search icon
என் மலர்tooltip icon

    மிசோரம்

    • தொடர்ந்து நடந்த மீட்பு பணியில் 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன.
    • விபத்தில் மீதமுள்ள ஒருவரை தேடும் பணி நீடிப்பதாக கூடுதல் துணை ஆணையாளர் சாய்ஜிக்புய் கூறியுள்ளார்.

    மிசோரமில் நத்தியால் மாவட்டத்தில் மவ்தார் கிராமத்தில் தனியார் நிறுவனத்தின் கல்குவாரி ஒன்று இயங்கி வருகிறது. இந்த குவாரியில் பணியில் ஈடுபட்டு இருந்தபோது, திடீரென குவாரியில் கற்கள் அதிக அளவில் சரிந்து விழுந்துள்ளன.

    இந்த சம்பவத்தில் 12 தொழிலாளர்கள் சிக்கினர். இதுபற்றி தகவல் அறிந்து எல்லை பாதுகாப்பு படையினர் உடனடியாக அந்த பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    அவர்களை தொடர்ந்து, தேசிய பேரிடர் மீட்பு படையினர் நேற்று காலை அந்த பகுதிக்கு சென்று மீட்பு பணியை தொடங்கினர். இரண்டு அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் அடங்கிய அந்த குழு விபத்தில் சிக்கி உயிரிழந்த 8 தொழிலாளர்களின் உடல்களை நேற்று மீட்டன.

    எனினும், மீதமுள்ள 4 தொழிலாளர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில், தொடர்ந்து நடந்த மீட்பு பணியில் 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன.

    மேலும், மீதமுள்ள ஒருவரை தேடும் பணி நீடிப்பதாக கூடுதல் துணை ஆணையாளர் சாய்ஜிக்புய் கூறியுள்ளார்.

    • மிசோரம் கல்குவாரியில் கற்கள் சரிந்து விழுந்ததில் 12 தொழிலாளர்கள் சிக்கினர்.
    • விபத்தில் சிக்கி உயிரிழந்த 8 தொழிலாளர்களின் உடல்கள் இன்று மீட்கப்பட்டன.

    அய்ஸ்வால்:

    மிசோரமில் நத்தியால் மாவட்டத்தில் மவ்தார் கிராமத்தில் தனியார் நிறுவனத்தின் கல்குவாரி ஒன்று இயங்கி வருகிறது. இந்த குவாரியில் தொழிலாளர்கள் நேற்று பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

    அப்போது திடீரென குவாரியில் கற்கள் அதிகளவில் சரிந்து விழுந்தன. இதில் 12 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். தகவலறிந்து எல்லை பாதுகாப்பு படையினர் உடனடியாக அப்பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    இந்நிலையில், தேசிய பேரிடர் மீட்புப் படையினர் இன்று காலை அப்பகுதிக்கு சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டது. மீட்புக் குழுவினர் விபத்தில் சிக்கி உயிரிழந்த 8 தொழிலாளர்களின் உடல்களை மீட்டனர்.

    மேலும், காணாமல் போன 4 தொழிலாளர்களை தேடும் பணி நடந்து வருகிறது.

    • எதிர்பாராத விதமாக டேங்கர் லாரி தீப்பிடித்து எரிந்தது. தீ மளமளவென பற்றியது.
    • பெட்ரோல் பிடித்து கொண்டிருந்த பொதுமக்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் தீயில் சிக்கி கருகினார்கள்.

    ஐஸ்வால்:

    மிசோரம் மாநிலம் அங்காவர்மா மாவட்டம் துங்கிலா கிராமத்தில் பெட்ரோல் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது டேங்கரில் இருந்து திடீரென பெட்ரோல் கசிந்து ஒழுகியது.

    இதை பார்த்ததும் டிரைவர் லாரியை நிறுத்தினார். இந்த நிலையில் லாரி டேங்கரில் இருந்து பெட்ரோல் வெளியேறுவதை பார்த்த கிராம மக்கள ஓடி வந்து பாத்திரங்களில் பெட்ரோலை பிடித்தனர்.

    அப்போது எதிர்பாராத விதமாக டேங்கர் லாரி தீப்பிடித்து எரிந்தது. தீ மளமளவென பற்றியது. இதில் பெட்ரோல் பிடித்து கொண்டிருந்த பொதுமக்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் தீயில் சிக்கி கருகினார்கள்.

    இதுபற்றி அறிந்ததும் போலீசார் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து சென்று பல மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    இந்த தீ விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி இறந்தனர். 18 பேர் தீக்காயங்களுடன் உயிருக்கு போராடினார்கள். உடனடியாக அவர்கள் அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கபபட்டு வருகிறது.

    இதில் 5 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என தெரிகிறது. இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மிசோரமில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
    • மொத்தமுள்ள 40 தொகுதிகளில் பா.ஜ.க. தனித்து போட்டியிடுகிறது.

    அய்சால்:

    மிசோரம் மாநிலத்தில் உள்ள 11 மாவட்டங்களில் 40 சட்டசபைத் தொகுதிகளைக் கொண்டுள்ளது, அவற்றில் 39 பட்டியல் பழங்குடியினருக்கும், ஒன்று பொதுப் பிரிவினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், மிசோரமில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் பா.ஜ.க. தனித்துப் போட்டியிட உள்ளது என மாநில பா.ஜ.க. தலைவர் வன்லால்முகா அறிவித்துள்ளார்.

    • மிசோ தேசிய முன்னணி கட்சியின் தலைவராகவும், முதல்வராகவும் இருந்து வருபவர் ஜோரம்தங்கா.
    • டாக்டரை மகள் தாக்கியதற்கு முதல் மந்திரி பகிரங்க மன்னிப்பு கோரினார்.

    ஐஸ்வால்:

    மிசோ தேசிய முன்னணி கட்சியின் தலைவருமான ஜோரம்தங்கா பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளார்.

    மிசோரம் முதல் மந்திரியின் மகள் மிலாரி சாங்டே. இவர் தலைநகர் ஐஸ்வாலில் உள்ள ஒரு மருத்துவமனையைச் சேர்ந்த தோல் மருத்துவ நிபுணரிடம் மருத்துவ பரிசோதனைக்காகச் சென்றுள்ளார்.

    முன் அனுமதி இல்லாததால் மருத்துவர் முதல் மந்திரியின் மகளைச் சந்திக்க மறுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த முதல் மந்திரி மகள் டாக்டரை தாக்கியுள்ளார். இதனை அங்கு இருந்த ஒருவர் செல்போனில் வீடியோ பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

    இந்த வீடியோ வைரலானதால் முதல் மந்திரி மற்றும் மகள் மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன.

    இந்நிலையில், முதல் மந்திரி ஜோரம்தங்கா தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரங்க மன்னிப்பு கோரினார்.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், ஐஸ்வாலை சேர்ந்த தோல் நிபுணரிடம் தனது மகள் தவறாக நடந்ததற்கு மன்னிப்பு கேட்பதாகவும், அவரது நடத்தையை எந்த வகையிலும் நியாயப்படுத்த மாட்டோம் என தெரிவித்துள்ளார்.

    • மிசோரமில் இன்று இரவு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.
    • 4.4 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் பதிவானது.

    ஐசால்:

    மிசோரம் மாநிலத்தின் சம்பால் பகுதியில் இன்று இரவு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.4 ஆக பதிவானது என தேசிய புவியியல் மையம் தெரிவித்துள்ளது.

    இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை.

    கடந்த சில நாட்களாக வடமாநிலங்களில் தொடர்ந்து நிலநடுக்கங்கள் உணரப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    ×