என் மலர்
உள்ளூர் செய்திகள்

விருகம்பாக்கத்தில் வழிப்பறியில் ஈடுபட்ட சிறுவன் கைது
- ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் நதான்.
- நதான் விருகம்பாக்கம் போலீசில் புகார் அளித்தார்.
போரூர்:
ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் நதான். விருகம்பாக்கம் இளங்கோ நகரில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணியில் வேலை பார்த்து வருகிறார்.
இவர் நேற்று இரவு பணி முடிந்து "ஷெட்டில்" தூங்கி கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த மர்ம நபர் நதானை கத்தியால் தாக்கி அவரிடம் இருந்து ரூ20ஆயிரம் ரொக்கம், செல்போன் ஆகியவற்றை பறித்து தப்பி சென்றுவிட்டான்.
இதுகுறித்து நதான் விருகம்பாக்கம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு வழிப்பறியில் ஈடுபட்டு தப்பிய குன்றத்தூர் பகுதியை சேர்ந்த 18வயதுக்கு உட்பட்ட சிறுவனை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சிறுவன் மீது ஏற்கனவே 5க்கும் மேற்பட்ட வழிப்பறி வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
Next Story






