என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெண்ணை பலாத்காரம் செய்த பெயிண்டர் சிறையில் அடைப்பு
    X

    கைதான சுரேஷ்.

    பெண்ணை பலாத்காரம் செய்த பெயிண்டர் சிறையில் அடைப்பு

    • சுரேஷ் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
    • போலீசார் சுரேசை கைது செய்தனர்.

    டி.என்.பாளையம்:

    ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் அடுத்த டி.ஜி.புதூர் சத்திரம் புதூர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 29). பெயிண்டர் வேலை செய்து வருகிறார்.

    இவர் டி.ஜிபுதூர் அரு உள்ள ஒரு காட்டு பகுதியில் மது குடித்து கொண்டி ருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் அந்த காட்டு பகுதி வழியாக சென்றார்.

    இதையடுத்து அந்த பகுதியில் மதுபானம் அருந்தி கொண்டிருந்த சுரேஷ் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

    இது குறித்து பாதிக்கப்ப ட்ட பெண்ணின் உறவினகள் பங்களாப்புதூர் போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இதில் சுரேஷ் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் சுரேசை கைது செய்தனர்.

    இதையடுத்து கைதான சுரேசை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோபிசெட்டிபாளையம் மாவட்ட சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×