என் மலர்tooltip icon

    ஈரோடு

    • ராமச்சந்திரனுக்கும், ஜெயப்பிரியாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
    • ஆத்திரம் அடைந்த ராமச்சந்திரன் கத்தியால் ஜெயப்பிரியாவை குத்தினார்.

    பெருந்துறை:

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 38). இவருடைய மனைவி ஜெயப்பிரியா (32). இவர்களுக்கு, விஷ்ணு (12), சித்தார்த் (7) ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.

    ராமச்சந்திரன் தனது குடும்பத்துடன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உசிலம்பட்டியில் இருந்து வந்து ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே சென்னியவலசு என்ற ஊரில் குடும்பத்துடன் தங்கி வசித்து வருகிறார்.

    அவர் வீட்டில் முறுக்கு தயாரித்து ஊர், ஊராக சென்று வியாபாரம் செய்து வந்தார்.

    இந்த நிலையில் ஜெயப்பிரியாவுக்கும், ராமச்சந்திரனுக்கும் இடையே கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    இதனால் ஜெயப்பிரியா தனது 2 மகன்களுடன் தாய் வீடான உசிலம்பட்டிக்கு சென்று அங்கு தங்கியிருந்தார்.

    இதைத்தொடர்ந்து கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கணவனையும், மனைவியையும் உறவினர்கள் சமரசம் செய்து அனுப்பி வைத்தனர். இதையடுத்து ஜெயப்பிரியா மீண்டும் சென்னியவலசு வந்து கணவருடன் குடும்பம் நடத்தி வந்தார்.

    அப்போது ஜெயப்பிரியா தனது தாயின் நகையில் தனது பங்கை அவரது தங்கைக்கு கிடைக்க உதவி செய்ததாக கூறப்படுகிறது. இதனை ஏற்றுக்கொள்ள ராமச்சந்திரன் மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    இது சம்பந்தமாக கணவனுக்கும், மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

    அதேபோல் நேற்று முன்தினம் இரவு மீண்டும் ராமச்சந்திரனுக்கும், ஜெயப்பிரியாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த ராமச்சந்திரன் கத்தியால் ஜெயப்பிரியாவை குத்தினார்.

    இதில் ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்த அவர் துடி துடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து ராமச்சந்திரன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

    இது குறித்து தகவல் அறிந்த பெருந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் மசூதா பேகம், சப்-இன்ஸ்பெக்டர்கள் செந்தில்குமார், தங்கதுரை மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

    பின்னர் ஜெயப்பிரியாவின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதை தொடர்ந்து போலீசார் பெருந்துறை புது பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், சென்னிமலை ரோடு, வெள்ளோடு ரோடு காஞ்சிகோவில் ரோடு மற்றும் பல்வேறு பகுதிகளில் ராமசந்திரனை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் ராமச்சந்திரன் பெருந்துறை ரெயில் நிலைய ரோடு பூனம்பட்டி பிரிவு அருகே நிற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதைத்தொட ர்ந்து போலீசார் அங்கு சென்று அவரை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    இதை தொடர்ந்து கைது செய்யப்பட்ட ராமச்சந்தி ரனை போலீசார் பெரு ந்துறை கோர்ட்டில் ஆஜர் படுத்தினர். விசாரணை நடத்திய நீதிபதி அவரை 15 நாள் காவலில் வைக்க உத்தர விட்டார்.

    இதையடுத்து ராமச்சந்திரனை போலீசார் கோபிசெட்டி பாளையம் மாவட்ட கிளை சிறையில் அடைத்தனர்.

    • தனிப்படை போலீசார் டி.ஜி.புதூரில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர்.
    • தலைமறைவான பவானியை சேர்ந்த கஞ்சா வியாபாரி செந்திலை போலீசார் வலை வீசி தேடி வருகிறார்கள்.

    டி.என்.பாளையம்:

    ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் அடுத்த டி.ஜி.புதூர் காளியூர் பஸ் நிறுத்தம் அருகே கஞ்சா கடத்தப்படுவதாக பங்களாப்புதூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அந்த தகவலின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் மற்றும் தனிப்படை போலீசார் டி.ஜி.புதூரில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர்.

    அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்றை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது காரில் ஒரு பாலிதீன் கவரில் 2 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. மேலும் காரில் 3 பேர் இருந்தனர்.

    அதைத்தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    இதில் அவர்கள் டி.ஜி.புதூர், கே.என்.பாளையம் ரோடு பகுதியை சேர்ந்த முத்து என்பவர் மகன் சதீஸ் (19), சத்தியமங்கலம் ரங்க சமூத்திரம் ஆர்.எம்.பி நகரை சேர்ந்த மோகன் என்பவர் மகன் பிரபு (26), சிக்க ரசம்பாளையம் மாரியம்மன் கோயில் வீதியை சேர்ந்த சண்முகசுந்தரம் என்பவர் மகன் ரஞ்சித் (26) எனவும், விற்பனை செய்ய காரில் கஞ்சா கடத்தி சென்றதும் தெரிய வந்தது.

