என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    • உரச்செலவில் சிக்கனம் மட்டுமல்ல நானோ யூரியாவின் சிறப்புகளில் சுற்றுப்புறச்சூழல்கேடு நேர்வதில்லை.
    • பக்க விளைவுகளும் இல்லை, மண் நீர்ப்பகுதிகளில் நஞ்சு கலக்க வழியே இல்லை.

    காஞ்சிபுரம்:

    விவசாய உற்பத்தியில் நானோ யூரியா 500 மி.லி தெளித்தாலே 45 கிலோ யூரியா பலன் தரும் என விவசாய தொழில்நுட்ப வல்லுனர்கள் கூறியுள்ளதாக காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் மா.ஆர்த்தி தெரிவித்துள்ளார்

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:

    காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகள் பயன்பெற அரசு மூலம் ஒப்புதல் அளிக்கப்பட்ட நானோ யூரியா என்பது இலை வழியாக தெளித்திட உகந்த தழைச்சத்து உரமாகும்.

    இதில் சாதாரண யூரியா குருணையைவிட பல மடங்கு சத்து அதிகம் உள்ளது. அதை பலப்பல துகள்களாகச் சிறிது சிறிதாக நானோ துகள்களாகப் பிரிக்கும் போது அதிகச் தழைச்சத்தை அளித்திட வாய்ப்புள்ளது.

    இதனை இலை வழியே தெளிக்கும் போது உடனடியாக பயிரின் பல பாகங்களுக்கும் எடுத்து செல்லப்படுவதால் விரைவில் பச்சை கட்டும் நன்மையும் நமக்கு கிடைக்கிறது. தன் தேவையை விட கூடுதலாக தழைச்சத்து உட்கிறகிக்கப்பட்டால் அதனை செல்லின் உட்புறம் உள்ள வேக்யோல் எனும் சில பகுதியில் சேமிக்கப்பட்டு தேவைப்படும் தருணம் எடுத்து பயன்படுத்த முடிகிறது.

    இதனால் உர விரயம் என்ற பேச்சே இல்லை. முதல் மேலுரம் மற்றும் இரண்டாம் மேலுரம் யூரியாவிற்கு பதிலாக நானோ யூரியா 500 மிலி தெளித்தாலே 45 கிலோ யூரியா இட்டதன் பலனை அடையலாம்.

    உரச்செலவில் சிக்கனம் மட்டுமல்ல நானோ யூரியாவின் சிறப்புகளில் சுற்றுப்புறச்சூழல்கேடு நேர்வதில்லை.

    அதிக களைகள் வளரவும் வழியில்லை. எந்தவித பக்க விளைவுகளும் இல்லை, மண் நீர்ப்பகுதிகளில் நஞ்சு கலக்க வழியே இல்லை.

    எனவே, சுற்றுப்புறச்சூழல் காக்கப்படுவது மட்டுமல்லாமல், பிற உயிரினப் பெருக்கம் மூலமாக உணவுச்சங்கிலி உடைபடுவதில்லை. உர உபயோகத்திறன் மேம்பாடு குறையில்லா பயிர் வளரும் சூழல் நன்மை செய்யும் உயிரினத்துக்கு சேதமில்லாத சூழல் நிலவுவதால் நானோ யூரியா நன்மைகள் பல தரும் உரமாக உள்ளது.

    எனவே, அனைவரும் இதனைப்பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும், விபரம் பெற அலைபேசி எண். 98420 07125 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, கல்லூரிப் பேராசிரியர் திடீரென அருகில் இருந்த சென்னை இளம்பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது.
    • இதை அந்த பெண் கண்டித்து அவரை எச்சரித்தார். மேலும் இதுபற்றி விமான பணிப்பெண்களிடம் புகாா் செய்தாா்.

    ஆலந்தூர்:

    சவுதிஅரேபியா, ஜெட்டாவில் இருந்து சென்னைக்கு பயணிகள் விமானம் புறப்பட்டது. அந்த விமானத்தில் சென்னையைச் சேர்ந்த 35 வயது இளம்பெண் மற்றும் தஞ்சாவூரை சேர்ந்த கல்லூரிப் பேராசிரியர் உட்பட 239 பயணிகள் பயணம் செய்தனர்.

    விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, கல்லூரிப் பேராசிரியர் திடீரென அருகில் இருந்த சென்னை இளம்பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதை அந்த பெண் கண்டித்து அவரை எச்சரித்தார். மேலும் இதுபற்றி விமான பணிப்பெண்களிடம் புகாா் செய்தாா்.

