என் மலர்tooltip icon

    மகாராஷ்டிரா

    • ஒவ்வொரு ஆண்டும் வாக்காளர் திருத்தம் நடைபெறுகிறது.
    • நகர்புறங்களில் வாக்காளர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதே தேர்தல் ஆணையத்தின் நோக்கமாகும்.

    புனே:

    நாடு முழுவதும் துணை மற்றும் ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணி கடந்த மாதம் 25-ந்தேதி தொடங்கி கடந்த 7-ந்தேதி வரை நடந்தது.

    ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. இந்த நாளின் முக்கியத்துவத்தை குறிக்கும் வகையில் தலைமை தேர்தல் ஆணையம் முறையான வாக்காளர் விழிப்புணர்வு மற்றும் தேர்தல் பங்கேற்பு என்ற விழிப்புணர்வு பேரணியை நடத்தியது.

    மராட்டிய மாநிலம் புனேயில் நடந்த வாக்காளர் பதிவு குறித்த விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை தலைமை தேர்தல் ஆணையாளர் ராஜீவ்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நாட்டில் 100 வயதுக்கு மேல் 2.49 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

    மேலும் 80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் 1.8 கோடி பேர் உள்ளனர். சமீபத்தில் இறந்த இந்தியாவின் முதல் வாக்காளர் ஷியாம் சரண் நேகிக்கு 106 வயதாகும். அவர் இறப்பதற்கு 3 தினங்களுக்கு முன்பு தபால் மூலம் வாக்கு அளித்தார். இது தான் கடமை உணர்வு.

    ஒவ்வொரு ஆண்டும் வாக்காளர் திருத்தம் நடைபெறுகிறது. நகர்புறங்களில் வாக்காளர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதே தேர்தல் ஆணையத்தின் நோக்கமாகும். வாக்களிப்பதன் மூலம் மட்டுமே ஜனநாயக மரபுகள் முற்றிலும் வலுவாக மாறும்.

    இவ்வாறு தலைமை தேர்தல் ஆணையாளர் ராஜீவ்குமார் தெரிவித்தார்.

    2019 பாராளுமன்ற தேர்தலில் புனேயில் 49.84 சதவீத வாக்கு தான் பதிவாகி இருந்தது. இதனால் அங்கு விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடத்தப்பட்டது.

    • நவ்நீத் ரானா மீது போலி சான்றிதழ் பெற்றதாக வழக்குப்பதிவு.
    • அவரது சாதி சான்றிதழை கடந்த ஆண்டு மும்பை ஐகோர்ட்டு ரத்து செய்தது.

    மும்பை

    மராட்டிய மாநிலம் அமராவதி தொகுதி சுயேச்சை எம்.பி.யாக இருப்பவர் நவ்நீத் ரானா. நடிகையான இவர் தமிழ் படமான அம்பாசமுத்திரம் அம்பானி படத்தில் நடித்துளளார்.

    இவர் தேர்தலில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஒதுக்கப்பட்ட தனி தொகுதியில் போட்டியிட போலி சான்றிதழ் பெற்றதாக மும்பை முல்லுண்டு போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை மும்பை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்து வருகிறது.

    ஏற்கனவே வழக்கு விசாரணைக்கு வந்தபோது நவ்நீத் ரானா மற்றும் அவரது தந்தை ஆஜராகவில்லை. எனவே அவர்களுக்கு எதிராக கோர்ட்டு கடந்த செப்டம்பர் மாதம் பிடிவாரண்டு் பிறப்பித்து இருந்தது.

    இந்தநிலையில் நேற்று வழக்கு மீதான விசாரணையின் போது, நவ்நீத் ரானாவுக்கு எதிரான பிடிவாரண்டை செயல்படுத்த கூடுதல் அவகாசம் வேண்டும் என போலீசார் கேட்டனர். இதை நிராகரித்த மாஜிஸ்திரேட்டு மோகாஷி, நவ்நீத் ரானா மற்றும் அவரது தந்தைக்கு எதிராக புதிதாக ஜாமீனில் வெளி வரமுடியாத பிடிவாரண்டை பிறப்பித்தார். மேலும் பிடிவாரண்டு உத்தரவை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என போலீசாருக்கு உத்தரவிட்டார். பின்னர் வழக்கு மீதான விசாரணையை வரும் 28-ந் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.

