என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • தமிழ்நாடு என்ற பெயருக்கு மிகப்பெரிய சரித்திரம் இருக்கிறது. மிகப்பெரிய போராட்டத்திற்கு பிறகு அந்த பெயர் கிடைத்தது.
    • நான் மக்களுக்காகத் தான் செயல்படுகிறேன். கோப்புகளை கோப்புகளாக பார்க்காமல் மக்கள் முகங்களாக பார்க்கிறேன்.

    புதுச்சேரி:

    தமிழகம்-தமிழ்நாடு இரண்டிற்கும் பெரிய வேறுபாடு இல்லை என கவர்னர் தமிழிசை கூறினார்.

    ஆரோவில் வளர்ச்சி குழு கூட்டம், அரவிந்தரின் 150-வது பிறந்தநாள் விழா மற்றும் காணும் பொங்கல் விழா புதுவை கவர்னர் மாளிகையில் நடந்தது. ஆரோவில் வளர்ச்சி திட்டங்கள் குறித்து காணொலி காட்சி மூலம் விளக்கப்பட்டது.

    நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி கவர்னர் தமிழிசை பேசியதாவது:-

    சுதந்திரத்திற்காக போராடிய அரவிந்தர், பாரதியார் கனவுகளை நாம் நிறைவேற்ற வேண்டியது அவசியம். விடுதலை போராட்ட காலத்தில் புதுவை ஒரு தாயின் மடியைபோல பலரை அரவணைத்து, அரவிந்தர், பாரதியார், வாஞ்சிநாதன் போன்றோருக்கு புகலிடமாக இருந்தது.

    ஆரோவில் நகரத்தில் 5 ஆயிரம் குடும்பங்கள் இருக்க வேண்டும் என்று அன்னை கனவு கண்டார். இத்தனை ஆண்டுகள் கடந்தும் 3 ஆயிரம் குடும்பங்கள் மட்டுமே உள்ளது. இதையெல்லாம் சரிசெய்வதற்கு தொடர்ந்து கூட்டங்கள் நடைபெற்று வருகிறது. கவர்னருக்கு அதிகாரம் இல்லை என கூறும் முதல்வர்கள், கவர்னரின் பொறுப்பு என்ன என்பதை புரிந்து செயல்பட வேண்டும்.

    தமிழகம், தமிழ்நாடு இரண்டுக்கும் பெரிய வேறுபாடு இல்லை. தமிழ்நாடு என்ற பெயருக்கு மிகப்பெரிய சரித்திரம் இருக்கிறது. மிகப்பெரிய போராட்டத்திற்கு பிறகு அந்த பெயர் கிடைத்தது.

    அவ்வளவு எளிதாக அந்த பெயரை புறம் தள்ளிவிட முடியாது. நான் மக்களுக்காகத் தான் செயல்படுகிறேன். கோப்புகளை கோப்புகளாக பார்க்காமல் மக்கள் முகங்களாக பார்க்கிறேன்.

    தமிழகத்தில் ரூ.1000 அறிவிக்கப்பட்டு இன்னும் வழங்கப்படவில்லை. ஆனால் புதுவையில் அதை முதலமைச்சருடன் சேர்ந்து வழங்க உள்ளோம்.

    மக்களுக்காக செய்வதில் எந்த பாரபட்சமும் புதுவையில் இல்லை.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ஆரோவில் மாணவிகள் கவர்னர் தமிழிசைக்கு நினைவு பரிசு வழங்கினர். ஆரோவில் அமைப்பின் செயலாளர் ஜெயந்தி ரவி தலைமையில் நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர்.

    • 2-ம் நாளான நேற்று, கபடி, கைபந்து, கால்பந்து உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.
    • 11 மீனவ கிராமங்களை சேர்ந்த 11 படகுகள் பங்கேற்றன.

