என் மலர்
ஈரோடு
- பண்ணாரியம்மன் கோவிலில் இன்று அதிகாலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
- பக்தர்கள் பலர் கூழ் மற்றும் பிரசாதம் வழங்கினர்.
ஈரோடு:
ஆடி மாத கடைசி வெள்ளி க்கிழமையையொட்டி சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணா ரி யம்மன் கோவிலில் இன்று அதிகாலை அம்மனுக்கு பால், தயிர், இளநீர் உள்பட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. ஆடி கடைசி வெள்ளி க்கிழமை என்பதால் அதி காலை முதலே ஏராளமான பக்தர்கள் கோவி லுக்கு வந்து அம்மனை வழிப ட்டனர். மேலும் பலர் குண்டம் வளர்க்கப்பட்ட இடத்தில் உப்பு, பிளகு மற்றும் மஞ்சள், குங்குமம் போட்டும், சூடம் ஏற்றியும் வழிபட்டனர்.
கோபி செட்டிபாளையம் அடுத்த பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவிலில் இன்று அம்மனுக்கு சிறப்பு அபிஷேம் செய்யப்பட்டது. தொடர்ந்து அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலி த்தார். மேலும் கோபி சாரதா மாரியம்மன், மொடச்சூர் பால மாரியம்மன், தான் தோன்றியம்மன், கொள்ப்ப லூர் பச்சை நாயகியம்மன், அளுக்குழி செல்லியாண்டி அம்மன், வாய்க்கால் மேடு முத்து மாரியம்மன், சீதா லட்சுமி புரம் தண்டு மாரியம்மன் உள்பட அனைத்து கோவில்களிலும் அம்மனுக்கு சிறப்பு பூஜை நட ந்தது. இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
பவானி நகரின் காவல் தெய்வமான செல்லியாண்டி அம்மன் மற்றும் மாரியம்மன் கோவிலில் ஆடி கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அல ங்காரம் செய்யப்பட்டு தீபாரதனை காட்டப்பட்டது. அதேபோல் வர்ணபுரம் சமயபுரம் மாரிய ம்மன் கோவில், மேற்குத் தெரு மாரியம்மன் கோவில், பழனிபு ரம் பட்டத்து அரசி அம்மன் கோவில், தேவபுரம் கருமாரி யம்மன் கோவில் உட்பட அனைத்து அம்மன் கோவி ல்களிலும் பக்தர்கள் பலர் கலந்து கொண்டு சாமி தரிச னம் செய்தனர்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் பஸ் நிலையம் அருகே புகழ் பெற்ற காவல் தெய்வமாக விளங்கும் பத்ரகாளியம்மன் ஆடி மாதம் தொடங்கியது முதலே அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் அபிஷேகம் செய்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். இதை தொடர்ந்து ஆடி கடைசி வெள்ளி க்கிழமை யான இன்று அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்ய ப்பட்டு அருள் பாலித்தார். இன்று கடைசி வெள்ளி என்பதால் ஆண்கள், பெண்கள் என ஏராளமான பக்தர்கள் கோவி லுக்கு வந்து அம்மனை தசித்து சென்றனர். இதனால் இன்று வழக்கத்தை விட கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.
சென்னிமலை காங்கேயம் ரோட்டில் உள்ள மாரி யம்மன் கோவிலில் சிறப்பு பூஜை வழிபாடு நடை பெற்றது. மாரியம்மன் சிறப்பு அலங்கா ரத்தில் அருள் பாலித்தார். இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு சாமி தரிச னம் செய்தனர். அதேபோல் சென்னி மலை அடுத்துள்ள முருங்க த்தொழுவு வாகை த்தொழுவு அம்மன் கோவிலில் கோ பூஜையுடன் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராள மான பெண்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்த னர். ஈங்கூர் தம்பிராட்டி அம்மன் கோவில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மேற்கு புதுப்பாளையம் அங்கா ளம்மன் கோவில் சென்னி மலை டவுன் பிராட்டி அம்மன், எல்லை மகாளி அம்மன் கோவி லிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
சிவகிரி பொன்காளி யம்மன், காமாட்சி அம்மன், எல்லை மாகாளியம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து அன்ன தானம் வழங்கப்பட்டது. கவுந்தப்பாடி ராஜ ராஜே ஸ்வரி புது மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்ய ப்பட்டு வழிபாடு நடந்தது. பு.புளியம்பட்டி நம்பியூர் ரோட்டில் உள்ள மாரிய ம்மன் மற்றும் பிளேக் மாரியம்மன் கோவிலில் இன்று காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்ய ப்பட்டது.