    இதையடுத்து ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தினர்.

    போலீசார் நடத்திய விசாரணையில், கைதான 3 பேரும் பெருமுகை கிராம த்திற்குட்பட்ட வரப்பள்ளம் என்ற இடத்திற்கு சென்று,பவானி அருகே உள்ள எலவமலை அண்ணாநகரை சேர்ந்த ராஜசேகரன் (47), நாமக்கல் மாவட்டம் குமார பாளையம் அருகே உள்ள புதுபள்ளிபாளையம் தியேட்டர் வீதி, மரக்கல்காடு பகுதியை சேர்ந்த சண்முக சுந்தரம் என்பவரது மகன் கிருபாகரன் (28),

    பெருந்துறை அருகே உள்ள சென்னிவலசு புளிக்கார தோட்டத்தை சேர்ந்த ஜெயராஜ் மகன் பிரகாஷ் என்கிற ஜெயபிரகாஷ் (34) ஆகியோரிடம் இருந்து விற்பனைக்காக கஞ்சா வாங்கி வந்ததாக கைதான 3 பேரும் தெரிவித்தனர்.

    இதில் பெரிய கஞ்சா கும்பல் ஈடுபட்டு இருப்பது தெரிய வந்தது.

    அதைத்தொடர்ந்து பங்களாப்புதூர் போலீசார், கஞ்சா விற்பனை கும்பலை பிடிக்க, பிடிபட்ட சதீஸ் மூலமாக ராஜசேகர், கிருபாகரன், பிரகாஷ் என்ற ஜெயபிரகாஷ் ஆகியோரை தொடர்பு கொண்டு மீண்டும் விற்பனைக்கு கஞ்சா தேவை என கூறி போலீசார் கஞ்சா கும்ப லுக்கு வலை விரித்தனர்.

    அதை நம்பிய ராஜசேகரன், கிருபாகரன் மற்றும் பிரகாஷ் என்ற ஜெயபிரகாஷ் ஆகிய 3 பேரும் 3 மோட்டார் சைக்கிள்களில் வரப்பள்ளம் அருகேயுள்ள இரட்டை பாலம் அருகே 5 கிலோ கஞ்சாவுடன் காத்திருந்தனர்.

    அவர்கள் கஞ்சாவுடன் வந்திருப்பதை உறுதி செய்த பங்களாப்புதூர் சப்- இன்ஸ்பெக்டர் சுரேஷ் மற்றும் தனிப்படை போலீ சார் உடனடியாக அங்கு சென்று கஞ்சாவுடன் காத்திருந்தவர்களை பிடிக்க முயன்றனர்.

    இதனால் அதிர்ச்சி யடைந்த 3 பேரும் போலீ சாரை கண்டதும் தப்பியோட முயன்றனர். அதைத்தொடர்ந்து போலீசார் 3 பேரையும் சுற்றி வளைத்து பிடித்து கைது செய்து அவர்களது இருசக்கர வாகனங்களை சோதனை செய்த போது 3 பேரிடமும் மொத்தம் 5 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது.

    அதைத்தொடர்ந்து ராஜசேகரன், கிருபாகரன் மற்றும் பிராகாஷ் என்ற ஜெயபிரகாஷ் ஆகிய 3 பேரையும் போலீசார் அதிர டியாக கைது செய்தனர்.

    மேலும் போலீசார் விசாரணையில் பவானி ராஜீவ்காந்தி நகரை சேர்ந்த மாரசாமி மகன் செந்தில் என்ற அரைப்பல் செந்தில் (47) என்ற பிரபல கஞ்சா வியாபாரியிடம் இருந்து கஞ்சாவை விற்பனைக்காக வாங்கி வந்தது தெரி யவந்தது.

    அதைத்தொடர்ந்து செந்தில் என்ற அரைப்பல் செந்திலை பிடிக்க போலீ சார் பவானி சென்ற போது செந்தில் தலைமறைவாகி விட்டார்.

    ஏற்கெனவே கைது செய்யப்பட்ட சதீஸ், பிரபு, ரஞ்சித், உட்பட ராஜசேகரன், கிருபாகரன் மற்றும் பிரகாஷ் என்ற ஜெய பிரகாஷ் ஆகிய 6 பேரையும் சட்ட விரோதமாக கஞ்சா வாங்கி விற்பனை செய்த குற்ற த்திற்காக கைது செய்ய ப்பட்டனர்.

    இந்த கஞ்சா கும்பலிடம் இருந்து போலீசார், சுமார் ரூ.14 லட்சம் மதிப்புள்ள 7 கிலோ கஞ்சா, 6 செல்போன், 3 இரு சக்கர வாகனங்கள், ஒரு கார் மற்றும் ரூ.17 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    ஏற்கனவே கைதான 3 பேர் உட்பட 6 பேரும் கோபி செட்டிபாளையம் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்த ப்பட்டு சிறையில் அடைக்க ப்பட்டனர்.

