என் மலர்
புதுச்சேரி
- சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் வாலிபர்களை சுற்றி வளைத்து பிடிக்க முயன்றனர்.
- போதை வாலிபரை ஆட்டோவில் ஏற்றி போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர்.
புதுச்சேரி:
புதுவையில் ஜீவா நகர் பகுதியில் புதிதாக கட்டி வரும் பாலத்தின் கீழே 3 வாலிபர்கள் கஞ்சா அடித்து கொண்டு கூச்சலிட்டு வருவதாக போதை தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் வாலிபர்களை சுற்றி வளைத்து பிடிக்க முயன்றனர். இதில் 2 வாலிபர்களை போலீசார் துரத்தி பிடித்தனர். ஒருவர் போலீஸ் பிடியில் சிக்காமல், அரைமணி நேரமாக ஆட்டம் காட்டினார்.
மேலும் அங்கிருந்த வாய்க்காலில் குதித்து சேறும், சகதியுடன் தப்பியோடினார். பின்னர் வெங்கட்டா நகரில் உள்ள ஓய்வு பெற்ற நீதிபதி வீட்டின் வாசலில் சேறும், சகதியும் சிந்தி கிடப்பதை அடையாளமாக கொண்டு அங்கு வாலிபர் பதுங்கியிருப்பதை கண்டுபிடித்தனர்.
அவரை வெளியே வருமாறு அழைத்தனர். அவர் வர மறுத்ததோடு, கஞ்சா போதையில் தன்னை விட்டு விடும்படி கதறி அழுதார். அங்கும் இங்குமாக ஆட்டம் காட்டி, கடைசியில் நீதிபதி வீட்டுக்கு நேரடியாக வந்துட்டியா. ஒழுங்கா வெளியே வந்துடுப்பா... என போலீசார் மன்றாடினர். அவர் வெளியே வர மறுத்ததால், உள்ளே சென்று தரதரவென வெளியே இழுத்து வந்து அவர் மீது தண்ணீர் ஊற்றி சேறும் சகதியை கழுவி குளிக்க வைத்தனர்.
பின்னர் போதை வாலிபரை ஆட்டோவில் ஏற்றி போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர். விசாரணையில், பெரியார் நகரை சேர்ந்த அரவிந்த் என்பதும், அவர் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் இருப்பது தெரிய வந்துள்ளது, கஞ்சா வாலிபரை போலீசார் பிடிக்க சென்றபோது அவர் செய்த ரகளையால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
- ஓட்டல்களில் தக்காளி சட்னியும் நிறுத்தி விட்டனர்.
- மாப்பிள்ளையின் நண்பர்கள் 2கிலோ தக்காளியை மணமகனுக்கு பரிசாக வழங்கினர்.
புதுச்சேரி:
பொதுவாக எந்த மதத்தில் திருமணம் நடந்தாலும் மணமக்களுக்கு உறவினர்கள், நண்பர்கள் பரிசு வழங்குவது வழக்கம்.
தற்போது தக்காளி விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது. விலை உயர்வால் குடும்ப தலைவிகள் தக்காளி வாங்குவதையே தவிர்த்து வருகின்றனர். மேலும் ஓட்டல்களில் தக்காளி சட்னியும் நிறுத்தி விட்டனர்.
இந்த நிலையில் தக்காளி விலை உயர்வை சுட்டி காட்டும் வகையில் மணமகனுக்கு அவரது நண்பர்கள் 2 கிலோ தக்காளி பரிசாக வழங்கிய சம்பவம் நடந்துள்ளது.
காரைக்கால் மாவட்டம் கருக்கங்குடி பகுதியைச் சேர்ந்த நசீர் என்பவருக்கும் திருப்பட்டினம் பகுதியை சேர்ந்த ரஹமத் நிஷா என்பவருக்கும் திருமணம் நடந்தது.
திருமணத்தில் பங்கேற்ற கருக்கங்குடியைச் சேர்ந்த மாப்பிள்ளையின் நண்பர்கள் 2கிலோ தக்காளியை மணமகனுக்கு பரிசாக வழங்கினர். ஆப்பிளுக்கு பதிலாக தக்காளியை பரிசளித்ததாக அவர்கள் தெரிவித்தனர். தக்காளியை மண மகனுக்கு பரிசு அளிக்கும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
- புதுச்சேரி அமைச்சரவை கூட்டம் முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் இன்று நடைபெற்றது.
- அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப்படிப்பில் 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.
புதுச்சேரி:
புதுச்சேரியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 10 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான அமைச்சரவை கூட்டம் முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் அமைச்சர்கள், தலைமைச் செயலாளர், சுகாதாரத்துறை, கல்வித்துறை செயலர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க புதுச்சேரி அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதனைத்தொடர்ந்து, ஒப்புதலுக்கான கோப்பை துணைநிலை ஆளுநருக்கு அனுப்ப உள்ளதாக புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் 37 எம்.பி.பி.எஸ் இடங்கள் மற்றும் 11 பல் மருத்துவ இடங்களில் படிக்க மாணவர்களுக்கு வாய்ப்பு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- வழக்கு பதிவு செய்யப்படாமல் 15-க்கும் மேற்பட்ட திருட்டு புகார்கள் நிலுவையில் உள்ளது.
- பைக் திருடிச்செல்லும் மர்ம நபர்களின் முழு உருவ படமும் சி.சி.டி.வி. காட்சிகள் மூலம் தெளிவாக தெரிகிறது.
புதுச்சேரி:
புதுவையில் கடந்த 10 நாட்களில் நகர பகுதியில் தொடர்ச்சியாக விலை உயர்ந்த பைக்குகள் திருடப்பட்டு வருகிறது. 'வீடு மற்றும் கடை வாசலில் நிறுத்தி வைக்கப்படும் பைக்குகளின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் திருடி வருகின்றனர்.
கடந்த 10 நாட்களில் அரியாங்குப்பம், பாகூர், பெரியக்கடை, காலாப்பட்டு, கிருமாம்பாக்கம், முத்தியால்பேட்டை, ரெட்டியார்பாளையம், சேதராப்பட்டு, திருபுவனையில் தலா ஒரு பைக், உருளையன்பேட்டை, தவளக்குப்பத்தில் தலா 2 பைக்குகள் திருடப்பட்டுள்ளதாக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதுதவிர வழக்கு பதிவு செய்யப்படாமல் 15-க்கும் மேற்பட்ட திருட்டு புகார்கள் நிலுவையில் உள்ளது. கடந்த 10 நாட்களில் மட்டும் புதுச்சேரி முழுவதும் 25-க்கும் மேற்பட்ட பைக்குகள் திருடப்பட்டுள்ளது.
ரெட்டியார்பாளையம் மற்றும் பெரியக்கடை போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 2 பைக்குகளை 3 பேர் சேர்ந்து பூட்டை லாவகமாக உடைத்து திருடிச்செல்லும் சி.சி.டி.வி., காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்யாமல் விசாரித்து வரு கின்றனர். பைக் திருடிச் செல்லும் மர்ம நபர்களின் முழு உருவ படமும் சி.சி.டி.வி. காட்சிகள் மூலம் தெளிவாக தெரிகிறது. பைக் திருட்டில் வெளிமாநில கும்பல் களம் இறங்கி உள்ளதா என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சனிப்பெயர்ச்சியின் போது லட்சக்கணக்கான பக்தர் களும் வருகை தந்த சாமி தரிசனம் செய்வது வழக்கம்.
- பாதுகாப்பு பணியில், கோவில் ஊழி யர்கள் மற்றும் போலீசார் ஈடுபட்டிருந்தனர்.
புதுச்சேரி:
காரைக்காலை அடுத்துள்ள திருநள்ளாறில், புகழ்பெற்ற சனீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு சனிக் கிழமை தோறும் ஆயிரக் கணக்கான பக்தர்களும், சனிப்பெயர்ச்சியின் போது லட்சக்கணக்கான பக்தர் களும் வருகை தந்த சாமி தரிசனம் செய்வது வழக்கம். வருகிற 20.12.23 அன்று மாலை 05.20 மணிக்கு சனிப்பெயர்ச்சி விழா விமரி சையாக நடைபெறவுள்ளது.