    நவ்நீத் ரானா போலி ஆவணங்கள் மூலம் மோசடி செய்து சாதி சான்றிதழ் வாங்கியதாக கூறி அவரது சாதி சான்றிதழை கடந்த ஆண்டு மும்பை ஐகோர்ட்டு ரத்து செய்தது. அதை எதிர்த்து நவ்நீத் ரானா சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

    • கிருஷ்ணகுமார் பாண்டே மரணத்திற்கு ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.
    • இது பாரத் ஜோடோ யாத்ரீகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    மும்பை:

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை யாத்திரை நடத்திவருகிறார். இந்த யாத்திரையின் 62-வது நாளில் யாத்திரையின்போது காங்கிரஸ் மூத்தத் தலைவர் கிருஷ்ணகுமார் பாண்டேவுக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது.

    இதையடுத்து நிலைதடுமாறி கீழே விழுந்த அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறினார். இது பாரத் ஜோடோ யாத்ரீகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது.

    கிருஷ்ண குமார் பாண்டே மராட்டிய மாநில காங்கிரசின் சேவா தள பொதுச்செயலாளர் ஆவார்.

    இந்நிலையில், கிருஷ்ணகுமார் பாண்டே மரணத்திற்கு ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். கடைசி நிமிடம் வரை பாண்டே தேசியக் கொடியை கையில் பிடித்துக்கொண்டிருந்தார் என ராகுல்காந்தி கூறினார்.

    மகாராஷ்டிர மாநில முன்னாள் முதல் மந்திரி அசோக் சவானும் பாண்டேவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

    • இந்த முடிவு விவசாயிகள் சிறு மற்றும் நடுத்தர வணிகர்கள் மீது திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல்.
    • இந்திய ஒற்றுமை பாத யாத்திரை திட்டமிட்டபடி காஷ்மீரில்தான் நிறைவு பெறும்.

    பிலோலி:

    காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கன்னியாகுமரியில் தொடங்கி காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். அவரது நடைபயணம் தமிழகம், கேரளா, ஆந்திரா வழியாக தெலுங்கானாவை தாண்டி மகாராஷ்டிரா மாநிலம் நாந்தெட் மாவட்டத்தை அடைந்தது.

    இந்நிலையில் பழைய 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை வாபஸ் பெறும் பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் 6வது ஆண்டு நினைவு நாளான இன்று பிலோலி பகுதியில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, பிரதமர் மோடி குறித்து கடுமையாக விமர்சித்தார்.

    தனது மூன்று பில்லியனர் நண்பர்களுக்கு இந்தியாவின் பொருளாதாரத்தை ஏகபோகமாக்குவதை உறுதி செய்ய பே பி.எம். மேற்கொண்ட நடவடிக்கை என்று அவர் விமர்சித்தார். 2016 ஆண்டு நவம்பர் மாதம் எடுக்கப்பட்ட இந்த முடிவு விவசாயிகள், சிறு மற்றும் நடுத்தர வணிகர்கள் மீது திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல் என்றும் அவர் குறிப்பிட்டார்.

    கர்நாடகா மாநிலத்தில் நடைபெறும் பாஜக ஆட்சியில் ஊழல் நடந்தாக குற்றம் சாட்டி வரும் காங்கிரஸ் கட்சி பேடிஎம் என்பதை மாற்றி பே சிஎம், பே பிஎம் என்ற வார்த்தை பயன்படுத்தி வருகிறது. தற்போது பிரதமர் மோடி குறித்து அந்த வார்த்தையை ராகுல் காந்தி பயன்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

    முன்னதாக தெக்லூரில் பேசிய ராகுல்காந்தி, இந்திய ஒற்றுமை பாத யாத்திரை திட்டமிட்டபடி காஷ்மீரில்தான் நிறைவு பெறும் என்றார். அதற்கு முன்பு யார் நினைத்தாலும் அதை பாதியில் நிறுத்த முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

    • சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தல் நடைபெற உள்ளது.
    • தேர்தலை சந்திக்க தொண்டர்கள் தயாராக இருக்க வேண்டும்.

