என் மலர்tooltip icon

    ஈரோடு

    • ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளுக்கும் பல கோடி மதிப்பில் திட்டங்கள் உள்ளன.
    • பழைய குடியிருப்புகளை இடிக்கும் இடத்தில் நவீன குடியிருப்புகள் கட்டப்படும்.

    ஈரோடு:

    ஈரோடு அருகே உள்ள கதிரம்பட்டி, வாவிகடை, சிலேட்டர்நகர், பெருந்துறையில் 3 இடங்கள் என மொத்தம் 6 இடங்களில் ரூ.15 கோடியே 75 லட்சம் மதிப்பீட்டில் சாலை அமைப்பதற்கான பூமி பூஜை, சாலை விரிவாக்கம் பணிக்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது.

    அமைச்சர் சு.முத்துசாமி நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி சாலை அமைப்பதற்கான பணியை பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

    பின்னர் அமைச்சர் முத்துசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஈரோடு ஒன்றியத்தில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் 3 பணிகள், பெருந்துறையில் 3 பணிகள் என மொத்தம் 6 பணிகள் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. மொத்தம் ரூ.15 கோடியே 75 லட்சம் மதிப்பில் இந்த 6 பணிகளும் நடைபெற உள்ளது. மக்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த திட்டம் இது. இன்னும் 6 மாதத்தில் முடிவடையும். மக்களுக்காக இதேபோல் இன்னும் ஏராளமான திட்டங்கள் உள்ளன.

    இதேப்போல் ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளுக்கும் பல கோடி மதிப்பில் திட்டங்கள் உள்ளன. வீட்டு வசதி வாரியத்தில் 50 சதவீத காலி பணியிடங்கள் உள்ளன. இதில் வாரிசு அடிப்படையில் சில பணியிடங்களை நிரப்ப வேண்டும். இந்த காலி பணியிடங்களை நிரப்புவதற்கான பணி தொடங்கியுள்ளது. சர்வீஸ் கமிஷன் மூலம் இவை நிரப்பப்பட வேண்டும். அதற்கு சில கால அவகாசம் தேவைப்படுகிறது.

    வீட்டு வசதி வாரியத்தில் தமிழகம் முழுவதும் இடிந்து விழும் நிலையில் இருந்த 138 கட்டிடங்கள் கண்டறியபட்டு அதில் மிகவும் மோசமான நிலையில் இருக்கும் 60 கட்டிங்கள் இடிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    பழைய குடியிருப்புகளை இடிக்கும் இடத்தில் நவீன குடியிருப்புகள் கட்டப்படும். வீட்டு வசதி வாரியத்தின் மூலமாக சுயநிதி திட்டத்தின் கீழ் ஏற்கனவே விற்பனை செய்யப்பட்ட இடங்களில் வீட்டு வசதி வாரியம் சார்பில் குடியிருப்புகள் கட்டும் பணிக்கான சட்டத்திருத்தத்திற்கு அனுமதி கிடைத்துள்ளது. இந்த பணிகளும் விரைவில் தொடங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது மாநகர செயலாளர் சுப்பிரமணியம், மாவட்ட துணைச்செயலாளர் செந்தில்குமார் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    • கோப்புகளை பார்வையிட்ட அதிகாரிகள் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளதா? என ஆய்வு செய்தனர்.
    • தனியார் மருத்துவமனையில் வருமான வரித்துறையினர் திடீரென சோதனை நடத்தி வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு பெருந்துறை ரோட்டில் பிரபல தனியார் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனைக்கு நேற்று மதியம் 4 கார்களில் 20-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்வதற்காக வந்தனர். மருத்துவமனைக்குள் நுழைந்த அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

    அதே நேரம் மருத்துவ சிகிச்சைக்கு இடையூறு ஏற்படுத்தாமல் அதிகாரிகள் தங்களது சோதனைகளை நடத்தினர். மருத்துவமனையில் தலைவர், நிர்வாக இயக்குனர் ஆகியோர் அறையிலும் நிர்வாக அலுவலகத்திலும் அதிகாரிகள் சோதனையிட்டனர். அங்குள்ள கோப்புகளை பார்வையிட்ட அதிகாரிகள் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளதா? என ஆய்வு செய்தனர். இந்த சோதனை இரவு வரை நீடித்தது.

