என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    • தண்ணீரின் தரம் குறித்து சோதனையிட்டனர்.
    • ராட்சத தண்ணீர் தொட்டிகள் மற்றும் பிளாஸ்டிக் தொட்டிகளில் ஆலந்தூர் மண்டல சுகாதாரத் துறை அதிகாரிகள் ஆய்வு.

    ஆலந்தூர்:

    ஆலந்தூர், ஆதம்பாக்கம், நங்கநல்லூர் பழவந்தாங்கல் ஆகிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்க அமைக்கப்பட்டு உள்ள ராட்சத தண்ணீர் தொட்டிகள் மற்றும் பிளாஸ்டிக் தொட்டிகளில் ஆலந்தூர் மண்டல சுகாதாரத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது தண்ணீரின் தரம் குறித்து சோதனையிட்டனர். மேலும் அதில் சரியான அளவு குளோரின் கலந்து உள்ளதா என்பதையும் அதிகாரிகள் சோதனை செய்து உறுதி படுத்தினர்.

    • காஞ்சிபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
    • காஞ்சிபுரம் மாவட்டத்தில் மட்டும் 17202 விவசாயிகளுக்கு ரூ.1.22 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டு 872 பயனாளிகளுக்கு ரூ. 16.12 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    அப்போது அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசியதாவது:-

    நமது முதல்வர், நாளொன்றுக்கு 24 மணி நேரத்தில் 20 மணி நேரம் நாட்டு மக்களின் நல்வாழ்வு எனது லட்சியம் என்று உழைத்துக் கொண்டிருக்கும் ஒரே முதல்வர்.

    இன்றைக்கு அனைத்துத் துறைகளிலும் பொதுமக்கள் பயன் பெற கூடிய வகையில் அனைத்து திட்டங்களும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. காஞ்சிபுரம் ஒன்றியத்தில் பட்டா இல்லா இடங்களில் வசிப்பவர்கள் புதிய மின் இணைப்புகள் வழங்க கோரி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் தந்துள்ளனர். அந்த மனுக்கள் மீது மாவட்ட கலெக்டர் தக்க நடவடிக்கை மேற்கொண்டு விரைவில் மின் இணைப்புகள் வழங்கிட ஆவன செய்யப்படும்.

    தேர்தல் அறிக்கையில் 505 திட்டங்கள் வாக்குறுதிகளாக தரப்பட்டன அதில் 70 சதவீதத்திற்கும் மேற்பட்ட திட்டங்கள் சட்டமாக்கி நடைமுறைக்கு கொண்டு வந்து இன்று மக்கள் பயன்படுத்திக் கொண்டு வருகிறார்கள்.

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் மட்டும் 17202 விவசாயிகளுக்கு ரூ.1.22 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

    அதைப்போலவே காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் ரூ.77.49 கோடி மதிப்பில் 22,251 ஏழைகளுக்கு கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் பெற்றவர்களுக்கு தள்ளுபடி செய்யப்பட்டு இருக்கிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி, காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம், எம்.எல்.ஏ. எழிலரசன், மாவட்ட ஊராட்ச குழு தலைவர் படப்மபை னோகரன், மாவட்ட வருவாய் அலுவலர் கோ.சிவ ருத்ரய்யா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பி.ஸ்ரீதேவி, காஞ்சிபுரம் ஒன்றிய குழு தலைவர் மலர்கொடி குமார், மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் நித்யா சுகுமார், ஒன்றியக் குழு துணைத் தலைவர் திவ்யபிரியா இளமது கலந்து கொண்டனர்.

    • நல வாரிய பதிவு அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • முறைசாரா தொழிலாளர்கள் நல வாரிய பதிவை நேரடியாக பதிவு செய்ய அனுமதி வழங்க வேண்டும்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரத்தில் முறைசாரா தொழிலாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு ஊர்வலம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    முறைசாரா தொழிலாளர்கள் நல வாரிய பதிவை நேரடியாக பதிவு செய்ய அனுமதி வழங்க வேண்டும், பணப்பயன் கேட்டு முறையிட்ட மனுக்களை காலத்துடன் பணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பென்ஷன் தொகை ரூ.3000 மாக உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சிஐடியு கட்சியினர் காஞ்சிபுரம் ஓரிக்கை மிலிட்டரி ரோட்டில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு, நல வாரிய பதிவு அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்டுமான சங்கம் மாவட்ட தலைவர் திருஞானம், சிஐடியு மாநிலச் செயலாளர் முத்துக்குமார், சிவப்பிரகாசம், வெங்கடேசன் உள்பட பலர் கலந்து கொண்டு கோஷங்களைஎழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    • 23 மூட்டைகளில் மொத்தம் 1150 கிலோ ரேசன் அரிசி பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
    • ரேசன் அரிசியை பதுக்கி வைத்திருந்த பெரிய காஞ்சிபுரம் புத்தேரியை சேர்ந்த பாண்டியன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    காஞ்சிபுரம் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு துறை போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி காவல்துறை இயக்குனர் ஆபாஷ்குமார் கண்காணிப்பாளர் கீதா, காவல் துணை கண்காணிப்பாளர் நாகராஜ் ஆகியோர் உத்தரவின் பேரில் ரேசன் அரிசி கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்ஸ்பெக்டர் முகேஷ்ராவ் தலைமையில் காஞ்சிபுரம்-அரக்கோணம் ரோட்டில் பாரதி ரோட்வேஸ் அருகில் இருந்த முட்புதரில் கேட்பாரற்று கிடந்த மூட்டைகளை சோதனை செய்தனர். அதில் 50 கிலோ எடை கொண்ட 23 மூட்டைகளில் மொத்தம் 1150 கிலோ ரேசன் அரிசி பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து ரேசன் அரிசியை பதுக்கி வைத்திருந்த பெரிய காஞ்சிபுரம் புத்தேரியை சேர்ந்த பாண்டியன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    • தமிழகத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகின்றது.
    • காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் அனைவரும் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும்.

