search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Gopi Pachainayake Amman Temple"

    • பெண்கள் மட்டும் பங்கேற்ற 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
    • பச்சைநாயகி அம்மனுக்கு ஊஞ்சல் பாடல்கள் பாடி வழிபாடு நடைபெற்றது.

    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள கொளப்பலூர் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ பச்சை நாயகி அம்மன் திருக்கோவிலில் ஆடி மாத கடைசி வெள்ளியையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    இதில் முக்கிய நிகழ்ச்சியாக பெண்கள் மட்டும் பங்கேற்ற 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

    இதில் ஏராளமான பெண்கள் மஞ்சள், குங்குமம், சந்தனம், விபூதி, பழம், தேங்காய் உள்ளிட்டவற்றை வைத்து படையலிட்டு திருவிளக்கேற்றி மக்கள் நலன் வேண்டியும், குடும்பம் செழிக்கவும், மழை வேண்டியும் வழிபாடு செய்தனர்.

    பச்சைநாயகி அம்மன் சந்தனக்காப்பு அலங்காரத்திலும், திருவிளக்கு பூஜை நடைபெறும் இடத்தில் பச்சை நாயகி அம்மன் வளையல்கள் மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு ஊஞ்சலில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    அதனைத்தொடர்ந்து ஊஞ்சல் அலங்காரத்தில் காட்சி அளித்த பச்சைநாயகி அம்மனுக்கு ஊஞ்சல் பாடல்கள் பாடி வழிபாடு நடைபெற்றது.

    இந்த சிறப்பு பூஜையில் கொளப்பலூர், காமராஜ் நகர், சிறுவலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    ×