என் மலர்
புதுச்சேரி
- வரும் பாராளுமன்ற தேர்தலில் எங்கள் கூட்டணி வெற்றி பெறும்.
- கட்சியின் மூத்த தலைவர்கள் யாரும் புறக்கணிக்கப்படுவதில்லை.
புதுச்சேரி:
புதுவை மாநில பா.ஜனதா தலைவராக சாமிநாதன் கடந்த 2015-ம் ஆண்டு (டிசம்பர்) மாதம் நியமிக்கப்பட்டார்.
பா.ஜனதா தலைவர் பதவி 3 ஆண்டு காலமாகும். 2019 பாராளுமன்ற தேர்தல், கொரோனா பரவல் காரணமாக சாமிநாதன் தொடர்ந்து பதவியில் நீடித்து வந்தார்.
2021-ம் ஆண்டு சட்ட மன்ற தேர்தலுக்கு பிறகு சாமிநாதன் மாற்றப்படுவார் என்ற பேச்சு எழுந்தது. ஆனாலும், கடந்த 2 ஆண்டு காலமாக சாமிநாதனே பதவியில் நீடித்தார்.
இந்த நிலையில் கடந்த 8 ஆண்டு காலம் பா.ஜனதா தலைவராக இருந்த சாமிநாதன் மாற்றப்பட்டார். புதிய தலைவராக செல்வகணபதி எம்.பி. தற்போது நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை பா.ஜனதா தேசிய பொதுச் செயலாளர் அருண்சிங் வெளியிட்டுள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிக்கையில், புதுவை மாநில பா.ஜனதா தலைவராக செல்வகணபதி எம்.பி.யை தேசிய தலைவர் நட்டா நியமித்துள்ளார். இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது என குறிப்பிட்டுள்ளார். புதிய தலைவராக பொறுப்பேற்ற பா.ஜனதா மாநில தலைவர் செல்வகணபதி எம்.பி கூறியதாவது:-
பா.ஜனதா, என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் புதுவை நல்ல வளர்ச்சியை நோக்கி செல்கிறது. வரும் பாராளுமன்ற தேர்தலில் எங்கள் கூட்டணி வெற்றி பெறும். பா.ஜனதா சார்பில் வேட்பாளரை நிறுத்த விரும்புகிறோம். கூட்டணி கட்சி வேட்பாளரை நிறுத்தினாலும் அவர் வெற்றிக்கு பாடுபடுவோம்.
கட்சியின் மூத்த தலைவர்கள் யாரும் புறக்கணிக்கப்படுவதில்லை. அவர்களின் ஆலோசனையை பயன்படுத்துவோம். கூட்டணி முடிவுகளை தேசிய தலைவர்கள் எடுப்பார்கள். அவர்களின் முடிவை செயல்படுத்துவது எங்கள் கடமை.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
செல்வகணபதி எம்.பி. 19.4.1957-ல் பிறந்தவர். எம்.ஏ. எம்.எட். படித்துள்ளார். விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் நிறுவனர். விவேகானந்தரின் 150-வது பிறந்தநாள் விழா குழு தலைவர் பொறுப்பு வகித்து பல நிகழ்ச்சிகளை நடத்தினார். கலைமாமணி விருது வழங்கும் குழு உறுப்பினர், கைப்பந்து சங்க தலைவர், கம்பன் கழக பொருளாளர், லாஸ்பேட்டை திரவுபதி யம்மன் கோவில் செயலாளர், நரேந்திரா ஸ்போர்ட்ஸ் கிளப் தலைவர் உட்பட பல பொறுப்புகளில் உள்ளார்.
- சாமிநாதனின் பதவிக்காலம் கடந்த 2018-ம் ஆண்டு முடிவடைந்த நிலையில் பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டது.
- பா.ஜ.க.வின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
புதுச்சேரி:
புதுவை மாநில பா.ஜ.க. தலைவராக சாமிநாதன் கடந்த 2015-ம் ஆண்டு நியமிக்கப்பட்டார். பா.ஜ.க. கட்சி விதிகளின்படி 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதிய தலைவர் தேர்வு செய்யப்படுவார்.
அந்த வகையில் சாமிநாதனின் பதவிக்காலம் கடந்த 2018-ம் ஆண்டு முடிவடைந்த நிலையில் பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டது.
