search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோபிசெட்டிபாளையத்தில் இன்று செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல் கொடுத்த வாலிபரலால் பரபரப்பு
    X

    கோபிசெட்டிபாளையத்தில் இன்று செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல் கொடுத்த வாலிபரலால் பரபரப்பு

    • தற்கொலை மிரட்டல் விடுத்த முருகன் பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார்.
    • தகவல் அறிந்ததும் கோபி போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே புது கலைப்புதூர் உள்ளது. இந்த பகுதியில் தனியாருக்கு சொந்தமான செல்போன் டவர் உள்ளது. இந்த செல்போன் டவர் 150 அடி உயரத்தில் உள்ளது.

    இந்நிலையில் இன்று காலை 8.50 மணி அளவில் கணபதிபாளையம் பகுதியை சேர்ந்த முருகன் (36) என்பவர் திடீரென அந்த 150 அடி உயரமுள்ள செல்போன் டவர் உச்சிக்கு ஏறினார்.

    பின்னர் செல்போன் டவரில் இருந்து கீழே குதித்து விடுவதாக தற்கொலை மிரட்டல் விடுத்தார். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது. தற்கொலை மிரட்டல் விடுத்த முருகன் பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் கோபி போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். இந்த செய்தி காட்டுத்தீ போல் பரவியதால் அதே பகுதி சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மக்கள் செல்போன் டவர் பகுதி அருகே வந்தனர்.

    கோபி இன்ஸ்பெக்டர் சண்முகவேலு, தாசில்தார் ருத்ரமூர்த்தி ஆகியோர் முருகனிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். இது குறித்து முருகன் உறவினர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரது உறவினர்களும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பு உபகரணங்களுடன் தயார் நிலையில் உள்ளனர். மேலும் அந்த பகுதியில் மின்சாரத்தையும் மின்வாரிய ஊழியர்கள் அனைத்து வைத்துள்ளனர்.

    இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

    Next Story
    ×