    அதனைத் தொடர்ந்து இன்று 2-வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் மருத்துவமனையில் சென்று சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தனியார் மருத்துவமனையில் வருமான வரித்துறையினர் திடீரென சோதனை நடத்தி வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய கருமுட்டை விற்பனை வழக்கில் இந்த தனியார் மருத்துவமனையின் கருத்தரித்தல் மைய ஆய்வகத்துக்கு ஏற்கனவே சீல் வைக்கப்பட்டது. பின்னர் நீதிமன்ற உத்தரவின் பேரில் இந்த சீல் அகற்றப்பட்டு ஆய்வகம் தற்போது மீண்டும் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் வருமான வரித்துறையினர் இந்த தனியார் மருத்துவமனையில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது.
    • கருங்கல்பாளையம் பகுதியை சேர்ந்த சூர்யா, பிரகாஷ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு பிரிவு போலீசார் கூடுதல் இயக்குனர் அருண் உத்தரவின் பேரில், கோவை கண்காணிப்பாளர் பாலாஜி மேற்பார்வையில் ஈரோடு இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் தலைமையில் ஈரோடு மாவட்டம் முழுவதும் ஆங்காங்கே சோதனையில் ஈடுபட்டும், வாகன சோதனையில் ஈடுபட்டும் வருகின்றனர்.

    இந்த சோதனையில் ரேஷன் அரிசியை கடத்திய வர்கள் கைது செய்யப்படும் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு போலீசார் ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

    அப்போது கருங்கல்பாளையம் கமலா நகர் பகுதியில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்ப ட்டிருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு சென்று சோதனையிட்ட போது 850 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது.

    இது தொடர்பாக கருங்கல்பாளையம் பகுதியை சேர்ந்த சூர்யா (27), பிரகாஷ் (26) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் வட மாநிலத்தவர்களிடம் கூடுதல் விலைக்கு விற்பதற்காக பதுக்கி வைத்திருந்ததாக தெரிவித்தனர்.

    இதனையடுத்து சூர்யா, பிரகாஷ் கைது செய்யப்பட்டனர். அவர்கள் கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்கள் நீதிமன்ற த்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.

    • அமைச்சர்கள் எ.வ.வேலு, சு.முத்துசாமி ஆகியோர் ஈரோடு அரசு மருத்துவமனை வளாகத்திற்கு வந்தார்.
    • சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கட்டிடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு அரசு மருத்துவமனை வளாகத்தில் ரூ.67 கோடி மதிப்பில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது. 8 மாடிக்கொண்ட கட்டிடத்தின் இறுதி கட்டப் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

    இந்த பணிகளை ஆய்வு செய்வதற்காக அமைச்சர்கள் எ.வ வேலு, சு.முத்துசாமி ஆகியோர் இன்று ஈரோடு அரசு மருத்துவமனை வளாகத்திற்கு வந்தார்.

    அங்கு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கட்டிடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். கட்டிடத்தின் ஒவ்வொரு பகுதியாக சென்று கட்டிடம் தரமாக கட்டப்பட்டுள்ளதா? என்ற ஆய்வு செய்தனர்.

    பின்னர் அமைச்சர் எ.வ.வேலு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    ஈரோடு தலைநகரில் அமைந்துள்ள மருத்துவ மனையில் கூடுதலாக 350 படுக்கைகள் கொண்ட சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ரூ. 67 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. 11.3.2021 ஆம் ஆண்டு கட்டிட பணி தொடங்கியது.

    கட்டுமான பணிகள் தரமாக உள்ளதா என்பது குறித்து செய்தோம். தரமான பொருட்களை பயன்படுத்தி தான் கட்டப்பட்டுள்ளது. இன்னும் சிறு சிறு பணிகள் மட்டும் உள்ளது. ஒரு மாத காலத்திற்குள் அனைத்து பணிகளும் முடிவடைந்து விடும்.