அதுசமயம், மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு சனி பகவான் பிரவேசிக்கிறார். இந்நிலையில், ஆடி பூரத்தை முன்னிட்டும், நேற்று சனிக்கிழமை என்பதால் பக்தர்கள் திருநள்ளாறு மற்றும் காரைக்கா லில் குவிந்தனர். அதிகாலை 4.30 மணி முதல், புதுச்சேரி, சென்னை, கோவை, திருச்சி, காஞ்சிபுரம், சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களிலிருந்தும், திரளான பக்தர்கள், கோவில் அருகே உள்ள நளன் குளத்தில், புனித நீராடி, சனீஸ்வரரை நீண்ட வரிசையில் நின்று, அர்ச்சனை, அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை கள் செய்து சாமிதரிசனம் செய்தனர். பாதுகாப்பு பணியில், கோவில் ஊழி யர்கள் மற்றும் போலீசார் ஈடுபட்டிருந்தனர்.
- கடந்த 2022-23-ம் ஆண்டிற்கு அறிவிக்கப்பட்ட ரூ.2 கோடியில் முதல் கட்டமாக 33 எம்.எல்.ஏ.க்களுக்கும் 73 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
- இந்த தொகையை கொண்டு எம்.எல்.ஏ.க்கள் தங்கள் தொகுதிகளில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள உள்ளனர்.
புதுச்சேரி:
புதுவை மாநிலத்தில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் 30 பேர், நியமன எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் என மொத்தம் 33 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.
இவர்களுக்கு தொகுதி மேம்பாட்டு நிதியாக ஆண்டுதோறும் தலா ரூ.2 கோடி வழங்கப்படும் என முதல்-அமைச்சர் ரங்கசாமி பதவியேற்றவுடன் அறிவித்தார். அதன்படி கடந்த 2022-23-ம் ஆண்டிற்கு அறிவிக்கப்பட்ட ரூ.2 கோடியில் முதல் கட்டமாக 33 எம்.எல்.ஏ.க்களுக்கும் 73 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்த நிலையில் 33 எம்.எல்.ஏ.க்களின் தொகுதி மேம்பாட்டு நிதியாக மேலும் ரூ.40 கோடியே 59 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதாவது ஒவ்வொரு எம்.எல்.ஏ.வுக்கும் தலா ரூ.1 கோடியே 23 லட்சம் வீதம் வழங்கப்படுகிறது. இதற்கான உத்தரவினை உள்ளாட்சித்துறை சார்பு செயலாளர் கார்த்திகேசன் தெரிவித்துள்ளார்.
இந்த தொகையை கொண்டு எம்.எல்.ஏ.க்கள் தங்கள் தொகுதிகளில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள உள்ளனர். மேலும் புதுவையில் அண்ணாதிடல், பஸ் நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் நடந்து வருகின்றன. இந்த பணிகளுக்காகவும் ரூ.20 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- ஒரே மாநில அரசு மருத்துவ கல்லூரியான இதில் ஆண்டு தோறும் 180 மாணவர்கள் எம்.பி.பி.எஸ். படித்து வருகின்றனர்.
- கவர்னர் தமிழிசை, மாணவர்களுக்கு தாமாக முன்வந்து பாடம் எடுக்க திட்டமிட்டுள்ளார்.
புதுச்சேரி:
புதுவை கதிர்காமத்தில் இந்திராகாந்தி அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை இயங்கி வருகிறது.
புதுவையில் உள்ள ஒரே மாநில அரசு மருத்துவ கல்லூரியான இதில் ஆண்டு தோறும் 180 மாணவர்கள் எம்.பி.பி.எஸ். படித்து வருகின்றனர்.
இதற்கிடையே மருத்துவம் படிக்கும் மாணவர்களுக்கு போதிய பேராசிரியர்கள், நூலகம், ஆய்வக வசதிகள் இல்லை என பலவித புகார்கள் எழுந்து வருகிறது.
மேலும் மருத்துவ மாணவர்கள் படிப்புக்கு தேவையான அல்ட்ரா சவுண்ட் பயன்பாடு குறித்த வகுப்புகள் எடுக்க பேராசிரியர்கள் இல்லை. இதுகுறித்து மாணவர்களும் புகார் தெரிவித்திருந்தனர்.
இதனையறிந்த கவர்னர் தமிழிசை, மாணவர்களுக்கு தாமாக முன்வந்து பாடம் எடுக்க திட்டமிட்டுள்ளார்.
இதுகுறித்து கவர்னர் தமிழிசை நிருபர்களிடம் கூறியதாவது:-
புதுவை அரசு மருத்துவக் கல்லூரியில் அல்ட்ரா சவுண்ட் வகுப்புக்கு ஆசிரியர்கள் இல்லை என மாணவர்கள் தெரிவித்தனர். அல்ட்ரா சவுண்ட் பரிசோதனையில் நான் சிறப்பு நிபுணர்.