    காஞ்சிபுரம்:

    தமிழகத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகின்றது இதன் எதிரொலியாக தமிழக சுகாதாரதுறை அனைவரும் கட்டாய முககவசம் அணிய உத்திரவிட்டுள்ளது

    கடந்த சில நாட்களுக்கு முன்பு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆரத்தி ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தார்

    காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் அனைவரும் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும், இல்லை என்றால் அபராதம் விதிக்கப்படும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், கிருமிநாசினி பயன்டுத்த வேண்டும் திருமண மண்டபங்களில் 100-பேர்க்கு அதிகமாக பங்கேற்க்க கூடாது குளிர்சாதனம் பயன்படுத்த கூடாது என பல்வேறு கட்டுபாடுகளை விதித்துள்ளார்

    இதன் தொடர்ச்சியாக இன்று காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முககவசம் அணிய விழிப்புணர்வை ஏற்படுத்தினார் அதிகம் மக்கள் கூடும் பகுதியான காஞ்சிபுரம் நகரில் மூங்கில் மண்டபம், இரட்டை மண்டபம், பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் முககவசம் அணியாமல் வந்த வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு முககவசத்தை வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினார் முதல்கட்டமாக எச்சரிக்கை விடுத்து முககவசம் வழக்கி வருகின்றனர் அடுத்த கட்டமாக அபராதம் வசூலிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர்

    அரசு பேருந்துகளில் பயணம் செய்த பொதுமக்கள் முககவசம் அணியாமல் இருந்த பொதுமக்களுக்கு மாவட்ட எஸ்.பி சுதாகர் முககவசம் வழங்கினார்.

    இந்த விழிப்புணர்வின் போது துணை கண்காணிப்பாளர், காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் பங்கேற்றனர்.

    • சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சார்ஜா செல்லும் கல்ப் ஏா்வேஸ் விமானம் புறப்பட தயாராக இருந்தது.
    • சென்னையைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் மீது சந்தேகமடைந்த அதிகாரிகள் அவரை தடுத்து நிறுத்தி விசாரித்தனர்.

    ஆலந்தூர்:

    சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சார்ஜா செல்லும் கல்ப் ஏா்வேஸ் விமானம் புறப்பட தயாராக இருந்தது. அதில் பயணம் செய்ய வந்த பயணிகளையும் அவர்கள் உடமைகளையும் சுங்க அதிகாரிகள் சோதனை செய்தனர்.

    அப்போது சென்னையைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் மீது சந்தேகமடைந்த அதிகாரிகள் அவரை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அவர் முன்னுக்குப் பின் முரணாக பேசியதால் தனி அறையில் வைத்து விசாரணை நடத்தினர். அவருடைய சூட்கேசை சோதனை செய்த போது அதில் ஏராளமான காகித கவர்கள் இருந்தன.

    அந்த கவா்களை பிரித்து பார்த்த போது. ஒவ்வொரு கவர்களுக்குள்ளும் ஒரு 500 சவுதி ரியால் கரண்சி மறைத்து வைக்கப்பட்டிருந்தது.மொத்தம் 339 கவா்களில் 339 சவுதி ரியால் கரண்சிகள் இருந்தன.

