என் மலர்
கடலூர்
கடலூர் நகராட்சிப் பகுதியில் முகக்கவசம் அணியாத 230 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இந்த நடவடிக்கை தொடர்ந்து நடைபெறும் என்று நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடலூர்:
கடலூர் நகராட்சிப் பகுதியில் கொரோனா தடுப்பு நடவடிக்கை பணிகள் நடைபெற்று வருகிறது. நகராட்சி அதிகாரிகள் மற்றும் சுகாதாரத் துறையினர் வீடுதோறும் சென்று காய்ச்சல், இருமல், சளி போன்ற கொரோனா நோய்க்கான அறிகுறிகள் உள்ளதா? என்பதை சோதனை செய்து வருகிறார்கள். மேலும், கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும், கைகளை சோப்புப் போட்டு நன்றாக கழுவ வேண்டும் போன்ற அறிவுரைகளையும் வழங்கி வருகிறார்கள். ஆனால், ஒருசிலர் இந்த விதிமுறைகளை மீறி சுற்றித்திரிகிறார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.
குறிப்பாக முகக்கவசம் அணியாமல் வெளியே வரும் நபர்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்க உத்தரவிடப்பட்டது. அதன்படி நேற்று கடலூர் நகராட்சிக்குட்பட்ட 45 வார்டுகளிலும் அதிகாரிகள், போலீசாரைக் கொண்ட 11 குழுக்கள் அமைக்கப்பட்டது. அந்த குழுவினர் 45 வார்டுகளிலும் ஆய்வு செய்து முகக்கவசம் அணியாமல் வந்த 230 நபர்களை பிடித்தனர். அவர்களுக்கு தலா ரூ.100 அபராதம் விதித்தனர். மொத்தம் 230 பேரிடமிருந்து ரூ.23 ஆயிரம் அபராதமாக வசூலித்தனர். இந்த நடவடிக்கை தொடர்ந்து நடைபெறும் என்று நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடலூர் நகராட்சிப் பகுதியில் கொரோனா தடுப்பு நடவடிக்கை பணிகள் நடைபெற்று வருகிறது. நகராட்சி அதிகாரிகள் மற்றும் சுகாதாரத் துறையினர் வீடுதோறும் சென்று காய்ச்சல், இருமல், சளி போன்ற கொரோனா நோய்க்கான அறிகுறிகள் உள்ளதா? என்பதை சோதனை செய்து வருகிறார்கள். மேலும், கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும், கைகளை சோப்புப் போட்டு நன்றாக கழுவ வேண்டும் போன்ற அறிவுரைகளையும் வழங்கி வருகிறார்கள். ஆனால், ஒருசிலர் இந்த விதிமுறைகளை மீறி சுற்றித்திரிகிறார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.
குறிப்பாக முகக்கவசம் அணியாமல் வெளியே வரும் நபர்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்க உத்தரவிடப்பட்டது. அதன்படி நேற்று கடலூர் நகராட்சிக்குட்பட்ட 45 வார்டுகளிலும் அதிகாரிகள், போலீசாரைக் கொண்ட 11 குழுக்கள் அமைக்கப்பட்டது. அந்த குழுவினர் 45 வார்டுகளிலும் ஆய்வு செய்து முகக்கவசம் அணியாமல் வந்த 230 நபர்களை பிடித்தனர். அவர்களுக்கு தலா ரூ.100 அபராதம் விதித்தனர். மொத்தம் 230 பேரிடமிருந்து ரூ.23 ஆயிரம் அபராதமாக வசூலித்தனர். இந்த நடவடிக்கை தொடர்ந்து நடைபெறும் என்று நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
முககவசம் அணியாமல் சுற்றித்திரிந்த 201 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் கொரோனா பரவுவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் வருகிற 30-ந்தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பொதுமக்கள் முக கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். அடிக்கடி சோப்பு போட்டு கைகளை கழுவ வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால் இதை பெரும்பாலானோர் கண்டுகொள்ளவில்லை.
இதையடுத்து ஊரடங்கு உத்தரவை மீறி சுற்றித்திரிபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டர் அன்புசெல்வன் உத்தரவிட்டார். அதேபோல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ்வும் கொரோனா நோயை பரப்பும் வகையில் சுற்றித்திரிபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய போலீசாருக்கு உத்தரவிட்டார்.
அதன்படி நேற்று மாவட்டம் முழுவதும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஊரடங்கு உத்தரவை மீறி முக கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
கடலூரில் புதுநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயகுமார் மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். முக கவசம் அணியாமல் வந்தது தொடர்பாக மாவட்டத்தில் மொத்தம் 201 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 96 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டனர். இது தவிர நகராட்சி அதிகாரிகளும் முக கவசம் அணியாமல் சென்ற நபர்களுக்கு தலா ரூ.100 அபராதம் விதித்தனர்.
கடலூர் மாவட்டத்தில் கொரோனா பரவுவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் வருகிற 30-ந்தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பொதுமக்கள் முக கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். அடிக்கடி சோப்பு போட்டு கைகளை கழுவ வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால் இதை பெரும்பாலானோர் கண்டுகொள்ளவில்லை.
இதையடுத்து ஊரடங்கு உத்தரவை மீறி சுற்றித்திரிபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டர் அன்புசெல்வன் உத்தரவிட்டார். அதேபோல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ்வும் கொரோனா நோயை பரப்பும் வகையில் சுற்றித்திரிபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய போலீசாருக்கு உத்தரவிட்டார்.
அதன்படி நேற்று மாவட்டம் முழுவதும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஊரடங்கு உத்தரவை மீறி முக கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
கடலூரில் புதுநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயகுமார் மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். முக கவசம் அணியாமல் வந்தது தொடர்பாக மாவட்டத்தில் மொத்தம் 201 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 96 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டனர். இது தவிர நகராட்சி அதிகாரிகளும் முக கவசம் அணியாமல் சென்ற நபர்களுக்கு தலா ரூ.100 அபராதம் விதித்தனர்.