    மும்பை :

    உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவை வலுப்படுத்தும் நோக்கில் அந்த கட்சியின் இளைஞர் அணி தலைவரும், முன்னாள் மந்திரியுமான ஆதித்ய தாக்கரே மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தொண்டர்களை சந்தித்து வருகிறார்.

    நேற்று அவர் அகோலாவில் நடந்த கட்சி பொதுக்கூட்டத்தில் பேசியதாவது:-

    துரோகிகளை கொண்ட மராட்டிய அரசு வரும் மாதங்களில் கவிழும். இதனால் சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தல் நடைபெற உள்ளது. எனவே தேர்தலை சந்திக்க தொண்டர்கள் தயாராக இருக்க வேண்டும்.

    ஷிண்டே தலைமையிலான அரசு 4 மிகப்பெரிய தொழில் திட்டங்களை இழந்து உள்ளது. அந்த திட்டங்கள் வேறு மாநிலங்களுக்கு சென்று விட்டன. இதன் மூலம் மராட்டியம் 2 லட்சத்து 50 ஆயிரம் வேலைவாய்ப்புகளை இழந்து உள்ளது.

    ஷிண்டேக்கு நெருக்கமாக இருக்கும் தொழில் துறை மந்திரி உதய் சாமந்தின் செயல்பாடுகள் மிக மோசமாக உள்ளது. அவரால் மராட்டியம் தொழில் முதலீடு வாய்ப்புகளை தொடர்ந்து இழந்து வருகிறது.

    மராட்டிய முதல்-மந்திரி ஷிண்டேயா அல்லது தேவேந்திர பட்னாவிசா என்ற குழப்பம் அனைவரிடமும் உள்ளது. சட்டவிரோதமாக அமைந்த இந்த அரசு விவசாயிகளின் நலனை காக்க தவறிவிட்டது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • மகாராஷ்டிராவில் 20-ம் தேதி வரை ராகுல் காந்தி பாத யாத்திரை மேற்கொள்கிறார்.
    • 14 நாட்கள் யாத்திரையில் ராகுல் காந்தி 15 சட்டசபை தொகுதி, 6 பாராளுமன்ற தொகுதிகளுக்கு செல்கிறார்.

    மும்பை:

    காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை யாத்திரையை செப்டம்பர் 7-ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கினார்.

    தமிழ்நாடு, கேரளா, கர்நாடாகா, ஆந்திரா மாநிலங்களில் பாத யாத்திரை மேற்கொண்ட பிறகு அவர் தெலுங்கானா சென்றார்.

    தெலுங்கானாவில் ராகுல் காந்தியின் பாத யாத்திரை கடந்த 24-ம் தேதி தொடங்கியது. நேற்றுடன் அங்கு அவரது யாத்திரை நிறைவு பெற்றது.

    இந்நிலையில், ராகுல் காந்தியின் பாத யாத்திரை மகாராஷ்டிரா மாநிலத்தின் நான்டெட் மாவட்டத்தில் நுழைந்தது. இரவில் அவரது பாத யாத்திரை வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது.

    மகாராஷ்டிராவில் இன்று காலை 8.30 மணியில் இருந்து ராகுல் காந்தி பாத யாத்திரை தொடங்குகிறது. வரும் 20-ம் தேதி வரை அவர் மகாராஷ்டிராவில் பாத யாத்திரை மேற்கொள்கிறார்.

    14 நாட்கள் யாத்திரையில் அவர் 15 சட்டசபை தொகுதி, 6 பாராளுமன்ற தொகுதிகளுக்குச் செல்கிறார். 5 மாவட்டங்களில் அவர் 382 கிலோ மீட்டர் தூரம் பாதயாத்திரை செல்ல உள்ளார்.

    மகாராஷ்டிராவில் 2 பொதுக்கூட்டங்களில் பேசுகிறார். முதல் பொதுக்கூட்டம் வரும் 10-ம் தேதி நான்டெட் மாவட்டத்திலும், 2-வது பொதுக்கூட்டம் 18-ம் தேதி புல்தானா மாவட்டம் சென்காவ் பகுதியிலும் நடக்கிறது.