இதே போல்ஈரோடு பெரிய மாரியம்மனுக்கு இன்று சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து அம்மனுக்கு சிற ப்பு அலங்கா ரம் செய்யப்ப ட்டது. இன்று காலை முதலே பெண்கள் அதிகளவில் கோவி லுக்கு வந்து அம்மனை வழிப ட்டனர். பக்தர்கள் பலர் கூழ் மற்றும் பிரசாதம் வழங்கி னர்.
மேலும் ஈரோடு சின்ன மாரியம்மன் கோவிலில் இன்று காலை அம்மனுக்கு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. இதையொட்டி காலை முதலே ஏராளமான பக்தர்கள் வந்து அம்மனை வழிபட்டனர். இதே போல் மணி க்கூண்டு கொங்கலம்மன் கோவிலில் காலை வியா பாரிகள் மற்றும் பெண்கள், பக்தர்கள் என பலர் வந்து அம்மனை வழிபட்டனர். இதே போல் ஈரோடு ராஜாஜிபுரம் மாகாளிய ம்மன் கோவிலில் இன்று காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்ப ட்டது. இதையடுத்து அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரி தரிசனம் செய்தனர். மேலும் ஈரோடு காரை வாய்க்கால் மாரியம்மன், கருங்கல் பாளையம் சின்ன மாரியம்மன், ஓங்காளி யம்மன், சூரம்பட்டி மாரிய ம்மன், வீரப்பன்சத்திரம் மாரியம்மன், பார்க் ரோடு எல்லை மாரி யம்மன், கோட்டை பத்ரகா ளியம்மன் மற்றும் நகரில் உள்ள அனை த்து அம்மன் கோவி ல்களில் இன்று ஆடி கடைசி வெள்ளி யையொட்டி அதிகாலை யிலேயே பக்தர்கள் கோவி லுக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர்.
- அணைக்கு வினாடிக்கு 669 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
- வரட்டு பள்ளம் அணையின் நீர்மட்டம் 21.78 அடியாகவும் உள்ளது.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் மழைப்பொழிவு இல்லாததால் கடந்த சில நாட்களாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்து வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டமும் குறைந்து வருகிறது.
இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 83.44 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 669 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
அணையில் இருந்து காலிங்கராயன் பாசனத்திற்கு 500 கன அடி, தடப்பள்ளி- அரக்கன் கோட்டை பாசனத்திற்கு 400 கனஅடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 150 கனஅடி,
கீழ்பவானி வாய்க்காலுக்கு 5 கனஅடி என மொத்தம் அணையில் இருந்து 1055 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
குண்டேரி பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 26.29 அடியாகவும், பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 19.16 அடியாகவும், வரட்டு பள்ளம் அணையின் நீர்மட்டம் 21.78 அடியாகவும் உள்ளது.
- திடீர் சாலை மறியலால் பள்ளிக்கு சென்ற மாணவர்கள், வேலைக்கு சென்ற பணியாளர்கள், வியாபாரிகள் கடும் அவதி அடைந்தனர்.
- போராட்டத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த சாஸ்திரி நகர் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு கடந்த 10 நாட்களாக முறையாக குடிநீர் விநியோகிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் கடும் அவதி அடைந்து வந்தனர்.
இந்நிலையில் இன்று காலை 9 மணி அளவில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் காலி குடங்களுடன் ஒன்றாக திரண்டு வந்து சத்தி-மேட்டுப்பாளையம் சாலையில் திடீரென அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியாக சென்ற வாகனங்கள் சாலையின் இருபுறம் நீண்ட தூரம் அணிவகுத்து நின்றன.