வேப்பூர் அருகே மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேப்பூர்:
பெண்ணாடம் அருகே எறையூரை சேர்ந்தவர் கொளஞ்சிநாதன் மகன் ஆனந்தன் (வயது 26). இவரது மோட்டார் சைக்கிளை உறவினரான வெண்கரும்பூர் கிராமத்தை சேர்ந்த கோவரத்தினம் மகன் சந்திரசேகர் (35) என்பவர் தனது சொந்த வேலைக்காக வேப்பூருக்கு எடுத்து சென்றுள்ளார். அங்கு கூட்டுரோடு பகுதியில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு தனது நண்பர்களுடன் டீ குடிக்க அருகில் இருந்த கடைக்கு சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது அந்த மோட்டார் சைக்கிளை காணவில்லை. அதனை மர்மநபர் திருடிச்சென்றது தெரிந்தது.
இது குறித்த புகாரின் பேரில் வேப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் நேற்று வேப்பூர் இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையிலான போலீசார் அப்பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் வேப்பூர் அடுத்த பெரியநெசலூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த கோவிந்தசாமி மகன் சுரேஷ் (32) என்பதும், இவர் சந்திரசேகர் நிறுத்திவிட்டு சென்ற மோட்டார் சைக்கிளை திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து சுரேசை போலீசார் கைது செய்தனர்.
கடலூர் நகராட்சி பகுதியில் கொரோனாவை கட்டுப்படுத்த 9 துணை கலெக்டர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் வீடு, வீடாக சென்று ஆய்வு செய்து பரிசோதனை செய்ய உள்ளதாகவும் கலெக்டர் அன்புசெல்வன் கூறினார்.
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 550-யை தாண்டி விட்டது. இருப்பினும் சென்னையில் இருந்து வருவோரால் பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சிலர் இ-பாஸ் இல்லாமலும் வருகிறார்கள்.
அவர்களை கண்டறிய அதிகாரிகள் சிரமப்பட்டு வருகிறார்கள். இருப்பினும் நகரப்பகுதிக்குள் வருவோர் யாருக்கும் தெரியாமல் இருக்கிறார்கள். இவர்களையும் கண்டறிந்து, அவர்களுக்கு பரிசோதனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
இது பற்றி மாவட்ட கலெக்டர் அன்புசெல்வன் நிருபர்களிடம் கூறியதாவது:-
சென்னை மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து கடலூர் மாவட்டத்திற்கு வருவோரால் தான் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன்படி கடலூர் நகராட்சி பகுதிக்கு வருவோரை கண்டறிந்து, அவர்களுக்கு பரிசோதனை செய்யவும் முடிவு செய்துள்ளோம்.
கடலூர் நகராட்சியில் 45 வார்டுகள் உள்ளன. அதில் 5 வார்டுக்கு ஒரு துணை கலெக்டர் வீதம் 9 துணை கலெக்டர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் கட்டுப்பாட்டு பகுதியில் கிருமி நாசினி தெளித்தல், பிளச்சிங் பவுடர் போடுதல், கபசுரகுடிநீர் வழங்குதல் போன்ற பணிகளை மேற்கொண்டு, ஆய்வு செய்வார்கள்.
மேலும் வீடு, வீடாக சென்று ஆய்வு செய்து, காய்ச்சல், இருமல், சளி உள்ளவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்வார்கள். இது தவிர 50 வீடுகளுக்கு ஒரு செவிலியர் வீதம் நியமிக்கப்பட்டு, அனைவருக்கும் பரிசோதனை செய்ய உள்ளார்கள்.
வெளியூர்களில் இருந்து கிராமங்களுக்கு வருவோரின் தகவல்களை கிராம அளவில் பாதுகாப்பு குழுவினர் அளித்து வருகின்றனர். ஆனால் நகர பகுதிக்கு வருவோரின் விவரங்களை கண்டறிய கடினமாக இருக்கிறது. இதற்காக தான் இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது.
இது தவிர முக கவசம் அணியாமல் செல்லுதல், சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் செல்வது நகர பகுதியில் அதிகமாக உள்ளது. முக கவசம் அணியாமல் செல்வோருக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்பட்டது. இதை தற்போது தீவிரமாக அமல்படுத்த உத்தரவிட்டுள்ளேன். கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது ஒவ்வொரு தனிமனிதனின் சமூக பொறுப்பாக இருக்க வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் அன்புசெல்வன் கூறினார்.
கடலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 550-யை தாண்டி விட்டது. இருப்பினும் சென்னையில் இருந்து வருவோரால் பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சிலர் இ-பாஸ் இல்லாமலும் வருகிறார்கள்.
அவர்களை கண்டறிய அதிகாரிகள் சிரமப்பட்டு வருகிறார்கள். இருப்பினும் நகரப்பகுதிக்குள் வருவோர் யாருக்கும் தெரியாமல் இருக்கிறார்கள். இவர்களையும் கண்டறிந்து, அவர்களுக்கு பரிசோதனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
இது பற்றி மாவட்ட கலெக்டர் அன்புசெல்வன் நிருபர்களிடம் கூறியதாவது:-
சென்னை மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து கடலூர் மாவட்டத்திற்கு வருவோரால் தான் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன்படி கடலூர் நகராட்சி பகுதிக்கு வருவோரை கண்டறிந்து, அவர்களுக்கு பரிசோதனை செய்யவும் முடிவு செய்துள்ளோம்.
கடலூர் நகராட்சியில் 45 வார்டுகள் உள்ளன. அதில் 5 வார்டுக்கு ஒரு துணை கலெக்டர் வீதம் 9 துணை கலெக்டர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் கட்டுப்பாட்டு பகுதியில் கிருமி நாசினி தெளித்தல், பிளச்சிங் பவுடர் போடுதல், கபசுரகுடிநீர் வழங்குதல் போன்ற பணிகளை மேற்கொண்டு, ஆய்வு செய்வார்கள்.
மேலும் வீடு, வீடாக சென்று ஆய்வு செய்து, காய்ச்சல், இருமல், சளி உள்ளவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்வார்கள். இது தவிர 50 வீடுகளுக்கு ஒரு செவிலியர் வீதம் நியமிக்கப்பட்டு, அனைவருக்கும் பரிசோதனை செய்ய உள்ளார்கள்.
வெளியூர்களில் இருந்து கிராமங்களுக்கு வருவோரின் தகவல்களை கிராம அளவில் பாதுகாப்பு குழுவினர் அளித்து வருகின்றனர். ஆனால் நகர பகுதிக்கு வருவோரின் விவரங்களை கண்டறிய கடினமாக இருக்கிறது. இதற்காக தான் இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது.