அதன்பின் 2020-ம் ஆண்டு மீண்டும் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து அவரது பதவிக்காலம் கடந்த ஜனவரி மாதத்துடன் நிறைவடைந்த நிலையில் மாநில தலைவர் பதவியை பிடிக்க கட்சி நிர்வாகிகள் பலரும் முயற்சித்து வந்தனர்.
இந்தநிலையில் பா.ஜ.க.வின் புதுவை மாநில தலைவராக செல்வகணபதி எம்.பி. நேற்று நியமிக்கப்பட்டார். இதனை பா.ஜ.க.வின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
- 17 வயதான பிளஸ்-2 மாணவி ஒருவர் ஆசிரியர் கணேஷ்குமார் நடத்திவரும் டியூஷன் செண்டரில் படித்தார்.
- கணேஷ்குமார் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து, தலைமறைவாக இருந்த அவரை தேடிவந்த னர்.
புதுச்சேரி:
காரைக்காலை அடுத்த நெடுங்காடு மேல பொன் பேற்றியை சேர்ந்தவர் கணேஷ்குமார் (வயது 43). இவர், நெடுங்காடு ஜவஹர்லால் நேரு அரசு மேல்நிலைப்பள்ளியில் கணித ஆசிரியராக வேலை பார்த்து வந்தார். மேலும் அப்பகுதியிலேயே தனது மனைவியுடன் சேர்ந்து டியூஷன் செண்டரையும் நடத்தி வந்தார். இந்நிலையில் அப்பள்ளி யில் படிக்கும் 17 வயதான பிளஸ்-2 மாணவி ஒருவர் ஆசிரியர் கணேஷ்குமார் நடத்திவரும் டியூஷன் செண்டரில் படித்தார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு டியூஷன் செண்டருக்குப் போன மாணவியிடம் ஆசிரி யர் கணேஷ்குமார் பாலியல் துன்புறுத்தல் செய்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து, அந்த மாணவி தனது பெற்றோரிடம் புகார் தெரிவித்ததை அடுத்து, சம்பந்தப்பட்ட ஆசிரியர் கணேஷ்குமார் மீது நட வடிக்கை எடுக்க கோரி மாணவியின் பெற்றோர் நெடுங்காடு போலீசில் புகாரளித்தனர். தொடர்ந்து, நெடுங்காடு போலீசார் கணேஷ்குமார் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து, தலைமறைவாக இருந்த அவரை தேடிவந்த னர். அவரது செல்போன் எண் சிக்னலை வைத்து தேடுதல் வேட்டையில் ஈடு பட்டனர். இந்த நிலையில் கும்ப கோணத்தில் உள்ள உறவினர் வீட்டில் ஆசிரியர் கணேஷ்குமார் தலைமறை வாக இருந்தது போலீ சாருக்கு தெரிய வந்தது. இதனை அடுத்து நெடுங்காடு சப்- இன்ஸ்பெக்டர் ராஜன் தலைமையிலான போலீசார், கும்பகோணம் விரைந்து சென்று ஆசிரியர் கணேஷ் குமாரை கைது செய்தனர்.
- மதுபோதையில் வாகனம் ஓட்டாமல் இருக்க, போக்குவரத்து போலீசார், தீவிர விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
- போலீசார் காரைக்காலின் பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்ட னர்.
புதுச்சேரி:
புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டத்தில் அண்மைக் காலமாக, இரவு 7 மணி முதல் 11 மணி வரை மதுபோதையில் வாகனம் ஓட்டுவதால், சாலை விபத்துகள் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. அதனால், மதுபோதையில் வாகனம் ஓட்டாமல் இருக்க, போக்குவரத்து போலீசார், தீவிர விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, சாலையில் செல்லும் சந்தேகப்படும் படியான நபர்களை சுவாச பரிசோ தனை கருவி (பிரீத் அனலை சர்) மூலம் பரிசோதனை செய்து, மது அருந்தி வாகனம் ஓட்டினால், அவரது புகைப்படத்துடன், கோர்ட்டுக்கு சார்ஜ்சீட் அனுப்பி வைத்து ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து வருகின்றனர்.