    சாலை பணியாளர்கள் நியமனம் செய்யும்போதே சாலை பணிகளுக்கு தான் என்றும் அவர்களுக்கு பதவி உயர்வு என்பது அரசாங்க விதிகளிலே இல்லை.

    கோபியில் சங்கம் என்ற பெயரில் சாலை பணியாளர்களை தூண்டி விட்டு போராட்டம் செய்து வருகின்றனர்.போரா ட்டத்தில் ஈடுபட்டுள்ள சாலை பணியாளர்கள் பணிக்கு திரும்பவில்லை என்றால் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.

    பெருந்துறையில் அதிக விபத்து ஏற்படுவதன் காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் உயர்மட்ட பாலம் அமைக்கவேண்டும் என்ற கோரிக்கையின்படி நிதின் கட்காரிக்கு கடிதம் எழுதியுள்ளேன்.

    அடுத்த முறை டெல்லிக்கு செல்லும் போது பாலம் வருவதற்கு வலியுறுத்தி தமிழ்நாடு அரசு முயற்சி எடுக்கும்.நெடுஞ்சாலை துறையில் பொறியாளர் மற்றும் தொழில்நுட்ப பிரிவுகளில் கடைநிலை ஊழியர்களுக்கு ஆண்டு தோறும் பதவி உயர்வு பட்டியல் வெளியிடப்படும் நிலையில் இளநிலை உதவியாளர், உதவியாளர் மற்றும் மேற்பார்வை யாளர்களுக்கு கடந்த 15 ஆண்டுகளுக்கு பதவி உயர்வு பட்டியல் வெளியிடப்பட வில்லை என்ற கேள்விக்கு, நெடுஞ்சாலை துறையில் 2003க்கு பின்னால் இருப்பவர்கள் இட ஒதுக்கீடு அடிப்படையில் பதவி உயர்வு அளிக்க கூடாது எனவும் தமிழ்நாடு சர்வீஸ் கமிஷன் மதிப்பெண் அடிப்படையில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது.

    இதனை தமிழக அரசு ஆய்வு செய்து வருகிறது . ஆய்வின் முடிவில் முதல்வர் ஆணையின் படி பதவி உயர்வு வழங்கப்படும்.விதிக்கு உட்பட்டு அனைவருக்கும் பதவி உயர்வு வழங்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதில் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி, அந்தியூர் செல்வராஜ் எம்.பி. பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    • ஆடுகளை நரிகள் கடித்து கொன்று விடுவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
    • நரிகளை பிடித்து செல்ல வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சென்னிமலை:

    சென்னிமலை அருகே ஒரத்துப்பாளையம் அணையின் நீர்த்தேக்க பகுதியான கொடுமணல் கிராமத்தில் விவசாயிகள் அதிக அளவில் வெள்ளாடுகள் மற்றும் செம்மறி ஆடுகளை வளர்த்து வருகின்றனர்.

    இந்த ஆடுகளை சமீபகாலமாக அங்கு சுற்றி திரியும் நரிகள் கடித்து கொன்று விடுவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

    கொடுமணல் தெற்கு ஆத்துத்தோட்டம் பகுதியில் வசிக்கும் விவசாயி பழனிசாமி என்பவர் 50 செம்மறி ஆடுகள் வளர்த்து வருகிறார். இதில் 8 ஆடுகளை நரி கடித்ததில் 7 ஆடுகள் இறந்து விட்டன.

    அதேபோல் சின்னச்சாமி என்பவரின் 2 செம்மறி ஆடுகளையும், சுப்பிரமணியம் என்பவரின் 4 வெள்ளாடுகளையும், வடகால தோட்டத்தை சேர்ந்த சிவலிங்கம் என்பவரின் 2 ஆடுகளையும்,

    குப்பிச்சாந்தோட்டத்தை சேர்ந்த காளியாத்தாள் என்பவரின் 2 செம்மறி ஆடுகளையும், சாம்பக்காட்டு தோட்டத்தை சேர்ந்த பழனி குப்புசாமி என்பவரின் 2 செம்மறி ஆடுகளையும் நரிகள் கடித்து கொன்று விட்டது.

