என் மலர்
மகாராஷ்டிரா
- புதிய தலைவரை தேர்வு செய்ய கமிட்டி கூட்டம் இன்று நடக்கிறது.
- சுப்ரியா சுலே தலைவர் பதவிக்கு தேர்வு ஆக அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
மும்பை :
82 வயதான தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கடந்த செவ்வாய்க்கிழமை மும்பை ஒய்.பி. சவான் அரங்கில் நடந்த நிகழ்ச்சியில் தனது சுயசரிதை புத்தகத்தை வெளியிட்டு பேசுகையில், தான் கட்சி தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக தடாலடி அறிவிப்பை வெளியிட்டார். அப்போது அங்கு கூடியிருந்த கட்சி தலைவர்கள், தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர். முடிவை திரும்ப பெற வேண்டும் என்று கோஷமிட்டு வலியுறுத்தினர்.
கட்சி தொண்டர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். நேற்றும் ஒய்.பி. சவான் அரங்கு முன் திரண்டு தொண்டர்கள் போராட்டம் நடத்தினர்.
அப்போது, சரத்பவார் கட்சி தலைவர் பதவியில் தொடர்ந்து நீடிக்க வேண்டும், தேவைப்பட்டால் செயல் தலைவரை நியமிக்க வேண்டும் என்று தொண்டர்கள் வலியுறுத்தினர். அடுத்த ஆண்டு நடைபெறும் பாராளுமன்ற மற்றும் மராட்டிய சட்டமன்ற தேர்தல் வரையாவது சரத்பவார் கட்சியை வழிநடத்த வேண்டும் என்று மேலும் பல தொண்டர்கள் வலியுறுத்தி கோஷம் போட்டனர்.
அப்போது அங்கு வந்த சரத்பவார் தொண்டர்களை சமரசப்படுத்தும் விதமாக அவர்கள் மத்தியில் பேசியதாவது:-
உங்கள் உணர்வுகளை மதிக்கிறேன். எனது முடிவை எடுக்கும் முன் நான் உங்களின் நம்பிக்கையை பெற்று இருக்க வேண்டும். ஆனால் அப்படி செய்திருந்தால், எனது முடிவை நீங்கள் அனுமதித்து இருக்க மாட்டீர்கள் என்பது எனக்கு தெரியும்.
கட்சியின் எதிர்காலத்திற்காகவும், புதிய தலைமையை உருவாக்குவதற்காகவும் நான் ராஜினாமா முடிவை எடுத்தேன். இன்னும் ஓரிரு நாட்களில் எனது இறுதி முடிவை அறிவிப்பேன். நீங்கள் போராட்டத்தை கைவிட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
தேசியவாத காங்கிரசுக்கு புதிய தலைவரை தேர்வு செய்ய சரத்பவாரால் நியமிக்கப்பட்ட கமிட்டி கூட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இதில் சரத்பவார் பதவி நீடிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படும் என கட்சியின் செய்தி தொடர்பாளர் மகேஷ் தபசே கூறினார்.
சரத்பவார் பதவி விலகல் முடிவை திரும்ப பெற சம்மதிக்காவிட்டால், புதிய தலைவர் தேர்வு பற்றி இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் பட்சத்தில், சரத்பவாரின் மகள் சுப்ரியா சுலே எம்.பி. அந்த பதவிக்கு தேர்வு ஆக அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. சரத்பவாரின் அண்ணன் மகனும், மராட்டிய சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான அஜித்பவார் மற்றும் சரத்பவாரின் குடும்பம் சாராத சிலரும் கட்சி தலைவர் போட்டியில் உள்ளனர்.
- 1999-ம் ஆண்டு சரத்பவார் தேசியவாத காங்கிரஸ் கட்சியை உருவாக்கினார்.
- அஜித்பவாரிடம் கட்சி தலைமையை கொடுக்க மூத்த நிர்வாகிகள் பலர் தயாராக இல்லை என்றும் கூறப்படுகிறது.
1998-ம் ஆண்டு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமையை ஏற்று சோனியா காந்தி தீவிர அரசியலில் நுழைந்தார்.