    இதையடுத்து இதுகுறித்து சென்னை விமானநிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. விமானம் சென்னையில் தரையிறங்கியதும் விமான ஊழியர்கள், சில்மிஷத்தில் ஈடுபட்ட பேராசிரியரை விமான நிலைய போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்து புகார் அளித்தனர்.

    இதுகுறித்து கல்லூரி பேராசிரியர் போலீசாரிடம் கூறும்போது, தூக்கக்கலக்கத்தில் தெரியாமல் கைபட்டு விட்டது. மன்னித்து விடுங்கள் என்று கேட்டுக்கொண்டார். இதையடுத்து இளம்பெண் புகாரை திரும்பப் பெற்றுக்கொண்டாா். போலீசாா் இருவரையும், சமாதானம் செய்து அனுப்பிவைத்தனர்.

    இதற்கிடையே அந்த இளம் பெண், விமானத்தில் நடந்த சம்பவம் பற்றி, தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தாா். இதனால் பெண்கள் அமைப்புகள் உட்பட பல்வேறு அமைப்புகள் கடுமையாக இதை விமா்சனம் செய்தனர்.

    இந்த நிலையில் இளம்பெண் மீண்டும் சென்னை விமான நிலைய போலீசில் புகார் செய்தார். இதையடுத்து போலீசார் பேராசிரியர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இதுகுறித்து மேலும் விசாரணை நடந்து வருகிறது.

    சித்தர் அடிமை கோணி பாபா நேற்று (செவ்வாய்க் கிழமை) மதியம் 12 மணியளவில் முக்தி அடைந்தார்.

    காஞ்சிபுரம்:

    சித்தர் அடிமை கோணி பாபா நேற்று (செவ்வாய்க் கிழமை) மதியம் 12 மணியளவில் முக்தி அடைந்தார். அவரது உடல் இன்று காலை 9 மணியளவில் பூந்தமல்லியில் உள்ள சித்தர் அடிமை கோணி பாபாவின் உலக மகா ஜோதி தவப்பீடமான அவரது ஆன்மீக தலத்தில் இருந்து புறப்பட்டு அவரது சொந்த ஊரான சுங்குவார்சத்திரம் அடுத்த கீரநல்லூரில் சமாதி செய்யப்பட்டு யோக நிறைவு விழா நடைபெறும்.

    வாலாஜாபாத் ஒன்றியம் ஈஞ்சம்பாக்கத்தில் ரூ.1.37 கோடி செலவில் மாணவ, மாணவிகள் தங்கும் விடுதி.

    காஞ்சிபுரம்:

    வாலாஜாபாத் ஒன்றியம் ஈஞ்சம்பாக்கத்தில் ரூ.1.37 கோடி செலவில் மாணவ, மாணவிகள் தங்கும் விடுதிக்கான பணியை காஞ்சிபுரம் எம்.எல்.ஏ. சி.வி.எம்.பி. எழிலரசன் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

    இதில் வாலாஜாபாத் ஒன்றியக்குழு தலைவர் தேவேந்திரன், ஒன்றிய பொறுப்பாளர் பூபாலன், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் வேண்டாமிர்தம் வேதாசலம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • விமானம் ஓடு பாதையில் சென்று கொண்டிருந்தபோது பீகார் மாநிலத்தைச் சேர்ந்த திலீப் குமார் சிங்(47) என்ற பயணிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.
    • உடனடியாக விமானிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விமானம் ஓடுபாதையில் நிறுத்தப்பட்டது.

    ஆலந்தூர்:

    சென்னையில் இருந்து இலங்கைக்கு செல்லும் பயணிகள் விமானம் இன்று அதிகாலை புறப்படத் தயாராக இருந்தது. விமானம் ஓடு பாதையில் சென்று கொண்டிருந்தபோது பீகார் மாநிலத்தைச் சேர்ந்த திலீப் குமார் சிங்(47) என்ற பயணிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக விமானிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விமானம் ஓடுபாதையில் நிறுத்தப்பட்டது.

    விமான நிலைய மருத்துவ குழுவினர் அவருக்கு முதல் சிகிச்சை அளித்தனர். ஆனால் அவர் உடல்நிலை மிகவும் மோசமாக இருந்ததால், உடனடியாக மருத்துவமனையில் சேர்க்க அறிவுறுத்தினர். இதையடுத்து அவரை விமானத்திலிருந்து ஆம்புலன்ஸ் மூலம் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி திலீப் குமார் சிங் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதனால் விமானம் சுமார் ஒரு மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது.