    இதையடுத்து தலைமறைவான பவானியை சேர்ந்த கஞ்சா வியாபாரி செந்திலை போலீசார் வலை வீசி தேடி வருகிறார்கள்.

    • போலீசார் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை செய்தனர்.
    • சுமார் 2 மணி நேரம் நடந்த சோதனையில் மர்ம பொருள் எதுவும் சிக்கவில்லை.

    ஈரோடு:

    சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று காலை ஒரு போன் வந்தது.

    அதில் பேசிய மர்ம நம்பர் ஈரோடு ரெயில் நிலையம் மற்றும் ஈரோடு பஸ் நிலையத்தில் வெடி குண்டு வைத்துள்ளதாகவும், அது இன்னும் சற்று நேரத்தில் வெடிக்க போவதாகவும் கூறிவிட்டு போனின் இணைப்பை துண்டித்துவிட்டார்.

    இது குறித்து ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு சென்னை போலீசார் தகவல் தெரிவித்தனர். இதனால் உஷாரான போலீசார் உடனடியாக ஈரோடு ரெயில் நிலையத்திற்கு சோதனையிட சென்றனர்.

    மேலும் இது குறித்து ஈரோடு ரெயில்வே போலீசார், ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசாரும் ரெயில் நிலையத்திற்கு வந்தனர். அவர்களுடன் மோப்பநாய் கயல் வரவழைக்கப்பட்டது.

    ஈரோடு ரெயில் நிலையம் முழுவதும் ஒவ்வொரு பகுதியாக சல்லடை போட்டு போலீசார் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை செய்தனர்.

    இதேபோல் டவுன் இன்ஸ்பெக்டர் தெய்வராணி தலைமையில் போலீ சார் ஈரோடு பஸ் நிலையத்திற்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர். ஒவ்வொரு ரேக்காக சென்று சோதனையிட்டனர்.

    ஈரோடு மணிக்கூண்டு பகுதிகளிலும் ஒவ்வொரு பகுதியாக சென்று சோதனையிட்டனர். சுமார் 2 மணி நேரம் நடந்த சோதனையில் மர்ம பொருள் எதுவும் சிக்கவில்லை. வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என தெரியவந்தது. இதனால் ஈரோடு மாநகர் முழுவதும் நேற்று காலை பரபரப்பாக காணப்பட்டது.

    இதனையடுத்து வெடி குண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டினர். போலீஸ் கட்டுப்பாட்டுக்கு வந்த செல்போன் எண்ணை வைத்து அந்த நபர் இருக்கும் பகுதியை போலீசார் ட்ராக் செய்தனர்.

    இதில் வெடிகுண்டு மிரட்டல் கொடுத்த நபர் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த சந்தோஷ் குமார் (34) என தெரிய வந்தது. அவரை பிடிக்க ஈரோடு தனிப்படை போலீசார் விரைந்து சென்றனர்.

    ஈரோடு மணிக்கூண்டு பகுதியில் சுற்றித்திரிந்த சந்தோஷ்குமாரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் அவரை விசாரணைக்காக போலீசார் அழைத்து சென்றனர்.

    இந்நிலையில் சந்தோஷ்குமார் எந்த ஒரு வேலைக்கும் செல்லாமல் ஊதாரித்தனமாக சுற்றி தெரிந்து உள்ளார். இவரது நடவடிக்கை பிடிக்காமல் முதல் மனைவி மற்றும் 2-ம் மனைவி இவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டனர்.

    அவ்வப்போது கிடைக்கும் வேலையை பார்த்து சுற்றி வந்துள்ளார். சந்தோஷ் குமார் ஏற்கனவே 2019-ம் ஆண்டு மற்றும் 2021-ம் ஆண்டு என 2 முறை இதேபோன்று சென்னை காவல் கட்டு ப்பாட்டு அறைக்கு போன் செய்து ஈரோடு பஸ் நிலையம், ரெயில் நிலையத்தில் வெடிகுண்டு வைத்துள்ளதாகவும், அது சற்று நேரத்தில் வெடிக்கும் என்று புரளியை கிளம்பி இருந்தார்.

    அப்போது இது குறித்து அவரிடம் கேட்டபோது வீட்டில் சாப்பாடு சரியில்லை. ஜெயில் சாப்பாடு நன்றாக இருக்கும் என்பதால் இவ்வாறு போன் செய்து செய்து மிரட்டல் விடுத்ததாக கூலாக பதில் சொன்னார்.