அடுத்த ஆண்டில் (1999) பாராளுமன்ற தேர்தலை சந்திக்க காங்கிரஸ் தயார் ஆனது. அப்போது சோனியா காந்தியை பிரதமர் வேட்பாளராக தேர்வு செய்ய முயற்சி நடந்தது. ஆனால் சோனியா காந்தி வெளிநாட்டு பெண் என்ற சர்ச்சையை கிளப்பி, மூத்த தலைவர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். சோனியாவுக்கு எதிராக தீவிர எதிர்ப்பு குரல் கொடுத்த சரத்பவார், பி.ஏ. சங்மா, தாரிக் அன்வர் ஆகியோர் காங்கிரசில் இருந்து நீக்கப்பட்டனர்.
காங்கிரசின் இந்த அதிரடியால், அதே ஆண்டு (1999) உருவானது தான் தேசியவாத காங்கிரஸ். சரத்பவார் இந்த புதிய கட்சியை உருவாக்கினார். இதில் சுவாரசியம் என்னவென்றால், அதே ஆண்டு மராட்டிய சட்டசபை தேர்தலில் சிவசேனா- பா.ஜனதாவை ஆட்சிக்கு வர விடாமல் தடுக்க காங்கிரசுடன் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி வைத்தது. காங்கிரசை சேர்ந்த விலாஸ்ராவ் தேஷ்முக் முதல்-மந்திரி ஆனார். தேசியவாத காங்கிரசை சேர்ந்த சகன் புஜ்பால் துணை முதல்-மந்திரியாக பதவி ஏற்றார். சரத்பவார் மாநில அரசியலுக்கு திரும்பவில்லை. தொடர்ந்து அவர் தேசிய அரசியலில் கவனம் செலுத்தி வந்தார். பகையை மறந்து தேசிய அளவிலும் காங்கிரசுடன் கூட்டணி வைத்தார்.
இந்தநிலையில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் எதிர்பார்க்காத வகையில் 82 வயது சரத்பவார் நேற்று முன்தினம் அரசியல் வெடிகுண்டை தூக்கி போட்டார். தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். மும்பை ஒய்.பி. சவான் அரங்கில் நடந்த விழாவில், தனது புதுப்பிக்கப்பட்ட சுயசரிதை புத்தகத்தை வெளியிட்டு, இந்த அறிவிப்பை சரத்பவார் வெளியிட்டபோது, கட்சி நிர்வாகிகள் முகம் வாடியது. முடிவை திரும்ப பெறுமாறு அவரை கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் மன்றாடி கேட்டனர்.
ஆனால், கட்சி தலைவர் பதவியில் இல்லாவிட்டாலும், நான் உங்களுடன் தொடர்ந்து இருப்பேன் என்று கூறிய சரத்பவார் அரங்கை விட்டு வெளியேறி வீடு திரும்பினார். இருப்பினும் ஒய்.பி. சவான் அரங்கில் தொண்டர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி சரத்பவார் தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கோஷமிட்டனர். அவர்களை சரத்பவாரின் அண்ணன் மகனும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான அஜித்பவார் சமாதானப்படுத்த முயன்றார்.
அப்போது அவர், "சரத்பவார் கட்சி தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக தான் அறிவித்துள்ளார். கட்சியை அவர் தொடர்ந்து வழிநடத்துவார். காங்கிரஸ் தலைவராக மல்லிகார்ஜுன கார்கே இருந்தபோதிலும், கட்சியை சோனியா காந்தி தானே வழிநடத்துகிறார். அதே போல கட்சி சரத்பவார் வழிகாட்டுதலின் பேரில் தான் செயல்படும். நீங்கள் போராட்டத்தை கைவிட வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார்.