    இதுகுறித்து கொடுமணல் பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறுகையில்,

    திருப்பூர் சாயக்கழிவுகளால் நொய்யல் ஆற்றங்கரை பகுதியில் நீர் நிலைகள் கெட்டுவிட்டது. இதனால் விவசாயம் செய்ய முடியாமல் கால்நடைகளை வளர்த்து வருகிறோம்.

    ஒரத்துப்பாளையம் அணையின் நீர் தேக்க பகுதிக்குள் முள் செடிகள் அதிக அளவில் வளர்ந்து விட்டதால் புதர் மண்டி காணப்படுகிறது.

    இதனால் அங்கு நரிகள் அதிக அளவில் உள்ளது. இந்த நரிகள் இரவு நேரங்களில் எங்கள் ஆட்டு பட்டிக்குள் புகுந்து ஆடுகளை கொன்று வருகிறது.

    இதுவரை கொடுமணல் பகுதியில் மட்டும் 30-க்கும் மேற்பட்ட ஆடுகளை நரிகள் கடித்து கொன்று பாதி தின்றுவிட்டு போய்விடுகிறது.

    ஒரத்துப்பாளையம் அணையின் மறுபகுதியான தம்ம ரெட்டிபாளையம், கணபதிபாளையம் உள்ளிட்ட திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கிராமங்களிலும் இதுவரை 20-க்கும் மேற்பட்ட ஆடுகளை நரிகள் கொன்று விட்டது.

    இதனால் அணையின் நீர்த்தேக்க பகுதியான நொய்யல் ஆற்று பகுதிக்குள் உள்ள முள் செடிகளை அகற்றுவதுடன் நரிகளை பிடித்து செல்ல வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • ஜவுளி சந்தையில் சில்லரை விற்பனை வியாபாரம் விறுவிறுப்பாக நடந்தது.
    • மொத்தம் வியாபாரம் 20 சதவீதம் நடைபெற்றது.

    ஈரோடு:

    ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் அருகே ஈரோடு ஜவுளி சந்தை (கனி மார்க்கெட்) செயல்பட்டு வருகிறது. இங்கே தினசரி கடைகள் மற்றும் வாரச்சந்தை நடைபெற்று வருகிறது.

    குறிப்பாக திங்கட்கிழமை இரவு முதல் செவ்வாய்க்கிழமை மாலை வரை வாரச்சந்தை நடைபெற்று வருகிறது.

    இதற்காக ஆந்திரா, கர்நாடகா தெலுங்கானா மகாராஷ்டிரா, கேரளா போன்ற வெளி மாநிலத்தி லிருந்து நூற்றுக்கணக்கான வியாபாரிகள் வந்து மொத்த விலைக்கு துணி மணிகளை கொள்முதல் செய்து செல்கின்றனர். இதேபோல் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்து வரும் வியாபாரிகளும் துணிகளை வாங்கி செல்கின்றனர்.

    இதனால் வார சந்தை நடைபெறும் நாட்களில் ஈரோடு ஜவுளி சந்தை களை கட்டியிருக்கும். மற்ற இடங்களை விட இங்கு துணிகளின் விலைகள் குறைவாக விற்கப்படு வதால் கூட்டம் எப்போதும் அதிகமாக இருக்கும்.

    இந்நிலையில் கோடை காலம் தொடங்கிய முதல் ஈரோடு ஜவுளி சந்தையில் சில்லரை விற்பனை வியாபாரம் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

    அதன்படி இந்த வாரம் கூடிய ஜவுளி சந்தையில் கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற வெளி மாநிலங்களில் இருந்து அதிக அளவில் வியா பாரிகள் வந்திருந்தனர். இதனால் இன்று மொத்தம் வியாபாரம் 20 சதவீதம் நடைபெற்றது.

    ஆனால் அதே நேரம் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வியாபாரிகள் வந்திருந்தனர். இதனால் சில்லரை வியாபாரம் அமோகமாக நடைபெற்றது. இன்று சில்லரை வியாபாரம் 40 சதவீதம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    இதுகுறித்து வியாபாரிகள் கூறும்போது, கோடை காலம் தொடங்கி உள்ளதால் கடந்த சில நாட்களாகவே காட்டன் தொடர்பான துணிகள் வியாபாரம் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

    குறிப்பாக காட்டன் சேலைகள், காட்டன் சுடிதார்கள், குழந்தைகளுக்கான காட்டன் கவுன்கள், காட்டன் வேட்டி, துண்டு வியாபாரம் விறு விறுப்பாக நடந்து வருகிறது.