    இந்நிலையில் 3-வது முறையாக மிரட்டல் விடுத்து கைதாகி உள்ளார். இந்த முறை மிரட்டல் விடுத்ததற்கான காரணம் குறித்து அவரிடம் கேட்டபோது,

    சும்மா பொழுது போக்குக்காக போன் செய்து மிரட்டியதாக மீண்டும் கூலாக கூறினார். இதனைக்கேட்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

    இது குறித்து டவுன் போலீசார் அசோக்குமார் மீது 506 (1), கொலை மிரட்டல் விடுப்பது, 507 பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் செய ல்பட்டது என 2 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

    பின்னர் சந்தோஷ் குமார் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு கோபி மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார். 

    • பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 92.90 அடியாக உள்ளது.
    • அணையில் இருந்து 2,700 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. பவானிசாகர் அணை மூலம் ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த 2,47,000 விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

    105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலை பகுதி உள்ளது.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக பவானிசாகர் அணைக்கு வரும் நீர் வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 92.90 அடியாக உள்ளது. அணைக்கு வரும் நீரின் வரத்து வினாடிக்கு 756 கன அடியாக குறைந்தது.

    கீழ்பவானி வாய்க்காலுக்கு வினாடிக்கு 2,200 கன அடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 200 கனஅடி, காலிங்கராயன் வாய்க்கால் பாசனத்திற்கு 300 கனஅடி என மொத்தம் அணையில் இருந்து 2,700 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    • காட்டுத்தீயை தடுக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் தீயணைப்பு துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    • முன் எச்சரிக்கை குறித்து கடந்த சில வாரங்களாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கோடைக்காலம் தொடங்கி உள்ளதால் கடும் வெயில் சுட்டெரித்து வருகிறது.

    ஈரோடு மாவட்டத்தில் வனம் மற்றும் மலைப்பகு திகளான சத்தியமங்கலம், பண்ணாரி, தாளவாடி, ஆசனூர், அந்தியூர், பர்கூர், சென்னிமலை போன்ற பகுதிகளில் மரங்கள், செடி, கொடிகளில் இலைகள் காய்ந்து உதிர்ந்து வருகிறது.

    இதனால் காட்டுத்தீ ஏற்படும் அபாயம் உள்ளது. இதனை தடுக்க மாவட்ட தீயணைப்பு துறை சார்பில் வனத்துறையினருக்கும், மலைவாழ் மக்களுக்கும், தன்னார்வலர்களுக்கம் முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு நடவ டிக்கைகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    மேலும் காட்டுத்தீயை தடுக்க தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளும் மாவட்ட தீயணைப்பு துறை சார்பில் மேற்கொள்ள ப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து ஈரோடு மாவட்ட தீயணைப்பு அலுவலர் புளுகாண்டி கூறியதாவது:

    ஈரோடு மாவட்டத்தில் வனப்பபகுதியை சேர்ந்த மக்களுக்கும், வனத்துறை ஊழியர்களுக்கும் காட்டுத்தீயை தவிர்க்க எடுக்க வேண்டிய முன் எச்சரிக்கை குறித்து கடந்த சில வாரங்களாக விழி ப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    அதேபோல் பிற வனப்பகுதி மற்றும் மலைப்பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டால் கட்டுப்படுத்த அதே பகுதியை சேர்ந்த தன்னார்வலர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டு தயார் செய்து வைத்து ள்ளோம்.

    வனப்பகுதிகளில் மரம், செடி, கொடிகளில் இருந்து காய்ந்த இலைகள் உதிர்ந்து சருகாக வனத்தில் காணப்ப டும். அதிக வெயில், காற்றினால் மரங்கள் ஒன்றோடு ஒன்று உரசி தீப்பிடிக்கும்.

    அப்போது காட்டுத்தீயாக மாறும். இது தவிர மர்மநபர்கள் வனத்திற்குள்ளோ அல்லது அதன் அருகிலே சென்று சிகரெட் அல்லது வேறு எதற்காவது தீ பற்ற வைத்து அணைக்காமல் வந்து விட்டால் அதன் மூலம் தீ பரவி காட்டுத்தீயாக மாறு கிறது.

    இதனை தடுக்கவும், வனப்பகுதியில் உள்ள காய்ந்த சருகுகளை அவ்வப்போது அப்புறப்படுத்த நட வடிக்கை எடுத்துள்ளோம்.

    வனத்தை யொட்டி சாலைகளில் இருபுறமும் சிறு பள்ளம் வெட்டி (பயர் லைன்) தீத்தடுப்பு நடவ டிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    வனத்துறையுடன் இணைந்து காட்டுத்தீயை தடுக்க போதிய முன்னெ ச்சரிக்கை பாதுகாப்பு நட வடிக்கை எடுத்துள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஆசனூர் பஸ் நிறுத்தம் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
    • ஒரு கிலோ 700 கிராம் மதிப்பிலான புகை யிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    ஈரோடு:

    தாளவாடி இன்ஸ்பெக்டர் செல்வன் தலைமையிலான போலீசார் ஆசனூர் பஸ் நிறுத்தம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

    அப்போது அந்த பகுதியில் ஒருவர் கையில் கட்டை பையுடன் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டு இருந்தார். போலீசார் அந்த நபரை பிடித்து விசாரித்த போது அவர் திருப்பூர் மாவட்டம் காளிபாளையம் பகுதியை சேர்ந்த மூர்த்தி (49) என்பது தெரிய வந்தது.