இருப்பினும் தொண்டர்கள் பலர் சரத்பவாரின் ராஜினாமா முடிவை ஏற்க தயாராக இல்லை. 4 முறை முதல்-மந்திரி பதவி, சுமார் 12 ஆண்டு காலம் மத்திய மந்திரி பதவி வகித்த சரத்பவார், தேசியவாத காங்கிரசை தொடங்கி 24 ஆண்டு காலம் கட்சியை திறம்பட நடத்தி வந்தவர். தொண்டர்கள் அவர் மீது வைத்துள்ள அன்பிற்கு ஒரு உதாரணமாக, சரத்பவார் தனது முடிவை திரும்ப பெற வேண்டும் என்று தொண்டர் ஒருவர் ரத்தத்தில் கடிதம் எழுதி அனுப்பி உள்ளார். இவ்வாறு தொண்டர்கள் ஆக்ரோஷமாக இருக்க, சரத்பவார் அவரது முடிவில் இருந்து மாற மாட்டார் என்று கட்சியின் நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது பற்றி அஜித்பவார் கூறுகையில், "நான் சரத்பவாரின் மனைவியிடம் பேசினேன். அப்போது சரத்பவார் அவரது முடிவை திரும்ப பெறமாட்டார் என்று அவர் கூறி விட்டார்" என்றார்.
தேசியவாத காங்கிரசில் 53 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இதில் சுமார் 40 எம்.எல்.ஏ.க்களுடன் அஜித்பவார் பா.ஜனதாவுடன் கைகோர்க்க போவதாக சமீப நாட்களில் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வந்த நிலையில், சரத்பவார் பதவி விலகல் தொடர்பான தடாலடி அறிவிப்பை வெளியிட்டார்.
2019-ம் ஆண்டு பா.ஜனதா- சிவசேனா கூட்டணி முறிவை தொடர்ந்து, சிவசேனா தலைமையில் ஆட்சியமைக்க சரத்பவார் முயன்று கொண்டு இருந்தவேளையில், பா.ஜனதாவுடன் கைகோர்த்து அதிகாலையில் துணை முதல்-மந்திரி பதவி ஏற்று கட்சிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியவர் தான் இந்த அஜித்பவார். எனவே அஜித்பவார் மீண்டும் பா.ஜனதா பக்கம் சாய தயாராகி வருவதாக கூறப்படும் வேளையில் விரக்தி அடைந்து சரத்பவார் இந்த முடிவை எடுத்து இருப்பதாக கூறப்படுகிறது.
சரத்பவாரின் இந்த திடீர் முடிவு அடுத்த ஆண்டு நடைபெறும் பாராளுமன்ற தேர்தலுக்காக தேசிய அளவில் பா.ஜனதாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முடிவிலும் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்றும் கூறப்படுகிறது.
இது ஒருபுறம் இருக்க தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அடுத்தடுத்து திரைமறைவு ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்கள். சரத்பவார் தனது முடிவை திரும்ப பெறாதபட்சத்தில் புதிய தலைவர் யார்? என்பது பற்றி ஆலோசிக்க தொடங்கி உள்ளனர். இதில் சிலரின் பெயர் அடிப்படுகிறது. சரத்பவாரின் மகள் சுப்ரியா சுலே எம்.பி. முன்னணியில் உள்ளார். அஜித்பவார், கட்சியின் மாநில தலைவர் ஜெயந்த் பாட்டீல், முன்னாள் மத்திய மந்திரி பிரபுல் பட்டேல் ஆகியோரின் பெயரும் அடிபடுகிறது.
சுப்ரியா சுலே தான் தேசிய அரசியலுக்கு சரியான தேர்வாக இருப்பார் என்று முன்னாள் துணை முதல்-மந்திரி சகன்புஜ்பால் நேற்று தனது கருத்தை பகிரங்கப்படுத்தினார். அஜித்பவாரிடம் கட்சி தலைமையை கொடுக்க மூத்த நிர்வாகிகள் பலர் தயாராக இல்லை என்றும் கூறப்படுகிறது. அவரை மாநில அரசியலுடன் மட்டுப்படுத்தவே அவர்கள் விரும்புகிறார்கள். இதனால் சரத்பவாரின் ஒரே மகளான சுப்ரியா சுலே தேசியவாத காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக தேர்வு ஆக அதிக வாய்ப்பு இருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சுப்ரியா சுலே தற்போது பாராளுமன்ற எம்.பி.யாக இருப்பது குறிப்பிடத்தக்கது. சரத்பவார் மீண்டும் ஒருமுறை தனது முடிவை தெளிவுப்படுத்தும் போது, தேசியவாத காங்கிரசில் அடுத்தகட்ட நகர்வுகள் தீவிரமடையும்.