    அந்த சவுதி ரியால் கரண்சிகளின் மொத்த மதிப்பு ரூ.34.23 லட்சம் ஆகும். இதையடுத்து சுங்க அதிகாரிகள், சவுதி ரியால் கரண்சிகளை பறிமுதல் செய்தனா். மேலும் பயணியின், சாா்ஜா விமான பயணத்தையும் ரத்து செய்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சுங்கத்துறை முதன்மை ஆணையா் 8 சுங்கத்துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளாா்.
    • 43 சுங்கத்துறை அதிகாரிகள் கூண்டோடு இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

    ஆலந்தூர்:

    சென்னை விமான நிலையம், துறைமுகம், சரக்குப்பிரிவான காா்கோ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில், சுங்கத்துறை துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள் என்று பலர் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் பலர் தொடர்ந்து ஒரே இடத்தில் பணியாற்றி வந்ததால், இடம் மாற்றம் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டது.

    இதையடுத்து சென்னை சுங்கத்துறை தலைமை அலுவலக கூடுதல் ஆணையர் பிறப்பித்த உத்தரவில், துணை ஆணையர்கள் மற்றும் உதவி ஆணையர்கள் 35 பேரை இடமாற்றம் செய்து உத்தரவிட்டார். இதைப்போல் சுங்கத்துறை முதன்மை ஆணையா் 8 சுங்கத்துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளாா். மொத்தம் 43 சுங்கத்துறை அதிகாரிகள் கூண்டோடு இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இதில் 30 பேர் உதவி ஆணையர்கள், 13 பேர் துணை ஆணையர்கள் ஆவர்.

    இவர்கள் துறைமுகத்தில் இருந்து, சென்னை விமான நிலையத்திற்கும், சென்னை விமான நிலையத்தில் இருந்து துறைமுகம் மற்றும் கார்கோ பகுதிகளுக்கும், அதைப்போல் கார்கோவில் ஏற்றுமதி பிரிவில் பணியில் இப்பவா்கள், இறக்குமதி பகுதிக்கும், இறக்குமதி பகுதியில் இருப்பவர்கள் ஏற்றுமதி பகுதிக்கும், சிலர் விமான நிலைய கொரியர் அலுவலகம், போதை கடத்தல் தடுப்பு பிரிவு உள்ளிட்ட பகுதிகளுக்குப் மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இது பற்றி சுங்க அதிகாரிகள் கூறும்போது, இது வழக்கமாக நடக்கும் பொது இடமாற்றம் தான். ஒரே இடத்தில் அதிக நாட்கள் பணியாற்றுவதை தவிா்ப்பதற்காக, நிர்வாக காரணங்களுக்காக இந்த இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்றனர்.

    • ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் நதான்.
    • நதான் விருகம்பாக்கம் போலீசில் புகார் அளித்தார்.

    போரூர்:

    ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் நதான். விருகம்பாக்கம் இளங்கோ நகரில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணியில் வேலை பார்த்து வருகிறார்.

    இவர் நேற்று இரவு பணி முடிந்து "ஷெட்டில்" தூங்கி கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு வந்த மர்ம நபர் நதானை கத்தியால் தாக்கி அவரிடம் இருந்து ரூ20ஆயிரம் ரொக்கம், செல்போன் ஆகியவற்றை பறித்து தப்பி சென்றுவிட்டான்.

    இதுகுறித்து நதான் விருகம்பாக்கம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு வழிப்பறியில் ஈடுபட்டு தப்பிய குன்றத்தூர் பகுதியை சேர்ந்த 18வயதுக்கு உட்பட்ட சிறுவனை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சிறுவன் மீது ஏற்கனவே 5க்கும் மேற்பட்ட வழிப்பறி வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

    • வடக்குப்பட்டில் அகழாய்வு பணிகள் இன்று தொடங்கியது.
    • அகழாய்வு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என தொல்லியல் துறையினர் தெரிவித்து உள்ளனர்.

    ஸ்ரீபரும்புதூர்:

    ஒரகடம் அருகே வடக்குப்பட்டு ஊராட்சி பகுதியில் பழங்காலத்தில் பயன்படுத்தப்பட்ட தொல்பொருட்கள் கிடைத்து இருந்தது.

    மேலும், வடக்குப்பட்டில் பாதுகாக்கப்பட்ட மூன்று தொல்லியல் மேடுகள் உள்ளன. அந்த மேடுகளில், அகழாய்வு செய்ய, மத்திய தொல்லியல் துறையினர் திட்டமிட்டனர்.

    இந்த நிலையில் முதல் கட்டமாக வடக்குப்பட்டில் உள்ள ஒரு தொல்லியல் மேட்டில் 30 மீட்டர் நீளம், 30 மீட்டர் அகலத்தில் அகழாய்வு செய்ய காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி கிடைத்தது.

    இதையடுத்து வடக்குப்பட்டில் அகழாய்வு பணிகள் இன்று தொடங்கியது. இதில், சிறப்பு அழைப்பாளராக கீழடி அகழாய்வு பணிகளை மேற்கொண்ட பிரபல தொல்லியல் துறை கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் கலந்து கொண்டு அகழாய்வு பணிகளை தொடங்கி வைத்தார்.