    அவரது கட்டப்பையை சோதனை செய்த போது அதில் அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், புகையிலை, பான் மசாலா ஆகியவை இருப்பது தெரிய வந்தது.

    மொத்தம் ஒரு கிலோ 919 கிராம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மதிப்பு ரூ.1440 ஆகும். இது குறித்து ஆசனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து மூர்த்தியை கைது செய்தனர்.

    இதேப்போல் ஆசனூர் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தன் தலைமையிலான போலீசார் ஆசனூர் அரேப்பாளையம் பஸ் நிறுத்தம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

    அப்போது அந்த பகுதியில் ஒரு நபர் கையில் பச்சை கலர் கட்டை பையுடன் சந்தேக படும்படியாக நின்று கொண்டிருந்தார்.

    போலீசார் அந்த நபரை பிடித்து விசாரித்த போது அவர் கோவை மாவட்டம் மோப்பெரிபாளையம், தோட்ட சாலை கணபதி பாளையம் பகுதியை சேர்ந்த பாலசுப்பிர மணியம் (46) என்பது தெரியவந்தது.

    அவரது கட்டப்பையை சோதனை செய்த போது அதில் அரசால் தடை செய்ய ப்பட்ட ஹான்ஸ், புகை யிலை பொருட்கள் பான் மசாலா இருப்பது தெரிய வந்தது.

    மொத்தம் ஒரு கிலோ 700 கிராம் மதிப்பிலான புகை யிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவற்றின் மதிப்பு ரூ.1440 ஆகும். இதுகுறித்து ஆசனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து பாலசுப்பிர மணியத்தை கைது செய்தனர். 

    • சம்பவம் பற்றி தெரிய வந்ததும் பவானி போலீசார் விரைந்து சென்று கார்த்திக்கிடம் விசாரணை நடத்தினர்.
    • போலீசார் மீனா தேவியை கைது செய்து நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தி கோவை சிறையில் அடைத்தனர்.

    பவானி:

    ஈரோடு மாவட்டம் பவானி வர்ணபுரம் 5-வது வீதியைச் சேர்ந்தவர் கார்த்திக் (26). இவர் பெருந்துறையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது உறவினர் பூபதி. இவரது மனைவி மீனா தேவி(27). இவர்கள் பவானி மீனாட்சி கல்யாண மண்டபம் வீதியில் வசித்து வருகின்றனர்.

    கார்த்திக்-மீனா தேவி ஆகியோர் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் ஒன்றாக படித்தனர். அப்போதே அவர்களுக்கு இடையே பழக்கம் இருந்தது. இந்நிலையில் மீனா தேவிக்கு பூபதியுடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 6 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

    கார்த்திக் அடிக்கடி பூபதியின் வீட்டிற்கு சென்று வந்தார். அப்போது கார்த்திக்கும் மீனா தேவிக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது. உறவினர் என்பதால் கார்த்திக் வந்து சென்றதை அவரது கணவர் கண்டு கொள்ளவில்லை. இதை சாதகமாக பயன்படுத்தி கார்த்திக்-மீனாதேவி கள்ள தொடர்பை தொடர்ந்தனர்.

    இந்நிலையில் கார்த்திக்குக்கும் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டது. இது பற்றி தெரிய வந்ததும் மீனா தேவி அதிர்ச்சி அடைந்தார். அவர் கார்த்திக்கை தொடர்பு கொண்டு வீட்டிற்கு அழைத்தார்.

    அதன்படி நேற்று மதியம் கார்த்திக் மீனா தேவி வீட்டிற்கு வந்தார். அப்போது மீனாதேவி என்னுடன் உள்ள தொடர்பை துண்டித்து விட்டு எப்படி நீ வேறு பெண்ணை திருமணம் செய்து கொள்ளலாம் என்று கேட்டு உள்ளார். மேலும் இது தொடர்பாக அவர்கள் 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த மீனா தேவி தனது வீட்டில் கொதித்து கொண்டு இருந்த பாமாயில் எண்ணையை கார்த்திக் மீது ஊற்றினார். இதில் அவரது கழுத்து, முகம், இடது கை தோள்பட்டையில் தீ காயம் ஏற்பட்டது. இதனால் வலி தாங்கமுடியாமல் கார்த்திக் அலறி துடித்தார்.

    பின்னர் தனது மோட்டார் சைக்கிளில் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றார். அங்கு முதல் உதவி சிகிச்சை பெற்ற பின்னர் மேல் சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். கொதிக்கும் எண்ணையை ஊற்றியதில் கார்திக்குக்கு 15 சதவீத தீக்காயம் ஏற்பட்டது.