- அருண் மணிலால் காந்தி மராட்டியத்தில் உள்ள கோலாப்பூரில் இன்று உடல்நலக்குறைவால் காலமானார்.
- அருண் காந்தி, ஒரு ஆர்வலராக தனது தாத்தாவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றினார்.
மும்பை:
தேசதந்தை மகாத்மா காந்தியின் பேரனும் எழுத்தாளருமான அருண் மணிலால் காந்தி மராட்டியத்தில் உள்ள கோலாப்பூரில் இன்று உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 89. அவரின் மறைவுக்கு பல்வேறு தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
காந்தியின் மகனான மணிலால் காந்திக்கு பிறந்தவர் அருண் மணிலால் காந்தி என்பது குறிப்பிடத்தக்கது.
ஏப்ரல் 14, 1934-ல் மணிலால் காந்தி மற்றும் சுசீலா மஷ்ருவாலா ஆகியோருக்குப் பிறந்த அருண் காந்தி, ஒரு ஆர்வலராக தனது தாத்தாவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றினார். எனினும் `தனது தாத்தாவின் துறவு வாழ்க்கை முறையைத் தவிர்த்துவிட்டார். அவர் 2017 இல், அவர் The Gift of Anger: And Other Lessons From My Grandfather Mahatma Gandhi ஆகிய புத்தகங்களை வெளியிட்டார்.
- போலீசாரின் பதில் தாக்குதலில் மாவோயிஸ்ட்டுகள் குண்டு பாய்ந்து பலியானார்கள்.
- கொல்லப்பட்ட 3 மாவோயிஸ்ட்டுகளின் தலைக்கு ரூ.38 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டு இருந்தது.
மராட்டிய மாநிலம் கட்சிரோலி அருகே உள்ள ராஜ்ராம் கிராமத்தில் மாவோயிஸ்டுகளுக்கும் போலீசாருக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடத்தப்பட்டது.
போலீசாரின் அதிரடி என்கவுண்டரில் மாவோயிஸ்ட்டுகள் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட 3 மாவோயிஸ்ட்டுகளின் தலைக்கு ரூ.38 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டு இருந்தது.
ரகசிய தகவலின் பேரில் போலீசார் அங்கு சென்றனர். போலீசை பார்த்ததும் அவர்கள் துப்பாக்கியால் சுட்டனர். போலீசாரின் பதில் தாக்குதலில் மாவோயிஸ்ட்டுகள் குண்டு பாய்ந்து பலியானார்கள்.
- கடைசி ஓவர் வரை தாக்குப்பிடித்த ஜெய்ஸ்வால் 124 ரன்கள் குவித்தார்
- அர்ஷித் கான் 3 விக்கெட்டுகளும், பியூஷ் சாவ்லா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
மும்பை:
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று இரவு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் உள்ளூர் அணியான மும்பை இந்தியன்ஸ் அணியை, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி எதிர்கொள்கிறது. டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது.
துவக்க வீரர் யாஷாஸ்வி ஜெய்ஸ்வால் அதிரடியாக ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டார். ஆனால், மறுமுனையில் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிந்தன. ஜோஸ் பட்லர் 18, கேப்டன் சஞ்சு சாம்சன் 14 ரன், தேவ்தத் படிக்கல் 2 ரன், ஹோல்டர் 11 ரன், ஹெட்மயர் 8 ரன், துருவ் ஜுரல் 2 ரன்னில் விக்கெட்டை இழந்தனர்.

முன்னணி பேட்ஸ்மேன்கள் ஆட்டமிழந்தபோதிலும், பதற்றம் இல்லாமல் முன்னேறிய ஜெய்ஸ்வால் 53 பந்துகளில் 13 பவுண்டரி, 6 சிக்சர்களுடன் சதம் அடித்து அசத்தினார். தொடர்ந்து ஆடிய அவர் 124 ரன்கள் சேர்த்த நிலையில், கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார்.