இது தவிர முக கவசம் அணியாமல் செல்லுதல், சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் செல்வது நகர பகுதியில் அதிகமாக உள்ளது. முக கவசம் அணியாமல் செல்வோருக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்பட்டது. இதை தற்போது தீவிரமாக அமல்படுத்த உத்தரவிட்டுள்ளேன். கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது ஒவ்வொரு தனிமனிதனின் சமூக பொறுப்பாக இருக்க வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் அன்புசெல்வன் கூறினார்.
பண்ருட்டி அருகே யூ-டியூப் பார்த்து பிளாஸ்டிக் குழாயால் துப்பாக்கி தயாரித்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
பண்ருட்டி :
பண்ருட்டி அருகே யூ-டியூப் பார்த்து பிளாஸ்டிக் குழாயால் துப்பாக்கி தயாரித்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த பரபரப்பு சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள காடாம்புலியூர் பகுதியை சேர்ந்த 3 வாலிபர்கள் யூ-டியூப்பை பார்த்து பிளாஸ்டிக் குழாயால் துப்பாக்கி தயாரித்துள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் காடாம்புலியூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அங்குள்ள பத்திரப்பதிவு அலுவலகம் அருகில் 3 வாலிபர்கள் கையில் கற்கள் மற்றும் துப்பாக்கி போன்ற வடிவமைப்பில் இருந்த பிளாஸ்டிக் குழாயுடன் நின்று கொண்டு அவ்வழியாக சென்ற பொதுமக்களை மிரட்டிக் கொண்டிருந்ததாக தெரிகிறது. இதை பார்த்த போலீசார் அந்த 3 வாலிபர்களையும் மடக்கி பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் காடாம்புலியூர் அருகே உள்ள புதுப்பாளையத்தை சேர்ந்த தனபால் மகன் சிவப்பிரகாசம் (வயது 24), ஆனந்தன் மகன் வினோத்குமார்(21), ரவி மகன் வெற்றிவேல்(21) ஆகியோர் என்பது தெரியவந்தது. தொடர்ந்து நடத்திய விசாரணையில் சிவப்பிரகாசம் உள்ளிட்ட 3 பேரும் முயல் மற்றும் அணில் வேட்டையாடுவதற்காக நாட்டுத்துப்பாக்கி தயாரிக்க முடிவு செய்துள்ளனர்.
அதன்படி 3 பேரும் கடந்த சில நாட்களாக யூ-டியூப்பில் நாட்டுத்துப்பாக்கி தயாரிக்கும் வீடியோக்களை பலமுறை பார்த்து வந்துள்ளனர். பின்னர் அந்த வீடியோக்களில் உள்ளபடி நாட்டுத்துப்பாக்கி தயாரிப்பதற்கான பொருட்கள் ஏதும் கிடைக்காததால், பிளாஸ்டிக் குழாயால் துப்பாக்கி தயாரிக்க முடிவெடுத்துள்ளனர்.
இதற்காக 3 பேரும் சேர்ந்து சிறிய அளவிலான பிளாஸ்டிக் குழாய்களை வாங்கியுள்ளனர். பின்னர் அதனை பயன்படுத்தி துப்பாக்கி போன்று வடிவமைத்துள்ளனர். மேலும் அதில் ஒயர்களை இணைத்துள்ளனர். இதை பயன்படுத்தி அவர்கள் அணில் மற்றும் குருவிகளை வேட்டையாடியதாக கூறப்படுகிறது. தொடர்ந்து போலீசார் பிளாஸ்டிக் குழாயால் தயாரிக்கப்பட்ட 4 துப்பாக்கிகளை பறிமுதல் செய்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து சிவப்பிரகாசம் உள்ளிட்ட 3 பேரையும் கைது செய்தனர்.
பண்ருட்டி அருகே யூ-டியூப் பார்த்து பிளாஸ்டிக் குழாயால் துப்பாக்கி தயாரித்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த பரபரப்பு சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள காடாம்புலியூர் பகுதியை சேர்ந்த 3 வாலிபர்கள் யூ-டியூப்பை பார்த்து பிளாஸ்டிக் குழாயால் துப்பாக்கி தயாரித்துள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் காடாம்புலியூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அங்குள்ள பத்திரப்பதிவு அலுவலகம் அருகில் 3 வாலிபர்கள் கையில் கற்கள் மற்றும் துப்பாக்கி போன்ற வடிவமைப்பில் இருந்த பிளாஸ்டிக் குழாயுடன் நின்று கொண்டு அவ்வழியாக சென்ற பொதுமக்களை மிரட்டிக் கொண்டிருந்ததாக தெரிகிறது. இதை பார்த்த போலீசார் அந்த 3 வாலிபர்களையும் மடக்கி பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் காடாம்புலியூர் அருகே உள்ள புதுப்பாளையத்தை சேர்ந்த தனபால் மகன் சிவப்பிரகாசம் (வயது 24), ஆனந்தன் மகன் வினோத்குமார்(21), ரவி மகன் வெற்றிவேல்(21) ஆகியோர் என்பது தெரியவந்தது. தொடர்ந்து நடத்திய விசாரணையில் சிவப்பிரகாசம் உள்ளிட்ட 3 பேரும் முயல் மற்றும் அணில் வேட்டையாடுவதற்காக நாட்டுத்துப்பாக்கி தயாரிக்க முடிவு செய்துள்ளனர்.
அதன்படி 3 பேரும் கடந்த சில நாட்களாக யூ-டியூப்பில் நாட்டுத்துப்பாக்கி தயாரிக்கும் வீடியோக்களை பலமுறை பார்த்து வந்துள்ளனர். பின்னர் அந்த வீடியோக்களில் உள்ளபடி நாட்டுத்துப்பாக்கி தயாரிப்பதற்கான பொருட்கள் ஏதும் கிடைக்காததால், பிளாஸ்டிக் குழாயால் துப்பாக்கி தயாரிக்க முடிவெடுத்துள்ளனர்.
இதற்காக 3 பேரும் சேர்ந்து சிறிய அளவிலான பிளாஸ்டிக் குழாய்களை வாங்கியுள்ளனர். பின்னர் அதனை பயன்படுத்தி துப்பாக்கி போன்று வடிவமைத்துள்ளனர். மேலும் அதில் ஒயர்களை இணைத்துள்ளனர். இதை பயன்படுத்தி அவர்கள் அணில் மற்றும் குருவிகளை வேட்டையாடியதாக கூறப்படுகிறது. தொடர்ந்து போலீசார் பிளாஸ்டிக் குழாயால் தயாரிக்கப்பட்ட 4 துப்பாக்கிகளை பறிமுதல் செய்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து சிவப்பிரகாசம் உள்ளிட்ட 3 பேரையும் கைது செய்தனர்.