எனவே அரசு மருத்துவக் கல்லூரிக்கு சென்று அல்ட்ரா சவுண்ட் வகுப்புகள் எடுக்க திட்டமிட்டுள்ளேன். இதற்கான நேரத்தை ஒதுக்கி மாணவர்களுக்கு வகுப்பு எடுக்க உள்ளேன்.
என் பணி புதுவை மக்கள் மீது அன்பு வைத்து செய்யும் பணி. தேர்தலில் போட்டியிடுவது குறித்து நான் தற்போது சொல்ல முடியாது. நான் தற்போது கவர்னர். அந்த பணியை செய்து வருகிறேன். நான் போட்டியிடுவதை ஆண்டவரும், ஆண்டுகொண்டிருப்பவரும் முடிவு செய்வார்கள்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- போலீசாரின் சோதனையில் சிக்கும் சில சுற்றுலா பயணிகள் கையில் பணம் வைத்திருப்பது இல்லை.
- போலீஸ்காரர் கூகுள் பே மூலம் வசூலித்த பணத்தை அவரது உறவினரான ராகுல் என்பவருக்கு சென்றுள்ளது.
புதுச்சேரி:
புதுவை போக்குவரத்து காவல்துறையினர் முக்கிய சந்திப்புகளில் நின்று கொண்டு விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர்.
குறிப்பாக ஹெல்மெட் அணியாதது, வேகமாக செல்வது, செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுவது போன்றவற்றுக்கு அபராதம் வசூலிக்கின்றனர்.
வெளியூரை சேர்ந்த சுற்றுலா பயணிகள் வாகனம் ஓட்டி வந்தால் அவர்களை மடக்கி அபராதம் விதிக்கிறார்கள். அந்த அபராதத்தை அவர்கள் உடனடியாக செலுத்துகின்றனர்.
போலீசாரின் சோதனையில் சிக்கும் சில சுற்றுலா பயணிகள் கையில் பணம் வைத்திருப்பது இல்லை. அவர்களிடம் 'கூகுள் பே' மூலம் பணத்தை செலுத்துமாறு போலீசார் வசூலித்து வருகின்றனர்.
ஆனால் அதற்குரிய ரசீது வழங்குவதில்லை. அந்த பணத்தை போலீசார் தங்களது உறவினர்களின் 'கூகுள் பே' செல்போன் நம்பரில் பெற்று மோசடி செய்வது தற்போது அம்பலமாகியுள்ளது.
சென்னையை சேர்ந்த முரளிதரன் என்பவர் கடந்த மே மாதம் 9-ந்தேதி தனது குடும்பத்துடன் காரில் புதுவை ராஜீவ்காந்தி சிக்னல் அருகே சென்றபோது, போக்குவரத்து சிக்னலை மீறிவிட்டதாக அங்கிருந்த போக்குவரத்து போலீஸ்காரர் ஒருவர், கூகுள் பே மூலம் ரூ.500 வசூலித்துள்ளார். ஆனால் அதற்கு எந்தவித ரசீதும் வழங்கப்படவில்லை
இதனால் சந்தேகம் அடைந்த முரளிதரன், போலீஸ் உயர் அதிகாரியிடம் புகார் செய்தார். இதுபற்றி சம்பந்தப்பட்ட கூகுள் பே எண்ணை வைத்து விசாரணை நடத்தியதில், போக்குவரத்து போலீஸ்காரர் வசூலித்த அபராத பணம் தனிப்பட்ட நபருக்கு சென்றது தெரியவந்தது.
அந்த போலீஸ்காரர் கூகுள் பே மூலம் வசூலித்த பணத்தை அவரது உறவினரான புதுவை சார்காசிமேடு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ராகுல் என்பவருக்கு சென்றுள்ளது.
இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட போலீஸ்காரருக்கு அதிகாரிகள் நோட்டீஸ் கொடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த போலீஸ்காரர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் உயர் அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்துள்ளனர்.
இதே போல் மேலும் பல சுற்றுலா பயணிகளிடம் போக்குவரத்து போலீசார் சிலர் பணத்தை வசூலித்து மோசடி செய்துள்ளதாக காவல்துறைக்கு புகார்கள் குவிந்து வருகின்றன. இதனால் பணம் வசூலித்த போலீசார் கலக்கத்தில் உள்ளனர்.