    புதுச்சேரி:

    காரைக்காலில் 4 நாட்கள் நடைபெறும் கார்னிவல் திருவிழா நடைபெற்று வருகிறது. 2-ம் நாளான நேற்று, கபடி, கைபந்து, கால்பந்து உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. தொடர்ந்து கார்னிவெல்லின் ஒரு பகுதியாக மீனவ கிராமங்களுக்கிடையே படகு போட்டி நடைபெற்றது. இந்த படகு போட்டியில் காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த காரைக்கால் மேடு, கிளிஞ்சல் மேடு, காளி குப்பம், மண்டபத்தூர், கீழக்காசாக்குடி மேடு உள்ளிட்ட 11 மீனவ கிராமங்களை சேர்ந்த 11 படகுகள் பங்கேற்றன. இப்போட்டியை காரைக்கால் மாவட்ட கலெக்டர் முகமது மன்சூர் தொடங்கி வைத்தார். சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் கொண்ட போட்டியில் முதல் இடத்தை காளிகுப்பம் மீனவர்களும், 2-ம் இடத்தை மண்டபத்தூர் மீனவர்களும், 3-ம் இடத்தை கீழக்காசாக்குடி மேடு மீனவர்களும் வெற்றி பெற்றார்கள். வெற்றி பெற்ற மீனவர்களுக்கு 18-ந் தேதி பரிசுகள் வழங்கப்படும் என கலெக்டர் முகமது மன்சூர் அறிவித்துள்ளார்.

    • பொங்கலை முன்னிட்டு சிறை தோட்டத்தில் மஞ்சள் கிழங்கு பயிரிடப்பட்டிருந்தது.
    • சூரியகாந்தி, சாமந்தி, கோஸ், ஆந்திர கத்திரிக்காய் போன்றவையும் பயிரிடப்பட்டு அறுவடைக்கு தயாராக இருக்கின்றன.

    புதுச்சேரி:

    புதுவை காலாப்பட்டில் மத்திய ஜெயில் உள்ளது. இங்கு 300-க்கும் மேற்பட்ட விசாரணை, தண்டனை கைதிகள் உள்ளனர். இங்குள்ள சிறைவாசிகளுக்கு ஒருங்கிணைந்த பண்ணையம் மற்றும் இயற்கை விவசாயம் குறித்த பயிற்சியை 2 ஆண்டுகளாக சிறைத்துறை நிர்வாகம் அளித்து வருகிறது.

    இதற்காக சிறை வளாகத்துக்குள்ளேயே 2½ ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. பல ஆண்டுகளாக பயன்பாடின்றி புதர் மண்டி கிடந்த அந்த இடத்தை 2 வாரத்தில் விவசாய நிலமாக சிறைவாசிகள் உருவாக்கினர்.

    அதே வேகத்தில் பல்வேறு மாநிலங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட 60 வகையான பழச்செடிகள், 50 வகையான மூலிகை செடிகளையும் நட்டு இயற்கை விவசாயத்தை மேற்கொண்டு பராமரித்து வருகின்றனர்.

    சிறைத்துறை ஐ.ஜி. ரவிதீப்சிங் சாகர் தலைமையில் அரவிந்தர் சொசைட்டியுடன் இணைந்து காய்கறிகள் மரம் மற்றும் பழ வகைகள் பயிரிடப்பட்டு அறுவடை செய்யப்பட்டு வருகிறது.

    மேலும் பொங்கலை முன்னிட்டு சிறை தோட்டத்தில் மஞ்சள் கிழங்கு பயிரிடப்பட்டிருந்தது. அவை அறுவடை செய்யப்பட்டு சொசைட்டி மூலம் பொதுமக்களுக்கு விற்கப்பட்டது. வெளிச்சந்தையில் ரூ.20-க்கு விற்கப்பட்ட ஒரு மஞ்சள் கிழங்கு சிறைவாசிகள் உருவாக்கிய ஒரு கிழக்கு ரூ.10-க்கு விற்கப்பட்டது.

    பொங்கல் பண்டிகைக்கு பிறகு உற்பத்தியாகும் மஞ்சள் அனைத்தையும் பவுடராக்கி விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக சிறைத்துறை கண்காணிப்பாளர் பாஸ்கர் தெரிவித்தார்.