அதன்பின் அஷ்வினுடன் டிரன்ட் போல்ட் இணைய, 20 ஓவர் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, 7 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்கள் குவித்தது. அஷ்வின் 8 ரன்களுடன் களத்தில் இருந்தார்.
மும்பை இந்தியன்ஸ் தரப்பில் அர்ஷித் கான் 3 விக்கெட்டுகளும், பியூஷ் சாவ்லா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர். ஜோப்ரா ஆர்ச்சர், ரிலே மியர்டித் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். இதையடுத்து 213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணி களமிறங்குகிறது.
- மகாராஷ்டிராவில் குடியிருப்பு கட்டிடம் இடிந்த விபத்தில் 3 பேர் பலியாகினர்.
- இடிபாடுகளில் சிக்கிய 12 பேரை மீட்புக்குழுவினர் மீட்டுள்ளனர்.
மும்பை:
மகாராஷ்டிர மாநிலம் பிவண்டி பகுதியில் உள்ள குடியிருப்பு கட்டிடம் ஒன்று திடீரென இடிந்து விழுந்தது. இதில் அந்தக் கட்டிடம் தரைமட்டமான நிலையில், உள்ளே இருந்த 15-க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர். அவர்களை மீட்கும் பணியில் அப்பகுதி மக்கள் ஈடுபட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்தனர். கட்டிட இடிபாடுகளில் சிக்கிய 12 பேரை பத்திரமாக மீட்டனர். கட்டிட இடிபாடுகளில் சிக்கி 3 பேர் பலியாகினர் என மீட்புக்குழுவினர் தெரிவித்தனர்.
விபத்து குறித்து அறிந்ததும் முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே சம்பவ இடம் சென்று மீட்புப் பணிகளை பார்வையிட்டார். விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்கப்படும் என தெரிவித்தார்.
- சூடான் நாட்டில் உள்நாட்டு போர் தீவிரம் அடைந்துள்ளது.
- அங்கிருந்து மேலும் 246 இந்தியர்கள் மும்பை வந்தடைந்தனர்.
மும்பை:
உள்நாட்டுப் போர் தீவிரமடைந்துள்ள சூடானில் உள்ள வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களை மீட்கும் பணியில் அந்தந்த நாடுகள் ஈடுபட்டுள்ளன.
சூடானில் சிக்கித் தவித்து வரும் இந்தியர்களை மீட்டுக் கொண்டு வருவதற்காக ஆபரேசன் காவேரி என்ற பெயரிலான திட்டத்தை இந்திய அரசு தொடங்கி உள்ளது.
இதற்கிடையே, சூடானில் சிக்கித் தவித்த 9 தமிழர்கள் உள்பட 360 பேர் டெல்லி வந்தடைந்தனர். டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை, மதுரைக்கு வந்தடைந்தனர். இதில் 5 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள், 4 பேர் மதுரையைச் சேர்ந்தவர்கள். விமான நிலையங்களுக்கு வந்தவர்களை தமிழ்நாடு அரசு அதிகாரிகள் அவர்களை வரவேற்றனர்.
இந்நிலையில், சூடானில் இருந்து நேற்று 17 தமிழர்கள் உள்பட மேலும் 246 இந்தியர்கள் விமானம் மூலம் மும்பை வந்தடைந்தனர்.
- காரணமே இல்லாமல் சந்தேக வளையம் என்னை சுற்றி கட்டப்பட்டுள்ளது.
- உங்கள் மனதிலும் நிறைய கேள்வி ஓடிக்கொண்டு இருக்கும்.
புனே :
தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான அஜித்பவார் பா.ஜனதாவுடன் கைகோர்க்க உள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. அவருக்கு முதல்-மந்திரி பதவி கிடைக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இந்தநிலையில் அஜித்பவார் நேற்று புனேயில் நடந்த கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-
என்னை பற்றி பல தகவல்களும், வதந்திகளும் பரவி வருகிறது. காரணமே இல்லாமல் சந்தேக வளையம் என்னை சுற்றி கட்டப்பட்டுள்ளது. ஆனால் வதந்திகளுக்கு இடம்கொடுக்காமல் நான் எனது வேலையை தொடர்ந்து வருகிறேன்.
