என் மலர்
கடலூர்
கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன், பண்ருட்டி துணைபோலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரன் ஆகியோர் உத்தரவின் பேரில் பண்ருட்டிபோலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் தீபன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் புஷ்பராஜ் சிங்கார வேலன் மற்றும் போலீசார் போலீசார் தீவிர புகையிலை தடுப்பு நடவடிக்கையில்ஈடுபட்டனர்.
அப்போது பண்ருட்டி மார்க்கெட், காந்தி ரோடு, காமராஜர்நகர், பஸ் நிலையம் பகுதிகளில் உள்ள பெட்டி கடை மளிகை கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட பான்மசாலா பொருட்களை விற்பனை செய்வது தெரிய வந்தது.
இதனை தொடர்ந்து 10-க்கும் மேற்பட்ட வியாபாரிகள், கடை விற்பனையாளர்கள் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள லட்சம் மதிப்புள்ள பான்பராக், ஹான்ஸ்பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
மேலும் அவர்களிடம் தீவிர விசாரணை செய்ததில் அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் சகிதமாக சோதனையில் ஈடுபட்ட போது பண்ருட்டியில் ஹான்ஸ் விற்பனை செய்த முக்கிய வியாபாரிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து பல லட்சம் மதிப்புள்ள ஹான்ஸ்பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அருகே லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடி ஆகும்.
இந்த ஏரி மூலம் பரங்கிப்பேட்டை கடைமடை வரை 44,856 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. சென்னை நகர மக்களுக்கு குடிநீர் ஆதாரமாக உள்ளது.
இந்த ஏரிக்கு மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் மூலமும், பருவ காலங்களில் பெய்யும் மழையால் தண்ணீர் வரத்து இருக்கும்.
கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் கொள்ளிடம் ஆறு வழியாக கீழணை வந்து சேருகிறது. அங்கிருந்து வீராணம் ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்படும்.
கடந்த 2 வாரத்துக்கு முன்பு கீழணையில் இருந்து வீராணம் ஏரிக்கு 600 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. அதோடு ஏரியின் நீர் பிடிப்பு பகுதியில் கனமழை பெய்தததால் தண்ணீர் வரத்து அதிகமாக காணப்பட்டது.
இதன் காரணமாக ஏரி விரைவில் நிரம்பி விடும் என்று விவசாயிகள் ஆர்வமுடன் எதிர்பார்த்தனர். ஆனால், கீழணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் படிப்படியாக குறைக்கப்பட்டது.
நேற்று முன்தினம் 127 கனஅடி நீர் மட்டும் வந்தது. அது இன்று 89 கனஅடி நீர் மட்டுமே வருகிறது. ஏரியின் நீர்மட்டம் 15.60 அடியாக உள்ளது. நீர்வரத்து குறைந்து விட்டதால் வீராணம் ஏரி நிரம்புவதில் சிக்கல் எழுந்துள்ளது.
தற்போது ஆடி மாதம் பிறந்ததால் ஆடிபட்டம் தேடிவிதை என்பதற்கு ஏற்ப வீராணம் ஏரி பாசன பகுதிகளில் விவசாயிகள் உழவு பணியை தொடங்கினர். ஆனால், தற்போது நீர்வரத்து குறைந்து விட்டதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சிதம்பரம்:
கடலூர் மாவட்டம் சிதம்பரம் கீழவீதியை சேர்ந்தவர் காளிமுத்து (வயது 75). இவர் நேற்று இரவு 10 மணி அளவில் சிதம்பரம் நடராஜர்கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தார்.
அப்போது அங்கிருந்த சாமி பல்லக்கு தூக்கும் ஊழியர்கள் சிலர் காளிமுத்துவிடம் 10 மணிக்கு மேல் ஏன் கோவிலுக்கு வருகிறீர்கள் என கேட்டனர். இதனால் காளிமுத்துவுக்கும், கோவில் ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அதன் பின்னர் காளிமுத்து அங்கிருந்து புறப்பட்டு கீழ சன்னதி வழியாக சென்று அங்குள்ள கடையில் அமர்ந்தார். அப்போது அங்கு வந்த சாமி பல்லக்கு தூக்கும் ஊழியர்கள் ஓமக்குளம் பகுதியை சேர்ந்த ராம்குமார் (30), மீதிகுடியை சேர்ந்த சூரிய பிரகாஷ் (22), செங்காட்டான் தெருவை சேர்ந்த வெற்றி வேலன் (21), செல்வம் ஆகியோர் காளிமுத்துவை தகாத வார்த்தைகளால் திட்டி, தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர்.
இதுகுறித்து சிதம்பரம் நகர போலீசில் காளிமுத்து புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ராம்குமார், சூரியபிரகாஷ், வெற்றிவேலன் ஆகிய 3 பேரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள செல்வத்தை போலீசார் தேடி வருகின்றனர்.