    இங்கு சூரியகாந்தி, சாமந்தி, கோஸ், ஆந்திர கத்திரிக்காய் போன்றவையும் பயிரிடப்பட்டு அறுவடைக்கு தயாராக இருக்கின்றன.

    மேலும் தை பொங்கலையொட்டி நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் சிறைவாசிகள் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.

    • துத்திப்பட்டில் உள்ள ஒலாந்திரியா வேளாண் பண்ணையில் பொங்கல் விழா வண்ணமயமாக கொண்டாடப்பட்டது.
    • வண்ண கோலமிட்டு, கரும்பு கொட்டகையில் விளக்கேற்றி வழிபட்டு மண் பானையில் வெளிநாட்டவர் பொங்கல் வைத்தனர்.

    புதுச்சேரி:

    புதுவையில் செயல்படும் ஒலாந்திரியா தொண்டு நிறுவனத்தில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படும்.

    துத்திப்பட்டில் உள்ள ஒலாந்திரியா வேளாண் பண்ணையில் பொங்கல் விழா வண்ணமயமாக கொண்டாடப்பட்டது. இதில் ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த 60-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டனர்.

    இவர்களை ஒலாந்திரியா இயக்குனர் செந்தில்குமரன், துணை இயக்குனர் சாந்தி ஆகியோர் மாலை அணிவித்து வரவேற்றனர். சுற்றுலா பெண் பயணிகளில் சிலர் சேலை அணிந்திருந்தனர். வண்ண கோலமிட்டு, கரும்பு கொட்டகையில் விளக்கேற்றி வழிபட்டு மண் பானையில் வெளிநாட்டவர் பொங்கல் வைத்தனர். பொங்கல் பொங்கியபோது பொங்கலோ பொங்கல் என முழங்கினர்.

    பின்னர், மாட்டு வண்டியில் ஊர்வலமாக கிராமத்தை வலம் வந்தனர். உள்ளூர் கலைஞர்கள் நடத்திய பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு நடனமாடினர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வாக்கிய பஞ்சாங்கப்படி வருகிற டிசம்பர் தான் சனிப்பெயர்ச்சி விழா நடைபெற உள்ளது.
    • சனீஸ்வர பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.

    காரைக்காலை அடுத்த திருநள்ளாறில் உலக புகழ்பெற்ற சனீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் சனிக்கிழமை தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், சனிப்பெயர்ச்சியின் போது லட்சக்கணக்கான பக்தர்களும் சாமி தரிசனம் செய்வது வழக்கம்.

    அந்த வகையில் இக்கோவிலில், சனிப்பெயர்ச்சி விழா 2½ ஆண்டுகளுக்கு ஒருமுறையும், சமயத்தில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறையும் நடைபெறுவது வழக்கம்.

    வருகிற 17-ந் தேதி சனிப்பெயர்ச்சி விழா நடைபெறும் என்று சிலரும், மார்ச் மாதம் நடைபெறும் என சிலரும் வேறு பஞ்சாங்கம் முறைப்படி தவறான தகவல்களை பரப்பி வருவதால், பக்தர்கள் இடையே குழப்பம் ஏற்பட்டு வந்தது. இந்த குழப்பத்தை போக்கும் வகையில், கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன், கோவில் கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சுவாமிகள் மற்றும் கோவில் மூத்த சிவாச்சாரியார்கள், நேற்று சனீஸ்வரர் சன்னதி முன்பு அதிகாரப்பூர்வமாக விழா குறித்து அறிவித்தனர்.அப்போது அவர்கள் கூறியதாவது:-

    திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில், தினசரி, வாராந்திர, மாதாந்திர மற்றும் வருடாந்திர உற்சவங்கள் யாவும், வாக்கியபஞ்சாங்கம் கணித முறைப்படிதான் நடைபெற்று வருகிறது. அதன்படி, வாக்கிய பஞ்சாங்கப்படி வருகிற டிசம்பர் தான் சனிப்பெயர்ச்சி விழா நடைபெற உள்ளது. சனீஸ்வர பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்பதால், மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாடுகளை கோவில் நிர்வாகம் தொடங்கி உள்ளது.