    ராகுல் காந்தியின் பாத யாத்திரையில் பங்கேற்க தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே உள்ளிட்ட பல கட்சி தலைவர்களுக்கு காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது. மகாராஷ்டிராவில் முடிந்த பிறகு ராகுல் காந்தியின் பாத யாத்திரை மத்திய பிரதேச மாநிலத்துக்கு 20-ம் தேதி செல்கிறது.

    • வருகிற 20-ந்தேதி வரை ராகுல் காந்தி மகாராஷ்டிராவில் பாத யாத்திரை மேற்கொள்கிறார்.
    • 14 நாட்கள் யாத்திரையில் ராகுல் காந்தி 15 சட்டசபை தொகுதி, 6 பாராளுமன்ற தொகுதிகளுக்கு செல்கிறார்.

    மும்பை:

    காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை யாத்திரை (பாரத் ஜோடா யாத்ரா) மேற்கொள்ள முடிவு செய்தார்.

    அதன்படி ராகுல்காந்தியின் பாதயாத்திரை கடந்த செப்டம்பர் மாதம் 7-ந்தேதி கன்னியாகுமரியில் தொடங்கியது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடாகா, ஆந்திரா மாநிலங்களில் பாதயாத்திரை மேற்கொண்ட பிறகு அவர் தெலுங்கானாவுக்கு சென்றார்.

    தெலுங்கானா மாநிலத்தில் ராகுல் காந்தியின் பாத யாத்திரை கடந்த 24-ந்தேதி தொடங்கியது. இன்றுடன் அங்கு அவரது யாத்திரை நிறைவு பெறுகிறது.

    ராகுல் காந்தியின் பாத யாத்திரை தெலுங்கானாவில் இருந்து மகாராஷ்டிரா மாநிலத்துக்கு இன்று இரவு நுழைகிறது. அவரது 61-வது நாள் பாதயாத்திரை தெலுங்கானாவில் இன்று நடந்தது.

    ராகுல் காந்தியின் பாத யாத்திரை இன்று இரவு 7 மணிக்கு மகாராஷ்டிரா மாநிலம் நான்டெட் மாவட்டம் தொகுதியில் நுழைகிறது. இரவில் அவரது பாத யாத்திரை வரவேற்பு நிகழ்ச்சி நடக்கிறது. மகாராஷ்டிராவில் நாளை காலை 8.30 மணியில் இருந்து ராகுல் காந்தி பாதயாத்திரை தொடங்குகிறது.

    வருகிற 20-ந்தேதி வரை அவர் மகாராஷ்டிராவில் பாத யாத்திரை மேற்கொள்கிறார். 14 நாட்கள் யாத்திரையில் அவர் 15 சட்டசபை தொகுதி, 6 பாராளுமன்ற தொகுதிகளுக்கு செல்கிறார். 5 மாவட்டங்களில் அவர் 382 கிலோ மீட்டர் தூரம் பாதயாத்திரை செல்ல உள்ளார்.

    மகாராஷ்டிரா பாத யாத்திரையின் போது ராகுல் காந்தி 2 பொதுக்கூட்டங்களில் பேசுகிறார். முதல் பொதுக்கூட்டம் வருகிற 10-ந்தேதி நான்டெட் மாவட்டத்திலும், 2-வது பொதுக்கூட்டம் 18-ந்தேதி புல்தானா மாவட்டம் சென்காவ் பகுதியிலும் நடக்கிறது.

    ராகுல் காந்தியின் பாத யாத்திரையில் பங்கேற்க தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே உள்ளிட்ட பல கட்சி தலைவர்களுக்கு காங்கிரஸ் அழைப்பு விடுத்து உள்ளது.

    மகாராஷ்டிராவில் முடிந்த பிறகு ராகுல் காந்தியின் பாத யாத்திரை மத்திய பிரதேச மாநிலத்துக்கு 20-ந்தேதி செல்கிறது.