பெற்றோரை இழந்து தவிக்கும் 2 மாணவிகள், பண்ருட்டி போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். அப்போது அவர்கள், தங்களை விடுதியில் தங்க வைத்து படிக்க வைக்க வேண்டும் என்று கண்ணீர் மல்க கூறினர்.
பண்ருட்டி :
பண்ருட்டி அருகே உள்ள மாளிகைமேடு பகுதியை சேர்ந்தவர் பாபு. இவருடைய மனைவி லதா. இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு பாம்பு கடித்ததில் பாபு உயிரிழந்தார். இதையடுத்து லதா தனது மகள்களுடன் தனியாக வசித்து வந்தார். பாபு உயிரிழந்ததால் மனவேதனையில் இருந்து வந்த லதாவும், உடல் நிலை பாதிக்கப்பட்டு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இறந்தார்.
பெற்றோரை இழந்த 3 பெண் குழந்தைகளும், வயது முதிர்ந்த தங்களது பாட்டி செந்தாமரையின் பராமரிப்பில் இருந்து வந்தனர். இதற்கிடையே பாபுவின் மூத்த மகள் திடீரென மாயமானார். இதையடுத்து செந்தாமரை கடந்த சில வாரங்களாக போதிய வருமானமின்றி தனது பேத்திகள் ஜீவா (வயது 14), தர்ஷினி(10) ஆகியோருடன் தவித்து வந்தார்.
இந்நிலையில் செந்தாமரை நேற்று முன்தினம் தனது பேத்திகளுடன் பண்ருட்டி போலீஸ் நிலையத்துக்கு வந்தார். அப்போது ஜீவா, தர்ஷினி ஆகியோர் அங்கிருந்த போக்குவரத்து காவலர் ராஜதீபனிடம், நாங்கள் பண்ருட்டியில் உள்ள அரசு பள்ளியில் படித்து வருகிறோம். எங்களுக்கு பெற்றோர் இல்லை. வயதான பாட்டியால் எங்களை மேற்கொண்டு படிக்க வைக்க இயலவில்லை. அதனால் தாங்கள் எங்கள் இருவரையும் ஏதாவது ஒரு பாதுகாப்பான விடுதியில் தங்க வைத்து, படிக்க வையுங்கள் என கண்ணீர் மல்க கெஞ்சினர். இந்த சம்பவம் போலீஸ் நிலையத்துக்கு வந்த அனைவரையும் கண் கலங்க வைத்தது.
அப்போது மாணவி ஜீவா போலீசாரிடம் கூறுகையில், எங்க பாட்டிக்கு வயதாகி விட்டதால் வேலைக்கு போகமுடியாமல் அவங்களும் வீட்டில் இருக்காங்க. வருமானம் இல்லாததால் ஒரு நாளைக்கு, ஒரு நேரம் சாப்பிடுவதே சிரமமாக உள்ளது. இங்குள்ள உறவினர்களிடமும் எதுவும் உதவி கேட்கும் நிலையில் அவர் இல்லை. கடையில் கடனாக டீயும், பண்ணும் வாங்கி தருவாங்க. அதுதான் எங்களுக்கு பல நாட்கள் சாப்பாடும் கூட. எப்போதாவது பக்கத்தில் உள்ள உறவினர்கள் சாப்பாடு கொடுப்பார்கள். அதை நானும், எனது தங்கையும் பங்கிட்டு சாப்பிடுவோம். அப்புறம் அணிந்து கொள்ள மாற்று துணி கூட கிடையாது. எங்களிடம் இருக்கும் ஒரு சில சட்டையும் கிழிந்த நிலையில் உள்ளது. அதையே ஊசி நூலால் தைத்து, மாற்றி மாற்றி போட்டுக்குவோம்.
நாங்கள் இருந்த கூரை வீடு கூட சேதமடைந்து போச்சு. மழை பெய்தால் வீடு முழுவதும் ஒழுகும். இருப்பதற்கு கூட வீடு இல்லை. அப்பா பாம்பு கடித்து இறந்ததால், அந்த வீட்டில் இருக்கவும் பயமா இருக்கும். தற்சமயம் சித்தி வீட்டில் தர்ம சங்கடமான சூழ்நிலைகளில் தான் இருக்கின்றோம். யாருடைய ஆதரவும் இல்லாமல் இருக்கிறோம். எங்களை ஏதேனும் ஒரு பாதுகாப்பான விடுதியில் தங்க வைத்து படிக்க வைப்பீர்களா என்று கேட்டு கண்ணீருடன் கூறினார். இதை கேட்டு கண் கலங்கிய போலீஸ்காரர் ராஜதீபன், சிறுமிகள் 2 பேருக்கும் தன்னம்பிக்கையும், தைரியமும் அளித்து, புத்தாடைகள் வாங்கி கொடுத்து, உடனடியாக நிவாரண பொருட்களையும் வழங்கினார். இதற்கிடையே இதுபற்றி அறிந்த பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் அம்பேத்கர், போலீஸ்காரர் ராஜதீபனை பாராட்டினார். மேலும் மாணவிகள் 2 பேரையும், தொண்டு நிறுவன உதவியுடன் அவர்கள் கல்வி தொடர ஏற்பாடுகளையும் மேற்கொண்டுள்ளார். இந்த சம்பவம் பண்ருட்டி பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பண்ருட்டி அருகே உள்ள மாளிகைமேடு பகுதியை சேர்ந்தவர் பாபு. இவருடைய மனைவி லதா. இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு பாம்பு கடித்ததில் பாபு உயிரிழந்தார். இதையடுத்து லதா தனது மகள்களுடன் தனியாக வசித்து வந்தார். பாபு உயிரிழந்ததால் மனவேதனையில் இருந்து வந்த லதாவும், உடல் நிலை பாதிக்கப்பட்டு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இறந்தார்.
பெற்றோரை இழந்த 3 பெண் குழந்தைகளும், வயது முதிர்ந்த தங்களது பாட்டி செந்தாமரையின் பராமரிப்பில் இருந்து வந்தனர். இதற்கிடையே பாபுவின் மூத்த மகள் திடீரென மாயமானார். இதையடுத்து செந்தாமரை கடந்த சில வாரங்களாக போதிய வருமானமின்றி தனது பேத்திகள் ஜீவா (வயது 14), தர்ஷினி(10) ஆகியோருடன் தவித்து வந்தார்.
