என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு வந்த பக்தரை தாக்கிய ஊழியர்கள் 3 பேர் கைது
சிதம்பரம்:
கடலூர் மாவட்டம் சிதம்பரம் கீழவீதியை சேர்ந்தவர் காளிமுத்து (வயது 75). இவர் நேற்று இரவு 10 மணி அளவில் சிதம்பரம் நடராஜர்கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தார்.
அப்போது அங்கிருந்த சாமி பல்லக்கு தூக்கும் ஊழியர்கள் சிலர் காளிமுத்துவிடம் 10 மணிக்கு மேல் ஏன் கோவிலுக்கு வருகிறீர்கள் என கேட்டனர். இதனால் காளிமுத்துவுக்கும், கோவில் ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அதன் பின்னர் காளிமுத்து அங்கிருந்து புறப்பட்டு கீழ சன்னதி வழியாக சென்று அங்குள்ள கடையில் அமர்ந்தார். அப்போது அங்கு வந்த சாமி பல்லக்கு தூக்கும் ஊழியர்கள் ஓமக்குளம் பகுதியை சேர்ந்த ராம்குமார் (30), மீதிகுடியை சேர்ந்த சூரிய பிரகாஷ் (22), செங்காட்டான் தெருவை சேர்ந்த வெற்றி வேலன் (21), செல்வம் ஆகியோர் காளிமுத்துவை தகாத வார்த்தைகளால் திட்டி, தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர்.
இதுகுறித்து சிதம்பரம் நகர போலீசில் காளிமுத்து புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ராம்குமார், சூரியபிரகாஷ், வெற்றிவேலன் ஆகிய 3 பேரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள செல்வத்தை போலீசார் தேடி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்