    • காஞ்சிபுரம் மாநகராட்சியில் நிறுத்திவைக்கப்பட்ட 36-வது வார்டுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாநகராட்சியில் நிறுத்திவைக்கப்பட்ட 36-வது வார்டுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. நேற்று காலை 12 மணியளவில் வேட்புமனு தாக்கல் செய்ய தி.மு.க. வேட்பாளர் சுதா என்கின்ற சுப்பராயன் வந்தார். வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு நரசிங்கராயர் தெரு அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது சாலையில் 4 கிராம் தங்க மோதிரம் கேட்பாரற்று கிடந்தது. அதனை எடுத்த சுப்பராயன் இதுபற்றி மாவட்ட செயலாளர் சுந்தர் எம்.எல்.ஏ.விடம் தெரிவித்தார். பின்னர் அவர் காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகரை நேரில் சந்தித்து மோதிரத்தை வழங்கினார். அப்போது நெசவாளர் அணி அமைப்பாளர் தமிழ்ச்செல்வன், மாநகராட்சி கவுன்சிலர்கள் சங்கர், கார்த்திக் உடன் இருந்தனர்,

    • விமான நிலையத்தில் உள்ள முதல் ஓடுபாதை முக்கியமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
    • சென்னை விமானநிலையத்தில் உள்ள 2 ஓடுபாதைகளையும் ஒரே சமயத்தில் பயன்படுத்த, சென்னை விமானநிலைய நிர்வாகம் தற்போது முடிவு செய்துள்ளது.

    சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் தரையிறங்க,புறப்பட 2 ஓடுபாதைகள் உள்ளன. முதல் ஓடுபாதை 3.66 கி.மீட்டரும், 2-வது ஓடுபாதை 2.89 கி.மீட்டரும் உள்ளது.

    இதில் முதல் ஓடுபாதையில் பெரிய ரக விமானங்கள் தரை இறங்கவும், புறப்படவும் பயன்படுத்தப்படுகின்றன. 2-வது ஓடுபாதையில் 76 பயணிகள் பயணிக்கக்கூடிய சிறிய ரக விமானங்கள் இயக்கப்படுகின்றன.

    இதில் விமான நிலையத்தில் உள்ள முதல் ஓடுபாதை முக்கியமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. 2-வது ஓடுபாதை பகுதி அருகே கொளப்பாக்கம் பகுதியில், உயா்ந்த அடுக்குமாடி கட்டிடங்கள்,செல்போன் டவா்கள் போன்ற தடைகள் அதிகம் இருப்பதால், அதை முழுமையாக பயன்படுத்த முடியவில்லை.

    தற்போது அவ்வப்போது முதல் ஓடுபாதையில் ஏதாவது பிரச்சினை ஏற்படும்போதும், செவ்வாய்,சனி பிற்பகலில் வாராந்திர பராமரிப்பு நடக்கும் போது மட்டும், 2-வது ஓடுபாதை பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    ஒரே நேரத்தில் இயக்க முதல் ஓடுபாதை அளவுக்கு, 2-வது ஓடுபாதையின் நீளத்தை அதிகரிக்க இந்திய விமானநிலைய ஆணையம் ஏற்கனவே முடிவு செய்து இருந்தது.

    இதற்காக, கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு, அப்போதைய மாநில அரசிடம் தேவையான நிலத்தை கையகப்படுத்தி கொடுக்கும்படி கேட்டது. ஆனால் அப்போதைய அரசு நிலம் கையகப்படுத்தி கொடுக்கவில்லை. அதோடு சென்னை அருகே ரூ.40 ஆயிரம் கோடியில் 2-வது விமான நிலையம் கட்டப்பட இருப்பதால் 2-வது ஓடுபாதையை நீட்டிக்கும் திட்டத்தை விமானநிலைய ஆணையம் கைவிட்டு விட்டது.

    இந்தநிலையில், சென்னை விமான நிலையத்தில் உள்நாடு மற்றும் சா்வதேச விமானங்களின் எண்ணிக்கைகள் நாளுக்குநாள் அதிகரித்து வருவதை கணக்கிட்டு அதற்கு தகுந்தாற்போல் சென்னை விமான நிலையத்தில் விமான போக்குவரத்து இயக்கத்தை துரிதப்படுத்த இந்திய விமானநிலைய ஆணையம் முடிவு செய்துள்ளது.