இந்நிலையில் செந்தாமரை நேற்று முன்தினம் தனது பேத்திகளுடன் பண்ருட்டி போலீஸ் நிலையத்துக்கு வந்தார். அப்போது ஜீவா, தர்ஷினி ஆகியோர் அங்கிருந்த போக்குவரத்து காவலர் ராஜதீபனிடம், நாங்கள் பண்ருட்டியில் உள்ள அரசு பள்ளியில் படித்து வருகிறோம். எங்களுக்கு பெற்றோர் இல்லை. வயதான பாட்டியால் எங்களை மேற்கொண்டு படிக்க வைக்க இயலவில்லை. அதனால் தாங்கள் எங்கள் இருவரையும் ஏதாவது ஒரு பாதுகாப்பான விடுதியில் தங்க வைத்து, படிக்க வையுங்கள் என கண்ணீர் மல்க கெஞ்சினர். இந்த சம்பவம் போலீஸ் நிலையத்துக்கு வந்த அனைவரையும் கண் கலங்க வைத்தது.
அப்போது மாணவி ஜீவா போலீசாரிடம் கூறுகையில், எங்க பாட்டிக்கு வயதாகி விட்டதால் வேலைக்கு போகமுடியாமல் அவங்களும் வீட்டில் இருக்காங்க. வருமானம் இல்லாததால் ஒரு நாளைக்கு, ஒரு நேரம் சாப்பிடுவதே சிரமமாக உள்ளது. இங்குள்ள உறவினர்களிடமும் எதுவும் உதவி கேட்கும் நிலையில் அவர் இல்லை. கடையில் கடனாக டீயும், பண்ணும் வாங்கி தருவாங்க. அதுதான் எங்களுக்கு பல நாட்கள் சாப்பாடும் கூட. எப்போதாவது பக்கத்தில் உள்ள உறவினர்கள் சாப்பாடு கொடுப்பார்கள். அதை நானும், எனது தங்கையும் பங்கிட்டு சாப்பிடுவோம். அப்புறம் அணிந்து கொள்ள மாற்று துணி கூட கிடையாது. எங்களிடம் இருக்கும் ஒரு சில சட்டையும் கிழிந்த நிலையில் உள்ளது. அதையே ஊசி நூலால் தைத்து, மாற்றி மாற்றி போட்டுக்குவோம்.
நாங்கள் இருந்த கூரை வீடு கூட சேதமடைந்து போச்சு. மழை பெய்தால் வீடு முழுவதும் ஒழுகும். இருப்பதற்கு கூட வீடு இல்லை. அப்பா பாம்பு கடித்து இறந்ததால், அந்த வீட்டில் இருக்கவும் பயமா இருக்கும். தற்சமயம் சித்தி வீட்டில் தர்ம சங்கடமான சூழ்நிலைகளில் தான் இருக்கின்றோம். யாருடைய ஆதரவும் இல்லாமல் இருக்கிறோம். எங்களை ஏதேனும் ஒரு பாதுகாப்பான விடுதியில் தங்க வைத்து படிக்க வைப்பீர்களா என்று கேட்டு கண்ணீருடன் கூறினார். இதை கேட்டு கண் கலங்கிய போலீஸ்காரர் ராஜதீபன், சிறுமிகள் 2 பேருக்கும் தன்னம்பிக்கையும், தைரியமும் அளித்து, புத்தாடைகள் வாங்கி கொடுத்து, உடனடியாக நிவாரண பொருட்களையும் வழங்கினார். இதற்கிடையே இதுபற்றி அறிந்த பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் அம்பேத்கர், போலீஸ்காரர் ராஜதீபனை பாராட்டினார். மேலும் மாணவிகள் 2 பேரையும், தொண்டு நிறுவன உதவியுடன் அவர்கள் கல்வி தொடர ஏற்பாடுகளையும் மேற்கொண்டுள்ளார். இந்த சம்பவம் பண்ருட்டி பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கடலூரில் கலெக்டர் அலுவலகம் உள்பட பல்வேறு அரசு அலுவலகங்களில் நேற்று கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது.
கடலூர்:
தமிழகம் முழுவதும் கடந்த மே 18-ந்தேதி முதல் 50 சதவீத ஊழியர்களுடன் அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. வாரத்திற்கு 6 நாட்கள் பணி நாட்களாக கொண்டு ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அனைத்து அரசு அலுவலகங்களிலும் முழு அளவிலான சுத்திகரிப்பு பணி மேற்கொள்ள இரண்டாவது சனிக்கிழமை அலுவலகம் இயங்காமல் சுத்தப்படுத்தும் பணி மேற்கொள்ள அரசு உத்தரவிட்டது. மேலும் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையிலும் சுத்தப்படுத்த உத்தரவிடப்பட்டது.
இதன்படி 2-வது சனிக்கிழமையான நேற்று கடலூரில் அரசு அலுவலகங்கள் செயல்படவில்லை. இதையடுத்து கலெக்டர் அலுவலகம், பழைய கலெக்டர் அலுவலகத்தில் உள்ள அரசு அருங்காட்சியகம், கருவூலம், கடலூர் கோட்டாட்சியர் அலுவலகம், வணிக வரித்துறை, இந்து சமய அறநிலையத்துறை, தாலுகா அலுவலகம், நகராட்சி அலுவலகம் உள்பட பல்வேறு அரசு அலுவலகங்களில் நேற்று கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது. மேலும் பொது இடங்களிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, பிளச்சிங் பவுடர் போட்டு சுத்தப்படுத்தும் பணியும் நடந்தது. இதை நகராட்சி ஆணையாளர் ராமமூர்த்தி, பொறியாளர் புண்ணியமூர்த்தி, உதவி பொறியாளர் ஜெயபிரகாஷ் நாராயணன் ஆகியோர் கண்காணித்தனர்.
தமிழகம் முழுவதும் கடந்த மே 18-ந்தேதி முதல் 50 சதவீத ஊழியர்களுடன் அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. வாரத்திற்கு 6 நாட்கள் பணி நாட்களாக கொண்டு ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அனைத்து அரசு அலுவலகங்களிலும் முழு அளவிலான சுத்திகரிப்பு பணி மேற்கொள்ள இரண்டாவது சனிக்கிழமை அலுவலகம் இயங்காமல் சுத்தப்படுத்தும் பணி மேற்கொள்ள அரசு உத்தரவிட்டது. மேலும் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையிலும் சுத்தப்படுத்த உத்தரவிடப்பட்டது.