    சனிப்பெயர்ச்சி விழா நடைபெறும் தேதி மற்றும் நேரம் ஆகியவை பின்னர் அறிவிக்கப்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பினால் திருநள்ளாறு கோவிலில் சனிப்பெயர்ச்சி விழா எப்போது நடைபெறும் என்ற குழப்பத்தில் இருந்த பக்தர்களுக்கு குழப்பம் தீர்ந்தது.

    • இதனால் துர்நாற்றம் வீசுவதாகவும் மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் வந்தது.
    • கடற்கரையிலேயே குழி தோண்டி புதைத்து அப்புறப்படுத்தினர்.

    புதுச்சேரி:

    பசிப்பிக் கடல் பகுதியில் வாழும் ஆலிவ்ரெட்லி மற்றும் சில வகை ஆமைகள், முட்டையிடுவதற்கு இந்திய பெருங்கடல் கரை பகுதியில் வரும். அவ்வாறு காரைக்கால் கடற்கரை ஓரம் உள்ள சவுக்கு தோப்பு மணல் பரப்பில் முட்டையிட வந்தபோது, படகில் மோதியோ, வலையில் சிக்கியோ இறந்து கரை ஒதுங்கிய வண்ணம் இருந்தது. கடந்த சில நாட்களில் 10-க்கும் மேற்பட்ட ஆலிவ்ரெட்லி மற்றும் பிற வகை ஆமைகள், காரைக்கால் கடற்கரையில் இறந்த நிலையில் ஒதுங்கி கிடப்பதாகவும், இதனால் துர்நாற்றம் வீசுவதாகவும் மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் வந்தது.

    அதைத்தொடர்ந்து மாவட்ட கலெக்டர் முகமது மன்சூர் அறிவுறுத்தலின்படி, காரைக்கால் மாவட்ட நிர்வாகம் சார்பில் செயல்பட்டு வரும் தன்னார்வலர்கள் அமைப்பினர், உடனடியாக கடற்கரைக்கு சென்று, இறந்து துர்நாற்றம் வீசிய நிலையில் கிடந்த 10-க்கும் மேற்பட்ட கடல் ஆமைகளை கண்டறிந்து, கடற்கரையிலேயே குழி தோண்டி புதைத்து அப்புறப்படுத்தினர்.

    • கடையில் வேலை செய்த பெண் ஊழியர் கீர்த்தனாவிடம், அவசரமாக அண்ணன் பணம் வாங்கி வரச் சொன்னார்.
    • கீர்த்தனா, கல்லா பெட்டியில் இருந்த ரூ.13,500 பணத்தை மர்ம நபரிடம் கொடுத்தார்.

    புதுச்சேரி:

    புதுவை குயவர்பாளையத்தைச் சேர்ந்தவர் முருகானந்தம், (வயது 50). லெனின் வீதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இவர் வாணிதாசன் வீதியில் உள்ள தனது அலுவலகத்தில் இருந்தார்.

    அப்போது மளிகை கடைக்கு வந்த மர்ம நபர், முருகானந்தத்தை செல்போனில் தொடர்பு கொண்டு, கடையில் அரிசி, நெய் விற்பனை குறித்து கேட்டுக் கொண்டிருந்தார்.

    அதே நேரத்தில் கடையில் வேலை செய்த பெண் ஊழியர் கீர்த்தனாவிடம், அவசரமாக அண்ணன் பணம் வாங்கி வரச் சொன்னார். கல்லா பெட்டியில் உள்ள பணக்கட்டை எடுத்துக்கொடு என்றார். அதற்கு கீர்த்தனா, முதலாளி சொல்லாமல் தர முடியாது என்றார்.

    உடன் மர்ம நபர், செல்போன் இணைப்பில் இருந்த முருகானந்தத்திடம் அரிசிக்கு பதிலாக நெய் கேட்டால் மாற்றி தரமாட்டேன் என்கிறார். நீங்கள் கூறுங்கள் என்றபடி, போனை கடை ஊழியர் கீர்த்தனாவிடம் கொடுத்தார்.