- ரூ.80 ஆயிரம் மதிப்பிலான மோட்டார் சைக்கிளை, வீட்டில் நிறுத்திவிட்டு, மனைவியுடன் தஞ்சாவூர் சென்றார்.
- பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், திருநள்ளாறு போலீசில் புகார் கொடுத்தார்.
புதுச்சேரி:
காரைக்கால் அருகே அம்பகரத்தூர் அலா காலணியை சேர்ந்தவர் முகம்மது அலீம். இவர் துபாயில் வேலைபார்த்துவிட்டு, கடந்த மாதம் வீட்டு வந்தார். வீட்டில், தனது மனைவி ஜெசிமாவுடன் வசித்து வருகிறார். கடந்த 8-ந்தேதி மனைவிக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால், ரூ.80 ஆயிரம் மதிப்பிலான மோட்டார் சைக்கிளை, வீட்டில் நிறுத்திவிட்டு, மனைவியுடன் தஞ்சாவூர் சென்றார். மீண்டும் கடந்த 15-ந் தேதி வீடு வந்தபோது, மோட்டார் சைக்கிளை காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், திருநள்ளாறு போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து, மோட்டார் சைக்கிளை திருடிசென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.
- காரில் பயணம் செய்த பாலச்சந்தர் என்பவர் இறந்து போனார்.
- விபத்து தொடர்பாக வடக்கு போக்குவரத்து போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
புதுச்சேரி:
வில்லியனூர் பகுதியை சேர்ந்த 6 பேர் ஒரே காரில் இன்று அதிகாலை புதுவைக்கு வந்து கொண்டிருந்தனர்.
வழுதாவூர் சாலையில் கார் அதிவேகமாக சென்ற போது மேட்டுப்பாளையத்தில் கே.எஸ்.பி. ரமேஷ் அலுவலகம் அருகே வந்த போது கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதில் சாலை யோரத்தில் இருந்த மோட்டார் சைக்கிள்கள் மீது மோதியது. மேலும் அருகில் உள்ள மின்கம்பம் மீது மோதியதில் காரின் முன்பக்கம் தீப்பிடித்து எரிந்தது.
இதில் காரில் பயணம் செய்த 6 பேரும் படுகாய மடைந்தனர். உடனே அருகில் இருந்தவர்கள் காரில் பயணம் செய்தவர்களை மீட்டு இந்திரா காந்தி அரசு மருத்துவக்கலூரி ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
இதில் காரில் பயணம் செய்த பாலச்சந்தர் என்பவர் இறந்து போனார். மேலும் திருமூர்த்தி என்பவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படடுள்ளார். அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மீதமுள்ள 4 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர்.இந்த விபத்து தொடர்பாக வடக்கு போக்குவரத்து போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் காரில் பயணம் செய்தவர்கள் மதுபோதையில் வந்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
புதுவையில் கடந்த சில நாட்களாக இதுபோன்ற விபத்துக்கள் அடிக்கடி நடந்து வருகிறது. கடந்த வாரம் புதுவைக்கு சுற்றுலா வந்த சென்னை வாலிபர்கள் குடிபோதையில் காரை தாறுமாறாக ஓட்டி சென்றனர். இதில் 15-க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்கள் சேதமானது.
அதுபோல் கடந்த 5 நாட்களுக்கு முன்பு சென்னையில் இருந்து புதுவைக்கு கிழக்கு கடற்கரை சாலையில் வந்த கார்சாலையோரம் நின்றிருந்த கும்பல் மீது மோதியது. இதில் 4 மீனவ பெண்கள் பலியானார்கள்.
மது குடித்து விட்டு காரை தாறுமாறாக ஓட்டி செல்வதால் புதுவையில் இது போன்ற விபத்துக்கள் அடிக்கடி நிகழ்கின்றன. இதனை போக்குவரத்து போலீசார் தடுக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
- மோசடி தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்கு பதிவு செய்து சார்பதிவாளர் சிவசாமி உள்பட 15 பேரை கைது செய்தனர்.
- புதுவை மணக்குள விநாயகர் கோவிலுக்கு பல இடங்களில் சொத்துகள் உள்ளது.
புதுச்சேரி:
புதுவை ரெயின்போ நகரில் காமாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான ரூ.50 கோடி நிலம் மோசடி செய்யப்பட்டது.