இந்த திடீர் சாலை மறியலால் பள்ளிக்கு சென்ற மாணவர்கள், வேலைக்கு சென்ற பணியாளர்கள், வியாபாரிகள் கடும் அவதி அடைந்தனர்.
இதுகுறித்து பவானிசாகர் போலீசாருக்கும் மற்றும் அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
எங்கள் பகுதியில் கடந்த 10 நாட்களாக சரியாக குடிநீர் விநியோகிக்கப்படவில்லை. இந்த நாள் வரை நாங்கள் மிகவும் சிரமப்பட்டு வருகிறோம். இது குறித்து பலமுறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றனர்.
இதையடுத்து அதிகாரிகள் உங்கள் பகுதியில் சீரான குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதையேற்று பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து விலகி சென்றனர்.
இதனால் அந்த பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
- சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி தாளவாடி வட்டத்தில் உள்ள கார் மற்றும் ஜீப் உரிமையாளர்களுக்கு அனுமதிச்சீட்டு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
- அனுமதிச்சீட்டு மூலம் மருத்துவம் உள்ளிட்ட அவசர தேவைகளுக்கு இரவு நேரத்திலும் உள்ளூர் மக்கள் பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் வழியே சத்தியமங்கலம் -மைசூரு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்த வழியாக கனராக வாகனங்கள் அதிக அளவில் சென்று வருகின்றன. இரவு நேரங்களில் செல்லும் வாகனங்களில் அடிபட்டு வனவிலங்குகள் இறப்பது தொடர்கதையாகி வந்தது.
இதையடுத்து வனவிலங்குகள் நலன் கருதி சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி இந்த சாலையில் இரவு நேரத்தில் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன்படி மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை கனரக வாகனங்களும், இதர வாகனங்கள் இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்போது சத்தியமங்கலம் புலிகள் காப்பகப் பகுதியில் உள்ள தாளவாடி வட்டார மக்கள் அவசர தேவைகளுக்காக இரவு நேரத்திலும் பயணிக்க அனுமதிக்க வேண்டும் என்றும், அதற்காக அனுமதிச்சீட்டு (பாஸ்) வழங்கி வரைமுறைப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்து இருந்தது. இதன்படி தாளவாடி வட்டார மக்களுக்கு வாகன அனுமதிச்சீட்டு வழங்க வருவாய்த்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
நீதிமன்றம் உத்தரவின்படி சத்தியமங்கலம்-மைசூரு சாலையில் இரவு போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. இதன்படி பண்ணாரி மற்றும் காரப்பள்ளம் சோதனைச் சாவடிகளில் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படுகின்றன. இதில் உள்ளூர் மக்களுக்கு விலக்களிக்க வகை செய்யப்பட்டுள்ளது.
தற்போது அவசர தேவைகளுக்காக இந்த சாலையில் பயணிக்கும் உள்ளூர் மக்கள் தங்களின் ஆதார் அட்டையை காட்டினால் அனுமதிக்கப்படுகின்றனர். இதை வரைமுறைப்படுத்தும் வகையில் தாளவாடி வட்டாரத்தில் உள்ள 10 ஊராட்சிகளை சேர்ந்த மக்கள் பயன்படுத்தும் வாகனங்களுக்கு வருவாய்த்துறை மூலம் வாகன அனுமதிச்சீட்டு வழங்கப்படவுள்ளது. இந்த அனுமதிச்சீட்டு மூலம் மருத்துவம் உள்ளிட்ட அவசர தேவைகளுக்கு இரவு நேரத்திலும் உள்ளூர் மக்கள் பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்து தாளவாடி வட்டாட்சியர் ரவிசங்கர் கூறும்போது, சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி தாளவாடி வட்டத்தில் உள்ள கார் மற்றும் ஜீப் உரிமையாளர்களுக்கு அனுமதிச்சீட்டு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே வாகன உரிமையாளர்கள் தங்களது வாகன ஆர்.சி.புத்தகம், ஆதார் கார்டு, ஓட்டுநர் உரிமம் ஆகியவைகளின் ஜெராக்ஸ் நகல்களை சம்மந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர்களிடம் வழங்கி அனுமதிச்சீட்டு பெற விண்ணப்பிக்கலாம் என்றார்.
