நாளை மின் பயனீட்டாளர் குறைதீர்க்கும் கூட்டம்

நாளை மின் பயனீட்டாளர் மாதாந்திர குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது.பயனீட்டாளர் குறை கோரிக்கைகள் தெரிவித்து தீர்வு பெறலாம்.
நாளை மின் பயனீட்டாளர் குறைதீர்க்கும் கூட்டம்
Published on

ஈரோடு:

ஈரோடு மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் முத்துவேல் தலைமையில் நாளை (புதன்கிழமை) காலை 11 மணிக்கு மின் பயனீட்டாளர் மாதாந்திர குறைதீர்க்கும் கூட்டம் ஈரோடு ஈ.வி.என் சாலையில் உள்ள மின் கோட்ட அலுவலகத்தில் நடக்கிறது.

இதில் சோலார், கணபதி பாளையம், கொடுமுடி, சிவகிரி, கஸ்தூரிபாய் கிராமம், அரச்சலூர், எழுமாத்தூர், மொடக்குறிச்சி , அனுமன்பள்ளி, முள்ளம்பரப்பு பகுதி பயனீட்டாளர் குறை கோரிக்கைகள் தெரிவித்து தீர்வு பெறலாம். 

X

Maalai Malar
www.maalaimalar.com