இதன்படி 2-வது சனிக்கிழமையான நேற்று கடலூரில் அரசு அலுவலகங்கள் செயல்படவில்லை. இதையடுத்து கலெக்டர் அலுவலகம், பழைய கலெக்டர் அலுவலகத்தில் உள்ள அரசு அருங்காட்சியகம், கருவூலம், கடலூர் கோட்டாட்சியர் அலுவலகம், வணிக வரித்துறை, இந்து சமய அறநிலையத்துறை, தாலுகா அலுவலகம், நகராட்சி அலுவலகம் உள்பட பல்வேறு அரசு அலுவலகங்களில் நேற்று கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது. மேலும் பொது இடங்களிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, பிளச்சிங் பவுடர் போட்டு சுத்தப்படுத்தும் பணியும் நடந்தது. இதை நகராட்சி ஆணையாளர் ராமமூர்த்தி, பொறியாளர் புண்ணியமூர்த்தி, உதவி பொறியாளர் ஜெயபிரகாஷ் நாராயணன் ஆகியோர் கண்காணித்தனர்.
திட்டக்குடியில் வெலிங்டன் நீர்த்தேக்க கரையில் அமைக்கப்பட்டு உள்ள சாலை திடீரென உள்வாங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
திட்டக்குடி:
திட்டக்குடியை அடுத்துள்ள கீழ்ச்செருவாயில் வெலிங்டன் நீர்த்தேக்கம் அமைந்துள்ளது. இந்த ஏரி 1922-ம் ஆண்டு முழுமையாக கட்டிமுடிக்கப்பட்டது. நீர் பிடிப்பு பரப்பு 16.6 சதுர கிலோ மீட்டரை கொண்ட இந்த நீர்த்தேக்கத்தின் உச்ச நீர்மட்டம் 29.72 அடி ஆகும். இதன் மூலம் 67 கிராமங்களில் உள்ள 28 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது.
இந்த நிலையில் கடந்த 2009-ம் ஆண்டு விரிசல் அடைந்த போது ரூ.29 கோடியே 21 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து கரை சீரமைக்கப்பட்டது. இதைதொடர்ந்து 2017-ம் ஆண்டு மீண்டும் கரையில் விரிசல் ஏற்பட்டது. தொடர்ந்து ரூ. 6 கோடி நிதி ஒதுக்கீடு செய்து பொதுப்பணிதுறை அதிகாரிகள் சீரமைப்பு பணியை மேற்கொண்டனர். இதன் தொடர்ச்சியாக 2018-ம் ஆண்டில் ரூ.1 கோடியே 80 லட்சத்தில் கரை பலப்படுத்தப்பட்டது.
திட்டக்குடியை அடுத்துள்ள கீழ்ச்செருவாயில் வெலிங்டன் நீர்த்தேக்கம் அமைந்துள்ளது. இந்த ஏரி 1922-ம் ஆண்டு முழுமையாக கட்டிமுடிக்கப்பட்டது. நீர் பிடிப்பு பரப்பு 16.6 சதுர கிலோ மீட்டரை கொண்ட இந்த நீர்த்தேக்கத்தின் உச்ச நீர்மட்டம் 29.72 அடி ஆகும். இதன் மூலம் 67 கிராமங்களில் உள்ள 28 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது.
இந்த நிலையில் கடந்த 2009-ம் ஆண்டு விரிசல் அடைந்த போது ரூ.29 கோடியே 21 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து கரை சீரமைக்கப்பட்டது. இதைதொடர்ந்து 2017-ம் ஆண்டு மீண்டும் கரையில் விரிசல் ஏற்பட்டது. தொடர்ந்து ரூ. 6 கோடி நிதி ஒதுக்கீடு செய்து பொதுப்பணிதுறை அதிகாரிகள் சீரமைப்பு பணியை மேற்கொண்டனர். இதன் தொடர்ச்சியாக 2018-ம் ஆண்டில் ரூ.1 கோடியே 80 லட்சத்தில் கரை பலப்படுத்தப்பட்டது.
இந்நிலையில் கரையின் அருகே போடப்பட்டுள்ள தார்சாலையில் திடீரென சில இடங்களில் வெடிப்பு ஏற்பட்டு உள் வாங்கிய நிலையில் காணப்பட்டது. இதுபற்றி அறிந்த பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் கோவிந்தராஜன், நீர்த்தேக்கத்துக்கு நேரில் சென்று ஆய்வு செய்து, சீரமைப்பு பணிகளை உடனடியாக மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொண்டார். அதன்படி, உதவி பொறியாளர்கள் சோழராஜா, பாஸ்கர் ஆகியோர் பொக்லைன் எந்திரம் மூலம் தார்சாலையில் வெடிப்பு ஏற்பட்டு உள்வாங்கிய பகுதியை உடனடியாக சீரமைக்கும் பணியை மேற்கொண்டனர்.
இதற்கென உள்வாங்கிய பகுதியில் பள்ளம் தோண்டி அதில் தேவையான மணல், ஜல்லி கற்கள் உள்ளிட்டவற்றை கொட்டி சீரமைப்பு பணி செய்தனர். இது சாதாரண ஒரு வெடிப்பு தான், விவசாயிகள் யாரும் அச்சப்பட தேவையில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இருப்பினும் இந்த சம்பவம் அந்த பகுதி விவசாயிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
அரசு ஊழியர்கள் வேலைக்காக சென்னை செல்ல சிதம்பரத்தில் இருந்து சென்னைக்கு சிறப்பு பஸ் இயக்கப்பட்டது.
கடலூர்:
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க கடந்த மார்ச் 25-ந் தேதி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தற்போது 5-வது கட்டமாக வருகிற 30-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தமிழக அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது. அதன்படி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்கள் அனைத்தும் மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, கடந்த 1-ந் தேதி முதல் 60 சதவீத பயணிகளுடன் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.
