வாழ்த்து பெற வேண்டும் என்று கருதிக்கொண்டு இருந்தேன். அதற்கான வாய்ப்பு எனக்கு இன்றைக்கு கிடைத்தது. எனவே அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு எங்களை ஆளாக்கிய, கழகத்தை உருவாக்கிய அறிஞர் அண்ணா வாழ்ந்த இல்லத்துக்கு வருகை தந்து அவரது திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து நான் மரியாதை செலுத்தினேன்.
அவருடைய இல்லத்திற்கு வந்திருக்கும் இந்த நேரத்தில் குறிப்பேடு புத்தகத்தில் கூட நான் எழுதி இருக்கிறேன். மக்களிடம் செல், மக்களோடு மக்களாக சேர்ந்து வாழ், மக்களுக்கு பணியாற்று என்ற அறிவுரையை அவர் தம்பிமார்களுக்கு எப்போதும் வழங்கிக் கொண்டு இருக்கக்கூடியவர். அதை நினைவுப்படுத்தி குறிப்பேடு புத்தகத்தில் அதை எழுதி வைத்து அவர் தந்த அறிவுரைப்படி இன்று இந்த ஆட்சி பீடு நடைபோடும் என்று உறுதியோடு நான் எழுதி இருக்கிறேன்.
கேள்வி:- ஏற்கனவே அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல நிறுவனங்கள் அவரது பெயரில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அண்ணா நூற்றாண்டு நூலகம் என்றும் பெயர் வைக்கப்பட்டுள்ளது. அதுபோல அரசு திட்டங்களுக்கு அண்ணா பெயர் வைக்கப்படுமா?
பதில்:- நிதி நிலை அறிக்கை வெளியிடப்படும் போது நீங்கள் எதிர்பார்ப்பதை போல அந்த செய்திகள் எல்லாம் அதிலே வரும் என்றார்.