உங்கள் மனதிலும் நிறைய கேள்வி ஓடிக்கொண்டு இருக்கும். அதிகாலையில் நடந்ததை (பட்னாவிசுடன் துணை முதல்-மந்திரி ஏற்ற சம்பவம்) மீண்டும் நான் செய்வேனா என்ற கேள்வி உங்களுக்கும் எழுந்து இருக்கும். நான் ஏற்கனவே கூறிவிட்டேன். கடைசி மூச்சு உள்ளவரை தேசியவாத காங்கிரசுக்காக தான் உழைப்பேன் என்பதை கூறிவிட்டேன். கட்சி எடுக்கும் எந்த முடிவையும் நான் ஏற்றுக்கொள்வேன். மக்கள் நலம், வளர்ச்சிக்காக உழைப்பது தான் எங்களின் நோக்கம்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதற்கிடையே தாராசிவ் மாவட்டத்தில் கிராஸ்ரோடு பகுதியில் அஜித்பவார் வருங்கால முதல்-மந்திரி என புகழ்ந்து வைக்கப்பட்ட பேனரால் பரபரப்பு ஏற்பட்டது.
- முகேஷ் அம்பானிக்கு வலது கரம் என்று அழைக்கப்படு பவர் மனோஜ் மோடி.
- மனோஜ் மோடிக்கு மும்பை நேபியர் சாலையில் உள்ள 22 மாடிகள் கொண்ட பிரமாண்ட வீட்டை முகேஷ் அம்பானி வழங்கி உள்ளார்.
மும்பை:
உலக பணக்காரர்களில் ஒருவரான இந்தியாவின் முகேஷ் அம்பானி ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் குழுமங்களின் தலைவராக உள்ளார்.
இந்த நிலையில் முகேஷ் அம்பானி தனது நிறுவனத்தில் பணியாற்றும் அதிகாரிக்கு ரூ.1,500 கோடி மதிப்பிலான வீட்டை பரிசாக கொடுத்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
முகேஷ் அம்பானிக்கு வலது கரம் என்று அழைக்கப்படு பவர் மனோஜ் மோடி. இவர்கள் இருவரும் கல்லூரியில் ஒன்றாக படித்தவர்கள். ரிலையன்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி வரும் மனோஜ் மோடிக்கு மும்பை நேபியர் சாலையில் உள்ள 22 மாடிகள் கொண்ட பிரமாண்ட வீட்டை முகேஷ் அம்பானி வழங்கி உள்ளார்.
1.7 லட்சம் சதுரஅடி பரப்பளவு கொண்ட இந்த சொகுசு வீடு ரூ.1500 கோடி மதிப்புடையது. முகேஷ் அம்பானியின் தந்தை திருபாய் அம்பானி, ரிலையன்ஸ் நிறுவனத்தை நடத்தியபோதே மனோஜ் மோடி அந்நிறுவனத்தில் சேர்ந்தார்.
மேலும் அம்பானி குடும்பத்துக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்து வருகிறார். ரிலையன்ஸ் ரீடெயில் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் இயக்குனராக உள்ளார். அந்நிறுவனத்தின் பல ஒப்பந்தங்களுக்கு மூளையாக இருந்துள்ளார்.
இதனால் மனோஜ் மோடிக்கு பல கோடி மதிப்புள்ள சொகுசு பங்களாவை பரிசாக முகேஷ் அம்பானி வழங்கி உள்ளார்.
- அஜித்பவார் பா.ஜனதாவுடன் இணைய உள்ளதாக வதந்திகள் பரவின.
- பா.ஜனதாவுக்கு ஆதரவாக அஜித்பவார் பேசியிருந்தார்.
மும்பை :
முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே உள்பட 16 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யும் வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.
இவர்கள் தகுதி நீக்கம் செய்யப்படும் பட்சத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் அஜித்பவார் பா.ஜனதாவுடன் இணைய உள்ளதாக வதந்திகள் பரவின. இதை உறுதி படுத்தும் விதமாக பா.ஜனதாவுக்கு ஆதரவாக அவர் பேசியிருந்தார்.