இத்திட்டம் ஏற்கனவே இருந்தாலும், இரவுநேர விபத்தை தடுக்கும் பொருட்டு தீவிரப்படுத் தப்பட்டுள்ளது. அதன்படி, சீனியர் போலீஸ் சூப்பி ரண்டு (பொறுப்பு) நிதின் கவ்ஹால்ரமேஷ் உத்தர வின் பேரில், காரைக்கால் போக்குவரத்து இன்ஸ் பெக்டர் மரிகிறிஸ்டியன் பால் மற்றும் போக்குவரத்து போலீசார் காரைக்காலின் பல்வேறு இடங்களில் சோதனை மேற் கொண்டனர். இந்த பரிசோதனை இனி அடிக்கடி நடைபெறும் என்பதால், வாகன ஓட்டி கள் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டக் கூடாது. அதிவேக மாக வும் வாக னம் ஓட்டக்கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ள னர்.
- காந்திவீதியில் பெருமாள் கோவில் தெருவை கடந்து சென்றபோது இரு தரப்பினருக்கும் இடையே திடீர் மோதல் ஏற்பட்டது.
- இருதரப்பினர் கோஷ்டிகளாக மோதிக்கொண்டதால் விநாயகர் சிலை ஊர்வலத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரி:
புதுச்சேரியில் விநாயகர் சதுர்த்தியையொட்டி இந்து முன்னணி மற்றும் சதுர்த்தி பேரவை சார்பில் பல்வேறு இடங்களில் 50-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
இந்த விநாயகர் சிலைகள் கடலில் கரைப்பதற்காக (விஜர்சனம்) நேற்று மாலை புதுவை சாரம் அவ்வை திடலிருந்து புதுவை கடற்கரைக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.
இந்த நிலையில் புதுச்சேரி முத்தியால்பேட்டை திருவள்ளுவர் நகர் டோபிகானா பகுதியில் வைக்கப்பட்டு இருந்த விநாயகர் சிலையும், மதுரை வீரன் கோவில் தெருவில் வைக்கப்பட்டு இருந்த சிலையும் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது.
டோபிகானா பகுதியில் வைக்கப்பட்டு இருந்த சிலையின் முன்பு விஷ்வா ஆதித்யா (வயது 21), அருண், சஞ்சய், அய்யனார் உள்பட பலர் நடந்து சென்றனர்.
அதுபோல் மதுரை வீரன் கோவில் தெரு விநாயகர் சிலையின் முன்பு அதே பகுதியை சேர்ந்த அசோக் (21), வசந்த் (23), சூர்யா (16) மற்றும் சிலர் சென்றனர்.
காந்திவீதியில் பெருமாள் கோவில் தெருவை கடந்து சென்றபோது இரு தரப்பினருக்கும் இடையே திடீர் மோதல் ஏற்பட்டது. இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் கற்களாலும், கைகளாலும் தாக்கிக்கொண்டனர்.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் லேசாக தடியடி நடத்தி மோதலை கட்டுப்படுத்தினர்.
இந்த மோதலில் இரு தரப்பையும் சேர்ந்த விஷ்வா ஆதித்யா, அருண், சஞ்சய், அய்யனார், அசோக், வசந்த், சூர்யா ஆகிய 7 பேரும் படுகாயம் அடைந்தனர். போலீசார் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இருதரப்பினர் கோஷ்டிகளாக மோதிக்கொண்டதால் விநாயகர் சிலை ஊர்வலத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
தொடர்ந்து விநாயகர் சிலை ஊர்வலத்தில் மேலும் மோதல் ஏற்படாமல் தடுக்க புதுவை கடற்கரை சாலை முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டனர்.
- வாலிபருக்கு நிபா வைரஸ் தொற்று என வதந்தி உலா வருகிறது.
- வதந்தியை யாரும் நம்ப வேண்டாம். புதுவையில் யாருக்கும் நிபா வைரஸ் பாதிப்பு இல்லை.
புதுச்சேரி:
கேரள மாநிலம் கோழிக்கோடு உள்ளிட்ட பகுதிகளில் நிபா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதுவரை 2 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 150-க்கும் மேற்பட்டோர் நிபா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நிபா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக பொது இடங்களில் முகக்கவசம் அணிவது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை கேரளா அரசு விதித்துள்ளது.