- மயில் வாகனத்தில் சுப்ரமணியர் உடன் வள்ளி, தெய்வானை கோவிலை சுற்றி வலம் வந்தனர்.
- இதில் பக்தர்கள் காவடி எடுத்து ஆடிக்கொண்டும், வேல்கள் எடுத்தும் நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.
பு.புளியம்பட்டி:
புஞ்சைபுளியம்பட்டி பவானிசாகர் சாலையில் தண்டாயுதபாணி சுவாமி சுப்ரமணியர் கோவில் உள்ளது.
இக்கோவிலில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு மூலவர் சுப்பிரமணியருக்கும் உற்சவர் சுப்பிரமணியர் உடன் வள்ளி, தெய்வானைக்கும் பால், தயிர், திருமஞ்சனம், இளநீர் உள்ளிட்ட வாசனை திரவியங்கள் அபிஷேக ஆராதனை செய்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து மயில் வாகனத்தில் சுப்ரமணியர் உடன் வள்ளி, தெய்வானை கோவிலை சுற்றி வலம் வந்தனர். இதில் பக்தர்கள் காவடி எடுத்து ஆடிக்கொண்டும், வேல்கள் எடுத்தும் நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.
பின்னர் சுப்பிரமணியர் உடன் வள்ளி, தெய்வானையை ஊஞ்சலில் அமர்த்தி பக்தி பாடல்கள் பாடி தாலாட்டு வழிபட்டனர். அதைத்தொடர்ந்து கோவில் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
- வெள்ளைப்பாறை முனியப்பசாமி திருக்கோவில் பொங்கல் திருவிழா நடைபெற்றது.
- இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மொடக்குறிச்சி:
மொடக்குறிச்சி ஒன்றியம் 46 புதூர் ஊராட்சிக்கு உட்பட்ட நொச்சிக்காட்டுவலசு பகுதியில் இந்து சமய அறநிலையத்து றைக்கு சொந்தமான அருள்மிகு வெள்ளைப்பாறை முனியப்பசாமி திருக்கோவில் பொங்கல் திருவிழா நடைபெற்றது.
திருவிழாவை முன்னிட்டு சுவாமிக்கு கரகம் எடுத்தல், காவிரியில் தீர்த்தம் எடுத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அதனை தொடர்ந்து பொங்கல் வைத்தல் நிகழ்ச்சியும், பெருபூஜை செய்த நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதைதொடர்ந்து இரவு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
இதையடுத்து இன்று மாலை மறுபூஜை செய்வதுடன் பொங்கல் திருவிழா நிறைவு பெற உள்ளது.
- குப்புசாமி பூச்சி கொல்லி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
- தாளவாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் தாளவாடி சூசைபுரத்தை சேர்ந்தவர் குப்புசாமி (வயது 65). விவசாயியான இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் குப்புசாமி கடந்த சில நாட்களாக மதுப்பழக்கத்தை விட முடியாமல் மனவேதனையில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று குப்புசாமி பூச்சி கொல்லி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
இதைப்பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக தாளவாடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் குப்புசாமி வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து தாளவாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கொடுமுடி வட்டத்திற்குட்பட்ட சிவகிரி பகுதியில் மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது.
- அரசு துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா வழங்கி னார்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம், கொடுமுடி வட்டம், சிவகிரி யில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் 190 பயனாளிகளுக்கு ரூ.58.18 லட்சம் மதிப்பீட்டிலான பல்வேறு அரசு துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா வழங்கி னார்.
இம்முகாமில் கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்ததாவது:
ஈரோடு மாவட்டத்தில் அனைத்துத்துறைகளின் சார்பில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு வளர்ச்சித்திட்டப் பணிகள் சிறப்புடன் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி கொடுமுடி வட்டத்திற்குட்பட்ட சிவகிரி பகுதியில் மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது.