    செல்போனில் பேசிய முருகானந்தம், கீர்த்தனாவிடம் கொடுங்கள் எனக் கூறினார். அதன்பேரில் கீர்த்தனா, கல்லா பெட்டியில் இருந்த ரூ.13,500 பணத்தை மர்ம நபரிடம் கொடுத்தார்.

    உடன் அந்த நபர் வேகமாக புறப்பட்டு சென்றார். முருகானந்தம் கடைக்கு வந்த பிறகே, மர்ம நபர் நூதன முறையில் பணத்தை அபேஸ் செய்தது தெரிய வந்தது.

    இதுகுறித்து முருகானந்தம் அளித்த புகாரின் பேரில் உருளையன்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து அங்கு உள்ள சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.

    • தங்கபிரகாசம் காது கேட்காமல், வாய் பேசமுடியாத மாற்றுத்திற னாளி.
    • ெரயிவே ட்ராக்கில் தங்கபிரகாசம் நடை பயிற்சி செய்தார். அப்போது பின்னால் வந்த ெரயிலை கவனிக்கவில்லை.

    புதுச்சேரி:

    காரைக்காலை அடுத்த நிரவி நடுகளம் பேட்டையை சேர்ந்த வர் தங்கபிரகாசம் (வயது45). கூலி தொழிலாளி. இவர் காது கேட்காமல், வாய் பேசமுடியாத மாற்றுத்திற னாளி. கடந்த சில மாதமாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துவந்தார். இந்த நிலையில் ெரயிவே ட்ராக்கில் தங்கபிரகாசம் நடை பயிற்சி செய்தார். அப்போது பின்னால் வந்த ெரயிலை கவனிக்கவில்லை. இதனால் ெரயில் தங்கபிரகாசம் மீது மோதியது. இதில் அதே இடத்தில் தங்கபிராசம் உயிர் இழந்தார். இது குறித்து, அவரது மகன் ஆல்பர்ராஜ் பட்டினம் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • கணக்கெடுப்பு முடிந்தவுடன் அதனடிப்படையில் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட உள்ளது.
    • புதுவையில் ஓ.பி.சி. கணக்கெடுப்பு முடியும் வரை உள்ளாட்சி தேர்தல் நடத்த வாய்ப்பில்லை.

    புதுச்சேரி:

    புதுவையில் உள்ளாட்சி தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்தது.

    இதற்கான அறிவிப்பில் பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு வழங்கவில்லை. இது அரசியல் கட்சிகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

    இது தொடர்பாக எதிர்கட்சித்தலைவர் சிவா ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். ஐகோர்ட்டில் அரசு உறுதியளித்ததுபோல ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஒருநபர் கமிஷன் அமைத்தது.

    இந்த கமிஷன் பிற்படுத்தப்பட்டோர் குறித்த தகவல், புள்ளிவிபரங்கள், ஆவணங்களை சேகரித்து கருத்து கேட்பு கூட்டம் நடத்தியது. அனைத்து ஆய்வு பணிகளையும் முடித்த தனிநபர் கமிஷன் உள்ளாட்சி தேர்தலில் ஓ.பி.சி. பிரிவுக்கு இடஒதுக்கீடு செய்ய வீடு வீடாக கணக்கெடுப்பு நடத்த பரிந்துரை செய்துள்ளது.

    இந்த கணக்கெடுப்பு நடத்த கவர்னர் தமிழிசையும் ஒப்புதல் அளித்துள்ளார். இதனால் விரைவில் நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்துகளில் வார்டு வாரியாக உள்ள பிற்படுத்தப்பட்டோர் எண்ணிக்கை குறித்து ஆய்வு செய்யும் பணி தொடங்கப்பட உள்ளது.

    இந்த கணக்கெடுப்பு முடிந்தவுடன் அதனடிப்படையில் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட உள்ளது. இதனால் புதுவையில் ஓ.பி.சி. கணக்கெடுப்பு முடியும் வரை உள்ளாட்சி தேர்தல் நடத்த வாய்ப்பில்லை.

