search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    உத்திரமேரூரில் வீட்டின் பூட்டை உடைத்து நகை பணம் திருட்டு

    உத்திரமேரூரில் வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் திருடப்பட்டது.
    உத்திரமேரூர்:

    காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் வண்டிக்காரத்தெருவை சேர்ந்தவர் தியாகராஜன் (வயது 64). ஓய்வுபெற்ற மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர். இவரது மனைவி பார்வதி (62). தியாகராஜன் கடந்த 2 நாட்களுக்கு முன்பாக தனது மனைவியுடன் சென்னையில் உள்ள மகன் வீட்டுக்கு சென்றதாக கூறப்படுகிறது.

    நேற்று காலை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் தியாகராஜனது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து சென்னையில் உள்ள தியாகராஜனுக்கு தகவல் தெரிவித்தனர்.

    அவர் இது குறித்து உத்திரமேரூர் போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவித்தார். இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். அவரது வீட்டில் இருந்த 5 பவுன் நகை, ரூ.30 ஆயிரம் திருடப்பட்டிருந்தது. கைரேகை நிபுணர்களும் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டனர்.

    உத்திரமேரூர் பகுதியை சுற்றி அடிக்கடி வீட்டின் பூட்டை உடைத்து திருட்டில் ஈடுபடுவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

    Next Story
    ×