இதன்படி கடலூரில் இருந்து கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களுக்கு மட்டும் பஸ்கள் இயக்கப்பட்டன. மேலும் கடந்த 10-ந் தேதி முதல் தனியார் பஸ்களும் இயக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே சென்னையில் பணிபுரியும் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த அரசு ஊழியர்கள், சென்னைக்கு சென்று வர சிறப்பு பஸ்களை இயக்க தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் முடிவு செய்தது. அதன்படி சிதம்பரத்தில் இருந்து நேற்று அதிகாலை 4.45 மணிக்கு சிறப்பு பஸ் புறப்பட்டது. முன்னதாக பஸ்சுக்கு கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. மேலும் அரசு ஊழியர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்யப்பட்ட பிறகே பஸ்சில் ஏற அனுமதிக்கப்பட்டனர்.
காலை 6 மணிக்கு கடலூர் வந்த பஸ் பிறகு, புதுச்சேரி இ.சி.ஆர். மார்க்கமாக சென்னைக்கு சென்றது. இந்த பஸ்சில் பயணம் செய்த அரசு ஊழியர்கள் முக கவசம் அணிந்தபடியும், 3 பேர் அமரக்கூடிய இருக்கையில் 2 பேரும், 2 பேர் அமரக்கூடிய இருக்கையில் ஒருவரும் அமர்ந்து பயணம் செய்தனர்.
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க கடந்த மார்ச் 25-ந் தேதி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தற்போது 5-வது கட்டமாக வருகிற 30-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தமிழக அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது. அதன்படி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்கள் அனைத்தும் மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, கடந்த 1-ந் தேதி முதல் 60 சதவீத பயணிகளுடன் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.
இதன்படி கடலூரில் இருந்து கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களுக்கு மட்டும் பஸ்கள் இயக்கப்பட்டன. மேலும் கடந்த 10-ந் தேதி முதல் தனியார் பஸ்களும் இயக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே சென்னையில் பணிபுரியும் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த அரசு ஊழியர்கள், சென்னைக்கு சென்று வர சிறப்பு பஸ்களை இயக்க தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் முடிவு செய்தது. அதன்படி சிதம்பரத்தில் இருந்து நேற்று அதிகாலை 4.45 மணிக்கு சிறப்பு பஸ் புறப்பட்டது. முன்னதாக பஸ்சுக்கு கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. மேலும் அரசு ஊழியர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்யப்பட்ட பிறகே பஸ்சில் ஏற அனுமதிக்கப்பட்டனர்.
காலை 6 மணிக்கு கடலூர் வந்த பஸ் பிறகு, புதுச்சேரி இ.சி.ஆர். மார்க்கமாக சென்னைக்கு சென்றது. இந்த பஸ்சில் பயணம் செய்த அரசு ஊழியர்கள் முக கவசம் அணிந்தபடியும், 3 பேர் அமரக்கூடிய இருக்கையில் 2 பேரும், 2 பேர் அமரக்கூடிய இருக்கையில் ஒருவரும் அமர்ந்து பயணம் செய்தனர்.
தமிழ்நாடு போக்குவரத்து பணியாளர் ஒன்றிப்பு சிறப்பு தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமையில் கருப்பு பட்டை அணிந்து அலுவலத்துக்கு சென்று பணியில் ஈடுபட்டனர்.
கடலூர்:
தமிழ்நாடு போக்குவரத்து துறையில் உதவியாளர் நிலையில் இருந்து கண்காணிப்பாளர் நிலைக்கு, பணி அமைப்பு விதிகள் படி பட்டியல் தயார் செய்து பதவி உயர்வு வழங்க வேண்டும். தகுதி உள்ளவர்கள் இருக்கும்போது, தகுதி இல்லாதவர்களுக்கு பதவி உயர்வு அளிக்க எடுத்துவரும் முயற்சியை கைவிட்டு பணி அமைப்பு விதிகள் படி பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் முன்பு 15-ந் தேதி (நாளை மறுநாள்) ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக போக்குவரத்து பணியாளர் ஒன்றிப்பு குழுவினர் ஏற்கனவே அறிவித்திருந்தனர்.
இதற்கு முன்னோட்டமாக கடலூர் கேப்பர் மலையில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலக பணியாளர்கள் நேற்று தமிழ்நாடு போக்குவரத்து பணியாளர் ஒன்றிப்பு சிறப்பு தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமையில் கருப்பு பட்டை அணிந்து அலுவலத்துக்கு சென்று பணியில் ஈடுபட்டனர். இதில் அரசு பணியாளர் சங்க மாநில துணைத்தலைவர் சரவணன், காவல்துறை துப்புரவு பணியாளர் சங்க மாநில பொருளாளர் பலராமன் உள்பட பலர் கலந்து கொண்டு கருப்புப் பட்டை அணிந்து பணியில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு போக்குவரத்து துறையில் உதவியாளர் நிலையில் இருந்து கண்காணிப்பாளர் நிலைக்கு, பணி அமைப்பு விதிகள் படி பட்டியல் தயார் செய்து பதவி உயர்வு வழங்க வேண்டும். தகுதி உள்ளவர்கள் இருக்கும்போது, தகுதி இல்லாதவர்களுக்கு பதவி உயர்வு அளிக்க எடுத்துவரும் முயற்சியை கைவிட்டு பணி அமைப்பு விதிகள் படி பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் முன்பு 15-ந் தேதி (நாளை மறுநாள்) ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக போக்குவரத்து பணியாளர் ஒன்றிப்பு குழுவினர் ஏற்கனவே அறிவித்திருந்தனர்.
இதற்கு முன்னோட்டமாக கடலூர் கேப்பர் மலையில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலக பணியாளர்கள் நேற்று தமிழ்நாடு போக்குவரத்து பணியாளர் ஒன்றிப்பு சிறப்பு தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமையில் கருப்பு பட்டை அணிந்து அலுவலத்துக்கு சென்று பணியில் ஈடுபட்டனர். இதில் அரசு பணியாளர் சங்க மாநில துணைத்தலைவர் சரவணன், காவல்துறை துப்புரவு பணியாளர் சங்க மாநில பொருளாளர் பலராமன் உள்பட பலர் கலந்து கொண்டு கருப்புப் பட்டை அணிந்து பணியில் ஈடுபட்டனர்.
மேல்புவனகிரி அருகே பாசன வாய்க்கால் தூர்வாரும் பணிகளை மாவட்ட கலெக்டர் அன்புசெல்வன் நேரில் பார்வையிட்டு, வாய்க்கால் ஆழமாகவும், அகலமாகவும் உள்ளதா? என ஆய்வு செய்தார்.