மேலும், பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (24-ந் தேதி) வரை விடுமுறை விடப்பட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக கேரளா மாநிலத்தையொட்டி உள்ள புதுச்சேரி மாநிலம் மாகி பிராந்தியத்திலும் நிபா வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 40 வயதுடைய ஒரு வாலிபர் கடந்த வாரம் கேரளாவுக்கு சுற்றுலா சென்றுவிட்டு வந்துள்ளார்.
அதன்பிறகு, அவருக்கு அதிக காய்ச்சல், சளி, மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் கடந்த 3 நாட்களுக்கு முன்பு புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதால், தற்போது அந்த வாலிபர் உடல்நிலை தேறி வருகிறார்.
இருப்பினும், அவர் கேரளாவுக்கு சென்று வந்ததால் நிபா வைரஸ் பாதிப்பு இருக்கிறதா? என்பதை கண்டறிய அந்த நபருக்கு உமிழ்நீர், சிறுநீர், பிளாஸ்மா மற்றும் ரத்த மாதிரிகளை சேகரித்து பரிசோதனை செய்யப்பட்டது. இந்த பரிசோதனை முடிவில் அவருக்கு நிபா வைரஸ் தொற்று இல்லை என்பது தெரியவந்தது.
இதுதொடர்பாக புதுவை சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் ஸ்ரீராமுலு கூறியதாவது:-
ஜிப்மரில் அனுமதிக்கப்பட்ட கடலூர் மாவட்டத்தை சேர்ந்த வாலிபருக்கு நிபா வைரஸ் தொற்று இல்லை என்ற பரிசோதனை முடிவில் தெரியவந்துள்ளது.
எனவே, சமூக வலைதளங்களில் ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருக்கும் வாலிபருக்கு நிபா வைரஸ் தொற்று என வதந்தி உலா வருகிறது. இந்த வதந்தியை யாரும் நம்ப வேண்டாம். புதுவையில் யாருக்கும் நிபா வைரஸ் பாதிப்பு இல்லை.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- துணை சபாநாயகர் ராஜவேலு சென்னையில் உள்ள தனது மகள் வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார்.
- புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி நேற்று காலை துணை சபாநாயகர் ராஜவேலுவை பார்ப்பதற்காக சென்னை சென்றார்.
புதுச்சேரி:
புதுச்சேரி துணை சபாநாயகர் ராஜவேலு உடல்நிலை பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
இதனை தொடர்ந்து துணை சபாநாயகர் ராஜவேலு சென்னையில் உள்ள தனது மகள் வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார்.
இந்த நிலையில் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி நேற்று காலை துணை சபாநாயகர் ராஜவேலுவை பார்ப்பதற்காக சென்னை சென்றார்.
எனவே அவர் நேற்று பகல் முழுவதும் சட்டசபைக்கு வரவில்லை. அவரது அலுவலக ஊழியர்கள் நேற்று மாலை வழக்கம் போல் அலுவலகத்தை பூட்டி விட்டு சென்றனர்.
இந்த நிலையில் இரவு 10 மணிக்கு முதலமைச்சர் ரங்கசாமி சட்டசபை வளாகத்தில் உள்ள தனது அலுவலகத்திற்கு வருவதாக சட்டசபை காவலர்களுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அவர்கள் விரைந்து சென்று முதலமைச்சரின் அலுவலகத்தை திறந்து வைத்தனர். முதலமைச்சர் ரங்கசாமி இரவு 10 மணியளவில் சட்டசபை அலுவலகத்துக்கு வந்தார். சுமார் 20 நிமிடம் அலுவலகத்தில் இருந்து பணிகளை மேற்கொண்ட முதலமைச்சர் ரங்கசாமி 10.20 மணியளவில் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். முதலமைச்சர் ரங்கசாமி இரவில் திடீரென சட்டசபைக்கு வந்ததால் அங்கு திடீர் பரபரப்பை ஏற்படுத்தியது.
- திருநள்ளாறு சனீஸ்வரர் கோவில் கிராம நிர்வாக அலுவலர் உதவியாளர் தற்கொலை செய்து கொண்டார்.
