search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "forest areas"

    • அமராவதி வனச்சரகங்களில் 18 மலைவாழ் மக்கள் குடியிருப்புகள் உள்ளன.
    • கிலோ 150 ரூபாய்க்கு மலையடிவார சந்தைகளில் விற்பனை செய்து வருகின்றனர்.

    உடுமலை :

    ஆனைமலை புலிகள் காப்பகம், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உடுமலை, அமராவதி வனச்சரகங்களில் 18 மலைவாழ் மக்கள் குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ளவர்கள் வனத்திலுள்ள சிறு பொருட்களை சேகரித்து நகரப்பகுதிக்கு கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர்.தற்போது வடுமாங்காய் எனப்படும் சிறிய அளவிலான மாங்காய்கள் வரத்து துவங்கி உள்ளது. அவற்றை சேகரித்து வந்து கிலோ 150 ரூபாய்க்கு மலையடிவார சந்தைகளில் விற்பனை செய்து வருகின்றனர்.

    இது குறித்து வனத்துறையினர் கூறியதாவது:- இயற்கையாகவே இம்மரங்கள் 70 மீ., வரை மிக உயரமாக வளரும். மார்ச் முதல் மே வரை சிறிய அளவிலான வடுமாங்காய்கள் காய்க்கும்.குரங்கு, கரடி உள்ளிட்ட வன விலங்குகள், பறவைகள் விரும்பி உண்ணும். ஊறுகாய் மற்றும் மருத்துவ பயன்பாட்டுக்கு வடுமாங்காய் அதிகம் பயன்படுகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • காட்டுத்தீயை தடுக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் தீயணைப்பு துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    • முன் எச்சரிக்கை குறித்து கடந்த சில வாரங்களாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கோடைக்காலம் தொடங்கி உள்ளதால் கடும் வெயில் சுட்டெரித்து வருகிறது.

    ஈரோடு மாவட்டத்தில் வனம் மற்றும் மலைப்பகு திகளான சத்தியமங்கலம், பண்ணாரி, தாளவாடி, ஆசனூர், அந்தியூர், பர்கூர், சென்னிமலை போன்ற பகுதிகளில் மரங்கள், செடி, கொடிகளில் இலைகள் காய்ந்து உதிர்ந்து வருகிறது.

    இதனால் காட்டுத்தீ ஏற்படும் அபாயம் உள்ளது. இதனை தடுக்க மாவட்ட தீயணைப்பு துறை சார்பில் வனத்துறையினருக்கும், மலைவாழ் மக்களுக்கும், தன்னார்வலர்களுக்கம் முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு நடவ டிக்கைகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    மேலும் காட்டுத்தீயை தடுக்க தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளும் மாவட்ட தீயணைப்பு துறை சார்பில் மேற்கொள்ள ப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து ஈரோடு மாவட்ட தீயணைப்பு அலுவலர் புளுகாண்டி கூறியதாவது:

    ஈரோடு மாவட்டத்தில் வனப்பபகுதியை சேர்ந்த மக்களுக்கும், வனத்துறை ஊழியர்களுக்கும் காட்டுத்தீயை தவிர்க்க எடுக்க வேண்டிய முன் எச்சரிக்கை குறித்து கடந்த சில வாரங்களாக விழி ப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    அதேபோல் பிற வனப்பகுதி மற்றும் மலைப்பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டால் கட்டுப்படுத்த அதே பகுதியை சேர்ந்த தன்னார்வலர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டு தயார் செய்து வைத்து ள்ளோம்.

    வனப்பகுதிகளில் மரம், செடி, கொடிகளில் இருந்து காய்ந்த இலைகள் உதிர்ந்து சருகாக வனத்தில் காணப்ப டும். அதிக வெயில், காற்றினால் மரங்கள் ஒன்றோடு ஒன்று உரசி தீப்பிடிக்கும்.

    அப்போது காட்டுத்தீயாக மாறும். இது தவிர மர்மநபர்கள் வனத்திற்குள்ளோ அல்லது அதன் அருகிலே சென்று சிகரெட் அல்லது வேறு எதற்காவது தீ பற்ற வைத்து அணைக்காமல் வந்து விட்டால் அதன் மூலம் தீ பரவி காட்டுத்தீயாக மாறு கிறது.

    இதனை தடுக்கவும், வனப்பகுதியில் உள்ள காய்ந்த சருகுகளை அவ்வப்போது அப்புறப்படுத்த நட வடிக்கை எடுத்துள்ளோம்.

    வனத்தை யொட்டி சாலைகளில் இருபுறமும் சிறு பள்ளம் வெட்டி (பயர் லைன்) தீத்தடுப்பு நடவ டிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    வனத்துறையுடன் இணைந்து காட்டுத்தீயை தடுக்க போதிய முன்னெ ச்சரிக்கை பாதுகாப்பு நட வடிக்கை எடுத்துள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×