    எனவே உள்ளாட்சி தேர்தல் மீண்டும் தள்ளிப்போகிறது.

    • அதிகபட்சம் 40 ஆயிரம் ஏழை பெண்கள் திட்டத்தின் மூலம் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
    • அரசின் உதவி பெறாத பெண் பயனாளிகளை கண்டறியும் பணி நடந்து வருகிறது.

    புதுச்சேரி:

    புதுவை சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் வறுமைக்கோட்டுக்கு கீழ் அரசு திட்டங்களில் எந்த நிதியுதவியும் பெறாத ஏழை பெண்களுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும் என முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவித்தார்.

    பொங்கல் பண்டிகைக்குள் இந்த மாத உதவித்தொகை வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் முதல்-அமைச்சர் ரங்கசாமி தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இதற்கான கோப்பு கவர்னர் தமிழிசையின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. கவர்னர் தமிழிசை இந்த கோப்பிற்கு ஒப்புதல் அளித்துள்ளார்.

    இந்த தகவலை கவர்னர் தமிழிசை உறுதி செய்தார். இதை அரசாணையாக வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பொங்கல் பண்டிகைக்கு ஒரு சில நாட்களே இருந்தாலும் இத்திட்டத்தை உடனடியாக தொடங்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த தகவலை அமைச்சர் தேனீ. ஜெயக்குமார் தெரிவித்தார்.

    அரசின் மாத உதவித்தொகை பெறாத ஏழை பெண்கள் 17 ஆயிரம் பேரை கண்டறிந்துள்ளோம். இவர்களுக்கு அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மூலம் மாத உதவித்தொகையாக ரூ.1000 வழங்கப்பட உள்ளது. தொடர்ந்து அரசின் உதவி பெறாத பெண் பயனாளிகளை கண்டறியும் பணி நடந்து வருகிறது.

    அதிகபட்சம் 40 ஆயிரம் ஏழை பெண்கள் இத்திட்டத்தின் மூலம் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பொங்கல் பண்டிகைக்கு முன்பு இத்திட்டத்தை தொடங்கிவைக்கும் முயற்சியை எடுத்து வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கவர்னர் தமிழிசை மண்பானையில் அரிசி, வெல்லம் இட்டு பொங்கல் வைத்தார்.
    • கோலாட்டம், மயிலாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம், கட்டைக்கால் நடனம் உட்பட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடந்தது.

    புதுச்சேரி:

    புதுவை கவர்னர் மாளிகையில் இன்று பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. காலை 8 மணியளவில் கவர்னர் தமிழிசை மண்பானையில் அரிசி, வெல்லம் இட்டு பொங்கல் வைத்தார்.

    தொடர்ந்து கவர்னர் உறியடித்தார். தமிழர் பண்பாட்டு கலை நிகழ்ச்சிகள் நடந்தது. கோலாட்டம், மயிலாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம், கட்டைக்கால் நடனம் உட்பட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடந்தது. இதை கவர்னர் தமிழிசை கண்டுகளித்து கலைஞர்களை பாராட்டினார். மாட்டு வண்டி ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.

    தொடர்ந்து பொங்கல் விநாயகருக்கு படைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் ஏம்பலம் செல்வம், செல்வகணபதி எம்.பி., அமைச்சர்கள் நமச்சிவாயம், தேனீ.ஜெயக்குமார், சந்திரபிரியங்கா, சாய்.ஜெ.சரவணன்குமார், துணை சபாநாயகர் ராஜவேலு, எம்.எல்.ஏ.க்கள் ஏ.கே.டி.ஆறுமுகம், ஜான்குமார், கே.எஸ்.பி. ரமேஷ், பாஸ்கர், லட்சுமிகாந்தன், சிவசங்கர், அங்காளன், வி.பி.ராமலிங்கம், என்ஆர்.காங்கிரஸ் செயலாளர் ஜெயபால், பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன், அ.தி.மு.க. மாநில செயலாளர் அன்பழகன், தலைமை செயலர் ராஜீவ்வர்மா, டி.ஜி.பி. மனோஜ்குமார்லால் மற்றும் அரசு துறை செயலர்கள், உயரதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.