- இவருக்கும், தமிழ் இலக்கியா என்ற பெண்ணுக்கும் 2014 -ம் ஆண்டு திருநள்ளாறு கோவிலில் திருமணம் நடந்தது.
புதுச்சோரி:
காரைக்காலை அடுத்த திருநள்ளாறு சனீஸ்வரர் கோவில் கிராம நிர்வாக அலுவலர் உதவியாளராக பணி செய்து வந்தவர் விநாயகம் (வயது 39). இவர் நிரவி காக்கா மொழி கிராமத்தில் வசித்து வந்தார். இவருக்கும், தமிழ் இலக்கியா என்ற பெண்ணுக்கும் கடந்த 2014 -ம் ஆண்டு திருநள்ளாறு கோவிலில் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். விநாயகத்திற்கு அதிகப்படியான மது குடிக்கும் பழக்கம் இருந்ததால், காரைக்கால் அரசு ஆஸ்பத்திரி மற்றும் நாகை மாவட்டம் கீழ்வேளூர் மது போதை மறுவாழ்வு மையத்திலும் கடந்த சில மாதங்களாக சிகிச்சை பெற்று வந்தார்.
விநாயகத்தை பரிசோதித்த டாக்டர்கள் இனி மது அருந்தக் கூடாது என எச்சரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் விநாயகத்திற்கு வலிப்பு நோய் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. அதனால் விநாயகத்தை குடும்பத்தார்கள் தனியாக விடாமல் பராமரித்து வந்துள்ளனர். இந்நிலையில் விநாயகம் வழக்கம்போல் நேற்று முன்தினம் கோவில் பணிக்கு சென்று விட்டு வீட்டுக்கு வந்துள்ளார். அவரது மனைவி வேலைக்கு சென்ற பிறகு, விநாயகம் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து விநாயகத்தின் மனைவி திருநள்ளாறு போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ கல்வி படிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு 10 சதவீத இடஒதுக்கீடு இந்த கல்வி ஆண்டில் அமல்படுத்தப்பட்டுள்ளது.
- முதலமைச்சர் ரங்கசாமியின் அறிவிப்பு அரசு பள்ளி மாணவர்கள், பெற்றோர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி:
புதுவை என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா கூட்டணி அரசு பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.
பெண்களுக்கு ரூ.1000 உதவித்தொகை, கியாஸ் மானியம், பெண் குழந்தைகளுக்கு ரூ.50 ஆயிரம் வைப்புத்தொகை என புதிய திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளது. இந்த கல்வி ஆண்டு முதல் புதுவையில் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு மருத்துவ கல்வியில் 10 சதவீத உள் ஒதுக்கீடு வழங்க மத்திய அரசின் அனுமதி பெற்று அரசாணை வெளியிடப்பட்டது.
இதன்படி புதுவையில் அரசு மருத்துவக்கல்லூரி, தனியார் மருத்துவ கல்லூரிகளில் மொத்தம் உள்ள 370 அரசு இடங்களில் 37 எம்.பி.பி.எஸ். இடங்கள் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு கலந்தாய்வு தொடங்கியுள்ளது. தனியார் பள்ளிகளில் படிக்க வைக்க வசதி இல்லாதவர்கள் அரசு பள்ளிகளில் படிக்கின்றனர்.
எனவே மருத்துவக்கல்விக்கு தேர்வாகும் மாணவர்களின் கல்வி கட்டணத்தை அரசே செலுத்த வேண்டும் என பல்வேறு அரசியல்கட்சிகள், அமைப்புகள் கோரிக்கை விடுத்து வந்தன.
இந்த நிலையில் முதலமைச்சர் ரங்கசாமி அரசு பள்ளி மாணவர்ளுக்கு இலவச மருத்துவ கல்வி வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ கல்வி படிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு 10 சதவீத இடஒதுக்கீடு இந்த கல்வி ஆண்டில் அமல்படுத்தப்பட்டுள்ளது. அரசு பள்ளி மாணவர்களின் பெற்றோர் கல்வி கட்டணம் செலுத்த சிரமப்படுகின்றனர்.
எனவே முழு கல்வி கட்டணத்தையும் அரசே ஏற்க வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்புகள் கோரிக்கை வைத்தனர். பெற்றோர்களும் தங்களின் சிரமத்தை தெரிவித்தனர்.