புவனகிரி:
முதல்-அமைச்சரின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் தமிழகத்தில் உள்ள அனைத்து நீர்நிலைகளிலும் குடிமராமத்து பணிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி மேல்புவனகிரி ஒன்றியம் தீர்த்தாம்பாளையம் ஊராட்சியில் உள்ள அஞ்சலை அம்மாள் பாசன வாய்க்கால் பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி தூர்ந்து போய் காணப்பட்டது. தொடர்ந்து மாவட்ட கலெக்டர் அனுமதி பெற்று பொதுப்பணித்துறை மூலம் தீர்த்தாம்பாளையம் அஞ்சலை அம்மாள் பாசன வாய்க்காலை தூர்வார முடிவு செய்யப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் அன்புசெல்வன் நேரில் பார்வையிட்டு, வாய்க்கால் ஆழமாகவும், அகலமாகவும் உள்ளதா? என ஆய்வு செய்தார். அப்போது பணியாளர்களிடம் இந்த வாய்க்கால் மூலம் விவசாயிகள் பயன்பெறும் வகையில் பணிகளை விரைந்து முடிக்கும்படி கேட்டுக்கொண்டார். அப்போது சிதம்பரம் சப்-கலெக்டர் விசுமகாஜன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சாம்ராஜ், உதவி பொறியாளர் ரமேஷ், புவனகிரி வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரன் இந்திராதேவி, தீர்த்தாம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் லோகநாதன், விவசாய சங்க தலைவர் சரவணன், பொதுப்பணித்துறை அலுவலர்கள், வருவாய்த்துறை அலுவலர்கள், விவசாய சங்க நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.
முதல்-அமைச்சரின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் தமிழகத்தில் உள்ள அனைத்து நீர்நிலைகளிலும் குடிமராமத்து பணிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி மேல்புவனகிரி ஒன்றியம் தீர்த்தாம்பாளையம் ஊராட்சியில் உள்ள அஞ்சலை அம்மாள் பாசன வாய்க்கால் பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி தூர்ந்து போய் காணப்பட்டது. தொடர்ந்து மாவட்ட கலெக்டர் அனுமதி பெற்று பொதுப்பணித்துறை மூலம் தீர்த்தாம்பாளையம் அஞ்சலை அம்மாள் பாசன வாய்க்காலை தூர்வார முடிவு செய்யப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் அன்புசெல்வன் நேரில் பார்வையிட்டு, வாய்க்கால் ஆழமாகவும், அகலமாகவும் உள்ளதா? என ஆய்வு செய்தார். அப்போது பணியாளர்களிடம் இந்த வாய்க்கால் மூலம் விவசாயிகள் பயன்பெறும் வகையில் பணிகளை விரைந்து முடிக்கும்படி கேட்டுக்கொண்டார். அப்போது சிதம்பரம் சப்-கலெக்டர் விசுமகாஜன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சாம்ராஜ், உதவி பொறியாளர் ரமேஷ், புவனகிரி வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரன் இந்திராதேவி, தீர்த்தாம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் லோகநாதன், விவசாய சங்க தலைவர் சரவணன், பொதுப்பணித்துறை அலுவலர்கள், வருவாய்த்துறை அலுவலர்கள், விவசாய சங்க நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.
கடலூர் அரசு பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகளுக்கு கைகளை சுத்தம் செய்ய சானிடைசர் வழங்கப்படுகிறது.
கடலூர்:
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ள சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களை தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் கடந்த 1-ந்தேதி முதல் 60 சதவீத பயணிகளுடன் 50 சதவீத பஸ்களை இயக்கலாம் என அரசு அறிவித்தது. அதன்படி பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பேருந்துகளில் பயணிகள் தனிமனித இடைவெளியை பின்பற்றும்படி அரசு அறிவுறுத்தி உள்ளது.
அதன்படி கடலூர் மாவட்டத்தில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அரசு பஸ்களில் சமூக இடைவெளியுடன் குறைவான பயணிகளை மட்டும் அனுமதிக்கின்றனர். மேலும் பயணிகள் கண்டிப்பாக மாஸ்க் அணிந்திருக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடலூர் மண்டலம் கடலூர் கிளை 1 மற்றும் 2ல் பணிபுரியும் நடத்துநர்கள், தங்கள் பேருந்துகளில் ஏறும் பயணிகள் அனைவருக்கும் கைகளை சுத்தம் செய்ய சானிடைசர் வழங்குகிறார்கள். அதன்பிறகே அவர்களுக்கு பயணச் சீட்டு வழங்குகின்றனர்.
நோய்த்தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சானிடைசர் வழங்குவதால் பொதுமக்கள் பயமின்றி பேருந்துகளில் பயணம் செய்ய முடிகிறது. இதற்காக தமிழக முதல்வருக்கும், அரசு போக்குவரத்து கழகத்திற்கும் நன்றி தெரிவித்தனர்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ள சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களை தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் கடந்த 1-ந்தேதி முதல் 60 சதவீத பயணிகளுடன் 50 சதவீத பஸ்களை இயக்கலாம் என அரசு அறிவித்தது. அதன்படி பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பேருந்துகளில் பயணிகள் தனிமனித இடைவெளியை பின்பற்றும்படி அரசு அறிவுறுத்தி உள்ளது.
அதன்படி கடலூர் மாவட்டத்தில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அரசு பஸ்களில் சமூக இடைவெளியுடன் குறைவான பயணிகளை மட்டும் அனுமதிக்கின்றனர். மேலும் பயணிகள் கண்டிப்பாக மாஸ்க் அணிந்திருக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடலூர் மண்டலம் கடலூர் கிளை 1 மற்றும் 2ல் பணிபுரியும் நடத்துநர்கள், தங்கள் பேருந்துகளில் ஏறும் பயணிகள் அனைவருக்கும் கைகளை சுத்தம் செய்ய சானிடைசர் வழங்குகிறார்கள். அதன்பிறகே அவர்களுக்கு பயணச் சீட்டு வழங்குகின்றனர்.
நோய்த்தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சானிடைசர் வழங்குவதால் பொதுமக்கள் பயமின்றி பேருந்துகளில் பயணம் செய்ய முடிகிறது. இதற்காக தமிழக முதல்வருக்கும், அரசு போக்குவரத்து கழகத்திற்கும் நன்றி தெரிவித்தனர்.