    விழாவில் சிறுதானிய விருந்து அளிக்கப்பட்டது. இதில் கம்பு லட்டு, ராகி சேமியா, சிறுதானிய இட்லி, வடை, சாமை பணியாரம், இனிப்பு பொங்கல், சிறுதானிய தோசை, குதிரைவால் பொங்கல், சாம்பார், பல வகை சட்னிகள் வைக்கப்பட்டிருந்தது.

    பொங்கல் விழாவுக்கு வந்த தலைமை செயலாளர் ராஜீவ்வர்மா, அரசு செயலாளர்கள் உதயகுமார், அபிஜித்விஜய் சவூத்திரி, ஏ.டி.ஜி.பி. ஆனந்தமோகன், ஐ.ஜி. சந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் தமிழர் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை அணிந்து வந்தனர்.

    காலை 8 மணிக்கு விழா தொடங்கினாலும் முதலமைச்சர் ரங்கசாமி காலை 10.30 மணிக்கு வந்தார். இதனால் கவர்னர் தமிழிசை 2½ மணி நேரம் காத்திருந்தார். முதலமைச்சர் ரங்கசாமி வந்த பிறகே விநாயகருக்கு பொங்கல் படைக்கப்பட்டது.

    • கருத்து வேறுபாடு காரணமாக, மனைவி மற்றும் மகன் மயிலாடுதுறையில் தனியாக வசித்து வருகின்றனர்.
    • தனது பெயரில் மட்டும் தனி கணக்கை சாமிநாத தொடங்கி உள்ளார்.

    புதுச்சேரி:

    காரைக்கால் அருகே நிரவி அக்கரை வட்டம் சுனாமி குடியிருப்பை சேர்ந்தவர் சாமிநாதன்(வயது 60). கூலித் தொழிலாளி. அவரது மனைவி ஞான ஒளி, மகன் நவீன். கடந்த சிலநாட்களுக்கு முன்பு கணவன், மனைவி இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, மனைவி மற்றும் மகன் மயிலாடுதுறையில் தனியாக வசித்து வருகின்றனர். ஆனால் ரேசன் கார்டை மாற்றாத காரணத்தால், அரசு வழங்கும் சலுகை மற்றும் பணம் தந்தைக்கு சென்று சேர்வதால், தந்தையின் வங்கி கணக்கில் நவீன் தன்னை ஜாயின் அக்கவுண்டராக அண்மையில் சேர்த்து ள்ளார்.

    ரேஷன் கார்டில் அரசு வழங்கும் பணத்தை சாமிநாதன் எடுக்கும் பொழுதெல்லாம், அவரது மனைவி ஞான ஒளியின் செல்போனுக்கு குறுந்தகவல் சென்றுள்ளது. இதனை அறிந்த மகன் நவீன், ரேசன் கார்டில் வரும் பணத்தை ஞான ஒளிக்கு வழங்குமாறு அவ்வப்போது கூறி வந்தார். ஆத்திரமடைந்த சாமிநாதன், வங்கி பாஸ்புக் தொலைந்து விட்டதாக கூறி, தனது பெயரில் மட்டும் தனி கணக்கை சாமிநாத தொடங்கி உள்ளார். இது குறித்து விபரம் மனைவி ஞான ஒளியின் செல்போனுக்கு குறுந்தகவல் சென்றுள்ளது.

    இது குறித்து தந்தையிடம் விவரம் கேட்க நவீன் நிரவிக்கு சென்று தந்தை சாமிநாதனிடம் வாக்குவாதம் செய்துள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில், அருகில் இருந்த மரக்கட்டையை எடுத்து தந்தையின் தலையில் பலமாக அடித்து விட்டு நவீன் தப்பி ஓடிவிட்டார். சாமிநாதனின் உறவினர் அரவிந்த், சாமிநாதனை காப்பாற்றி காரைக்கால் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு மருத்து வமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.  இதுகுறித்து அரவிந்த் நிரவி போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிந்து நவீனை கைது செய்தனர். 

    ×