என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "shot death"

    • துப்பாக்கி சூடு சம்பவம் யூத எதிர்ப்பு பயங்கரவாதத்தின் மோசமான செயல் என்று இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
    • வெறுப்புக்கும் பயங்கரவாதத்திற்கும் அமெரிக்காவில் இடமில்லை.

    அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி.யில் உள்ள அருங்காட்சியம் அருகே நடந்த துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர். துப்பாக்கி சூட்டில் அதிகாரிகள் உயிரிழந்த சம்பவம் யூத எதிர்ப்பு பயங்கரவாதத்தின் மோசமான செயல் என்று இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக உள்நாட்டு பாதுகாப்பு செயலாளர் கிறிஸ்டி நோயம் வெளியிட்டுள்ள பதிவில்,

    வாஷிங்டன் டிசியில் உள்ள யூத அருங்காட்சியகத்திற்கு அருகில் 2 இஸ்ரேலிய தூதரக ஊழியர்கள் கொல்லப்பட்டனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக தீவிரமாக விசாரித்து வருகிறோம். குற்றவாளிகளை நீதி முன் நிறுத்துவோம் என்று பதிவிட்டுள்ளார்.

    இந்த சம்பவம் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்டுள்ள பதிவில்,

    இது யூத விரோதத்தை அடிப்படையாக கொண்டது. வெறுப்புக்கும் பயங்கரவாதத்திற்கும் அமெரிக்காவில் இடமில்லை. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். இதுபோன்ற விஷயங்கள் நடக்கலாம் என்பது மிகவும் வருத்தமளிக்கிறது! கடவுள் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக!" என்று அவர் பதிவிட்டுள்ளார்.

    • போலீசாரின் பதில் தாக்குதலில் மாவோயிஸ்ட்டுகள் குண்டு பாய்ந்து பலியானார்கள்.
    • கொல்லப்பட்ட 3 மாவோயிஸ்ட்டுகளின் தலைக்கு ரூ.38 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டு இருந்தது.

    மராட்டிய மாநிலம் கட்சிரோலி அருகே உள்ள ராஜ்ராம் கிராமத்தில் மாவோயிஸ்டுகளுக்கும் போலீசாருக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடத்தப்பட்டது.

    போலீசாரின் அதிரடி என்கவுண்டரில் மாவோயிஸ்ட்டுகள் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட 3 மாவோயிஸ்ட்டுகளின் தலைக்கு ரூ.38 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டு இருந்தது.

    ரகசிய தகவலின் பேரில் போலீசார் அங்கு சென்றனர். போலீசை பார்த்ததும் அவர்கள் துப்பாக்கியால் சுட்டனர். போலீசாரின் பதில் தாக்குதலில் மாவோயிஸ்ட்டுகள் குண்டு பாய்ந்து பலியானார்கள்.

    ஜம்மு காஷ்மீரில் போலீஸ் வாகனம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் போலீஸ் அதிகாரி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கும், அம்மாநில காவல்துறைக்கும் இடையே அடிக்கடி மோதல் நிலவி வருகிறது. பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு காவல்துறையினரும், பாதுகாப்பு படையினரும் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர்.

    இந்நிலையில், பிஜ்பெகாரா பகுதியில், போலீஸ் வாகனத்தின் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த பிலால் அகமது என்ற காவல்துறை அதிகாரி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதையடுத்து, பயங்கரவாதிகளை கண்டறிந்து களையெடுக்க, அப்பகுதி முழுவதும் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். #militantattack #policemanshoted
    ×