மனுநீதி முகாமில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, மகளிர் திட்டம், வே ளாண்மை உழவர்நலத்துறை மற்றும் தோட்டக்க லைத்து றை உள்ளிட்ட துறைகளின் சார்பில் 190 பயனாளிகளுக்கு ரூ.58.18 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது.
அரசின் திட்டங்களை பொதுமக்கள் நல்ல முறை யில் அறிந்து கொண்டு பயன்பெற வேண்டு மெனவும், இன்றைய தினம் பொதுமக்க ளிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பெறப்பட்டு ள்ள மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொ ள்ளப்படும்.
ஈரோடு மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை தொடர்பாக நடை பெற்று வரும் முகாம்களை வருகின்ற 16-ந் தேதி வரை பயன்படுத்திக் கொள்ள லாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து வருவாய் மற்றும் பேரிடர் மேலா ண்மைத்துறையின் சார்பில் 9 பயனாளிகளுக்கு ரூ.9,00,000 மதிப்பீட்டில் இலவச வீட்டு மனைப்பட்டா க்களும், 4 பயனாளிகளுக்கு வாரிசு சான்றும்,
2 பயனாளிகளுக்கு சிறு, குறு விவசாய சான்றும், 58 பயனாளிகளுக்கு ரூ.26,74,043 மதிப்பீட்டில் ரயத்துமனை நிறுத்தப்பட்ட இனங்களும், 11 பயளாளிகளுக்கு நத்தம் பட்டா மாறுதல் ஆணையி னையும்,
25 பயனாளிகளுக்கு இணைவழி உட்பிரிவு, நத்தம் உட்பிரிவு பட்டா மாறுதல் ஆணையினையும், சமுக பாதுகாப்பு திட்ட த்தின் கீழ் 35 பயனா ளிகளுக்கு ரூ.5,08,500 மதிப்பீட்டிலான பல்வேறு உதவித்தொகை யினையும் வழங்கப்பட்டது.
12 பயனாளிகளுக்கு குடும்ப அட்டை மற்றும் நகல் அட்டையினையும், மகளிர் திட்டத்தின் சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.6,00,000 மதிப்பீட்டிலான கடனுதவினையும் மற்றும் வேளாண்மை உழவர் நலத்துறை, வேளாண்மை பொறியியல்துறை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் 20 பயனாளிகளுக்கு ரூ.11,35,567 மதிப்பீட்டிலான வேளாண் உபகரணங்களும் என 190 பயனாளிகளுக்கு ரூ.58,18,110 மதிப்பீட்டில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
முன்னதாக இம்முகாமில் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்களிடமிருந்து பெற்றுக்கொண்டு இம்மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொ ள்ளுமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
தொடர்ந்து தமிழ்நாடு அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகளை விளக்கிடும் வகையில் வேளாண்மை-உழவர் நலத்துறை, தோட்ட க்கலை மற்றும் மலைப்ப யிர்கள்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்து றை,
பொது சுகாதாரம் மற்றும் மருத்துவத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டம், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை ஆகிய துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளையும் பார்வையிட்டார்.
- கோபி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச்சங்கத்தில் வாழைப்பழங்கள் ஏலம் நடைபெற்றது.
- வெளியூர் மற்றும் உள்ளூர் வியாபாரிகள் ஏலத்தில் கலந்து கொண்டு வாங்கி சென்றனர்.
கோபி:
கோபி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச்சங்கத்தில் வாரந்தோறும் புதன் மற்றும் சனிக்கிழமை வாழைப்பழங்கள் ஏலம் நடைபெற்று வருகிறது.
இதில் கோபி, கவுந்தப்பாடி, டி.என்.பாளையம், பங்களா புதூர், அழுக்குளி, குரு மந்தூர், குன்னத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான விவசாயிகள் வாழைப்பழத்தார்களை கொண்டு வந்து ஏலத்தில் கலந்து கொள்கிறார்கள்.
இந்த நிலையில் நேற்று நடைபெற்ற வாழைப்பழங்கள் ஏலத்தில் கதலி கிலோ ரூ.62-க்கும், நேந்திரன் கிலோ ரூ.43-க்கும் விலை சென்றது.