    சம்பவம் பற்றி தெரிய வந்ததும் பவானி போலீசார் விரைந்து சென்று கார்த்திக்கிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் நடந்த விவரங்களை தெரிவித்தார்.

    இதையடுத்து தலைமறைவான மீனாதேவியை போலீசார் தேடினர். அப்போது அவர் ஈரோடு கருங்கல்பாளையத்தில் உள்ள அவரது தாய் வீட்டில் பதுங்கி இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து பவானி, கருங்கல்பாளையம் போலீசார் விரைந்து சென்று மீனா தேவியை கைது செய்தனர். பின்னர் பவானி போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று அவரிடம் விசாரணை நடத்தினர்.

    அப்போது அவர் போலீசாரிடம் வாக்குமூலம் கொடுத்தார் அதில் அவர் கூறி இருப்பதாவது:

    நானும் கார்த்திக்கும் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் ஒன்றாக படித்தோம் அப்போதே எங்களுக்குள் பழக்கம் இருந்தது. இந்நிலையில் அவரது உறவினரான பூபதியை திருமணம் செய்த பின்பும் எங்களுக்குள் தொடர்பு இருந்தது. இதனால் நாங்கள் அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசி பழகி வந்தோம். இந்த நிலையில் திடீரென அவர் என்னுடன் உள்ள தொடர்பை துண்டித்து விட்டு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ய முடிவு செய்ததால் நான் அதிர்ச்சி அடைந்தேன்.

    இதையடுத்து அவரை வீட்டிற்கு அழைத்து இது தொடர்பாக பேசினேன். அப்போது அவருக்கும் எனக்கும் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த நான் வீட்டில் சமையல் அறையில் கொதித்துக் கொண்டு இருந்த பாமாயில் எண்ணையை எடுத்து அவர் மீது கொட்டினேன் என்று கூறினார்.

    இதை யடுத்து போலீசார் மீனா தேவியை கைது செய்து நீதிபதி வீட்டில் ஆஜர்ப டுத்தி கோவை சிறையில் அடைத்தனர். 

    • உறவினர் ஒருவர், ரமேஷின் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, மகாநதி தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார்.
    • 3 மாத கர்ப்பிணி பெண் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த பொட்டியபுரம் ஊராட்சியில் கருத்தானூர் கிராமம் உள்ளது. இங்கு வசிக்கும் ரமேஷ் என்பவர் அதே பகுதியை சேர்ந்த மகாநதி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

    இவர்கள் இருவரும் சக்கரைசெட்டிபட்டி புதுக்கடை பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தனர். இந்த தம்பதிக்கு 3 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

    மகாநதி தற்போது 3 மாத கர்ப்பிணியாக இருந்தார். இந்த நிலையில், கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. நேற்று முன்தினம் நடந்த தகராறை தொடர்ந்து ரமேஷ் குழந்தையை எடுத்துக்கொண்டு அருகில் உள்ள ஊருக்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது.

    அதன்பிறகு உறவினர் ஒருவர், ரமேஷின் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, மகாநதி தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார்.

    இதை கண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர் இது பற்றி உடனடியாக அக்கம் பக்கத்தினருக்கு தகவல் தெரிவித்து அவரை மீட்டு, மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். மகாநதி உடலை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இந்த நிலையில் மகாநதியின் பெற்றோர் தனது மகளின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி ஓமலூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    அதன்பேரில் ஓமலூர் போலீசார், மகாநதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் ஓமலூர் போலீசார், சந்தேகம் மரணம் என வழக்குப்பதிவு செய்து மகாநதி எப்படி இறந்தார்? என்று ரமேஷ் மற்றும் அவரது உறவினர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமணமாகி 4 ஆண்டுகளே ஆன நிலையில் இளம்பெண் இறந்ததால் வருவாய் கோட்டாட்சியரும் விசாரணை மேற்கொண்டு வருகிறார். 3 மாத கர்ப்பிணி பெண் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • வேட்டை தடுப்பு காவலர் ஆனந்த் உள்பட 22 பேர் கொண்ட குழுவினர் காட்டுத் தீயணைக்க வனப்பகுதிக்கு சென்றனர்.
    • உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட ஆசனூர் வனச்சரகத்தில் வேட்டை தடுப்பு காவலராக பணியாற்றி வருபவர் ஆனந்த் (28). சம்பவத்தன்று இரவு ஆசனூர் வனசரகத்திற்கு உட்பட்ட மாவல்லரம் பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

    இதனையடுத்து வேட்டை தடுப்பு காவலர் ஆனந்த் உள்பட 22 பேர் கொண்ட குழுவினர் காட்டுத் தீயணைக்க வனப்பகுதிக்கு சென்றனர். தீயை அணைக்கும் கருவிகளுடன் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

