என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதுவையில் மளிகை கடை பெண் ஊழியரிடம் நூதன முறையில் பணம் அபேஸ்
    X

    புதுவையில் மளிகை கடை பெண் ஊழியரிடம் நூதன முறையில் பணம் அபேஸ்

    • கடையில் வேலை செய்த பெண் ஊழியர் கீர்த்தனாவிடம், அவசரமாக அண்ணன் பணம் வாங்கி வரச் சொன்னார்.
    • கீர்த்தனா, கல்லா பெட்டியில் இருந்த ரூ.13,500 பணத்தை மர்ம நபரிடம் கொடுத்தார்.

    புதுச்சேரி:

    புதுவை குயவர்பாளையத்தைச் சேர்ந்தவர் முருகானந்தம், (வயது 50). லெனின் வீதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இவர் வாணிதாசன் வீதியில் உள்ள தனது அலுவலகத்தில் இருந்தார்.

    அப்போது மளிகை கடைக்கு வந்த மர்ம நபர், முருகானந்தத்தை செல்போனில் தொடர்பு கொண்டு, கடையில் அரிசி, நெய் விற்பனை குறித்து கேட்டுக் கொண்டிருந்தார்.

    அதே நேரத்தில் கடையில் வேலை செய்த பெண் ஊழியர் கீர்த்தனாவிடம், அவசரமாக அண்ணன் பணம் வாங்கி வரச் சொன்னார். கல்லா பெட்டியில் உள்ள பணக்கட்டை எடுத்துக்கொடு என்றார். அதற்கு கீர்த்தனா, முதலாளி சொல்லாமல் தர முடியாது என்றார்.

    உடன் மர்ம நபர், செல்போன் இணைப்பில் இருந்த முருகானந்தத்திடம் அரிசிக்கு பதிலாக நெய் கேட்டால் மாற்றி தரமாட்டேன் என்கிறார். நீங்கள் கூறுங்கள் என்றபடி, போனை கடை ஊழியர் கீர்த்தனாவிடம் கொடுத்தார்.

    செல்போனில் பேசிய முருகானந்தம், கீர்த்தனாவிடம் கொடுங்கள் எனக் கூறினார். அதன்பேரில் கீர்த்தனா, கல்லா பெட்டியில் இருந்த ரூ.13,500 பணத்தை மர்ம நபரிடம் கொடுத்தார்.

    உடன் அந்த நபர் வேகமாக புறப்பட்டு சென்றார். முருகானந்தம் கடைக்கு வந்த பிறகே, மர்ம நபர் நூதன முறையில் பணத்தை அபேஸ் செய்தது தெரிய வந்தது.

    இதுகுறித்து முருகானந்தம் அளித்த புகாரின் பேரில் உருளையன்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து அங்கு உள்ள சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×