    • மகாராஷ்டிராவின் அந்தேரி கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் கடந்த 3-ம் தேதி நடந்தது.
    • அந்தேரி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் உத்தவ் தாக்கரே அணி வெற்றி பெற்றுள்ளது.

    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலம் அந்தேரி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. ரமேஷ் லட்கே கடந்த மே மாதம் உயிரிழந்தார். இதையடுத்து கடந்த 3-ம் தேதி நடைபெற்ற இடைத்தேர்தலில் சிவசேனாவின் உத்தவ் தாக்கரே அணி சார்பில் மறைந்த ரமேஷ் லட்கேவின் மனைவி ருதுஜா லட்கே போட்டியிட்டார்.

    இதற்கிடையே, இடைத்தேர்தல் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டன. இதில் அந்தேரி கிழக்கு தொகுதியில் உத்தவ் தாக்கரே அணி வேட்பாளர் ருதுஜா லத்கே வெற்றி பெற்றார். இதைத் தொடர்ந்து, அவர் உத்தவ் தாக்கரேவை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

    இந்நிலையில், சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:

    இந்த வெற்றி போராட்டத்தின் ஆரம்பமாகும். இனி வரும் அனைத்துப் போராட்டங்களிலும் ஒற்றுமையாக போராட வேண்டும் என சிவ சைனியர்களுக்கு நான் வேண்டுகோள் விடுக்கிறேன்.

    இந்தத் தேர்தலுக்காக எங்கள் கட்சியின் பெயரும் சின்னமும் முடக்கப்பட்டன. ஆனால் இதை விரும்பியவர்கள் தேர்தல் வளையத்திற்கு அருகில் இல்லை. இடைத்தேர்தல் முடிவுகள் மக்கள் எங்களுக்கு (உத்தவ் தரப்பு) ஆதரவளிப்பதை காட்டுகின்றன என தெரிவித்தார்.

    • ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை பயண யாத்திரை நாளை இரவு மகாராஷ்டிராவிற்குள் நுழைகிறது.
    • பாஜகவிடம் இருந்து குஜராத் மக்களை காப்பாற்றுவோம் என்கிறார் ராகுல் காந்தி.

    கன்னியாகுமரியில் இருந்து செப்டம்பர் 7-ந் தேதி தொடங்கிய காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயண பாத யாத்திரை, தெலுங்கானா மாநிலத்தை தாண்டி நாளை இரவு 9 மணி அளவில் மகாராஷ்டிரா மாநிலம் நாந்தேட் மாவட்டத்தில் உள்ள தெக்லூரை அடைகிறது. அந்த மாநிலத்தில் மட்டும் 14 நாள் இந்த பாத யாத்திரை நடைபெறுகிறது.

    இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மகாராஷ்டிர காங்கிரஸ் தலைவர் நானா படோல், அரசியலமைப்பு மற்றும் ஜனநாயக விழுமியங்களைப் பாதுகாப்பதே பாத யாத்திரையின் நோக்கம் என்றார். கடந்த எட்டு ஆண்டுகளில், நாடு ஊழல், பயம் மற்றும் வறுமையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நாட்டைப் பாதிக்கும் பிரச்சினைகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ராகுல் காந்தி இடையே நேருக்கு நேர் விவாதம் நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார். தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே ஆகியோர் ராகுல் காந்தியின் பாத யாத்திரையில் பங்கேற்பார்கள் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

    இந்த நிலையில், ராகுல்காந்தி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், பாஜகவின் இரட்டை என்ஜின் என்ற வஞ்சகத்தில் இருந்து குஜராத் மக்களை காப்பாற்றுவோம் என்று தெரிவித்துள்ளார். மாற்றத்திற்கான திருவிழாவை குஜராத்தில் கொண்டாடுவோம். ரூ.500க்கு சமையல் எரிவாயு சிலிண்டர், 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு, ரூ.3 லட்சம் வரையிலான விவசாயக்கடன்கள் தள்ளுபடி போன்ற காங்கிரஸ் கட்சியின் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • ஜே.ஜே. ஆஸ்பத்திரி வளாகத்தில் நர்சிங் கல்லூரியும் செயல்பட்டு வருகிறது.
    • பாதாள அறை 1890-ம் ஆண்டு ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டதாக கல்வெட்டு இருப்பதும் கண்டறியப்பட்டது.