    அப்போது எதிர்பாராத விதமாக வேட்டை தடுப்பு காவலர் ஆனந்த் கால் தவறி கீழே பாறையில் விழுந்தார். இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து உடன் இருந்த மற்ற வேட்டை தடுப்பு காவலர்கள் உடனடியாக ஆனந்தை மீட்டு சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

    இந்நிலையில் தலையில் பலத்த காயம் அடைந்ததால் ஆனந்த் சுயநினைவை இழந்தார். தொடர்ந்து அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    • பிரசார கூட்டத்தில் சீமான் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு எதிராகவும் அச்சுறுத்தும் வகையிலும் பேசியதாக புகார் செய்யப்பட்டது.
    • சீமானுக்கு எதிராக குறிப்பிட்ட பிரிவினர் சாலை மறியல் போராட்டம் செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடந்த மாதம் 13-ந் தேதி பிரசாரம் செய்தார்.

    அப்போது அவர் திருநகர் காலனியில் நடந்த பொதுக்கூட்டத்தில் ஒரு பிரிவினர் குறித்து சர்சைக்குரிய வகையில் பேசியதாக புகார் எழுந்தது.

    இதையடுத்து சீமானுக்கு எதிராக குறிப்பிட்ட பிரிவினர் சாலை மறியல் போராட்டம் செய்தனர். மேலும் இது தொடர்பாக விளக்கம் அளிக்க தேர்தல் ஆணையமும் நாம் தமிழர் வேட்பாளருக்கு உத்தரவிட்டு இருந்தது.

    இந்த நிலையில் குறிப்பிட்ட சமுதாயத்தின் சார்பில் சீமான் மீது கருங்கல்பாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இதையடுத்து போலீசார் சீமான் மீது வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் அதே பிரசார கூட்டத்தில் சீமான் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு எதிராகவும் அச்சுறுத்தும் வகையிலும் பேசியதாக புகார் செய்யப்பட்டது. இது தொடர்பான வீடியோவை அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் வெளியிட்டு ஏன் சீமான் இன்னும் கைது செய்யப்படவில்லை என்று கேள்வி எழுப்பி இருந்தார்.

    இந்த நிலையில் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினர் கொடுத்த புகாரின் பேரில் தொடரப்பட்ட வழக்கில் கூடுதலாக புலம் பெயர்ந்த தொழிலாளர்களை பற்றி அவதூறாக பேசியதாகவும், அச்சுறுத்தும் வகையில் பேசியதாகவும் சீமான் மீது கூடுதலாக இன்று கருங்கல்பாளையம் போலீசார் 153 (பி), (1சி), 505 (1சி), 506 (1) ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

    • சென்னம்பட்டி வனச்சரக எல்லை பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் தற்போது அதிகரித்துள்ளது.
    • மேலும் அப்பகுதியில் சிறுத்தையை பிடிக்க கூண்டு வைத்தனர்.

    அம்மாபேட்டை:

    ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டையை அடுத்த சென்னம்பட்டி வனச்சரக எல்லைப் பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் தற்போது அதிகரித்துள்ளது.

    இந்நிலையில் அந்தியூர் அருகேயுள்ள கோவிலூர், புதுக்காடு பகுதியில் கடந்த 25 நாட்களுக்கு முன்பு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சிறுத்தை அப்பகுதி விவசாயத் தோட்டத்தில் புகுந்தது.

    தொடர்ந்து அந்த சிறுத்தை அங்கிருந்த நாயைக் கடித்து இழுத்துச் சென்றது.

    இதைக் கண்ட அப்பகுதி மக்கள் சென்னம்பட்டி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்து க்கு வந்த வனத்துறையினர் அந்த பகுதியில் இருந்த காலடித் தடயங்களை ஆய்வு செய்தனர்.

    அப்போது வனத்துறையினர் அங்கு சிறுத்தை நடமாட்டம் இருப்பதை உறுதி செய்தனர்.

    இதைத் தொடர்ந்து வன எல்லையை ஒட்டியுள்ள கிராமங்களிலும், விவசாயத் தோட்டத்து வீடுகளிலும் உள்ள மக்களுக்கு சிறுத்தை நடமாட்டம் உள்ளதாகவும், எச்சரிக்கையுடன் இருக்கு மாறும் வனத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டது.

    மேலும் 5 இடங்களில் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டன. இருந்த போதிலும் வனத்துறையினர் சிறுத்தையைப் பிடிக்க முழு முயற்சியுடன் நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் அதிருப்தி யில் உள்ளதாக கூறப்படு கிறது.

    இந்நிலையில் பல நாய்க ளை சிறுத்தை கவ்விச் சென்றது குறித்தும் வனத்துறைக்கு பொது மக்கள் தகவல் தெரி வித்தனர். இதனால் வன எல்லையை ஒட்டியுள்ள கிராமங்களில் பொதுமக்கள் பீதியில் காணப்பட்டு வந்த னர்.

