search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முறைசாரா தொழிலாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு ஊர்வலம் ஆர்ப்பாட்டம்
    X

    முறைசாரா தொழிலாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு ஊர்வலம் ஆர்ப்பாட்டம்

    • நல வாரிய பதிவு அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • முறைசாரா தொழிலாளர்கள் நல வாரிய பதிவை நேரடியாக பதிவு செய்ய அனுமதி வழங்க வேண்டும்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரத்தில் முறைசாரா தொழிலாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு ஊர்வலம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    முறைசாரா தொழிலாளர்கள் நல வாரிய பதிவை நேரடியாக பதிவு செய்ய அனுமதி வழங்க வேண்டும், பணப்பயன் கேட்டு முறையிட்ட மனுக்களை காலத்துடன் பணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பென்ஷன் தொகை ரூ.3000 மாக உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சிஐடியு கட்சியினர் காஞ்சிபுரம் ஓரிக்கை மிலிட்டரி ரோட்டில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு, நல வாரிய பதிவு அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்டுமான சங்கம் மாவட்ட தலைவர் திருஞானம், சிஐடியு மாநிலச் செயலாளர் முத்துக்குமார், சிவப்பிரகாசம், வெங்கடேசன் உள்பட பலர் கலந்து கொண்டு கோஷங்களைஎழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    Next Story
    ×