    மும்பை :

    மும்பை பைகுல்லாவில் கடந்த 1843-ம் ஆண்டு மார்ச் மாதம் 30-ந் தேதி அரசு ஆஸ்பத்திரி கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது. அப்போது சர்ஜாம்ஷெட்ஜி ஜே.ஜிபாய் என்பவர் அங்கு ஆஸ்பத்திரி கட்டுவதற்காக ரூ.1 லட்சம் நன்கொடையாக வழங்கினார். இதனால் அவரது பெயரில் ஜே.ஜே. ஆஸ்பத்திரி கட்டப்பட்டு தொடங்கப்பட்டது.

    தற்போது அந்த ஆஸ்பத்திரி வளாகத்தில் நர்சிங் கல்லூரியும் செயல்பட்டு வருகிறது. இந்த நர்சிங் கல்லூரி கட்டிடத்தில் நீர் கசிவு ஏற்பட்டதை அடுத்து, பொதுப்பணித்துறை அதிகாரிகள் கட்டிடத்தை ஆய்வு செய்தனர்.

    இந்த நர்சிங் கல்லூரி சுவர் அடிப்பகுதியில் ஒரு துளையை கண்டனர். இந்த துளையை ஆராய்ந்த போது உள்ளே சுரங்கப்பாதை இருப்பதை போல இருந்தது. சுவரை பெயர்த்து பார்த்த போது உள்ளே 200 மீட்டர் நீளத்தில் பாதள அறை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் இந்த பாதாள அறை 1890-ம் ஆண்டு ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டதாக கல்வெட்டு இருப்பதும் கண்டறியப்பட்டது.

    இந்த அறை பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கும் வார்டாக பயன்படுத்தப்பட்டு வந்ததும் தெரியவந்தது.

    இது பற்றி ஆஸ்பத்திரி டீன் டாக்டர் பல்லவி சாப்லே கூறுகையில், "இங்கு பாதாள அறை இருப்பதாக ஏற்கனவே அறிந்து இருந்தோம். ஆனால் அதற்கான அதிகாரப்பூர்வ வரைபடம் எதுவும் கிடைக்காததால் தேடும் பணியை கைவிட்டோம். தற்போது கண்டறியப்பட்ட இந்த பாதாள அறை தொல்லியல் ஆய்வுக்கு உட்படுத்தப்படும்" என்றார்.

    ஜே.ஜே. அரசு ஆஸ்பத்திரியில் கண்டு்பிடிக்கப்பட்ட 132 ஆண்டு பழமையான பாதாள அறையை அங்குள்ள ஊழியர்கள் மற்றும் அங்கு வருபவர்கள் ஆச்சரியமாக பார்வையிட்டு வருகிறார்கள்.

    • பாதுகாப்பு காரணத்தை சுட்டிக்காட்டி சிறை அதிகாரிகள் கொசுவலை தர மறுக்கிறார்கள்.
    • தாதா லக்டவாலாவின் கொசு வலை கோரிக்கை தொடர்பான மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

    மும்பை :

    மும்பை குண்டு வெடிப்பு குற்றவாளியான நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமின் முன்னாள் கூட்டாளி இஜாஜ் லக்டவாலா. பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய இவரை கடந்த 2000-ம் ஆண்டு போலீசார் மராட்டிய ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற தடுப்பு சட்டத்தின் (மோக்கா) கீழ் வழக்குப்பதிவு செய்து நவிமும்பையில் உள்ள தலோஜா சிறையில் அடைத்தனர்.

    இந்தநிலையில் சிறையில் கொசு தொல்லை மிதமிஞ்சி இருப்பதால், தனக்கு கொசுவலை வழங்க உத்தரவிட கோரி மும்பை செசன்ஸ் கோர்ட்டில் லக்டவாலா மனு செய்து இருந்தார். நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது லக்டவாலா கோர்ட்டில் அஜர்படுத்தப்பட்டார்.