    எனவே இந்த பகுதியில் சுற்றி திரியும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இல்லை யெனில் வனத்துறையைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என பொது மக்கள் முடிவு செய்தனர்.

    இந்நிலையில் புதுக்காடு பகுதியில் சிறுத்தையை பிடிக்க வத்துறையினர் கூண்டு வைத்துள்ளனர். தொடர்ந்து வனத்துறை யினர் சிறுத்தை நடமாட்டம் உள்ளதா என கண்காணித்து வருகிறார்கள்.

    சிறுத்தை நடமாட்டம் காணப்பட்ட பின்னர் 25 நாட்களுக்குப் பிறகு மிக தாமதமாக கூண்டு வைக்க ப்பட்டது அந்த பொது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

    சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இதில் ஏராளமான வன விலங்குகள் வசித்து வரு கின்றன. தாளவாடி வன ச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் இருந்து வெளியேறும் சிறுத்தைகள் அவ்வப்போது விவசாய தோட்டத்துக்குள் புகுந்து ஆடு, மாடு ,காவல் நாய்களை வேட்டையாடுவது தொடர்கதையாகி வருகிறது.

    இந்தநிலையில் கடந்த சில நாட்களாக மல்குத்தி புரம் பகுதியில் விவசாய தோட்டத்தில் புகுந்த சிறுத்தை ஆடு மற்றும் காவல் நாய்களை வேட்டை யாடி வந்தது. பின்னர் அங்குள்ள கரும்பு தோட்ட த்தில் பதுங்கி கொள்வது வாடிக்கையாக கொண்டி ருந்தது.

    இதையடுத்து சிறு த்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். இதை தொடர்ந்து தாளவாடி வனச்சரகர் சதீஸ் தலைமையில் சிறுத்தை நட மாட்டம் உள்ள பகுதியில் கால் தடங்களை ஆய்வு செய்தனர்.

    பின்னர் அப்பகு தியை சேர்ந்த செல்வராஜ் (48) என்ற விவசாயி பாக்கு தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் இருந்தது தெரியவந்தது. பின்னர் பாக்கு தோட்டத்தில் 2 இடங்களில் கண்காணிப்பு கேமராவை பொருத்தினர்.

    மேலும் அப்பகுதியில் சிறுத்தையை பிடிக்க கூண்டு வைத்தனர். கூண்டு உள்ளே காவல் நாயை கட்டி வைத்தனர்.

    நாயை பிடிக்கவரும் சிறுத்தை கூண்டில் சிக்கு வதற்கு வாய்ப்பு உள்ளது என வனத்துறையினர் தெரிவித்தனர்

    • கட்டிடம் விபத்து குறித்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் ஜோதி சந்திரா நேரில் ஆய்வு செய்தார்
    • பின்னர் புதிய கட்டிடம் கட்டுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

    மொடக்குறிச்சி:

    சோலார் அருகே மோள கவுண்டன் பாளையத்தில் அரசு நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை 120 மாணவர்களும், 112 மாணவிகளும் படித்து வருகின்றனர்.

    இப்பள்ளியில் தலைமை ஆசிரியை உள்பட 10 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

    இந்நிலையில் மோள கவுண்டன் பாளையம் அரசு நடுநிலைபள்ளியில் பழமை வாய்ந்த கட்டிடம் ஒன்று உள்ளது. இந்த கட்டிட அறையை காலை வழக்கம்போல் ஆசிரியர்கள் திறந்து வைத்தனர்.

    அப்போது ஜன்னல் அருகே உள்ள சிமெண்ட் மேற்கூரை பெயர்ந்து விழுந்தது.

    உடனே அந்த அறையில் செயல்பட்டு வந்த 6-ம் வகுப்பு மாணவ, மாணவிகளை அருகில் உள்ள ஸ்மார்ட் வகுப்பிற்கு ஆசிரியர்கள் அனுப்பி வைத்து படிக்க வைத்தனர்.

    தற்பொழுது அந்த பழமை வாய்ந்த பள்ளி கட்டிடம் பல இடங்களில் விரிசல் விழுந்து மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது.

    மேலும் தலைமை ஆசிரியை இருக்கும் அலுவலகத்தின் அறையின் கட்டிடமும் விரிசல் ஏற்பட்டு ஆபத்தான நிலையில் உள்ளது.

    இந்த கட்டிடம் கட்டப்பட்டு 15 ஆண்டுகள் ஆகின்ற நிலையில் பலமுறை பள்ளி ஆசிரியர்களும், பொது மக்களும் பள்ளி கட்டிடத்தை புதுப்பித்து தருமாறு பல முறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவித்தனர்.

    இந்நிலையில் கட்டிடம் விபத்து குறித்து தகவல் அறிந்த மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் ஜோதி சந்திரா நேரில் ஆய்வு செய்து விசாரணை நடத்தினார்.

    பின்னர் கட்டிடத்தை இடித்து அகற்றிவிட்டு புதிய கட்டிடம் கட்டுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

    ×