    இதையடுத்து சென்னை விமானநிலையத்தில் உள்ள 2 ஓடுபாதைகளையும் ஒரே சமயத்தில் பயன்படுத்த, சென்னை விமானநிலைய நிர்வாகம் தற்போது முடிவு செய்துள்ளது.

    அதன்படி, முதல் பிரதான ஓடுபாதையை விமானங்கள் புறப்பாட்டிற்காகவும், 2-வது ஓடுபாதையை, விமானங்களை தரை இறக்கவும் மற்றும் சிறிய ரக விமானங்கள் புறப்பாடு ஆகிய இரண்டிற்கும் பயன்படுத்த திட்டமி டப்பட்டுள்ளது. இதுகுறித்து, சென்னை விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது:-

    சென்னை விமான நிலையத்தில் உள்ள 2 ஓடுபாதைகளையும் ஒரே நேரத்தில் இயக்க விமான நிலைய நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

    இதற்காக, சென்னை விமானநிலைய போக்கு வரத்து கட்டுப்பாட்டு அறையில் பணியாற்றும் அதிகாரிகளுக்கு சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. ஒரே நேரத்தில் இரண்டு ஓடுபாதைகளிலும், விமானங்களை இயக்குவது குறித்த பயிற்சி முடிந்ததும், அவற்றை முதலில் சோதனை அடிப்படையில் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    அதன் பின்னர் 2 ஓடுபாதை களையும் நிரந்தரமாக பயன்பாட்டுக்கு கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது.

    சென்னை விமான நிலையத்தில் தற்போது, பிரதான முதல் ஓடுபாதையில், ஒரு மணி நேரத்தில், 30-க்கும் அதிகமான விமானங்கள் இயக்கப்படுகின்றன. 2 ஓடுபாதைகளும் ஒரே நேரத்தில் பயன்படுத்தும் போது, 50-க்கும் அதிகமான விமானங்களை ஒரு மணி நேரத்தில் இயக்க முடியும். இதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன.

    சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் அதிகரித்து வரும் நிலையில் தற்போது உள்ள 2 ஓடுபாதைகளையும் ஒரே நேரத்தில் பயன்படுத்த வேண்டியது மிகவும் அவசியமாகிறது.

    இவ்வாறு அவர்கள் கூறினா்.

    விமானங்கள் விரைந்து வர இதேபோல் விமானநிலையத்தில் தரைஇறங்கும் விமானங்கள்,விரைந்து விமானங்கள் நிற்கும் நடைமேடைக்கு வருவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

    சென்னை விமான நிலையத்தில், தரையிறங்கும் விமானங்கள், ஒரு ஓடு பாதையில் இருந்து, மற்றொரு ஓடு பாதைக்கு விரைவாக செல்ல, 'டாக்சி வே' எனும் இணைப்பு பாதை பயன்படுத்தப்படுகிறது. இந்த டாக்சி வே 'பி' என்ற 'பிராவோ', முதல் ஓடுபாதைக்கு, நேராக செல்லா மல், வளைந்து செல்லும் வகையில் இருந்தது.

    இதனால் தரையிறங்கும் மற்றும் புறப்படும் விமானங்கள், டாக்சி வேயில் விரைவாக செல்ல முடியாத நிலை இருந்தது.

    இந்த டாக்சி வே 'பி'யை நேர்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இது ஜூலையில் பயன்பாட்டுக்கு வருகிறது.

    எனவே இனிமேல் விமானங்கள் தரை இறங்குவது, புறப்படுவது மேலும் வேகமாக இயக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    • மாநகராட்சி ஆணையர் நாராயணன் மற்றும் அதிகாரிகள் காமாட்சி அம்மன் கோவில் பிரம்மோற்சவ விழாவிற்காக மட்டுமல்லாமல், ஆக்கிரமிப்புகளை நிரந்தரமாக அகற்ற முடிவு செய்தனர்.
    • இதுகுறித்து ஏற்கனவே ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற அவகாசம் அளித்து இருந்தனர். எனினும் கடைகள் தொடர்ந்து செயல்பட்டு வந்தன.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில், சன்னிதி தெருவில், பொதுமக்கள் போக்குவரத்திற்கு இடையூறாக, பல கடைகள் உள்ளன. சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை, அவ்வப்போது அகற்றினாலும், மீண்டும் பழைய நிலையே காணப்படுகிறது. இந்த நிலையில், மாநகராட்சி ஆணையர் நாராயணன் மற்றும் அதிகாரிகள் காமாட்சி அம்மன் கோவில் பிரம்மோற்சவ விழாவிற்காக மட்டுமல்லாமல், ஆக்கிரமிப்புகளை நிரந்தரமாக அகற்ற முடிவு செய்தனர்.