    அப்போது நீதிபதியிடம், "சிறையில் கொசு தொல்லை பொறுக்க முடியவில்லை, இதோ பாருங்கள்... சிறையில் பிடித்த கொசுக்களை கொண்டு வந்து இருக்கிறேன்" என்று பிளாஸ்டிக் பாட்டிலில் அடைத்து வைத்திருந்த செத்துப்போன கொசுக்களை லக்டவாலா காட்டினார்.

    "என்னை போல தான் மற்ற கைதிகளும் கொசு தொல்லையால் அவதிப்பட்டு வருகிறார்கள், ஆனால் பாதுகாப்பு காரணத்தை சுட்டிக்காட்டி சிறை அதிகாரிகள் கொசுவலை தர மறுக்கிறார்கள். சிறையில் கொசுவலை பயன்படுத்த அனுமதிக்க சிறை நிர்வாகத்துக்கு உத்தரவிட வேண்டும்" என்று நீதிபதியிடம் கைதி லக்டவாலா கேட்டுக்கொண்டார்.

    ஆனால் அவரது கோரிக்கைக்கு சிறை நிர்வாகம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. கைதிகள் தற்கொலை செய்து கொள்ளும் அபாயம் காரணமாக கொசுவலை பயன்படுத்த அனுமதிக்கப்படுவதில்லை என்று சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதையடுத்து தாதா லக்டவாலாவின் கொசு வலை கோரிக்கை தொடர்பான மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். கொசு வலைக்கு பதிலாக வேறு கொசு விரட்டிகளை பயன்படுத்தி கொள்ளுமாறு லக்டவாலாவை அறிவுறுத்திய கோர்ட்டு, கொசுக்களை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்குமாறும் சிறை அதிகாரிகளுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

    முன்னதாக கொசு அடங்கிய பாட்டிலை தாதா லக்டவாலா கோர்ட்டுக்கு கொண்டு வந்து நீதிபதியிடம் காட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதேவேளையில் தாதாவின் நூதன முயற்சி அவருக்கு பயன் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • வங்கி ஊழியர்கள் பிரச்சினைகளில் வங்கி நிர்வாகங்கள் தன்னிச்சையாக முடிவுகளை எடுக்கின்றன.
    • இந்த வேலைநிறுத்தம் தவிர்க்க முடியாதது.

    அவுரங்காபாத்

    அகில இந்திய வங்கி பணியாளர்கள் சம்மேளனம் சார்பில் தேவிதாஸ் துல்ஜபுர்கார் நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    வங்கி ஊழியர்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளில் வங்கி நிர்வாகங்கள் தன்னிச்சையாக முடிவுகளை எடுக்கின்றன. இருதரப்பும் கலந்து முடிவு எடுக்கும் வழக்கத்தை கைவிட்டு விட்டன.

    இருதரப்பு தீர்வு தொடர்பான அனைத்து விதிமுறைகளையும் மீறி வருகின்றன. மத்திய அரசின் தொழிலாளர் நலத்துறை பிறப்பிக்கும் உத்தரவுகளையும் வங்கி நிர்வாகங்கள் கடைபிடிப்பது இல்லை. நிர்வாகம்-பணியாளர் உறவை அலட்சியப்படுத்துகின்றன.

    பேங்க் ஆப் மகாராஷ்டிரா, பேங்க் ஆப் இந்தியா, பேங்க் ஆப் பரோடா, சென்டிரல் பேங்க் ஆப் இந்தியா, பெடரல் வங்கி, சோனாலி வங்கி, கத்தோலிக் சிரியன் வங்கி, கனரா வங்கி ஆகிய வங்கிகளின் நிர்வாகங்கள் இத்தகைய செயல்களில் ஈடுபட்டு வருகின்றன. இதனால், வங்கி ஊழியர்களிடையே பரவலாக கலக்கம் ஏற்பட்டுள்ளது.

    ஆகவே, அனைத்து வங்கிகளிலும் உள்ள அகில இந்திய வங்கி பணியாளர் சம்மேளனத்தின் உறுப்பினர்கள், வருகிற 19-ந் தேதி ஒருநாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவார்கள். இந்த வேலைநிறுத்தம் தவிர்க்க முடியாதது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×