    கடந்த 2 வாரமாக மொத்த வியாபாரத்தை விட சில்லரை வியாபாரம் நன்றாக உள்ளது என்றனர்.

    • நாளை மின் பயனீட்டாளர் மாதாந்திர குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது.
    • பயனீட்டாளர் குறை கோரிக்கைகள் தெரிவித்து தீர்வு பெறலாம்.

    ஈரோடு:

    ஈரோடு மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் முத்துவேல் தலைமையில் நாளை (புதன்கிழமை) காலை 11 மணிக்கு மின் பயனீட்டாளர் மாதாந்திர குறைதீர்க்கும் கூட்டம் ஈரோடு ஈ.வி.என் சாலையில் உள்ள மின் கோட்ட அலுவலகத்தில் நடக்கிறது.

    இதில் சோலார், கணபதி பாளையம், கொடுமுடி, சிவகிரி, கஸ்தூரிபாய் கிராமம், அரச்சலூர், எழுமாத்தூர், மொடக்குறிச்சி , அனுமன்பள்ளி, முள்ளம்பரப்பு பகுதி பயனீட்டாளர் குறை கோரிக்கைகள் தெரிவித்து தீர்வு பெறலாம். 

    • மாவட்டத்தில் அதிகபட்சமாக அம்மாபேட்டையில் 54 மி.மீட்டர் மழை பதிவாகி இருந்தது.
    • பல்வேறு பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மாலை முதல் இரவு வரை பரவலாக மழை பெய்து வருகிறது. காலை முழுவதும் வெயிலின் தாக்கம் இருந்தாலும் மாலை நேரங்களில் கருமேகங்கள் சூழ்ந்து ஆங்காங்கே இடியுடன் கூடிய கன மழை பெய்து வருகிறது.

    குறிப்பாக தாளவாடி அணை பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று பகலில் வெயிலின் தாக்கம் குறைவாக இருந்தாலும், வெப்ப சலனம் அதிகமாக காணப்பட்டது. மாலை 5 மணிஅளவில் வானில் கருமேகங்கள் திரண்டன. அதைத்தொடர்ந்து மழை பெய்ய தொடங்கியது. சுமார் 2 மணிநேரம் ஈரோடு மாநகர் பகுதியில் கனமழை கொட்டியது.

    வீரப்பன்சத்திரம், பஸ்நிலையம், பெரியவலசு, பன்னீர்செல்வம் பூங்கா, சூரம்பட்டி, கொல்லம்பாளையம், ரங்கம்பாளையம் உள்பட பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்தது.

    இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. குறிப்பாக மணிக்கூண்டு, ஆர்.கே.வி.ரோடு, கொங்கலம்மன் கோவில் வீதி, முனிசிபல் காலனி, பெருந்துறைரோடு, கருங்கல்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கியதால் பொதுமக்கள் சிரமம் அடைந்தனர். இதேபோல் வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பியவர்கள் மழையில் நனைந்தபடி சென்றதை காணமுடிந்தது.

    பலத்த மழை காரணமாக ஈரோடு நாடார்மேடு கெட்டிநகர் பகுதியில் சாஸ்திரிநகர் செல்லும் சாலையில் மரம் முறிந்து விழுந்தது. இதனால் அந்த வழியாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டு பாதிப்பு ஏற்பட்டது.

    மேலும் மின் வயர்களும் அறுந்து விழுந்ததால் அந்த பகுதியில் மாலை 6 மணிஅ ளவில் இருந்து மின் வினியோகம் துண்டித்தது. நள்ளிரவிலும் மின் வினியோகம் சரி செய்யப்படாததால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

    இதேபோல் ஈரோடு மாநகரில் பல்வேறு இடங்களில் மின் தடை ஏற்பட்டது. ஈரோடு வ.உ.சி. பூங்கா காய்கறி மார்க்கெட்டு பின்பகுதியில் சேறும் சகதியுமாக காட்சி அளித்தது.

