என் மலர்
உள்ளூர் செய்திகள்

சுதந்திர தினத்தில் 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்
- ஈரோடு மாவட்டம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
- ரெயில்வே போலீசார் மெட்டல் டிடெக்டர் கருவியுடன் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஈரோடு:
நாடு முழுவதும் சுதந்திர தினவிழா வரும் 15-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. சுதந்திர தினவிழா எந்த ஒரு அசம்பாவிதம் இல்லாமலும், அமைதியான முறையில் கொண்டாடும் வகையில் ஈரோடு மாவட்ட போலீஸ் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
சுதந்திர தினத்திற்கு இன்னும் 4 நாட்களே இருக்கும் நிலையில் மாவட்டம் முழுவதும் தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன்படி ஈரோடு மாவட்டம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியிலும், தீவிர கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெற்று விடாமல் தடுக்கும் வகையில் வாகன சோதனை, தங்கும் விடுதிகளில் சோதனை ஆகியவை மேற்கொள்ளப் பட்டுள்ளது.
ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
குறிப்பாக ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானி லட்சுமி நகர் சோதனை சாவடி, கருங்கல்பாளையம் சோதனை சாவடி, நொய்யல் ஆற்று சோதனை சாவடி, பண்ணாரி அம்மன் சோதனை சாவடி, பர்கூர் சோதனை சாவடி,
தாளவாடி அருகே உள்ள தமிழக-கர்நாடகா எல்லை பகுதியில் உள்ள காரப்பள்ளம் சோதனை சாவடி என மாவட்டம் முழுவதும் 13 சோதனை சாவடிகளில் 24 மணி நேரமும் போலீசார் சுழற்சி முறையில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஈரோடு மாவட்டத்திற்கு வரும் வாகனங்கள் கடும் சோதனைக்கு பிறகு உள்ளே அனுமதிக்கப் படுகின்றன.
இது தவிர ஆங்காங்கே கூடுதலாக தற்காலிக சோதனை சாவடிகள் அமைத்து வாகனங்களை தீவிரமாக கண்காணிக்கவும் போலீசார் முடிவு செய்துள்ளனர்.
இரவு நேர ரோந்து பணியில் கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் மாவட்டம் முழுவதும் ஈடுபட்டு வருகின்றனர்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள 5 சப்-டிவிஷனில் உள்ள டி.எஸ்.பி.க்கள் தலைமையில் அந்தந்த பகுதியில் உள்ள தங்கும் விடுதியில் போலீசார் சோதனை செய்து வருகின்றனர். சோதனையில் விடுதியில் யார், யார் தங்கி உள்ளனர். அவர்கள் பெயர், முகவரி பின்னணி குறித்து விவரங்களை சேகரித்து வருகின்றனர்.
மேலும் தங்கும் விடுதி மேலாளர்களிடம் சந்தேகப்படும்படி யாரும் இருந்தால் போலீஸ் உயர் அதிகா ரிகளுக்கும், அருகில் இருக்கும் போலீஸ் நிலையத்திலும் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.
இந்த போலீஸ் சுதந்திர தினத்தன்று ஈரோடு மாவட்டத்தில் மக்கள் அதிகம் கூடும் இடங்கள், வழிபாட்டு தலங்களில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
ஈரோடு பன்னீர்செல்வம் பார்க், காளை மாட்டு சிலை, ஜி.எச். ரவுண்டானா, ஸ்வஸ்திக் கார்னர், கோபி, அந்தியூர், பவானி, பெருந்துறை, சத்தியமங்கலம், மொடக்குறிச்சி, கொடுமுடி என மாவட்டம் முழுவதும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட உள்ளனர்.
இதேப்போல் பெரிய பெரிய வணிக வளாகங்களையும் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
ஈரோடு ெரயில் நிலையம் நுழைவாயிலில் ெரயில்வே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஒவ்வொரு நடைமேடையாக சென்று ெரயில்வே போலீசார் மெட்டல் டிடெக்டர் கருவியுடன் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் ஒவ்வொரு பயணிகளின் உடைமைகளையும் தீவிரமாக சோதனை செய்து அதன் பிறகே அவர்கள் ெரயில் நிலையத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.
குறிப்பாக வட மாநிலத்தில் இருந்து வரும் வாலிபர்களின் பெயர், அவர்கள் எங்கு தங்கி பணி புரிகின்றனர் போன்ற விவரங்களை சேகரிக்கின்றனர்.
இதேபோல் காவிரிக்கரை ெரயில்வே இரும்பு பாலத்தில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்டம் சுதந்திர தினத்தை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.