இதைத்தொடர்ந்து உத்தவ் பாலாசாகேப் சிவசேனா கட்சி எம்.பி. சஞ்சய் ராவத் கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான "சாம்னா"வில், "தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த யாராவது தனிப்பட்ட முறையில் பா.ஜனதாவில் இணைந்தாலும், ஒரு கட்சியாக தேசியவாத காங்கிரஸ் பா.ஜனதாவுடன் கூட்டணி வைக்காது" என சரத்பவார் கூறியதாக தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில் தன்னை சுற்றி உலவும் ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித்பவார், "தான் உயிருடன் இருக்கும் வரை தேசியவாத காங்கிரஸ் கட்சிக்காக பாடுபடுவேன்" என்று தெரிவித்து இருந்தார்.
அத்துடன் தனக்கு முதல்-மந்திரியாக 100 சதவீதம் விருப்பம் இருப்பதாகவும், 2024-ம் ஆண்டு மாநில சட்டசபை தேர்தல் வரை காத்திருக்க தேவையில்லை, தற்போது கூட முதல்-மந்திரி பதவிக்கு தேசியவாத காங்கிரஸ் கட்சி உரிமை கோரலாம் என கூறி இருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய தேசியவாத காங்கிரஸ் கட்சி நிறுவன தலைவர் சரத்பவார், "நாளை யாராவது தேசியவாத காங்கிரஸ் கட்சியை உடைக்க முயன்றால், அது அவர்களது வியூகம். ஆனால் கட்சி கடுமையான நடவடிக்கை எடுக்கும். அதில் நாம் உறுதியாக இருக்க வேண்டும். இன்று இதை பற்றி பேசுவது முறையற்றது. ஏனென்றால் நாங்கள் இந்த பிரச்சினையை பற்றி விவாதிக்கவில்லை" என்றார்.
- மகா விகாஸ் அகாடி கூட்டணி வலிமையாக உள்ளது
- எங்கள் அரசை கவிழ்க்க ஏக்நாத் ஷிண்டே பயன்படுத்தப்பட்டார்.
மும்பை :
தேசியவாத காங்கிரஸ் நிறுவன தலைவர் சரத்பவார் நேற்று முன்தினம் அமராவதியில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, மகா விகாஸ் கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் இணைந்து செயல்பட விரும்புவதாக தெரிவித்தார். இவரின் பேச்சு கூட்டணியின் ஒற்றுமை குறித்து கேள்வியை எழுப்பியது.
இதற்கிடையே உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா கட்சி எம்.பி.யான சஞ்சய் ராவத் இது குறித்து நேற்று கூறியதாவது:-
மகா விகாஸ் அகாடி கூட்டணி வலிமையாக உள்ளது. நாங்கள் ஒன்றாக பொதுக்கூட்டங்கள் நடத்துகிறோம், நாங்கள் ஒற்றுமையாக இருக்கிறோம் என்ற செய்தியை தெரிவிக்கவே இந்த பொதுக்கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. வருகிற மே 1-ந் தேதி அன்று மும்பையில் பெரிய பொதுக்கூட்டம் ஒன்று நடக்கும். மகா விகாஸ் அகாடி மூத்த தலைவர்கள் அனைவரும் அந்த மேடையில் ஒன்று கூடுவார்கள்.
மகா விகாஸ் கூட்டணியை உருவாக்குவதில் சரத்பவார் முக்கிய பங்கு வகித்துள்ளார். நாம் ஒன்றாக இருந்தால் 2024-ம் ஆண்டு பா.ஜனதாவை தோற்கடித்து அதிக எண்ணிக்கையில் மக்களவை தொகுதியில் வெற்றி பெற முடியும் என்று அவர் கருதுகிறார். அவரது பேச்சுகள் திரித்து கூறப்படுகிறது. மகா விகாஸ் அகாடி இணைந்து தேர்தலை சந்திக்கும்.
மராட்டியத்தில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் அல்லது மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் என யாராக இருந்தாலும், பா.ஜனதாவை வலுப்படுத்த இந்த கட்சிகளை உடைக்க முயற்சிக்கின்றன. அவர்களிடம் உண்மையானவர்கள்(ஒரிஜினல்) யாரும் இல்லை. எல்லாம் போலிகள் தான் உள்ளன. இது விரைவில் முடிவுக்கு வரும். இந்த ஊழல்வாதிகளை நேர்மையானவர்களாக மாற்றும் வாஷிங் மெஷின் தொழிலை பா.ஜனதா நிறுத்திக்கொள்ள வேண்டும்.