பூவன் ஒருத்தார் ரூ.460- க்கும், தேன் வாழை ரூ.710-க்கும், செவ்வாழை ரூ.1000-க்கும் ரொபஸ்டா ரூ.400-க்கும் மொந்தன் ரூ.380- க்கும், ரஸ்தாளி ரூ.510-க்கும்,
பச்சை நாடன் ரூ.420-க்கும் ஏலத்தில் விற்பனையானது. வெளியூர் மற்றும் உள்ளூர் வியாபாரிகள் ஏலத்தில் கலந்து கொண்டு வாங்கி சென்றனர்.
மொத்தத்தார் வரத்து 5140 ஆகும். அதன் மதிப்பு ரூ.9 லட்சத்து 47 ஆயிரம் ஆகும்.
- சட்ட விரோதமாக மது விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது.
- 8 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
ஈரோடு:
ஈரோடு அண்ணா தியேட்டர் பகுதியில் சட்ட விரோதமாக மது விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது.
அதன்பேரில் ஈரோடு வடக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மது விற்பனையில் ஈடுபட்டிருந்த புதுக்கோட்டை மாவட்டம் இரும்பநாடு பகுதியை சேர்ந்த வீரமுத்து மகன் தவமணிசெல்வம் (வயது 23) என்பவரை கைது செய்தனர்.
பின்னர் அவரிடமிருந்த 8 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். அறச்சலூர் தலவுமலை எல்பிபீ வாய்க்கால் அருகே மது விற்பனையில் ஈடுபட்டதாக குறிஞ்சி நகரை சேர்ந்த விஜயன் (36) என்பவரை போலீசார் கைது செய்து 8 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
- விஜயக்குமார் சம்பவத்தன்று மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
- கோபி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கோபி:
ஈரோடு மாவட்டம் கோபி நாகமலை எக்ஸ்ட ன்சன் வாய்க்கால் சாலை யை சேர்ந்தவர் விஜயக்கு மார் (வயது 34). கார்களுக்கு பெயிண்ட் அடிக்கும் பெயி ண்டராக வேலை பார்த்து வந்தார்.
விஜயக்குமாருக்கு கடந்த ஒரு வருடத்திற்கு முன் ஏற்பட்ட விபத்தில் உடல்நி லை பாதிக்கப்பட்டு, அவர் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் விஜயக்குமாருக்கு தொட ர்ந்து வலி இருந்து வந்து ள்ளது. இதனால் மதுப்பழக்கத்திற்கு அடிமையான விஜயக்குமார் சம்பவத்தன்று மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
இதைப்பார்த்த விஜயக்குமாரின் மனைவி சத்யா, விஜயக்குமாரை மீட்டு முத லுதவி சிகிச்சைக்காக கோ பி அரசு மருத்துவமனை யில் சேர்த்தார்.
பின்னர் மே ல்சிகிச்சைக்காக பெருந்து றையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டார். இந்நிலை யில் அங்கு சிகிச்சை பெற்று வந்த விஜயக்குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழ ந்தார்.
இது குறித்து கோபி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
- தூங்கி கொண்டிருந்த மாதேஷிற்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது.
- மருத்துவர்கள் மாதேஷ் மாரடைப்பால் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் பர்கூர் பிஜிலிபாளையத்தை சேர்ந்தவர் பொம்மன். இவரது மகன் மாதேஷ் (வயது 28). கூலி தொழிலாளியான இவருக்கு ஜோதி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.
ஜோதியின் அப்பாவுக்கு உடல் நிலை சரியில்லாததால் அவரை பார்க்க மாதேஷ் குடும்பத்தினருடன் கடம்பூர் காடகநல்லி சென்று தங்கியிருந்தார்.
இந்நிலையில் சம்பவத்தன்று தூங்கி கொண்டிருந்த மாதேஷிற்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து 108 ஆம்புலன்சு மூலம் மாதேஷை பசுவனபுரத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அதைத்தொடர்ந்து மேல்சிகிச்சைக்காக சத்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மாதேஷ் மாரடைப்பால் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து கடம்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