இந்த மோசடி தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்கு பதிவு செய்து சார்பதிவாளர் சிவசாமி உள்பட 15 பேரை கைது செய்தனர்.
மேலும் அப்போது மாவட்ட பதிவாளராக இருந்த ரமேஷ், நில அளவைத்துறை இயக்குனர் பாலாஜி ஆகியோரும் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளனர். தற்போது இந்த வழக்கை அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.
இதற்கிடையே வில்லியனூர் பைபாஸ் சாலையில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த மணக்குள விநாயகர் கோவிலுக்கு சொந்தமான இடத்தை அதிகாரிகள் மீட்டனர். இந்த நிலையில் புதுவை மணக்குளவிநாயகர் கோவிலுக்கு சொந்தமான மேலும் ரூ.1 கோடி மதிப்பிலான நிலம் அபகரிக்கப்பட்டுள்ளதாக புதுவை திருக்கோவில்கள் பாதுகாப்பு கமிட்டி குற்றம் சாட்டியுள்ளது.
இதுகுறித்து அக்கமிட்டியின் பொதுச்செயலாளர் தட்சணாமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புதுவை மணக்குள விநாயகர் கோவிலுக்கு பல இடங்களில் சொத்துகள் உள்ளது. அதுபோல் தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டம் வானூரிலும் மணக்குள விநாயகர் கோவிலுக்கு சொந்தமாக ரூ.1 கோடி மதிப்பு மிக்க நிலம் உள்ளது.
தற்போது அந்த நிலத்தை போலி பத்திரம் தயாரித்து மனைகளாக பிரித்து பலர் வீடு கட்டியுள்ளனர். எனவே காவல் துறை நில அபகரிப்பு வழக்கு பதிவு செய்து உடனே அந்த இடத்தை மீட்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மாணவர்களை அழைத்து சென்ற போது பஸ்சில் சிறு கோளாறு ஏற்ப ட்டுள்ளது.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 திருநங்கைகளை தேடி வந்தனர்.
புதுச்சேரி:
மயிலாடுதுறை மாவட் டம், திருவிளையாட்டம் பகுதியை சேர்ந்தவர் மோகன்(வயது32).இவர் நாகப்பட்டினம், தனியார் கல்லூரியில் பஸ் டிரைவராக வேலை செய்து வருகிறார். தினமும் இவர் நாகப் பட்டினத்தில் இருந்து செம்பனார்கோவில் வரை மாணவர்களை அழைத்து சென்று வருவது வழக்கம். சம்பவத்தன்று காலை மாணவர்களை அழைத்து சென்ற போது பஸ்சில் சிறு கோளாறு ஏற்ப ட்டுள்ளது. அதனால் அன்று மாலை மோகன் பஸ்சை இயக்கவில்லை.
இரவு பஸ்சில் உள்ள கோளாறை சரி செய்து, மறு நாள் மாணவர்களை அழைத்து வருவதற்காக, நாகப்பட்டினத்தில் இருந்து செம்பனார் கோவிலுக்கு அன்று இரவு 10.30 மணிக்கு, காரைக்கால் டாக்டர் கலைஞர் புறவழி சாலை வழியாக சென்றார். அப்போது அந்த சாலையின் ஓரத்தில் உள்ள ஒரு ஐயனார் கோவில் அருகே பஸ்ஸை நிறுத்திவிட்டு சிறுநீர் கழிக்க சென்றுள்ளார். அப்போது 30 வயது மதிக்கத்தக்க திருநங்கைகள் 2 பேர் திடீரென மோகனை வழிமறித்து, மோகன் கழுத்தில் அணிந்திருந்த 12 கிராம் தங்கச் செயினை பறித்துக் கொண்டு தப்பி ஓடி விட்டனர்.
இதனால் அதிர்ச்சி யடைந்த மோகன், காரைக்கால் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில், நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 திருநங்கைகளை தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று மாலை பஸ் நிலையம் அருகே நின்றிருந்த பவானி (வயது 35), சுவாதி (23) ஆகிய 2 திருநங்கைகளை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்த போது, பஸ் டிரைவரிடம் நகையை பறித்ததை ஒப்புக் கொண்டனர். தொடர்ந்து 2 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து 12 கிராம் தங்கச் செயினை போலீசார் மீட்டனர்.






