search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பழங்கால பொருட்கள் கண்டெடுப்பு- ஒரகடம் அருகே தொல்லியல் துறையின் அகழாய்வு பணி இன்று தொடக்கம்
    X

    கோப்பு படம்

    பழங்கால பொருட்கள் கண்டெடுப்பு- ஒரகடம் அருகே தொல்லியல் துறையின் அகழாய்வு பணி இன்று தொடக்கம்

    • வடக்குப்பட்டில் அகழாய்வு பணிகள் இன்று தொடங்கியது.
    • அகழாய்வு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என தொல்லியல் துறையினர் தெரிவித்து உள்ளனர்.

    ஸ்ரீபரும்புதூர்:

    ஒரகடம் அருகே வடக்குப்பட்டு ஊராட்சி பகுதியில் பழங்காலத்தில் பயன்படுத்தப்பட்ட தொல்பொருட்கள் கிடைத்து இருந்தது.

    மேலும், வடக்குப்பட்டில் பாதுகாக்கப்பட்ட மூன்று தொல்லியல் மேடுகள் உள்ளன. அந்த மேடுகளில், அகழாய்வு செய்ய, மத்திய தொல்லியல் துறையினர் திட்டமிட்டனர்.

    இந்த நிலையில் முதல் கட்டமாக வடக்குப்பட்டில் உள்ள ஒரு தொல்லியல் மேட்டில் 30 மீட்டர் நீளம், 30 மீட்டர் அகலத்தில் அகழாய்வு செய்ய காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி கிடைத்தது.

    இதையடுத்து வடக்குப்பட்டில் அகழாய்வு பணிகள் இன்று தொடங்கியது. இதில், சிறப்பு அழைப்பாளராக கீழடி அகழாய்வு பணிகளை மேற்கொண்ட பிரபல தொல்லியல் துறை கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் கலந்து கொண்டு அகழாய்வு பணிகளை தொடங்கி வைத்தார்.

    சென்னை வட்டார தொல்லியல் கண்காணிப்பாளர் காளிமுத்து தலைமையில் 15 பேர் கொண்ட குழுவினர் 3 மாதம் அகழாய்வு பணியில் ஈடுப்பட உள்ளனர். இந்த அகழாய்வின் மூலம் வடக்குப்பட்டில் வரலாற்றுக்கு முற்பட்ட காலம், வரலாற்று தொடக்க காலம் முதல் உள்ள வாழ்விடச் சான்றுகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதனால் இந்த அகழாய்வு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என தொல்லியல் துறையினர் தெரிவித்து உள்ளனர்.

    Next Story
    ×