இதையேற்று அரசு பள்ளி மாணவர்கள் உள் ஒதுக்கீட்டில் மருத்துவ கல்வி படிக்க இடம் பெறும் மாணவர்களுக்கு கல்லூரிகளுக்கு அரசு நிர்ணயிக்கும் கட்டணம் முழுவதையும் புதுவை அரசே செலுத்தும். தனியார் கல்லூரி நிர்வாகங்கள் அரசு பள்ளி மாணவர்களிடம் கட்டணம் கேட்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் அறிவித்துள்ளார்.
முதலமைச்சர் ரங்கசாமியின் இந்த அறிவிப்பு அரசு பள்ளி மாணவர்கள், பெற்றோர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- 11 மீனவ கிராமத்தை சேர்ந்த பஞ்சாயத் தார்கள் ஆலோசனைக் கூட்டம், காரைக்காலில் உள்ள மீன்பிடித் துறை முகத்தில் நடைபெற்றது.
- புதுச்சேரி முதலமைச்சர், மீன்வளத்துறை அமைச்சர், மாவட்ட மீன் வளத்துறை அலுவகலத் திற்கு அனுப்பி வைத்தனர்.
புதுச்சேரி:
காரைக்கால் மாவட்டத் தில் உள்ள காரைக்கால் மேடு, கிளிஞ்சல்மேடு, கோட்டுச்சேரி மேடு, மண்ட பத்தூர், பட்டினச்சேரி உள்ளிட்ட 11 மீனவ கிராமத்தை சேர்ந்த பஞ்சாயத் தார்கள் ஆலோசனைக் கூட்டம், காரைக்காலில் உள்ள மீன்பிடித் துறை முகத்தில் நடைபெற்றது. கூட்டத்தின் முடிவில், மீன்பிடித் துறைமுகத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும், காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தை ஒட்டிய கடற்கரை முகத்து வாரத்தை தூர்வார வேண்டும், மீனவ கிராம சாலைகளை சரிசெய்ய வேண்டும், அடிப்படை வசதிகளை செய்துதர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நாளை (22.9.23) முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தீர்மானம் நிறைவேற்ற ப்பட்டு, அதன் நகலை, புதுச்சேரி முதல மைச்சர், மீன்வளத்துறை அமைச்சர், மாவட்ட மீன் வளத்துறை அலுவகலத் திற்கு அனுப்பி வைத்தனர். மேலும், 22-ந் தேதி முதல், மீன்பிடி படகுகளை, மீன்பிடித் துறைமுகத்தி லிருந்து கொண்டு சென்று, கடற்கரை சாலையில் உள்ள மீன்வளத்துறை அலுவலகம் முன்பு உள்ள அரசலாற்றில் நிறுத்திவைக்கப்படும் என்றும் மீனவர்கள் தெரி வித்துள்ளனர்.
- அரசு பள்ளி மாணவர்களுக்கு திறமையை வெளிக்கொண்டு வர உதவி செய்வது என் வாழ்க்கையில் மிகப் பெரிய பேராக அமையும்.
- மாணவர்களின் திறமைகளை கண்டறிந்து அவர்களை சர்வதேச போட்டிகளில் கலந்து கொள்ளும் அளவுக்கு பயிற்சி வழங்கப்படும்.
புதுச்சேரி:
புதுச்சேரி அரசு பள்ளி மாணவர்களுக்கான "திறன் அறிதல்" நிகழ்ச்சி கவர்னர் மாளிகையில் நடந்தது. நிகழ்ச்சிக்கு கவர்னர் தமிழசை சவுந்தரராஜன் தலைமை தாங்கினார்.
பள்ளி கல்வித்துறை இணை இயக்குனர் சிவகாமி வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் அரசு பள்ளி மாணவர்கள் 10 பேர் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை தனித்தனியாக வெளிப்படுத்தினர்.
இதில் பரத நாட்டியம், சிலம்பாட்டம், குரலிசை, வாத்திய இசை, கழிவுப் பொருட்களில் இருந்து கலைப்பொருட்கள் செய்வது, அறிவியல் செய்முறைகள் போன்ற திறமைகளை நிகழ்த்திக் காட்டினர்.