    இதுகுறித்து ஏற்கனவே ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற அவகாசம் அளித்து இருந்தனர். எனினும் கடைகள் தொடர்ந்து செயல்பட்டு வந்தன.

    இதையடுத்து மாநகராட்சி ஆணையர் நாராயணன் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றினர்.

    இதேபோல் வடக்கு மாடவீதியில் நடைபாதையில் உள்ள கடைகளையும் அகற்ற வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • காமாட்சி அம்மனை தரிசிக்க முக்கிய பிரமுகர்கள் வருகை தரும் போது கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது.
    • கோவில் வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் ஆக்கிரமிப்பில் இருந்த கடைகளை அகற்ற முயன்ற அதிகாரிகளுடன் கடை உரிமையாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    கோவில் நகரமான காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற காமாட்சி அம்மன் கோவில் முன்புறம் பல ஆண்டுகளுக்கு மேலாக பழக்கடை, பூக்கடை, வளையல்கடை, குங்குமம், விபூதி, மஞ்சள்தூள், மாலை, தேக்காய் கடைகளை நடத்தி வருகின்றனர் .

    காமாட்சி அம்மனை தரிசிக்க முக்கிய பிரமுகர்கள் வருகை தரும் போது கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது. இந்த நெரிசலை குறைக்க மாவட்ட கலெக்டர் டாக்டர் மா. ஆர்த்தி கோவில் வளாகத்தில் உள்ள கடைகளை அகற்ற மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்திரவிட்டார்.

    இந்த நிலையில் காஞ்சிபுரம் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் 30-க்கும் மேற்பட்டோர் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பில் இருந்த கடைகளை அகற்றினர்.

    அப்போது வியாபாரிகளுக்கும், அதிகாரிகளுக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து ஓரிரு நாட்களில் கடைகளை அகற்ற வேண்டும் என அதிகாரிகள் வியாபாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர் இதனால் கோவில் வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • காஞ்சிபுரம் மாவட்டத்தில் 13602 பேர் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதினர்.
    • மாணவர்களை விட மாணவிகள் 12.24 சதவீதம் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    காஞ்சிபுரம்:

    11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. மே 2022ல் நடைபெற்ற 11ம்வகுப்பு பொதுத்தேர்வில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 6730 மாணவர்களும், 6872 மாணவிகளும் என மொத்தம் 13602 பேர் கலந்துகொண்டு தேர்வு எழுதினர்.

    பொதுப் பாடத் தேர்வில் 13070 மாணவ, மாணவிகளும், தொழில் பாடப்பிரிவில் 532 மாணவ, மாணவிகளும் தேர்வு எழுதினார்கள்.

    இதில், 12004 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். சராசரியாக 88.25 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் 82.07, மாணவிகளின் தேர்ச்சி சதவீதம் 94.31 ஆகும். மாணவர்களை விட மாணவிகள் 12.24 சதவீதம் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர். இவ்வாண்டு மாவட்டத்தின் தரம் 24வது இடத்தில் உள்ளது என அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக மக்கள் நல்லுறவு மையத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்.
    • மாவட்ட கலெக்டர் பொதுமக்களிடம் இருந்து 212 மனுக்களை பெற்று அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக மக்கள் நல்லுறவு மையத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் டாக்டர்.மா.ஆர்த்தி தலைமையில் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பொதுமக்களிடம் இருந்து 212 மனுக்களை பெற்று அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அரசு துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்கள்.

    மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில் 2019-2020 ஆம் ஆண்டிற்கான +2 பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி கொடுத்து சிறப்பாக பணிப்புரிந்த முதுநிலை ஆசிரியர்கள் ஜனகரன், தனபால், வெற்றிச்செல்வி, பிரமிளா குமாரி, குமாரி ஆகிய 5 முதுநிலை ஆசிரியர்களுக்கு மாவட்ட கலெக்டர் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கோ.சிவ ருத்ரய்யா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) இரவிச்சந்திரன், மாவட்ட வழங்கல் அலுவலர் பாபு மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • அனைத்து திட்டங்களும் சிறப்பாக செயல்படுத்தப்படுவதாக அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்தார்.
    • காஞ்சிபுரம் மாவட்டத்தில் மட்டும் 17202 விவசாயிகளுக்கு ரூ.1.22 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்துகொண்டு, பயனாளிகளுக்கு ரூ.10.02 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசியதாவது.