பா.ஜனதா விரும்பியதை செய்ய தவறியதால் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டேவை மாற்றுவதற்கான முயற்சி திரைக்கு பின்னால் நடந்து வருகிறது.
எங்கள் அரசை கவிழ்க்க ஏக்நாத் ஷிண்டே பயன்படுத்தப்பட்டார். ஆனால் ஒரு முதல்-மந்திரியாக, அவர் மராட்டியத்தில் பா.ஜனதாவை வலுப்படுத்த தவறிவிட்டார். இந்த அரசை அமைத்ததில் இருந்து பா.ஜனதா மற்றும் ஏக்நாத் ஷிண்டே அணி வீழ்ச்சியை சந்தித்து வருகிறது.
முன்னாள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே, உண்மையான சிவசேனா யாருடையது என்று பாகிஸ்தானுக்கு கூட தெரியும் என்று கூறியதை வைத்து சர்ச்சை உருவாக்க முயற்சிப்பவர்கள் தேர்தல் வெற்றி பெற பாகிஸ்தானின் பெயரை பயன்படுத்த கூடாது. பிரதமர் நரேந்திர மோடி பாகிஸ்தானின் பெயரை எடுக்காமல் தேர்தலில் வெற்றி பெற முயற்சிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஏக்நாத் ஷிண்டே அரசு 20 நாட்களுக்குள் கவிழ்ந்து விடும் என்று நேற்று முன்தினம் சஞ்சய் ராவத் கூறியது குறிப்பிடத்தக்கது.
- 2 குழந்தைகளுக்கு மேல் பெறுபவர்களுக்கு எந்த சலுகையும் வழங்கக்கூடாது.
- இந்தியாவின் தற்போதைய மக்கள் தொகை 142 கோடி.
மும்பை :
தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவரும், மகாராஷ்டிரா சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான அஜித்பவார் நேற்று புனே பாராமதியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசியதாவது:-
நாடு சுதந்திரம் அடைந்தபோது மக்கள் தொகை 35 கோடியாக இருந்ததாக எனது தாத்தா என்னிடம் அடிக்கடி கூறுவார். ஆனால் தற்போதைய மக்கள் தொகை 142 கோடி. சீனாவை முந்தி விட்டோம். இதற்கு நாம் அனைவரும் தான் பொறுப்பு.
நமது நாடு, மாநிலங்கள் முன்னேற்றத்திற்காக ஒவ்வொருவரும் ஒன்று அல்லது இரண்டு குழந்தைகளை பெற்ற பிறகு நிறுத்த வேண்டும்.
மகாராஷ்டிராவில் விலாஸ்ராவ் தேஷ்முக் முதல்-மந்திரியாக இருந்தபோது, உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் 3 குழந்தைகளை பெற்றால் தகுதியற்றவர்களாக இருப்பார்கள் என்ற முடிவு எடுக்கப்பட்டது. அப்போது இந்த முடிவுக்காக நாங்கள் பயந்தோம்.
எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் விஷயத்தில் ஏன் இது போன்ற முடிவை எடுக்கவில்லை என்று மக்கள் கேட்கிறார்கள். நான் அவர்களிடம் சொல்கிறேன், அது எங்கள் கையில் இல்லை. அது மத்திய அரசின் கையில் உள்ளது. அதை மத்திய அரசு செய்ய வேண்டும்.
2 குழந்தைகளுக்கு மேல் பெறுபவர்களுக்கு எந்த சலுகையும் வழங்கக்கூடாது. எம்.பி., எம்.எல்.ஏ. தேர்தலிலும் போட்டியிட அனுமதிக்கக்கூடாது. அவர்களுக்கு சலுகைகள் மறுக்கப்பட்டால், மக்கள் இந்த விவகாரத்தில் அதிக விழிப்புணர்வுடன் இருப்பார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.