இதனை பார்த்து மகிழ்சியடைந்த கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் மாணவர்களுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
அரசு பள்ளி மாணவர்களுக்கு திறமையை வெளிக்கொண்டு வர உதவி செய்வது என் வாழ்க்கையில் மிகப் பெரிய பேராக அமையும்.
குழந்தைகளின் உடல் நலம் போலவே மனநலமும் பாதிக்கப்படுகிறது. மன அழுத்தத்தை போக்க பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் அதிக நேரம் செலவழிக்க வேண்டும்.
மாணவர்களின் திறமைகளை கண்டறிந்து அவர்களை சர்வதேச போட்டிகளில் கலந்து கொள்ளும் அளவுக்கு பயிற்சி வழங்கப்படும். இதற்கு கவர்னர் மாளிகை மாணவர்களுக்கு உதவி செய்யும்.
இவ்வாறு கவர்னர் தமிழிசை கூறினார்.
- பெண்களுக்கு சட்டமன்றம், பாராளுமன்றத்தில் 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க பிரதமர் முடிவெடுத்துள்ளார்.
- தெலுங்கானா கவர்னர் மாளிகையில் கூட அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களின் திறன் மேம்பாட்டு பயிற்சி நடக்க உள்ளது.
புதுச்சேரி:
தமிழிசை சவுந்தரராஜன் புதுவை கோரிமேடு அருகே உள்ள ஆலங்குப்பம் அரசு தொடக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளியை பார்வையிட்டார்.
ஸ்மார்ட் வகுப்பறையை பார்வையிட்ட அவர், மாணவர்களோடு கலந்துரையாடி பாடம் நடத்தினார். மேலும் மாணவர்களுக்கு மதிய உணவினையும் பரிமாறினார்.
அதைத்தொடர்ந்து கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-
பெண்களுக்கு சட்டமன்றம், பாராளுமன்றத்தில் 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க பிரதமர் முடிவெடுத்துள்ளார். இது பெண்கள் பொது வாழ்க்கைக்கு வர உதவியாக இருக்கும்.
இந்த இடஒதுக்கீடு நடைமுறைக்கு வரும்போது, புதுவை மாநிலத்தில் 11 பெண் எம்.எல்.ஏ.க்களும், தமிழகத்தில் 77 பெண் எம்.எல்.ஏ.க்களும், 13 பெண் எம்.பி.க்களும் இருப்பார்கள்.
கவர்னர் உண்மையாக மக்களுக்காக பணியாற்ற வேண்டும் என்று அடிப்படையில் என்னிடம் வரும் கோப்புகள், அதிகாரிகளிடம் இருந்து கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில்தான் சிலவற்றை தெரிவிக்கிறேன். அதற்காக பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
குடும்ப தலைவிகளுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் நல்ல எண்ணத்தோடு தொடங்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது.
அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில்தான் மிகவும் கடுமையாக முயற்சித்து மருத்துவ கல்வியில் 10 சதவீத இடஒதுக்கீட்டை பெற்றுள்ளோம். அதற்காக நன்றி தெரிவித்து பிரதமருக்கு மாணவிகள் கடிதமும் எழுதியுள்ளனர்.
தெலுங்கானா கவர்னர் மாளிகையில் கூட அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களின் திறன் மேம்பாட்டு பயிற்சி நடக்க உள்ளது. கல்வி சாரா செயல்பாடுகளில் விளையாட்டு, கலை, பண்பாடு ஆகியவற்றில் மாணவர்களுடைய திறமையை மேம்படுத்துவதற்காகவும், மற்ற குழந்தைகளை ஊக்கப்படுத்துவதற்கும் எல்லா விதத்திலும் உறுதுணையாக இருப்பதற்கும், பொது போட்டிகளில் அவர்கள் கலந்து கொள்ள உதவி செய்யும் நோக்கத்தில் இந்த திட்டத்தை தொடங்குகிறோம்.
அரசு ஆஸ்பத்திரிகளும், அரசு பள்ளிகளும் சாமானிய மக்களுக்கு பலன் தர வேண்டும் என்பது தான் என்னுடைய அடிப்படையான ஆசை.
இவ்வாறு அவர் கூறினார்.