    இதேபோல் மாவட்டத்தில் அதிகபட்சமாக அம்மாபேட்டையில் 54 மி.மீட்டர் மழை பதிவாகி இருந்தது.

    பவானியில் சுமார் 3 மணி நேரம் பலத்த மழை பெய்தது இதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது. தாளவடியில் கடந்த 4 நாட்களாக இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதனால் தாளவாடி மலைப்பகுதியில் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.

    மாவட்டத்தின் முக்கிய அணைப்பகுதிகளான வரட்டு பள்ளம், குண்டேரி பள்ளம், பவானிசாகர், கொடிவேரி அணைப்பகுதி போன்றவற்றில் கடந்த சில நாட்களாக இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

    புஞ்சை புளியம்பட்டி சுற்றுவட்டார பகுதியில் நேற்று மாலை 3 மணியிலிருந்து 4 மணி வரை ஒரு மணி நேரம் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது .அப்போது மின்னல் தாக்கியதில் புஞ்சைபுளியம்பட்டி அருகே பொன்னம்பாளையத்தில் உள்ள பழமையான மதிப்பாபுரி அம்மன் கோவில் கோபுரம் சேதம் அடைந்தது.

    மேலும் கோபுரத்தில் உள்ள சில சாமி சிலைகளும் சேதம் அடைந்தது. மாவட்டத்தில் அக்னி நட்சத்திரம் வெயில் தொடங்கிய நாள் முதல் மாலை நேரங்களில் பரவலாக மழை பெய்து வருவதால் இரவு நேரங்களில் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.

    ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:

    அம்மாபேட்டை-54, தாளவாடி - 34.2, ஈரோடு - 23, பவானி - 10.8, குண்டேரி பள்ளம் - 8.2, வரட்டுபள்ளம் - 6.8, சென்னிமலை - 6.4, கோபி - 4.2, பெருந்துறை - 4, எலந்தகுட்டைமேடு-3.2, கொடிவேரி அணை - 3, சத்தியமங்கலம் - 2, பவானிசாகர் - 1.8.

    • சுரேஷ் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
    • போலீசார் சுரேசை கைது செய்தனர்.

    டி.என்.பாளையம்:

    ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் அடுத்த டி.ஜி.புதூர் சத்திரம் புதூர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 29). பெயிண்டர் வேலை செய்து வருகிறார்.

    இவர் டி.ஜிபுதூர் அரு உள்ள ஒரு காட்டு பகுதியில் மது குடித்து கொண்டி ருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் அந்த காட்டு பகுதி வழியாக சென்றார்.

    இதையடுத்து அந்த பகுதியில் மதுபானம் அருந்தி கொண்டிருந்த சுரேஷ் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

    இது குறித்து பாதிக்கப்ப ட்ட பெண்ணின் உறவினகள் பங்களாப்புதூர் போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இதில் சுரேஷ் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் சுரேசை கைது செய்தனர்.

    இதையடுத்து கைதான சுரேசை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோபிசெட்டிபாளையம் மாவட்ட சிறையில் அடைத்தனர்.

    • 7 பேர் பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர்.
    • கொரோனா பாதிப்புடன் 20 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு தடுப்பு நடவ டிக்கை காரணமாக கொரோனா பாதிப்பு குறைவாகவே இருந்து வந்தது. கடந்த ஒரு மாதமாக மீண்டும் தினசரி கொரோனா பாதிப்பு பதிவாகி வருகிறது.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக பாதிப்பை விட குணமடைந்து வருபவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    நேற்று சுகாதாரத்து றையினர் வெளியிட்டுள்ள பட்டியல்படி மாவட்டத்தில் மேலும் 2 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இதனால் மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 36 ஆயிரத்து 880 உள்ளது.

    கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்ற வந்த 7 பேர் பாதிப்பிலிருந்து குணமடைந்து நேற்று வீடு திரும்பினர். மாவட்டத்தில் இதுவரை 1 லட்சத்து 36 ஆயிரத்து 124 பேர் கொரோனா பாதிப்பி லிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

    கொரோனாவால் பாதிக்கப்பட்டு இதுவரை 736 பேர் உயிரி ழந்துள்ளனர். மாவட்டம் முழுவதும் கொரோனா பாதிப்புடன் 20 பேர் சிகிச்சை பெற்று வருகின்ற னர்.

    • தற்கொலை மிரட்டல் விடுத்த முருகன் பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார்.
    • தகவல் அறிந்ததும் கோபி போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே புது கலைப்புதூர் உள்ளது. இந்த பகுதியில் தனியாருக்கு சொந்தமான செல்போன் டவர் உள்ளது. இந்த செல்போன் டவர் 150 அடி உயரத்தில் உள்ளது.

    இந்நிலையில் இன்று காலை 8.50 மணி அளவில் கணபதிபாளையம் பகுதியை சேர்ந்த முருகன் (36) என்பவர் திடீரென அந்த 150 அடி உயரமுள்ள செல்போன் டவர் உச்சிக்கு ஏறினார்.

    பின்னர் செல்போன் டவரில் இருந்து கீழே குதித்து விடுவதாக தற்கொலை மிரட்டல் விடுத்தார். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது. தற்கொலை மிரட்டல் விடுத்த முருகன் பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் கோபி போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். இந்த செய்தி காட்டுத்தீ போல் பரவியதால் அதே பகுதி சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மக்கள் செல்போன் டவர் பகுதி அருகே வந்தனர்.

    கோபி இன்ஸ்பெக்டர் சண்முகவேலு, தாசில்தார் ருத்ரமூர்த்தி ஆகியோர் முருகனிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். இது குறித்து முருகன் உறவினர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரது உறவினர்களும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பு உபகரணங்களுடன் தயார் நிலையில் உள்ளனர். மேலும் அந்த பகுதியில் மின்சாரத்தையும் மின்வாரிய ஊழியர்கள் அனைத்து வைத்துள்ளனர்.

    இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

    • வனப்பகுதியில் இருந்து வந்த யானை பலாப்பழத்தை அங்கேயே பறித்து உண்டு ருசித்து சென்றது.
    • மலைப்பகுதியில் வசிக்கும் மலைவாழ் மக்கள் எப்போது தங்கள் குடியிருப்புக்குள் யானை வந்துவிடுமோ என்ற ஒரு வித அச்சத்தோடு இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    அந்தியூர்:

    அந்தியூர் அடுத்த பர்கூர் மலைப்பகுதி உள்ளது. இதில் 33 குக்கிராமங்கள் உள்ளன இந்த வன பகுதிகளில் யானை உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

    தற்போது பலாப்பழம் சீசன் தொடங்கியுள்ள நிலையில் அந்த வாசனைக்காக வனப்பகுதியொட்டி உள்ள தோட்டங்களில் உள்ள பலாமரங்களில் பலாப்பழங்களை ருசிப்பதற்காக யானைகள் வந்து பலத்தை ருசித்து செல்கிறது.

    இந்த நிலையில் பர்கூரை அடுத்த துருசன்னம்பாளையம் பகுதியில் மாது என்பவரது தோட்டத்தில் உள்ள பலா மரத்தில் பலாப்பழங்கள் பழுத்து தொங்கிக்கொண்டு இருந்தன. இதனை ருசிப்பதற்காக வனப்பகுதியில் இருந்து வந்த யானை பலாப்பழத்தை அங்கேயே பறித்து உண்டு ருசித்து சென்றது.

    அப்போது யானை மிகுந்த சத்தத்தோடு பிழிய படி சென்றது. இதனால் மாது மற்றும் குடும்பத்தார்யானையை துரத்த முயற்சித்தனர். அது அங்கிருந்து சென்று விட்டது இதனால் பர்கூர் மலைப்பகுதியில் வசிக்கும் மலைவாழ் மக்கள் எப்போது தங்கள் குடியிருப்புக்குள் யானை வந்துவிடுமோ என்ற ஒரு வித அச்சத்தோடு இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    ×