search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "The Minister"

    • இறந்தவர்களின் உடல்களை சொந்த ஊருக்கு அனுப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
    • இந்த விபத்து குறித்து ஆய்வு செய்வதற்காக அமைச்சர் சுப்பிரமணியன் மதுரை வந்தார்.

    மதுரை

    மதுரையில் இன்று உத்தரபிரதேசத்தில் இருந்து ஆன்மீக சுற்றுலா ரெயில் தீ விபத்து ஏற்பட்டு 9 பேர் உயிரிழந்தனர். 8 பேர் படுகாயமடைந்து மதுரை ரெயில்வே மருத்துவ மனையிலும் மதுரை அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்ற னர்.

    இந்த விபத்து குறித்து ஆய்வு செய்வதற்காக அமைச்சர் சுப்பிரமணியன் மதுரை வந்தார். அவர் தீ விபத்தில் உயிரிழந்த நபர்களின் உறவினர்கள் மற்றும் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள பயணிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை விபரங்களை கேட்டறிந்தார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறிய தாவது:-

    இன்று காலை 5 மணி அளவில் உத்தரபிரதேசத்தில் இருந்து ஆன்மீக சுற்றுலா வந்த பயணிகள் 64 பேர் திருப்பதியில் தரிசனம் செய்துவிட்டு பின்பு மதுரை வந்து மீனாட்சியம்மன் கோவில் மற்றும் ராமேசுவரம் செல்ல இருந்த நிலையில் எதிர்பாராத விதமாக 5 மணி அளவில் டீ போடுவதற்காக அடுப்பை பற்ற வைக்கும் போது விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் காயம் அடைந்த நபர்களுக்கும் மருத்துவ உதவிகள் செய்ய தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

    இறந்த நபர்களின் உடல்கள் விரைவாக பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினரிடம் ஒப்படைக்கப் படும். மேலும் அவர்களின் உடல்களை சொந்த ஊருக்கு எடுத்துச் செல்வதற்கு ஏற்பாடு செய்திருக்கிறோம்.

    சி.டி.ஸ்கேன், இ.சி.ஜி. போன்ற மருத்துவ பரிசோ தனைகள் செய்யப்பட்டு ரெயிலில் வந்த பயணிகளை பத்திரமாக அவர்களின் சொந்த ஊருக்கு அனுப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

    விபத்து நடந்த தகவல் தெரிந்த உடனே அமைச்சர் மூர்த்தி, மதுரை மாவட்ட கலெக்டர், மாநகராட்சி ஆணையாளர் ஆகியோர் நேரில் வந்து வேண்டிய உதவிகளை செய்துள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறி னார்.

    • கீழ்பவானி வாய்க்கால் பகுதிகளில் மேற்கொள்ளப் பட்டு வரும் புனரமைப்பு பணிகளை தற்போது ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
    • அத்திக்கடவு அவிநாசி திட்டப்பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் நம்பியூர் வட்டத்திற்குட்பட்ட கூடக்கரை மற்றம் எலத்தூர் செட்டிபாளையம் ஆகிய பகுதிகளில் கீழ்பவானி திட்டத்தின் கீழ் வாய்க்கால் பகுதிகள் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப் பட்டு வருவதை கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா முன்னிலையில், வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித் துறை, மதுவிலக்கு, ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    இந்த ஆய்வின்போது அமைச்சர் முத்துசாமி தெரிவித்ததாவது:

    பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி திட்ட பிரதானக் கால்வாய் இரட்டைப்படை மதகுகள் மற்றும் சென்ன சமுத்திரம் பகிர்மானக் கால்வாய் ஒற்றைப்படை மதகுகள் பாசனத்திற்காக வருகின்ற 15-ந் தேதி தண்ணீர் திறந்து விட உத்தரவிட்டுள்ளார்கள்.

    அதனைத்தொடர்ந்து கீழ்பவானி வாய்க்கால் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் புனரமைப்பு பணிகளை தற்போது ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    புனரமைப்பு பணிகளில் 2 இடங்களில் மட்டும் பணிகளை வேகப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. அந்த பணிகளும் தற்போது வேகமாக நடைபெற்று வருகிறது.

    அதேப்போன்று பெரும்பாலான இடங்களில் புனரமைப்பு பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டுள்ளது. ஒருசில இடங்களில் நடைபெற்று வரும் பணிகளும் ஒன்று அல்லது 2 நாட்களுக்குள் முடிக்கப்படும்.

    மேலும் வாய்க்கால் சுத்தம் செய்யும் பணிகளும் தொடர்ந்து நடைபெறும். மேற்கொள்ளப்பட்டு வரும் புனரமைப்பு பணிகளை தொடர்புடைய அலுவலர்கள் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றார்கள்.

    அதேபோன்று அத்திக்கடவு அவிநாசி திட்டப்பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. அந்த பணிகளும் விரைவாக முடிக்கப்படும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இந்த ஆய்வின்போது கண்காணிப்பு பொறியாளர் மன்மதன், கீழ்பவானி வடிநில கோட்ட செயற்பொறியளார் அருள் அழகன், நம்பியூர் பேரூராட்சி தலைவர் செந்தில்குமார், நம்பியூர் தாசில்தார் மாலதி, அரசு அலுவலர்கள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    ×