    அனைத்துத் துறைகளிலும் பொதுமக்கள் பயன் பெற கூடிய வகையில் அனைத்து திட்டங்களும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. வாலாஜாபாத் ஒன்றியத்தில் பட்டா இல்லா இடங்களில் வசிப்பவர்கள் புதிய மின் இணைப்புகள் வழங்க பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது மாவட்ட ஆட்சித்தலைவர் தக்க நடவடிக்கை மேற்கொண்டு விரைவில் மின் இணைப்புகள் வழங்கிட ஆவன செய்யப்படும்.

    தேர்தல் அறிக்கையில் 505 திட்டங்கள் வாக்குறுதிகளாக தரப்பட்டன அதில் 70 சதவீதத்திற்கும் மேற்பட்ட திட்டங்கள் சட்டமாக்கி நடைமுறைக்கு கொண்டு வந்து இன்று மக்கள் பயன்படுத்திக் கொண்டு வருகிறார்கள். நமது பகுதி விவசாயிகள் நிறைந்த பகுதி இந்த விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி செய்யப்படும் என முதல்வர் அறிவித்திருந்தார். இதில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மட்டும் 17202 விவசாயிகளுக்கு ரூ.1.22 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அதைப்போலவே நமது காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் ரூ.77.49 கோடி மதிப்பில் 22251 ஏழைகளுக்கு கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் பெற்றவர்களுக்கு தள்ளுபடி செய்து கொடுத்துள்ளார் நமது முதல்வர்.

    தமிழகத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் ரூ.2756 கோடி மதிப்பில் மகளிர் பெற்றுள்ள கடன் தொகையை ஒரே உத்தரவில் முதலமைச்சர் தள்ளுபடி செய்துள்ளார். தற்போது பால் விலை, பெட்ரோல் விலை ஆகியவை குறைக்கப்பட்டுள்ளது.

    அதுமட்டுமில்லாமல் பெண்களின் வாழ்வு மேம்படுத்துவதற்கு பெண்களுக்கு இட ஒதுக்கீடு செய்து அதை சட்டமாக்கி மேலும் பெண்கள் பேருந்துகளில் இலவச பயணம் மேற்கொள்ள ஆணை வழங்கிய இந்திய திருநாட்டில் ஒரே முதல்வர் நமது முதல்வர். மேலும் அனைத்து பகுதிகளிலும் மேம்பாலம் பணிகள், சாலைகள் சீரமைப்பு பணிகள், கட்டமைப்பு வசதிகள் போன்றவை விரைவாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஏழை எளிய மக்கள் வாழ்வில் வளம் பெற வேண்டும் என்பதற்காக இன்றைக்கு சிறப்பான ஆட்சி தமிழகத்தில் நடத்திக் கொண்டிருக்கிறார். இந்த அரசுக்கும் நமது முதல்வருக்கும் தொடர்ந்து உங்களுடைய ஆதரவை தர வேண்டும் என இந்த தருணத்தில் நான் உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன். மேலும் கொரோனா பரவலில் இருந்து பொதுமக்கள் தங்களை தற்காத்துக்கொள்ள தமிழக அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி ஆரோக்கியத்தை பாதுகாக்க வேண்டும். இன்றைய தினம் இந்த அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவினை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்த மாவட்ட ஆட்சித் தலைவருக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் எனது பாராட்டுக்கள்.

    இவ்வாறு அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்தார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி, காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம், சட்டமன்ற உறுப்பினர்கள் க.சுந்தர் (உத்திரமேரூர்) சி.வி.எம்.பி.எழிலரசன் (காஞ்சிபுரம்), மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் படப்பை ஆ.மனோகரன், வாலாஜாபாத் ஒன்றியக் குழுத் தலைவர் க.தேவேந்திரன், மாவட்ட வருவாய் அலுவலர் கோ.சிவ ருத்ரய்யா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பி.ஸ்ரீதேவி, ஒன்றியக் குழு துணைத் தலைவர் சேகர் மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    ×