    சென்னை வட்டார தொல்லியல் கண்காணிப்பாளர் காளிமுத்து தலைமையில் 15 பேர் கொண்ட குழுவினர் 3 மாதம் அகழாய்வு பணியில் ஈடுப்பட உள்ளனர். இந்த அகழாய்வின் மூலம் வடக்குப்பட்டில் வரலாற்றுக்கு முற்பட்ட காலம், வரலாற்று தொடக்க காலம் முதல் உள்ள வாழ்விடச் சான்றுகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதனால் இந்த அகழாய்வு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என தொல்லியல் துறையினர் தெரிவித்து உள்ளனர்.

    • விண்ணப்பங்களை நேரடியாகவோ, மின்னஞ்சல் வாயிலாகவோ உரிய கல்வித் தகுதிச் சான்றுகளுடன் சமர்ப்பிக்கவேண்டும்
    • குறித்த நேரத்திற்குப் பிறகு அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

    காஞ்சிபுரம்:

    பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும், ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / அரசு தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் 2022-23ஆம் கல்வியாண்டில் 01.06.2022 நிலவரப்படி காலியாகவுள்ள இடைநிலை / பட்டதாரி / முதுகலை ஆசிரியர் பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர் நியமனம் மேற்கொள்ளப்படவுள்ளது.

    தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து மூலமான விண்ணப்பங்களை நேரடியாகவோ அல்லது மின்னஞ்சல் வாயிலாகவோ உரிய கல்வித் தகுதிச் சான்றுகளுடன் தொடர்புடைய மாவட்டக் கல்வி அலுவலரிடம் (District Educational officer) சமர்ப்பிக்க வேண்டும்.

    இது சார்பான காலிப்பணியிட விவரங்கள் முதன்மைக் கல்வி / மாவட்டக் கல்வி / வட்டாரக் கல்வி அலுவலகங்ககளின் அறிவிப்புப் பலகையில் வெளியிடப்படுகிறது.

    விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் மற்றும் நேரம் 06.07.2022 மாலை 5 மணி ஆகும். குறித்த நேரத்திற்குப் பிறகு அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. தகவல் பலகையில் வெளியிடப்படும் காலிப் பணியிட விவரங்கள் மாறுதலுக்குட்பட்டது.

    விண்ணப்பங்கள் அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி:

    காஞ்சிபுரம் கல்வி மாவட்டம்_ deokpm@gmail.com

    திருபெரும்புதூர் கல்வி மாவட்டம் - deosripdr@gmail.com

    • பா.ஜ.க. பிரமுகர் ஒருவரை தீர்த்து கட்ட திட்டம் தீட்டியது விசாரணையில் தெரிய வந்தது.
    • அவர்கள் வெடிகுண்டு வீசியும் பயிற்சி எடுத்து உள்ளனர்.

    ஸ்ரீபெரும்புதூர்:

    ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வளர்புரம் பகுதியில் உள்ள தோட்டத்தில் பதுங்கி இருந்த அதே பகுதியை சேர்ந்த விஜய், டேவிட் உள்பட 6 பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மான் கொம்பு, கத்தி, நாட்டு வெடிகுண்டுகள், அரிவாள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    அவர்கள் பா.ஜ.க. பிரமுகர் ஒருவரை தீர்த்து கட்ட திட்டம் தீட்டியது விசாரணையில் தெரிய வந்தது. இதற்காக அவர்கள் வெடிகுண்டு வீசியும் பயிற்சி எடுத்து உள்ளனர். இது போலீசாரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. அவர்களுடன் தொடர்புடையவர்கள் குறித்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    காஞ்சிபுரம் மாநகராட்சி பொறியாளர் கணேசன் மற்றும் உள்ளாட்சி தேர்தல் பிரிவு அலுவலர்கள் உடனிருந்தனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டத்தில், 2022 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தற்செயல் தேர்தலை முன்னிட்டு, காஞ்சிபுரம் மாநகராட்சியில் 36-வது வார்டில் அமைக்கப்பட்டுள்ள 4 வாக்குச்சாவடிகளுக்கு தேவையான மின்னணு கட்டுப்பாட்டு கருவிகள் மற்றும் மின்னணு வாக்குப்பதிவு கருவிகளுக்கு முதல் மற்றும் இரண்டாவது சீரற்றமயமாக்கல் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான டாக்டர். மா. ஆர்த்தி, அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரதிநிதிகளின் முன்னிலையில் நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) டி.ஆர்.ஸ்ரீதர், காஞ்சிபுரம் மாநகராட்சி பொறியாளர் கணேசன் மற்றும் உள்ளாட்சி தேர்தல் பிரிவு அலுவலர்கள் உடனிருந்தனர்.

    ×